இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டவர் ஓடிவந்து பயப்படாதே என்று சொல்லவில்லையே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஆண்டவர் ஓடிவந்து பயப்படாதே என்று சொல்லவில்லையே!
Permalink  
 


ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;  

ஏசாயா 43:5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்;
எரேமியா 46:28 நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; 
 
என்றெல்லாம் வேத வசனங்கள் மூலம் பல இடங்களில் சொல்லி தன ஜனங்களை திடப்படுத்திய தேவன் 
 
 
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை அக்கினி சூளையில் போடும்போதோ 
அல்லது 
தானியேலை சிங்கங்கள் கேபியில் போடும்போதோ 
அல்லது 
தாவீது கோலியாத்தை எதிர்த்து வீழ்த்தும்போதோ 
அல்லது 
எரேமியாவை தண்ணீர் இல்லாத ஊளையில் போட்டு
அமிழ்த்திடும்போதோ
 
ஓடிவந்து "பயப்படாதே" என்று சொல்லி தேற்றி திடப்படுத்தவில்லை. ஆகினும் யாரையுமே அவர் பாதுகாக்காமல் விடவும் இல்லை. 
 
அதேபோல் இன்றும் நம் வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் வரும்போது வேத வசனங்கள் மாத்திரமே நமக்கு ஆறுதலாகவும் நம்மை 
திடப்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கவேண்டுமேயற்றி ஆண்டவர் வந்தோ அல்லது யார்மூலமாகவோ 
ஏதாவது புதிதாக சொல்லி ஆற்றி தேற்றுவார் என்று எதிர்பார்க்க முடியாது.   
 
ஏனெனில் வார்த்தையை எழுதி கொடுத்தவர் உண்மையுள்ளவர் அவர் எப்படியும் அவர் சொன்ன வார்த்தைகளை காப்பாற்றுவார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நம்மை பிழைக்கவைக்கும் என்று வேதம் சொல்கிறது.
 
லூக்கா 4:4 மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
  
எனவே அவ்வார்த்தைகளை உறுதியாக பிடித்துக்கொள்ளும் பட்ச்சத்தில் அவ்வார்த்தைகள் நம்மை நிச்சயம் காப்பாற்றும் என்று அறிந்து கலங்காமல் இருக்க கடவோம்.
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

கர்த்தருக்கு மகிமை

உண்மையாகவே எனக்கே சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் அண்ணா.

நன்றி


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard