இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகத்தையும், மனிதனையும் ஆட்டிப்படைக்கும் ஒரு ஆவி "!!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
உலகத்தையும், மனிதனையும் ஆட்டிப்படைக்கும் ஒரு ஆவி "!!
Permalink  
 


இன்று, உலகத்தையே மூன்று ஆவிகள் தான் ஆட்டிப்படைக்கின்றன "

 

1) பெருமை

2) பணம்

3) காமம் 

 

இந்த உலகத்தில் உள்ள, எல்லா மனிதர்களையும் கன்ட்ரோல் செய்வதும், கலக்குவதும் இந்த  மூன்று ஆவிகள் தான்.

 

அதில் ஒன்றான, பெருமையை பற்றி இப்பொழுது, பார்ப்போம்.

 

ஒருவனுக்குள்ளே கடவுள் இருக்கின்றாறோ, இல்லையோ நிச்சயம், இந்த மூன்று ஆவிகளில், மிகவும் முக்கியமான பெருமையின் ஆவி" எப்பொழுதும் எல்லாருக்குள்ளும் இருக்கும்.

 

பண ஆசையும், காம ஆசையும் இல்லாதவர் கூட பலர் இருக்கின்றார்கள்.

 

ஆனால், தன்னை பெருமையாக பேசாத மனிதன் ஒருவன் கூட இல்லை, ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் கூட, தன்னை பெருமையாக தான் பேசுகின்றான்.

 

மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப் படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?

நீதி 20 :6

 

இந்த பெருமையின் ஆவிக்கு 

ஏழை, பணக்காரன், பிச்சைக்காரன், அறிவாளி, ஞானி, நாத்திகன், விஞ்ஞானி, கிறிஸ்தவன், முஸ்லிம், இந்து, ஆண், பெண், திருநங்கை, மற்றும் கருத்து தெரிந்த பிள்ளைகள் வரை, எந்த ஒரு பாகுபாடே கிடையாது,

எல்லாருக்குள்ளும் இந்த பெருமையின் ஆவி இருக்கம். 

 

எல்லோரையும், பெருமைக்கு 

பிடிக்கும் !

பெருமையை,  எல்லோருக்கும் பிடிக்கும் !  

 

ஏன் இப்படி ?

 

ஏனென்றால், தேவனோடு கூட இருந்து விழுந்து போன லூசிபர் " இந்த பெருமையினால் தான் விழுந்தான், இது தான் ஆதி பாவம், அதாவது முதல் பாவம்.

 

இந்த பெருமையின் ஆவியை ஜெயிப்பது, அடப்பது என்பது எந்த ஒரு மனிதனாலும், கூடாத காரியம்.

 

எந்த ஒரு மனிதனும், இதுவரை இந்த பெருமை என்ற ஆவியை,  ஜெயித்தது கிடையாது.

 

இந்த பெருமையின் ஆவியை

ஒரே ஒருவர் தான் ஜெயித்து இருக்கின்றார்," அவர் தான் 

நம் "ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, (அவரும் கடவுள்).

 

இயேசு, பிதாவின் துனையோடு, பலத்தோடு, பெருமையை ஜெயித்தது போலவே. 

 

நாமும், தேவனாகிய கர்த்தரின் துனைகொண்டு, இந்த பெருமையின், ஆவியை ஜெயிக்க முயற்சிப்போம்.

 

தாவீது சொன்னது போலவே, நாமும் சொல்லுவோம்."

 

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன். என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.

2சாமு 22 :30 

 

ஆம், எல்லாம் கர்த்தராலே !"

 

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சக 4 :6



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard