இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புது வருடத்தில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் !!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
புது வருடத்தில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் !!
Permalink  
 


புது வருடத்தில் நான் ஆவியானவரால் உணர்த்த பட்டு கற்று கொண்ட ஒரு காரியத்தை நான் இங்கு தெரிய படுத்த விரும்பிகின்றேன்

 

என் சபையில் நான் புது வருட ஆராதனையில் நான் கலந்து கொண்டு இருக்கும் பொழுது என் பக்கத்தில் அமர்ந்து  இருந்த ஒரு சிறு பையனை  பார்த்தேன்  அவன் எனக்கு தெரிந்தவன் தான் அவனுக்கு  ஒரு 13  அல்லது 14  வயது இருக்கும் 

 

 

அவனை பார்க்கும்  பொழுதுஆவியானவர் எனக்கு  சில காரியங்களை 

உள்ளத்தில் உணர்த்தி கேள்வியை கேட்டு பதிலையும் சொல்ல  ஆரபித்தார் 

 

ஆவியானவர் எனக்கு தெரியபடுத்திய  காரியம் என்னவென்றால்   நீங்கள் கிறிஸ்மஸ்  புது வருடம்  போன்ற பண்டிகைகள்   வரும் பொழுது  புது உடைகளை உனக்கும் உன் குடும்பத்திற்கும் வாங்கி உடுத்தி  கொள்கின்றீர்கள் அல்லவா  ஆனால் இதோ இந்த சிறுவனை பார் இவன்  பழைய ஆடை உடுத்தி கொண்டு இருக்கின்றான்

 

இவனுடைய இந்த சிறு வயதில் இவனுடைய மனதில் அவனை போல இருக்கும் எல்லோரையும் பாக்கும் பொழுது அவனுடைய மனம் எவ்வளவு கவலை கொள்ளும் என்று  யோசித்து பார்  ஓரளவு கருத்து தெறிந்தவர்கள கஷ்டங்களை புரிந்து கொல்வார்கள அனால் இந்த சிறுவனுக்கு  என்ன தெரியும் என்று  எனக்கு சொல்லி 

 

இனிமேல்   நீங்கள் பண்டிகைகளுக்கு உடைகள் எடுக்கும் பொழுது   இல்லாதவர்களுக்கு   எடுத்து கொடுங்கள் அல்லது நீங்கள் எடுக்க போகும் உடையை எடுக்காமல் இல்லாதவர்களுக்கு  எடுத்து கொடுங்கள் என்று சொல்லி இவைகளை தான் நான் விரும்புகின்றேன் என்றார்

 

அவர் எனக்கு தெரிவித்த உடனே எனக்கு இதயத்தில் மிகவும் கவலை உண்டாகிவிட்டது அப்பொழுது ஒரு முடிவு எடுத்தேன் இனிமேல் நாம் பண்டிகைகள் வரும் பொழுது நமக்கும்  எடுத்து இல்லாதவர்களுக்கும்    எடுத்து கொடுக்க  வேண்டும் அப்படி பிறருக்கு எடுத்து கொடுக்க முடியவில்லை என்றால் நமக்கு எடுக்க வைத்து இருக்கும் பணத்தில் இல்லாதவர்களுக்கு எடுத்து தரவேண்டும் இதை தான் நம் தேவன்  விரும்பின்றார் என்று புதிய வருடத்தில் ஒரு  தீர்மானம் பண்ணினேன்

 

யாக்கோபு : 2 

 

15 .ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,

 

16. உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன

 



-- Edited by EDWIN SUDHAKAR on Monday 2nd of January 2012 09:51:19 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இளையவர்

Status: Offline
Posts: 20
Date:
RE: புது வருடத்தில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் !!
Permalink  
 


மிக சிறப்பான பாடம்
நானும் இதையே முயற்சிப்பேன்

__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 22:12


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

சகோதரரே! அருமையான முடிவு.நீங்கள் எடுத்த முடிவு தேவசித்தத்தின் அடிப்படையிலானது.இதில் அதிக மகிழ்சியும் அதிக மன சமாதானமும் உண்டு.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard