இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: " பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’"


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
" பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’"
Permalink  
 


"பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பார்கள்"

 

இந்த பழமொழிக்கு ஏற்ப

" நாம் யாருடன் சேர்ந்து இருக்கின்றோமே அவர்களை போல நாமும் இருப்போம் என்பது தான்  இதன் பொருள்"

 

திருடனுடன் ஒருவன் சேர்ந்து இருந்தால் அவனும் திருடுவான்

வேசியோடு நட்பு வைத்து இருக்கின்ற ஒருவள் அவளும் வேசித்தனம் செய்வாள்

 

நாம் மனிதர்களுடன் பழகுவதும் நட்புவைப்பதும்  தவறில்லை ஆனால் அவர்களுடைய கிரியைகளை பார்த்து பழக வேண்டும இல்லை என்றால் அவர்களுடைய கிரியைகளை நாமும் கற்றுகொள்வோம் பின்பு அவர்களைப்போலவே மாறிவிடுவோம்

 

எரேமியா 10:2 - புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்;

உபாகமம் 18:9 - அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம்.

 

அதை கற்று கொள்ளகூடாது என்பதற்காக தான் நம் தேவன் வேதத்தில்

சங்கீதம் 1 - துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

என்று ஆழகாய் கற்றுகொடுத்து இருக்கின்றார்

 

இன்னும் புதிதாக சொல்லபோனால்  “ உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கின்றேன் ” என்கின்ற வார்த்தையும் உண்டு  

"உன் நண்பன் எப்படியோ அப்படியே  நீ “ என்பது தான் இதன் பொருள்"

 

ஆம் உன் நண்பன் அய்யோக்கியன் என்றால் நீயும் அய்யோக்கியன் தான்

உன் நண்பன் பாவி என்றல் நீயும் பாவி தான்

 

ஆதால் நாம் மற்றவர்களிடத்தில் நட்பு வைத்துகொள்ளும் பொழுது அவர்களுடைய  கிரியைகளை பார்த்து  நட்பு வைதுகொள்ளவது நல்லது அவர்கள் வழியிலே நாம் நடவாமல், அவர்கள் பக்கத்தில் உட்காராமலும் அப்படி பட்டவர்களை விலகிபோவது நல்லது

நீதிமொழிகள் 4:14  - துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

சங்கீதம் 26:5  - பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்

 

இல்லையென்றால் நாம் அவர்களுடைய மார்க்கத்தை கற்றுக்கொண்டு அவர்களைபொலவெ மாறிவிடுவோம்இந்த பொல்லாத உலகத்தில் யார் நல்லவர்கள் கட்டவர்கள் என்பதை நம்மால் அறியமுடியவில்லை 

எரேமியா 17:9 - எல்லாவற்றைப் பார்க்கிலும்  இருதயமே  திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது,  அதை அறியத்தக்கவன் யார்?

 

நம்மால் அதை அறியமுடியாது  என்பதால் நாம் தேவனிடத்தில் பொறுப்பை சாற்றிவிடுவோம்

 

சங்கீதம் 71:4 - என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.

 

பொல்லாதவர்களின் நட்பு உனக்கு இருந்தால்,  இன்றே அதை கைவிடு......



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard