இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனின் வார்த்தையாகிய குமாரன் தேவனை பார்க்கிலும் சிறியவராக கூறப்படுகிறாரா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவனின் வார்த்தையாகிய குமாரன் தேவனை பார்க்கிலும் சிறியவராக கூறப்படுகிறாரா?
Permalink  
 


I கொரிந்தியர் 15:28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

 

 இதில் குமாரன் தேவனுக்கு கீழ்ப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது அப்படியாயின் தேவனின் வார்த்தையாகிய குமாரன் தேவனை பார்க்கிலும் சிறியவராக கூறப்படுகிறாரா



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவனின் வார்த்தையாகிய குமாரன் தேவனை பார்க்கிலும் சிறியவராக கூறப்படுகிறாரா?
Permalink  
 


Debora wrote:

I கொரிந்தியர் 15:28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

 

 இதில் குமாரன் தேவனுக்கு கீழ்ப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது அப்படியாயின் தேவனின் வார்த்தையாகிய குமாரன் தேவனை பார்க்கிலும் சிறியவராக கூறப்படுகிறாரா


  இதில் என்ன சந்தேகம் ?

 
ஆண்டவராகிய இயேசுவே தன வாயால் அதை உறுதி செய்கிறாரே! 
 
யோ 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்;
யோ 14:28  என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

ஒரே தேவன் அதில் ஒரு வல்லமையாகிய குமாரன் பிதாவின் வல்லமைக்கு கீழ்ப்பட்டிருப்பார் அப்படித்தானே? ஆனால் வசனம் இப்படியும் சொல்கிறதே..

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.


பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

 

விளக்கவும் 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

ஒரே தேவன் அதில் ஒரு வல்லமையாகிய குமாரன் பிதாவின் வல்லமைக்கு கீழ்ப்பட்டிருப்பார் அப்படித்தானே? ஆனால் வசனம் இப்படியும் சொல்கிறதே..

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.


பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

 

விளக்கவும் 


 சிஸ்ட்டர் நீங்கள் மீண்டும் திரித்துவ கருத்து குறித்த விவாதத்துக்குள் கொண்டு சொல்வதுபோல் இருக்கிறது 

 
இயேசு தன் வாயாலேயே மிகதெளிவாக என் பிதா என்னை விடவும் எல்லோரை விடவும் பெரியவர் என்று சொல்லிவிட்டதால் அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தால்  இப்படி ஒரு கேள்வி எழுவதே முதலில் சாத்தியம் இல்லை.  
 

இயேசு தேவத்துவம் உள்ளவராகவும்  தேவனை தன் சொந்த பிதா என்று சொன்னதாலும்  தேவனும் நானும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொன்னதாலும் அவர் சொற்கள்  செயல்பாடுகள் அற்ப்புத அதிசயங்கள் போன்ற அனேக கரியங்களில் அவர் தேவனுக்கு சமமாகவே இருந்தார் எனவே அந்த வசனத்தில் எந்த தவறும் இல்லை.         

அவர் எந்தெந்த காரியத்தில் எல்லாம் தேவனுக்கு சமமாக இருந்தார் என்று பார்த்தால்:

தேவத்துவத்தில் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார் 

தேவனுடய ஆவியானவர் அவரோடு தங்கியிருந்ததால் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார்      

தேவனின் கிரியைகளை செய்வதில் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார் 

பிதாவுடையது எல்லாம் அவருடையதாகவே இருந்ததால் அவர்  பிதாவுக்கு சமமாக  இருந்தார் 

தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதால் அவர் தேவனுக்கு சமமாக இருக்கிறார்.

தேவனுடைய ஏழு ஆவிகளையும் உடையவராக இருப்பதால் அவர் தேவனுக்கு சமமாக இருக்கிறார்  

இப்படி அனேக காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்  எனவே பவுலோ யோவானோ அல்லது நானோ கூட அவரை யாரும் தூதர் என்றோ அல்லது தேவதன்மை அற்றவர் என்றோ சொல்லிவிடாத படிக்கு அவர் தேவனுக்கு சமமானவர் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.  அவர் தேவனும் தேவனுக்கு சமமானவரும் தான் என்பதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் பிதாவாகிய தேவன் அவரைவிட  எந்த விதத்தில் பெரியவர் என்பதை இயேசு ஒருவரே அறிவார். ஏதோ ஓரிரு காரியங்களில் பிதா பெரியவராக இருந்ததால்தான் இயேசு "என் பிதா என்னிலும்  பெரியவர்" என்று சொல்லவேண்டிய அவசியம் இருந்திருக்க வேண்டும். அப்படி பிதாவானவர் எந்த தகுதிகளில் பெரியவர் என்பதை தேவனோ அல்லது இயேசுவோ  சொல்வதை வைத்துதான் நாம் புரிந்துகொள்ள முடியம். 

இந்த காரியங்களை குறித்து வசனம் என்ன சொல்கிறது என்பதை குறித்து பார்த்தால்:

இயேசுவை இன்று என்ற நாளில் ஜெனிப்பித்தவர் தேவன்

சங்கீதம் 2:7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

இயேசுவை ஜெநிப்பித்தவர் அவரது  தகப்பன் என்ற  ஸ்தானத்தில் பிதா இயேசுவுக்கு பெரியவராக இருந்தார்.  

இயேசுவை பாவத்துக்கு பரிகார பலியாக அனுப்பியவர்  தேவன்:  

யோவான் 8:42 நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

இயேசுவை பரிகார பலியாக அனுப்பியவர் அல்லது அனுப்பமுடிந்தவர் அல்லது ஒப்புகொடுத்தவர் என்ற ஸ்தானத்தில் பிதா இயேசுவைவிட பெரியவராக இருந்தார்

இயேசுவுக்கு "தம்மில்தாமே ஜீவடையவராக இருக்கும்படி அளுள் செய்தது தேவன்:   

யோவான் 5:26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.

இயேசுவுக்கு ஜீவனை அருள் செய்ததன் மூலம் அவர் இயேசுவைவிட பெரியவராக இருந்தார்.

பிதா எதை செய்து இயேசு கண்டாரோ அதைதான் இயேசு செய்தார் :

யோவான் 5:19   பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

இயேசுவுக்கு  திட்டங்களை வகுத்து கொடுத்து ஒரு இயக்குனராக  இருந்ததன் மூலம் தேவன் பெரியவராக இருக்கிறார்.  

இயேசு மரித்தபின்னர் ஆவியை தேவனிடமே ஒப்பு கொடுத்தார்.

லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

இயேசு தன் ஆவியை பிதவிடத்தில் ஒப்புகொடுத்ததன் மூலமும் பிதா  இயேசுவைவிட பெரியவராக இருக்கிறார்.

இயேசுவுடைய உபதேசம் மற்றும் அவருக்கு  உண்டானது எல்லாமே பிதாவுடையதுதான்.  

யோவான் 7:16  என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.

யோவான் 17:10 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்

இயேசுவுக்கு உண்டானதை எல்லாம் கொடுத்ததன் மூலம் பிதா  பெரியவராக இருக்கிறார்.  

இயேசுவுக்கு அளவில்லாத ஆவியை கொடுத்தவர் தேவனே!

யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

இறுதியாக, இயேசுவுக்கு தெரியாத காரியம் கூட தேவனுக்கு தெரியும்:  

மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

இயேசுவுக்கு தெரியாத காரியங்களை அறிந்திருப்பதன்  மூலம் பிதா இயேசுவைவிட பெரியவராக இருக்கிறார் 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவனின் வார்த்தையாகிய குமாரன் தேவனை பார்க்கிலும் சிறியவராக கூறப்படுகிறாரா?
Permalink  
 


அப்படியாயின் ஏன் தேவனுக்கு சமமாயிருந்தும் என்று இயேசுவை குறித்து சொல்லப்படுகிறது

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவனின் வார்த்தையாகிய குமாரன் தேவனை பார்க்கிலும் சிறியவராக கூறப்படுகிறாரா?
Permalink  
 


நாம் சற்று நிதானமாய் யோசிப்போம்! 
 
இயேசுவுக்கு தன்னை பற்றி அதிகம் தெரியுமா? 
 
அல்லது 
 
பவுலுக்கு இயேசுவை பற்றி அதிகம் தெரியுமா? 
 
இயேசு சொல்கிறார் "என் பிதா என்னிலும் பெரியவர்" என்று.
 
பவுல் சொல்கிறார் "அவர் தேவனுக்கு சமமாஇருப்பதை" என்று!
 
நான் இயேசு சொல்வதையே எடுத்துகொள்வேன். 
 
பவுல் அவ்வாறு சொல்ல காரணம்: 
 
இயேசு 
தேவத்துவத்தில் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார் 

தேவனுடய ஆவியானவர் அவரோடு தங்கியிருந்ததால் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார்      

தேவனின் கிரியைகளை செய்வதில் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார் 

பிதாவுடையது எல்லாம் அவருடையதாகவே இருந்ததால் அவர்  பிதாவுக்கு சமமாக  இருந்தார் 

தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதால் அவர் தேவனுக்கு சமமாக இருக்கிறார்.

தேவனுடைய ஏழு ஆவிகளையும் உடையவராக இருப்பதால் அவர் தேவனுக்கு சமமாக இருக்கிறார் 

எனவே அவர் சொல்வதிலும் எந்த தவறும் இல்லை! 
 
 
  
 
 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

ok



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard