இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறைவன் யார்? எப்படிபடடவர் ?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இறைவன் யார்? எப்படிபடடவர் ?
Permalink  
 


கடந்த நாளில் ஒரு சுவற்றில் கீழ்கண்ட வாசகங்களை படிக்க நேர்ந்தது.  

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
 
என்னை அதிகம் சிந்திக்க தூண்டிய இந்த வார்த்தைகளுக்கு எனது விளக்கம் இதோ:  
 
 
உருவாய்   : ஆண்டவராகிய இயேசுபோல் உருவம் உள்ளவாராக 
 
அருவாய்  : மனுஷரில் ஒருவரும் காணக்கூடாதவராக உருவமில்லாதவராக 
 
உள்ளதாய்  : இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று உள்ளவராக 
 
இலதாய்  : கடவுளே இல்லை என்று சொல்பவனைகூட தண்டிக்காமல் அவனுக்கு இல்லாதவராக 
 
மருவாய்  / மலராய்  : மலராக அதிலிருந்து வரும் நறு மணமாக 
 
மணியாய்  : மணி ஒலி எழுப்பக்கூடியது .ஒலி =சப்தம் வார்த்தையாக  
 
ஒளியாய் :  எள்ளளவேனும்  இருள் இல்லாமல் ஒளியாய்  இருப்பவராக 
 
கருவாய் உயிராய்க் :  உலகின் மூலப்பொருளாக அதில் இருந்து தோன்றிய உயிர்களுக்கு எல்லாம் உயிராக தாயாக 
 
கதியாய்  : எல்லோருக்கும்  இறுதி  கதியாக / முடிவு  நிலையாக   
 
விதியாய்க் : அந்த இறுதி  நிலையை  அடையும்  வழியாக 
 
குருவாக  :  அந்த விதியை (மார்க்கத்தை ) சரியாக போதிக்கும் குருவாக,  இருக்கும் இறைவா வந்து அருள் புரிவாய் 
 
இது ஒரு இந்து மகானின் வார்த்தைகள்தான் என்றாலும் இறைவனின் முழு தன்மையை நமக்கு எடுத்து சொல்வதாக எனக்கு தோன்றியதால் என் சொந்த விளக்கங்களுடன் இங்கு பதிவிடுகிறேன்.  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard