இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமையை நண்மை சமன்செய்ய முடியாது!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
தீமையை நண்மை சமன்செய்ய முடியாது!
Permalink  
 


தீமை, தவறு, பாவம், கெடுதல் போன்றவற்றை செய்தவர்கள் அதற்கு சமமாக நல்ல காரியங்கள் அதாவது பிறருக்கு உதவி, தான தர்மங்கள், நேர்மையாக நடத்தல் போன்ற நல்ல காரியங்களை செய்வதன் மூலம் சமன் செய்து விடலாம் என்றும், தீமைக்கு சரியான நன்மை செய்துவிட்டால் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம் என்பதும் இன்று உலகில் பரவலாக எல்லோரும் சொல்லும் கருத்தாக உள்ளது. அது சரியா தவறா என்பதை சற்று ஆராய்வோம்

1. கூவம் தியரி

A. நிலை ஒன்று: -

ஒரு குவளையில் பாதி அளவு கூவம் தண்ணீரை (சாக்கடை நீர்) தண்ணீரை எடுத்துக்கொள்ளவும் இன்னொரு குவளையில் 100% சுத்தம் பண்ணப்பட்ட சுத்தமான மினரல் வாட்டரை எடுத்துக்கொள்ளவும். சுத்தமான தண்ணீரை கூவம் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக உற்றி நன்றாக கலக்கவும்.

இரண்டும் நன்றாக கலந்த பிறகு அந்த தண்ணீரை குடிக்க முடியும் என்றால் கெட்ட செயல்களை நல்ல செயல்கள் சரிசெய்ய முடியும்.

ஆனால் யாரும் மனதார குடிக்க முடியாது.

B. நிலை இரண்டு:

இப்பொழுது குவளையில் இருக்கும் எல்லா தண்ணீரையும் கீழே கொட்டி விடவும். அப்படியே அதே குவளையில் சுத்தமான மினரல் வாட்டரை ஊற்றவும்.

இப்பொழுது கூட பழைய துர்நாற்றம் அதில் கொஞ்சம் இருப்பதால் இந்த நீரை நம்மால் குடிக்க முடியாது.

அதுபோல்தான் தீமையை (பாவத்தை) நண்மை (புண்ணியம்) ஒரு நாளும் சரி செய்ய முடியாது. பாவம் தண்டனையினால் (பலி) மட்டுமே சரி செய்யப்படும்

நிலை மூன்று:

இப்பொழுது குவளையில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக கீழே கொட்டி விட்டு நன்றாக டெட்டால் போட்டு கழுவவும். பிறகு அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றினால் ஒருவேளை குடிக்க முடியும்.

அது போலத்தான் மனித இருதயமும் :-

மனித இருதயம் மகா திருகுள்ளதகவும், கேடுள்ளதகவும், வஞ்சம், பொறாமை, இச்சை, பண ஆசை போன்ற தீமையால் நிறைந்துள்ளது. இதை ஒருவர் எப்படி நன்மை செய்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னை சுத்திகரித்தாலும் அதை சுத்தமாக்க முடியாது. இறைவனால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் இறைவன் மகா பரிசுத்தர்.

பாவம் அறியாத பரிசுத்தர் இயேசு கிறிஸ்த்துவின் இரத்தம் என்னும் டெட்டால் மட்டுமே நமது பாவத்தை கழுவி சுத்திகரித்து இறைவனுக்கு ஏற்றவனாக மாற்ற முடியும். அவராலே அன்றி வேறு எதனாலும் இறைவனிடம் ஒப்புரவாக முடியாது.

 



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

இன்று உலகில் அநேகர் மிகசாதாரணமாக கருத்துவது "எதோ நாலுபேருக்கு நல்லதை செய்தால் நாம் செய்த தீமைக்கு எல்லாம் பிராயசித்தம் உண்டாகிவிடும்" என்பது. இந்த கருத்து மிக மிக தவறான ஓன்று.  
 
நீங்கள் நல்லது செய்யுங்கள் அதற்க்கு தகுந்த பலன் நிச்சயம் உண்டு! ஆனால் தீமைக்கு பிராயசித்தமாக நன்மையை கருதுவது ஏற்றதல்ல!  இது குற்றங்கள் பெருகத்தான் வழி செய்யுமேயன்றி குற்றங்களை குறைக்க பயன்படாது.
 
உதாரணமாக ஒருபெண்ணுடைய கணவனை கொன்ற ஒருவன் இன்னொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தாலோ அல்லது இன்னொரு பெண்ணை காலம் முழுவதும் பாதுகாத்தாலும்கூட, முந்தய பெண்ணுக்கு செய்த துரோகத்தின் மூலம் அவள் அடைந்த துன்பங்களை இவனால் சரி  செய்யவே முடியாது! 
 
உங்களிடம் கடன்பட்ட ஒருவர் அந்த கடன் பணத்தை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு, "நான் வாங்கிய கடன் முடிந்துவிட்டது" என்று சொன்னால் எப்படி ஏற்க்க முடியாதோ அதேபோல் ஒருவருக்கு செய்த தீமையானது  இன்னொருவருக்கு நன்மை செய்வதால் முடிவுக்கு வராது!

அதுபோல் உங்களிடம் திருடிய ஒருவர் அந்த பணத்தை இன்னொருவருக்கு இனாமாக கொடுத்து விட்டால் நாம் அதை சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
 
மனிதன் செய்யும் பாவங்களின் விளைவுகள் என்பது எளிதில் சரி செய்யமுடியாத ஓன்று! எனவே தீமைகள் மற்றும் குற்றங்களை செய்யும்முன் விழித்துக் கொண்டு செய்யாமல் தவிர்ப்பதே சிறந்தது. தவறி  குற்றங்களை செய்துவிட்டால், அவன் செய்யும் வேறு எந்த ஒரு  நல்லசெயலும் அந்த குற்றத்தை சமன் செய்யவே முடியாது! அந்த குற்றத்துக்கான தண்டனை என்றென்றும் அவனை பின்தொடரும்.

இது போன்ற தொடரும் பாவங்கள் / சாபங்களுக்கு நிரந்தர  விடுதலை  ஆண்டவராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் மட்டுமே பெற முடியும்!


-- Edited by இறைநேசன் on Friday 24th of December 2010 03:20:06 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

சிறந்த கட்டுரை

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard