இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனை அறியும் அறிவா, வேதத்தை அறியும் அறிவா - எது மேலானது?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தேவனை அறியும் அறிவா, வேதத்தை அறியும் அறிவா - எது மேலானது?
Permalink  
 


ஒரு மனுஷனுக்கு வேதத்தை பற்றிய அறிவும் தேவனை பற்றிய அறிவுமாகிய இரண்டும் அவசியம் என்பதை மறுக்க முடியாது.
 
ஆகினும் இரண்டிலும் எது மேன்மையானது என்பதை அறிந்து கொள்வது நலம் என்று கருதுகிறேன்.
 
 
தேவனை பற்றி வேதம் இவ்வாறு சொல்கிறது:
 
சங்கீதம் 90:2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரேஅநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
 
 
வேத வார்த்தைகளை பற்றி வேதம் இவ்வாறு சொல்கிறது:
சங்கீதம் 138:2 உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
 
பர்வதங்கள் உலகங்கள் எல்லாமே தோன்றுவதற்க்கு முன்னமே தேவன் அனாதியாக என்றென்றைக்கும் இருக்கிறார்.
 
அவ்வாறு இருக்கும் தேவன், 
 
தன்னுடைய சகல பிரஸ்தாபங்களை கட்டிலும் அவர் வார்த்தையை மகிமைபடுத்தியிருக்கிறார்.
 
இதுவே  மேலேயுள்ள வசனத்தின் அடிப்படையில் நாம் அறியும் உண்மை.
 
ஆகினும் இவ்விரண்டில் மேன்மையானது எது!
 
அனாதியாய் இருக்கும் தேவனா? 
 
அவரின் வார்த்தைகளாகிய வேத வசனமா?
 
புரிந்தவர்கள் விரும்பினால் பதில் தரவும்! 
  
சுருங்க சொல்லின்,
 
நாம் நமது தகப்பனை ஆழமாக அறிதல் மேலானதா ? 
 
அல்லது  
 
அவர் சொல்லிய வார்த்தைகளை ஆழமாக அறிதல் மேலானதா?    

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
Permalink  
 

 முதலில் தேவனை அறிகிற அறிவு என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது ....
என்னை கேட்டால் தேவனுடைய வார்த்தையை அதாவது இயேசுவை அறிகிற அறிவே மேலானது என்று சொவேன்...
முதலில் தேவனை அறிகிற அறிவு என்றால் என்ன என்பதை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்...


-- Edited by Sugumar S T on Sunday 12th of April 2015 06:57:26 PM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
Permalink  
 

வார்த்தைக்கும் தேவனுக்கும் வித்தியாசம் எதுவும் எல்லை...
ஏனென்றால் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது ...

நாம் வார்த்தையின் மூலமாகவே தேவனை அறிய முடியும்...

அதனால் வார்த்தை வேறு , தேவன் வேறு இல்லை..

வேத ஆதாரம்...

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1: 1
 
  



__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard