இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் சொல்லும் நவீன நாலடியார்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
நான் சொல்லும் நவீன நாலடியார்!
Permalink  
 


அன்னையின் அன்புக்கு ஈடில்லை அகிலத்தில்
தான்னையே தரத்துணியும் தனதன்பு சேய்க்காய்
என்னையும் ஆளாக்கி வாழ்வளித்த என்தாயை
என்றும் போற்றுவேன் உயர்த்தி.

எல்லா இன்பமும் இன்பமல்ல இவ்வுலகில்
நில்லாதே போகும் நீர்மேல் எழுத்தாய்
இறைவனை அறிதலே இணையற்ற இன்பம்
குறைவற்ற நன்மை தரும்

பொய்யது பார்வைக்கு பகட்டாய் தோன்றி
மெய்யதை வருத்தும் ஓர்நாளில் நின்று
வணங்கி போன்றுவாய் வாய்மையை அதற்க்கு
இணங்கி வாழ்தலே நன்று!

பணமென்றால் பணிந்துவிடும் குணமது வேண்டாம்
பிணமானால் பணம்பொருள் பயனற்று போகும்
குணமதை கெடுக்கும் மாயப்பேய் பணமே
உணர்ந்து ஒழுகுதல் உயர்வு!

பயமேதான் மானிடரை பாழாக்கும் பெருநோய்
முயன்றதை விரட்டிடுவீர் முடிந்தவரை நீவீர்
நாளைய பொழுதே நம்கையில் இல்லை
நடப்பது எல்லாம் நலமே! 
 
அவரன்றி ஓரணுவும் அசையாது அகிலத்தில்
தவறியே தற்செயலாய் நடப்பதில்லை எதுவும்
சொல்லவே வார்த்தையில்லா பேரருள் புரிவோனை
இல்லை என்றியம்புதல் இழுக்கு!

நல்லார் பலரால் நிலைத்திருக்கும் இவ்வுலகில்
பொல்லாரும் சேர்ந்தே பொருளீட்டி பிழைப்பர்
எல்லோர் செயலும் முடிவுறும் ஓர்நாளில்
வெல்வார் செல்வர் நித்யம்!

- இறைநேசன்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard