இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிமானுக்கு உண்மையான சந்தோஷம் எது....... ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
நீதிமானுக்கு உண்மையான சந்தோஷம் எது....... ?
Permalink  
 


மனிதர்கள் படுகின்ற கஷ்டங்களையும், வேதனைகளையும், பார்த்து எவனால்  பொருக்கமுடியவில்லையோ அவனே நீதிமான் !!

 

மனிதர்களுக்கு ஏற்படும் கொடுமைகளையும், சித்ரவதைகளையும், பார்த்து எவனுடைய ஆவியும், கண்களும் கலங்குகின்றதோ, அவனே நீதிமான்! 

 

இப்படிப்பட்டவன் தான் மற்றவர்களுடைய சந்தோஷத்தை அதிகமாக விரும்பமுடியும்.

 

ஆம், நீதிமானுக்கு, சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் எது தெரியுமா ? மற்றவர்களுக்கு உதவி செய்கின்றது.

 

ஆம், மற்றவர்களுக்கு உதவி செய்வது என்பது நீதிமானுக்கு சந்தோஷமாக இருக்கும், அது அவனுடைய குணங்களில் ஒன்றாக இருக்கும்.

 

ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.

1கொரி 10 :24 

 

நீதிமான், தன்னுடைய சந்தோஷம் என்று எதை பெரிதாக கருதுவான் தெரியுமா ? பிறருடைய சந்தோஷத்தை மட்டும் தான்.!!

 

நீதிமானுக்கு, பணம், பொருள் சந்தோஷத்தை கொடுக்காது.

 

நீதீமானுக்கு, புகழோ, வரங்களோ, சந்தோஷத்தை கொடுக்காது.

 

நீதிமானுக்கு, ஊழியமோ, ஆலயமோ சந்தோஷத்தை கொடுக்காது.

 

நீதிமானுக்கு, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்பதே மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே  நீதிமானின் மெய்யான சந்தோஷம்.

 

ஏனென்றால் ?

 

நீதிமானுடைய தேவன் அப்படிப்பட்டவர் 

தேவனுக்கு" எல்லா மனிதர்களும் சந்தோஷமாக மகிழ்ந்து இருக்க வேண்டும் என்பதே ஒரே எண்ணம் !

அந்த எண்ணமே தேவனை" உண்மையாய் வணங்குகின்ற எந்த ஒரு நீதிமானுக்கும் இருக்கின்றது.

 

சிலர் வேதத்தில் எழுதி இருக்கின்றது என்பதினால் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள், அது தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வது என்பது எழுத்தால் மட்டுமல்ல, முழுமனதார செய்ய வேண்டும்.

 

மற்றவர்களுக்கு உதவி செய்வதும் ஒரு ஊழியம் தானே,

 

இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.

1தீமோ 3 :13 

 

மற்றவர்கள் சந்தோஷத்தில், நீதிமான் அடைகின்ற சந்தோஷம் இருக்கின்றதே அதில்  அளவே கிடையாது!!

உண்மையாகவே அது ஒரு தனி சந்தோஷம் தான்.......



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard