இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவியின் பிரமானத்தின்படி வாழ்வோம்


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
ஆவியின் பிரமானத்தின்படி வாழ்வோம்
Permalink  
 


நியாயப்பிரமாணத்தின்படி நாம் செய்யமுடியாததை நமக்குள் ஜீவனாக தேவனும், பரிசுத்த ஆவியானவர் நம் ஆவியோடு இனைந்து நிறைவேற்றுகிறார்.

 

நியாய பிரமாணத்தால் உமது கோரிக்கையை அறிந்தேன் ஐயா!

அதை நிறைவேற்ற நான் மனதில் தீர்மானித்தேன் ஐயா!

 

நான் கிரியை செய்ய முயன்றப் போது என்னால் ....கொரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை!

எனக்குள்ளே பாவத்தின் பெலன் இருந்ததால் நான் தொற்றுப்போனேன் ஐயா!

 

என்னால் இயலாததென்று பெலவீனத்தை நான் உணர்ந்தேன் ஐயா!

பாவத்தின் வல்லமையோ என்னை பாவம் செய்ய வைத்ததய்யா!

 

ஐயா! நிர்பந்தமான மனுசனானேன் நன்மை செய்ய ஆசைப்பட்டேன் ஆனால் தீமையை செய்தேன் ஐயா!

எனக்குள் சமாதானம் இல்லாமல் புலம்பி அழுகிறேன் ஐயா

 

மரனத்தின் வாசனை என்னில் வீசுதய்யா!

சிலுவையின் காட்சி என் கண்முன்னே தெரிகிறதையா !நீர் என்னுடைய பாவத்தை ஏற்றுக்கொண்டு எனக்கும் பதில் தண்டனையை ஏற்றுக்கொண்டீர் ஐயா !

 

இது உண்மை இது சத்தியம் நான் நம்பினேன் அதை விசுவாசித்தேன் .

நான் செய்த பாவத்தை உம்மிடம் ஒத்துக்கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக அறிக்கையிடுகிறேன் ஐயா!

 

நான் உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன் ஐயா !என்பதையும் விசுவாசித்தேன் ஐயா ,பாவத்தால் உம்மோடு சிலுவையில் நானும் மரித்தேன் ஐயா !

 

நீர் உயிர்த்தெழுந்தப் போது என் ஜீவனை உம்மொடுஉயிர்பித்தீரய்யா

என் ஜீவனோ உம்முடைய ஜீவனுக்குள் மறைந்திருக்கிறதையா!

 

என் இருதயத்தை பார்த்தீர் ஐயா! என்னால் உம்முடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாததை நீர் அறிந்ததால் உம்மால் அதை நிறைவேற்ற எனக்குள் ஜீவனாக இருக்கிறீர் ஐயா

 

எனக்குள்ளே நீங்க இருந்துக்கொண்டு வாஞ்சையையும் விருப்பத்தையும் உண்டாக்குகிறீர் ஐயா !என் பெலவீனத்தை அறிந்ததால் பாவத்தின் பெலனை ஜெயிக்க உம் பெலத்தை என்னில் வைத்தீர் ஐயா!இதோ பாவத்தின் மேல் வெறுப்பு வந்ததையா !

 

என் ஆவியை உயிர்பித்து அதனோடு நீர் இனைந்துவிட்டீர் ஐயா !என்னுடைய சிந்தை மறைந்து உம்முடைய சிந்தை எனக்குள் உருவாகுதய்யா!

 

உம்முடைய ஜீவனின் சுபாவத்தை என்மூலமாய் வெளிப்படுத்த ஆவியில் சிந்தனையை ஏற்படுத்தினீர் ஐயா!அதை நீரே எனக்குள் இருந்து நிறைவேற்றி எனக்குள் நீர் இருப்பதை சாட்சியாக நிருபித்தீர் ஐயா!

 

இனி நான் வாழ்வது உமக்காக ,ஐயா! என்னை அனுதினமும் என் ஜீவனை பலியாக அர்பணிக்கிறேன் ஐயா ,நான் கிரியை செய்யமாட்டேன் நீர் எனக்குள் இருந்து நற்கிரியை செய்யும்படி என்னைத் தாழ்த்தி ஒப்படைக்கிறேன் ஐயா!

நான். நியாய பிரமானத்தின்படி செய்ய முடியாததெல்லாம் இப்போது நீரே செய்கிறீர் ஐயா!

நான் உம்மில் மகிழ்ந்து களிகூர்கிறேன்.உமது அனுதின வெற்றி எனக்குள்ளே என் ஜீவனில் சமாதானத்தை அனுதினம் உண்டாக்குகிறதையா!

 

பாவத்தின் வல்லமை அனுதினமும் உம்மாலே முறியடிக்கப்படுகிறதையா!

என் மாம்ச ஆசைகள் எழும்பும்போதெல்லாம் நான் உம்மோடு மரித்துவிட்டேன் என்பதை விசுவாசித்தப்போது அவை மறைந்துப்போனதையா!

 

என்னுடைய சரீரத்தை மருரூபமாக்கி உம்மோடே சேர்த்துக்கொள்ள மருபடியும் இரகசியமாய் வருவீர் ஐயா!

மாரநாதா !

(1கொரி15:10-58,ரோ:7அதிகாரம்,8ம் அதிகாரம்)



-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 10:28:28 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard