இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள்ளில்லாமல் நானில்லை!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
கடவுள்ளில்லாமல் நானில்லை!
Permalink  
 


கர்த்தரில்லாமல்   நானில்லை 
கடவுளின் கிருபையில் மாற்றமில்லை
நமக்கொரு  தேவன் இருக்கின்றார் 
நம்மை படைத்து காக்கின்றார்         (கர்த்தரில்லாமல்)  
 
மண்ணினால் என்னை படைத்தார்
தம் சுவாசத்தினால்  உயிர் கொடுத்தார்
மரங்களை படைத்தார் செடிகொடி படைத்தார் 
மகிமையின் வாழ்க்கையை எனக்கு தந்தார் (அந்த கர்த்தரில்லாமல் நானில்லை) 
 
மனுஷ ரூபத்தில் பிறந்தார் 
கொடும் சிலுவையிலே ஜீவன் கொடுத்தார்
பாவத்தை தொலைத்தார் சாத்தானை ஜெயித்தார் 
பரிசுத்த வாழ்விற்கு வழி அமைத்தார் (அந்த கர்த்தரில்லாமல் நானில்லை)
 
மரணத்தின் கூரை முறித்தார் 
அந்த பரலோக வாசலை திறந்தார்
மறுபடி வருவார் பரலோகம் தருவார்
மகிமையில் என்னை சேர்த்துகொள்வார் (அந்த கர்த்தரில்லாமல் நானில்லை)   
 
ஆதி அந்தமும் அவர்தான்
நம்மை ஆள்கின்ற தேவனும் அவர்தான்
அவரிடம் வருவாய் இரட்சிப்பை பெறுவாய்
புதுவாழ்வில் நீயும் திளைத்திருப்பாய்    (அந்த கர்த்தரில்லாமல் நானில்லை)
 
 
 
 
 
 
 
 
 
 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard