இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனுடைய ஐசுவரியம்


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
தேவனுடைய ஐசுவரியம்
Permalink  
 


தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்(லூக்கா 12:21)

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.(II கொரிந்தியர் 8:9)

என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?( யாக்கோபு 2:5)

தயவு பொறுமை நீடியசாந்தம் (ரோமர் 2:4), மகிமையின் ஐசுவரியம் (ரோமர் 9:23) (எபேசியர் 3:19)( கொலோசெயர் 1:27).ஞானம், அறிவு (ரோமர் 11:33) கிருபையின் ஐசுவரியம் (எபேசியர் 1:7) சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் (எபேசியர் 1:18 ) இரக்கத்தில் ஐசுவரியம் (எபேசியர் 2:4) கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியம்(எபேசியர் 3:8 ) நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும்,

உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்(I தீமோத்தேயு 6:18)அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.( கொலோசெயர் 2:2) என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்(பிலிப்பியர் 4:19) இப்படியிருக்க தேவனுடைய ஐசுவரியம் பணம் அல்ல என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டும் தரித்திரர்களே தேவன் பார்வையில் அருமையானவர்களாய் மனதுருக்கத்திற்கு உகந்தவர்களாய் தேவன் பார்வையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றோ தரித்திரரர்கள் என்றால் இன்றய நவீன மாய்மால கிறிஸ்தவர்களுக்கு அற்பமானவர்களாய் தெரிகிறார்கள் ஆனால் என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? (யாக்கோபு 2:5 )மற்றும் பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.(லூக்கா 1:53) ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.(லூக்கா 6:24,25)யாக்கோபு 5:1 ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.யாக்கோபு 5:2 உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. மத்தேயு 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.நீங்கள் மற்றவர்களுக்கு இரக்கத்தோடு செய்யும் உதவிகள் இரக்கம் என்ற ஐசுவரியமாய் பரலோகத்தில் கணக்காய் எடுத்துக்கொள்ளப்படும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard