இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: லூசிபர் சாத்தான் அவனுக்கு இந்த பெயர் எப்படி வந்தது


புதியவர்

Status: Offline
Posts: 4
Date:
லூசிபர் சாத்தான் அவனுக்கு இந்த பெயர் எப்படி வந்தது
Permalink  
 


லூசிபர்  சாத்தான்  அவனுக்கு இந்த பெயர் எப்படி வந்தது ,வேத்தில் எங்கும் இந்த பெயர் இல்லையே சாத்தான் என்று தானே உள்ளது தெரிந்தவர்கள் விளக்கவும்



__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
RE: லூசிபர் சாத்தான் அவனுக்கு இந்த பெயர் எப்படி வந்தது
Permalink  
 


நான் அறிந்த வகையில் சொல்கிறேன் சகோதரரே.
Lucifer என்பது ஒரு லத்தீன் சொல். இது ரோமர்கள் பயன்படுத்திய சொல். அதாவது ரோம வானியல் அறிஞர்கள் விடிவெள்ளி நட்சத்திரத்தை குறிப்பதற்கு இச்சொல்லை பயன்படுத்தி வந்தனர்.

வேதாகமத்தில் ஏசாயா-14:12 இல் வரும் விடிவெள்ளி என்னும் சொல்லுக்கு ரோமர்கள் Lucifer என்னும் இச்சொல்லை பயன்படுத்தி வந்ததால் ஆங்கில வேதாகமமான king james version (kjv bible) ஐ மொழிபெயர்த்தவர்கள் விடிவெள்ளி என்ற சொல்லுக்கு Lucifer என்ற சொல்லை பயன்படுத்தி விட்டனர்.

ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

Isaiah 14:12  How art thou fallen from heaven, O Lucifer, son of the morning! how art thou cut down to the ground, which didst weaken the nations!

 

 

மேலும் புதிய ஏற்பாட்டில் இயேசுவும் விடிவெள்ளி என்று சொல்லப்பட்டாலும் இயேசுவை பற்றி கூறிய இடங்களில் இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தவில்லை. எனவே kjv ஆங்கில வேதாகமம் அதிக காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் Lucifer என்றால் சாத்தான் என்று மக்கள் பழக்கப்பட்டு விட்டனர்.

Lucifer என்னும் சொல் kjv வேதாகமத்தில் ஏசாயா-14:12 வசனத்தில் உள்ளது.



__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

லூசிபர் என்ற வார்த்தை நாம் வைத்திருக்கும் வேதத்தில் இல்லாமல் இருந்ததால் பதில் சொல்ல விளையாமல் இருந்தேன் பிரதர்.
 
உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி.  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard