இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிவியல் பூர்வமாக கடவுளை விளக்க முடியுமா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
அறிவியல் பூர்வமாக கடவுளை விளக்க முடியுமா?
Permalink  
 


அறிவியல் முறையில் அறிந்துகொள்வது என்பது விளக்குவது மற்றும் நிரூபிப்பது இரண்டையுமே குறிக்கும் அனேக அறிவியல் கோட்பாடுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை அனுமானத்திலேயே இருக்கின்றன. பிக் பேங்க் தியரி ந்ரூபிப்பதில் இன்னும் சிக்கல் தீரவில்லை!

வே  என்னால் அறவியல் முறைப்படி ஆண்டவரை நிரூபிக்க முடியாது!
முழுமையான ஒரு கருத்தின் மூலம், முழுமயல்லாத ஒற்றை விவரிக்க முடியும் ஆனால் முழுமயல்லாத அறிவியல் என்ற கருத்தைக்கொண்டு முழுமையான இறைவனை நிரூபிப்பது இயலுமா?
 
மனிதனை ஆன்மீகமாகவும் அவன் மூளையை அறிவியலாகவும் எடுத்துக்கொண்டால் மனிதன் மண்டையை உடைத்து மூளையை எடுத்து காண்பித்து விடலாம். ஆனால் மூளையை மட்டும் வைத்துக்கொண்டு மனிதனை காண்பிக்க முடியாதது போன்றதே!
ஆன்மீகத்தில் விடை தெரியாத கேள்வி இறைவன் எப்படி உருவானார் என்ற ஒன்றே ஒன்றுதான் அதுவும் நம் அறிவுக்கு எட்டவில்லை அவ்வளவுதான். இறைவன் உருவானதர்க்கான காரண கர்த்தாவை அறியும் அறிவு நம்மிடம் இல்லை என்றே கருதுகிறேன்!

ஆனால்
அறிவியலில் விடைதேரியாதே கேள்வி அநேகம் உண்டு! பல கருத்துக்கள் நிரூபிக்கப்பட்ட்மல் அனுமானமாகவே உள்ளது! குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொல்லும் கோட்பாட்டின்படி குரங்கை ஒரு மனிதனாக மாற்றி, அந்த கோட்பாட்டை இன்றுவரை யாரும் நிரூபிக்கவில்லை. குரங்குக்கு இல்லாத பகுத்தறியும் தன்மை மனிதனுக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை இல்லை. மரணத்துக்கு பிறகு வாழ்வுண்டா என்ற கருத்தில் இன்னும் அறிவியலார் இருவேறு கருத்துள்ளவராகவே இருக்கின்றனர்.
 
முதன் முதலில் ஆக்சிஜன் அட்மொஸ்பியரில் பாக்டரியா உருவானது என்றும் அந்த ஆக்சிஜன் அதற்க்கு எத்தனையோ மிலியன் ஆண்டுகளுக்கு முன்னேயே உருவானது என்றும் அந்த ஆக்சிஜன் எப்படி உருவானது என்றும் அறுதியிட்டு அறிவியலால் சொல்ல முடியவில்லை. 00000000000000000 என்ற பூஜ்ய நிலையில் இருந்து 1 என்ற திட அல்லது திரவ அல்லது வாயு பொருள் எப்படி உருவாது என்பதற்கு எங்கும் விடையில்லை! அது தானாக உருவாயிருக்கலாம் என்பதே அனுமானம்.
 
அந்த தானாக உருவானது இறைவன் என்ற அளவில்லா சக்தி என்றும் அதுதான் எல்லாவற்றையும் படைத்தது என்பது ஆன்மீக கருத்து ஆனால் அந்த தானாக உருவானது பரிணாம வளர்ச்சி அடைந்து எல்லாம் உருவானது எனது அறிவியல் கருத்து. இதன்படி பார்த்தால் பல கேள்விகள் எழுகின்றன

ஏன்
நான்கு தலையுள்ள அல்லது மூன்று காலுள்ள நாய் உலகில் இல்லை ஏன் பகுத்தறிவுள்ள வேறொரு அவய அமைப்புள்ள மனிதனோ அல்லது XXXசோ உருவாகவில்லை. ஏன் நம் கண்முன்னால் உள்ள எந்த குரங்கும் மனிதனாக மாறவில்லை ஏன் பகுத்தறிவுள்ள குரங்கு இல்லை போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்
உலகம் எப்படி தோன்றியது என்று பல்வேறு அறிவியலறிஞர்கள் பல்வேறு கோட்பாடுகளை கூறியுள்ளனர் ஆனால் எதுவும் முழுமையானது அல்ல! கடைசியில் அறிவியல் "கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்" என்ற இரண்டும் கெட்டான் கோட்பாட்டில் முடிவடைகிறது.

ஆண்டவரை
அறிவியலால் அறிய முடியுமா? நம் நாடு பிரதமர் ஒருவரை சந்திக்க அழைத்தால் அவர் எந்த வழியில் வரச்சொன்னரோ அந்த வழியில் வந்தால் காவலர்கள் உள்ளே அனுமதிப்பார்கள் அவரை தரிசிக்க முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று அவர் அனுமதித்த வழியை விட்டுவிட்டு வேறு வழியில் வந்து அவர் வீட்டை சுற்றி சுற்றி வந்தால் என்ன அறிய முடியும்? "உள்ளே அவர் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், அவரை பார்க்கமுடியும் அல்லது பார்க்க முடியாமலும் போகலாம்" இந்த நிலைதான் வரும்.

அதுபோல்
இறைவன் அவரை அறிவதற்கு அனேக வழிகளை அனுமதித்துள்ளார் அப்படி வழிகளில் போய் அவரை அறிந்தவர் பலர் அதில் அடியேனும் ஒருவன். அறிந்தவர் சொல்கிறோம் அவர் இருக்கிறார் என்று ஆனால் அனுமதிக்காத வழியில் போகும் அறிவியலார் சொல்கின்றனர் "இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்" என்று!.
இந்த இரண்டு நிலையில் நீங்கள் உங்கள் அறிவை வைத்து தேர்வு செய்தால் எதை தேர்வு செய்வீர்கள்?

 


__________________


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

இல்லாத ஒன்றை இல்லை என்று மறைக்க தேவை இல்லை அது இல்லை என்றால் ஆமாம் இல்லை என்று மற்றவர்கள் ஒத்துக்கொள்வார்கள் ஆனால் இருக்கும் ஓன்றை தான் இல்லை என்று சொல்லமுடியும் ஆகையால் இருக்கும் நம் தேவனை இல்லை என்று அவர்கள் சொல்லுகிறார்கள் . அதற்க்கு எத்தனையோ வழிகளை ஆராய்கிறார்கள். ஆனால் தேவன் இருக்கிறார் மனுகுலத்திற்காக தன் ஜீவனையே கொடுத்திருக்கிறார் என்று கூறிக்கொள்ளும் நாம் (நாம் என்றால் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிறவர்கள்) எப்படி நிறுபிக்கப் போகிறோம்?

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

அதிசயம்  அற்ப்புதம்  செய்வதன்  மூலம் நிரூபிக்கலாம் என்றால் இன்று அனேக பிற மதத்தவர்களும் அதிசய அற்ப்புதம் செய்கிறார்கள்.

பேய்களை விரட்டுவதன் மூலம் நிரூபிக்கலாம் என்றால் கிறிஸ்த்தவர்களை விட முகம்மதியர்கள் நன்றாகவே பேய் விரட்டுகிறார்கள்.

நல்ல நடத்தைகள் மூலம் நிரூபிக்கலாம் என்றால் சில அந்தணர்கள் கிறிஸ்த்தவர்களைவிட நன்னடத்தை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  

பரிசுத்த ஆவியானவர் மூலம் நிரூபிக்கலாம் என்றால் புதியதாக பல வேற்றுமத கூட்டங்கள் பரிசுத்த ஆவி வந்ததுபோலவே ஆடுகிறார்கள் .
 
மற்றபடி இயேசுவை பிரதிட்ச்சயமாக கொண்டுவந்து யார் முன்னாலும் காட்டுவதற்கு நமக்கு தகுதியில்லை. 
 
இந்நிலையில் சர்வ வல்ல தேவன் தன்னை தானே ஒருவருக்கு "இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்று சொல்லி நிரூபித்தாலேயன்றி  வேறெதுவும் செய்து நம்மால் தேவன் இருக்கிறார் என்று நிரூபிக்க வழியில்லை என்றே கருதுகிறேன்.
 
ஒருவருக்கொருவர் மிகுந்த அன்போடும் தாழ்மையோடும் இருந்து தேவ அன்பை வெளிக்காடுவதன் மூலம் மட்டுமே தேவன் இருக்கிறார் என்று நிரூபிக்க முடியும் என்று கருதுகிறேன்.
 
I யோ 4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

கடவுளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க திருஸ்டான்தபடுத்த  திடமான சாட்சிகள் தேவை...  

எலியா மோசே தானியல் தாவீது போன்ற பரிசுத்தவான்கள்  கர்த்தரை நிரூபித்தவர்கள்..

இவர்கள் திடமான கர்த்தரின் கருவிகள்..

  • எலியாவை போன்று வானில் இருந்து அக்கினி இறக்கி பிசாசால் காண்பிக்க இயலுமா.. மின்னலை போல் மேலிருந்து விழ தான் முடியும்!! வெளிபடுத்தின விஷேஷதிலும் வானிலிருந்து அக்கினி இறக்குவது போல் போலி அற்புதங்கலையே அவன் வருங்காலங்களிலும் செய்வான்.
  • மோசேவின் கோல் பார்வோன் முன்பதாக பாம்பானபோது, பார்வோனின் மந்திரவாதிகளின் கோலும் பாம்பானது ஆனால் அப்பாம்புகள் மோசேவின் கோலால் விழுங்கபட்டன.
  • பாபிலோனிலும் தேவ சித்தம் செய்த தானியேல் பேல் விக்கிரங்களை பொய்யாக்கி  கர்த்தரே தேவன்  என அற்புத அடையாளங்களிலும்,மிகையான ஞானத்திலும் காண்பித்தார்.
  • தாவீது கோலியாத்தை வீழ்த்தி சேனைகளின் கர்த்தர் என்ற நாமத்தை பற்றிய பயத்தை பெலிஸ்தியரிடதிலும் ஏற்படுத்தினான்..

பாவிகளின் முன்பாகவும் அக்கிரமக்காரர் முன்பாகவும் தேவனை அறிவியல் பூர்வமாக விளக்க ஆட்கள் தேவை இல்லை.. தேவ கோபத்தின் வேளையில் அவர்களே தேவனை அறிவார்கள்..

ரோமர் 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்லஇடமில்லை.

தேவ நாமத்தை குறித்து இன்னும் தெளிவாய் திருச்டாந்த படுத்தி  அந்திகிறிஸ்துவின் ஆட்சியை இருள் பிடிக்க செய்ய வருபவர்களும் தேவனால் எழுப்பப்பட்ட இரண்டு சாட்சிகள் தான். இவர்கள் தீர்க்கதரிசிகளான தேவ சாட்சிகள்..

வெளி 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

         4. பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.

இன்றும் கூட விளம்பரமில்லாமல் சத்ருவின் கோட்டையை இருள் பிடிக்க செய்யும் தேவஊழியர்களை, தேவன் மீதியாய் வைக்காமலில்லை...

தொடரும்...

தேவனுக்கு மகிமை உண்டாகுக...


-- Edited by JOHN12 on Thursday 2nd of August 2012 04:26:02 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

சகோதரர் john12 தொடருங்கள். please



-- Edited by t dinesh on Thursday 15th of November 2012 03:00:39 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard