இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறரை குற்றவாளியாக தீர்க்காதிருங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பிறரை குற்றவாளியாக தீர்க்காதிருங்கள்!
Permalink  
 


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பரிசேயர் மற்றும் சதுரெயர்கள் வேறு எந்த மதத்தையும் சார்ந்தவர்களோ அல்லது வேறு தேவனை கும்பிடுகிரவர்களோ அல்ல. நமது கர்த்தராகிய தேவனே மோசேயின் மூலம் தங்களுக்கு கொடுத்த நியாயபிரமாண புத்தகத்தை வைத்துக்கொண்டு அதன்படி வைராக்கியமாக வாழ்ந்த, நல்ல தேவபக்தி உள்ளவர்கள்தான்.

ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து அவர்கள் முன் வந்து நின்று கொஞ்சம் வித்யாசமாக உபதேசம் செய்தபோது, அதை கேட்க மனதில்லாமல் அவரை பிசாசு பிடித்தவர் என்றும் தேவ தூஷணம் சொல்பவர் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து ஒதுக்கினார்கள்.

மோசே மூலம் தேவனே கொடுத்த வேதம் தனது கையில் இருப்பதால் முன்னால் வந்து நிற்கும் தேவனின் ரூபத்தை அவர்கள் அறிய முடியாமல் அவரை பலவிதமாக குற்றம் சாட்டி அதன் அடிப்படையிலேயே அவரை மரண ஆக்கினைக்குள்ளாக தீர்த்தனர் பிறகு சிலுவையில் அறைந்தனர். இப்படி ஆண்டவரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஆண்டவரையே தவறாக தீர்ப்பு வழங்கி ஆண்டவரையே சிலுவையில் அறைய காரணம் என்ன?

அவர்கள் தேவனை முழுமையாக அறியவும் இல்லை தேவனை முழுமையாக நம்பவும் இல்லை மாறாக தங்கள் கையில் உள்ள எழுத்தைதான் நம்பினார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களுக்கு

பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். (யோவா: 5-45) என்று எச்சரித்தார்,

இதன் அடிப்படையில் சில சத்தியங்களை நாம் தெரிந்துகொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

இன்றும் வேத புத்தகத்தை கையில் வைத்த்டுக்கொண்டு இதுதான் சத்யம் இதன்படிதான் எல்லோரும் பேசவேண்டும், யார் பேசினாலும் அதற்க்கு வேத ஆதாரம் வேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்து அதன்படி முடிவெடுப்பதும அதன்படி விவாதிப்பதும் நல்ல காரியம்தான்

ஆனால்


வேதத்தின்படித்தான்
தீர்ப்பு என்று சொல்பவர்கள் முதலில் தங்கள் அந்த வேதத்தின்படி வாழ்க்கை வாழ்கிறோமா என்பதை சற்று ஆராய்ந்துவிட்டு பிறரை அதன்படி நியாயம் தீர்ப்பது அவர்களுக்கு நல்லது, அல்லது அடுத்தவரை நியாயம் தீர்க்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

ஏனெனில்
நாம் அடுத்தவரை நோக்கி நீட்டும் கைகள், அதே வேத புத்தகத்தின் அடிப்படையில் ஆண்டவரால் நம்மை நோக்கி நீட்டப்பட சாத்தியங்கள் உள்ளன என்றே சொல்லமுடியும்!

 
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; (7:1,2)

என்று
வேத வசனம் மிக தெளிவாக சொல்கிறது. யாரையும் நியாயம் தீர்க்க யாருக்கும் இந்த உலகில் அதிகாரம் கிடையாது, மிஞ்சி நியாயம் தீர்ப்பீர்களானால் அதே தீர்ப்பு உங்களை நோக்கி திரும்பும் என்கிறது ஆண்டவரின் வார்த்தை.

வேதத்தில்
மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கும்:

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. (5:39)

உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. (5:40)

ஒருவன்
உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. (5:41,42)

உன் வீட்டில் விருந்து பண்ணும்போது பணக்காரர்களை அழைக்காமல் ஏழை பிச்சைகார்களை அழைத்து விருந்து பண்ணு

போன்ற வார்த்தைகளை யாரும் வாழ்வில் கடைப்பிடித்து நடப்பது மிக மிக கடினம். இன்றுள்ள பல சபைகளில், மற்றும் விசுவாசிகளும் சிறு சிறு காரியங்களை கூட விட்டு கொடுக்க முடியாமல் உலக வழக்குகள் நிலுவையில் உள்ளதும், யாரும் தன்னிடம் உள்ளதை விற்று பிச்சை கொடுக்க மாட்டார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும்

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (7:14) என்று வேதம் சொல்லும் பட்சத்தில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், நம் கண்ணில் என்ன இருக்கிறது என்பதை வேத வசன அடிப்படையில் ஆராயாமல், நியாயம் தீர்க்க முதலில் நிற்பது நல்லதல்ல!

ஆண்டவரை
ஏற்றுக்கொண்டவர்களுக்கு நித்ய ஜீவன் வாக்களிக்கப்பட்டது எப்படி உண்மையோ அதுபோல

  • "நீங்கள் மனம் திரும்பி பிள்ளைகள் போல் ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்" (மத்:18-3)
    வேதபாரகர், பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்" (மத்: 5-20)
    என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத் 7-21) .
    "ஆதியில் கொண்ட அன்பை விட்டுவிடுவதுகூட குற்றம்" என்றும்"
  • "ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்ட பெயரை கூட ஆண்டவரால் கிறுக்கி போட முடியும் என்பதும்" உண்மையே!

நாம் ஒருவரும் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட முடியாது என்பதை இவைகளிலிருந்து நான் அறிந்துகொள்ள முடியும்

வேத புத்தகத்தில் உள்ள ஒரே ஒரு வசனத்தை காண்பித்து நம்மை ஆகாதவன் என்று ஆண்டவரால் தள்ளவும் முடியும்" அதே நேரத்தில் "அவர்கள் பாவிகள், நிச்சயம் நரகம்தான் போவர்கள் என்று நாம் தீர்மானித்த ஒருவரை அதே வேத வார்த்தை ஒற்றை காண்பித்து அண்டவரால் விடுவிக்கவும் முடியும்.

ஏனெனில்

"மனிதனால் கூடாது தேவனால் கூடும்" என்றும்

"தேவனால் எல்லாம் கூடும்" என்றும் "

'பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்"(சகரி 4:6) என்றும் சொல்லும் வசனங்கள், தேவனே கடைசி நியாயாதிபதி என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

நம்மை எப்படி வேண்டுமானாலும் நியாயம் தீர்க்கும் இறுதி முடிவு இறைவன் கையில் இருப்பதால், நாம் யாரையும் குற்றவாளி என்று தீர்க்காமல், பிறர் குற்றங்களை எல்லாம், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மன்னித்து, இருமாப்புகளை அகற்றி, நமக்காகவும் பிறருக்காகவும் இரக்கம் வேண்டி ஆண்டவரிடத்தில் கெஞ்சுவோமாக!

அது ஒன்றே நாம் ஆகாதவனாக ஆகிவிடாமல் தப்பிக்க உதவும் வழி!  



-- Edited by SUNDAR on Monday 11th of January 2010 12:03:38 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

குற்றவாளியாக தீர்ப்பதற்க்கும் கடிந்துகொள்ளுதல் புத்திசொல்லுதல் இவைகளுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு! 

மத்தேயு 7:1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

எனது கருத்துப்படி "ஒருவரயும் குற்றவாளியாக தீர்க்காதீர்கள்" என்று வசனம் தெளிவாக‌ சொல்வதால் யாரயும் குற்றவாளி என்று தீர்மானமாக சொல்வது எவ்விதத்திலும் தவறானது. இதுபோல் வசனஙளை சரியாக ஆராய்ந்து கைகொள்ளாத காரணத்தால்தான் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

யாரயும் குற்றவாளியாக தீர்க்க நமக்கு எந்த அதிகாரமும் கிடயாது. அது வேற்று மார்க்கத்தாராக இருந்தாலும் சரி! இவர்களுக்கு இப்படித்தான் நடக்கும் இவர்கள் பாவிகள்/ இவர்கள் குற்றவாளிகள் என்று தீர்மானிக்க அல்லது சாபம் கொடுக்க‌ நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

உதாரணமாக பார்வோனின் இருதயத்தை கர்த்தர் கடினப்படுத்தினார் என்று வேதம் சொல்கிறது. இஙகு பார்வோனை நாம் குற்றவாளி என்று தீர்ப்போமனால் அவனை கடினப்படுத்திய கர்த்தர்ரையே நாம் குற்றவாளி ஆக்குவதுபோல் ஆகலாம் அல்லவா. எஙகு தேவன் எவ்வாரு செயல்படுகிரார் என்பது நமக்கு சரிவர தெரியாத பட்சத்தில் எல்லாம் நன்மைக்கே என்ற கருத்தே எற்ப்புடயது. நமக்கு தவறாக தெரியும் காரியஙளுக்காக விவாதிக்கலாம் புத்திசொல்லலாம் அவர்களுக்காக ஜெபிக்க்லாம் அவ்வளவுதான்.  

IIயொவான் 5:11 மரண்த்துக்கு எதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால் அவன் வேண்டுதல் செய்யகட‌வன் என்றுதான் வேதம் சொல்கிறது.

எப்படியும், வசனம் சொல்வதற்க்கு நாம் நிச்சயம் கீழ்படிவது யாரயும் குற்றவாளியாக தீர்க்காதிருப்பது அவசியம்.

ஆனால் தவறு செய்யும் ஒருவரை கடிந்து கொள்ளுதல் நிச்சயம் தவறல்ல.

I தீமோத்தேயு 5:20மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்

யாக்: 5:19 ப‌டி ச‌த்ய‌த்தை விட்டு வில‌குகிற‌வ‌னை திருப்ப‌வேண்டிய‌து அவ‌சியமாக‌ இருப்ப‌தால்

த‌வ‌று செய்யும் ச‌கோத‌ர‌னை கடிந்து கொள்லுத‌ல் நிச்ச‌ய‌ம் த‌வ‌ற‌ல்ல‌.

ஆனால் அந்த கடிந்து கொள்ளுதலில் இரண்டு வைகை உண்டு.1.

ஒன்று நேருக்கு நேர் கடிந்துகொள்ளுதல்.

ஒருவர் செய்யும் குற்றத்தை பிற இடஙளில் சொல்லி அவதூறு பரப்புப்வதைவிட நேரில் கடிந்துகொள்வதுதான் மிக சிறந்தது. இதைதான் பவுல் பேதுரு விஷயத்தில் செய்தார்.

இதில் உள்ள நண்மை என்னவென்றால் எதிர் தரப்பினரின் நியாய‌ம் என்னவென்ப்தை நம்மால் உடனே நேரில் புரிந்துகொள்ள முடியும். அவ‌ரிட‌த்தில் நியாய‌ம் இருக்கும் பட்ச‌த்தில் நாம் உட‌னே ந‌ம‌து க‌ருத்தை மாற்றிகொள்ள் முடியும். 2.

பொதுவான‌ க‌டிந்து கொள்ளுத‌ல்:

இம்முறையில் ஆவிக்குரிய‌ நிலையில் ந‌ம‌க்கு முதிர்ச்சி அவ‌சிய‌ம் தேவை. ஆவிக்குறிய‌வைகளை ஆவிக்குறிய‌வைக‌ளோடு ம‌ட்டுமே ச‌ம்பந்த‌ப்ப‌டுத்தி பார்க்க‌ முடியும். ஆவிக்குரிய‌வைகளை மாமிச‌ க‌ண்களோடு பார்த்தால் ந‌ம்மால் உண்மை நில‌யை அறிய‌ முடியாது. அவ்வாரு ஆவியில் நிதானித்த‌றிந்து சிலர் செய்வ‌து வேத‌த்திற்கு புற‌ம்பான‌து என்று நாம் க‌ருதும் ப‌ட்ச‌த்தில் அதுப‌றிய‌ ந‌ம‌து பொதுவான‌ எதிர்ப்பை அல்ல‌து கடிந்து கொள்லுத‌லை வெளியிட‌லாம்.

அதை பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. படித்தும் திருந்தாதவர்களின் செயலுக்கு நாம் எவ்விதத்திலும் பொருப்பல்ல. ஆனால் அவர்கள் கேட்டாலும் கேட்காவிடாலும் எவ்விதத்திலாவது நமது கருத்தை வெளிப்படுத்தலாம்.  

ப‌வுல் எழுதிய‌ நிரூப‌ங்க‌ளில் அதுபோல் ப‌ல‌ பொது கடிந்துகொள்ளுத‌ல் ம‌ற்றும் புத்தி சொல்த‌ல்களை பார்க்க‌ முடியும்.

இறுதியாக கடிந்துகொள்ளுதல் பற்றி வேத‌ம் ந‌ம‌க்கு சொல்லும் க‌ட்ட‌ளை என்ன‌வெனில்:

தீந்து:3:10 வேத‌ புர‌ட்ட‌னாயிருகிற‌ ஒருவ‌னுகு நீ இர‌ண்டொரு த‌ர‌ம் புத்தி சொன்ன‌ பிற‌கு அவ‌னை விட்டு வில‌கு.

மத்

:1815. உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
16. அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
17. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

இதற்க்கு மேம்பட்டு செயல்படுபவன் தேவனது உக்கிராண பொறுப்பை தனது கரத்தில் எடுத்துகொள்கிறான் என்றே நான் கருதுகிறேன்



-- Edited by SUNDAR on Monday 15th of February 2010 01:26:59 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

....................................................................................................................................................................................................

சுந்தர் எழுதியது

யாரயும் குற்றவாளியாக தீர்க்க நமக்கு எந்த அதிகாரமும் கிடயாது. அது வேற்று மார்க்கத்தாராக இருந்தாலும் சரி! இவர்களுக்கு இப்படித்தான் நடக்கும் இவர்கள் பாவிகள்/ இவர்கள் குற்றவாளிகள் என்று தீர்மானிக்க அல்லது சாபம் கொடுக்க‌ நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

.......................................................................................................................................................................................................

நாம் சீக்கிரத்தில் ஒருவரையும் குற்றம் பிடிக்க கூடாது 
 
நான் கேள்விப்பட்ட இரண்டு உதாரணம்

(1 ) ஒரு sunday    ஆராதனையில் போதகர் உபதேசிக்கும் போது
வாலிப சகோதரன் ஒருவன் தூங்கி கொண்டு பிறகு கண் திறந்து 
சாய்ந்து சாய்ந்து உறங்கி கொண்டு இருந்தான் அப்பொழுது அந்த போதகர் 
இவனுக்கு தூக்கம்  வந்தால் வீட்டில் தூங்கலாம் அல்லவா 
ஏன்  இங்கு வந்து இப்படி உறங்கி கொண்டு இருக்கிறான் என்று
ஆண்டவரே ஏன் இப்படி இருக்கிறாரான் இந்த சகோதரன் என்று ஆண்டவரிடம்
சொன்னார்
 

அதற்கு ஆண்டவர் ஏன் நீ சீக்கிரமாய் முடிவு எடுக்கிறாய் என்று சொல்லி
அந்த வாலிபன் நேற்று இரவு வேலை செய்து ஒரு சொட்டு தூக்கம் இல்லாமல்
என் ஆறாதனையை விட கூடாது என்று வந்து இருக்கிறான் அவனால் முடிய வில்லை 
இருந்தாலும்  கண் திறந்து அவன் கேட்க நினைக்கிறான் அவனால் முடியவில்லை என்றார்
 

(2 ) ஒரு பெரிய கூட்டத்தில் போதகர் பேசி கொண்டு இருக்கும்  போது திடீரென்று
ஒரு வாலிபன் எழுந்து   திர்க தரிசனம் சொன்னான்
போதகருக்கு  ஒரே ஆச்சரியம் இவன் ஒரு விபசாரத்தில்  இருந்தான் அல்லவா
இவன் திர்க தரிசனம் சொல்கிறானே என்று தேவன் இவனை இப்படி மாற்றி
விட்டாரே என்று தேவனை மகிமை படுத்தினார்
இரவு கூட்டம் முடிந்து காரில் போய் கொண்டு இருக்கும் போது அந்த வாலிபன்
விபசார விடுதி பக்கமாய் போய் உள்ளே போய் விட்டான்  போதகருக்கு  ஒரே குழப்பம்

வீட்டில் சென்று ஆண்டவரே என்ன இது அந்த வாலிபன் கூட்டத்தில் எழுந்து திர்க தரிசனம் சொன்னானே
அதுவும் சரியாய் இருந்ததே ஆண்டவரே ஏன் அந்த வாலிபன் இப்படி பொய் சொன்னான் ஏன் இவர்கள் இப்படி இருக்கிரார்ககள்    என்று ஆண்டவரிடம் கேட்டு  கொண்டு இருந்தார்
 

அப்பொழுது ஆண்டவர் போதகரிடம் நீ பார்த்தது அவ்வளவுதான் அதன் பின் என்ன நடந்தது என்று உனக்கு தெர்யுமா என்று சொல்லி (அவருக்கு அந்த தரிசனத்தை காட்டினார்)
அந்த வாலிபன் விபசார விடுதி பக்கமாய் போய் முழங்கால் போட்டு ஆண்டவரே என்னை தொட்டது போல் இவர்களையும் தொடும் என்று ஆண்டவரிடம் ஜெபம் செய்து கொண்டு இருந்தான்....................
 
 

போதகர் பார்வையில் பட்டது  அவருடைய பார்வைக்கு
தப்பாய் இருந்தது ஆனால் அதன் பின் விலைவுகள் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா
 

ஆம் நாம் யாரையும் சீக்கிரத்தில் குற்றம் பிடிக்க கூடாது
பிறரை குற்றவாளியாகவும் தீர்க்க கூடாது .............................................
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மிக மிக அருமையான சில செய்திகளை  கொடுத்திருக்கிறீர்கள் சகோதரரே.
 
இதே அடிப்படையில்தான் நானும் யாரையும் குற்றவாளி என்று தீர்க்க விரும்புவது இல்லை.
 
ஆவியானவரால் நடத்தப்படும் இந்தகாலத்தில் யாரைபற்றிய உண்மை நிலையும் நமக்கு உடனே தெரியவருவதில்லை.
 
பரிசேயரை போல, இயேசு  பாவிகளுடனேயே  எப்போதும் காணப்படுகிறார்  எனவே அவரும் பாவியாகத்தான் இருக்கவேண்டும்  என்று அறிவை வைத்து தீர்மானித்தால்  அவ்வளவுதான்.  ஆண்டவருடன் நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே உண்மையை அறிய முடியும்.

எனவேதான் ஆண்டவரிடம் அமர்ந்து விசாரியுங்கள் என்று அடிக்கடி சொல்கிறேன்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:
//குற்றவாளியாக தீர்ப்பதற்க்கும் கடிந்துகொள்ளுதல் புத்திசொல்லுதல் இவைகளுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு என்றே நான் கருதுகிறேன்.//

சகோ.சுந்தர் அவர்களே!

குற்றம் செய்பவனைத்தான் நாம் கடிந்துகொள்கிறோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

விருத்தசேதன விஷயத்தில் “மாயம் பண்ணுதல்” எனும் குற்றத்தை பேதுரு செய்தபோதுதான் பவுல் அவரைக் கடிந்து கொண்டார். எனவே ஒருவரைக் கடிந்துகொள்ளவேண்டுமெனில் அவர் குற்றம் செய்துள்ளாரா என்பதை முதலாவது அறியவேண்டியது அல்லது தீர்மானிக்கவேண்டியது அவசியம்.

வேதப்புரட்டனுக்கு புத்தி சொல்லவேண்டுமெனில், அவன் “வேதப்புரட்டு” எனும் குற்றத்தை செய்துள்ளான் என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.

எனவே யாரையாவது நாம் கடிந்துகொள்கிறோம் என்றால், அவரை ஏற்கனவே குற்றவாளியாக தீர்மானித்துவிட்டோம் என்றுதான் அர்த்தம்.

ஒருவர் குற்றஞ்செய்துள்ளார் என தீர்மானித்தபின் நாம் எடுக்கிற நடவடிக்கைகளில் ஒன்றுதான் கடிந்துகொள்தல், அல்லது புத்திசொல்தல்.

ஆனால், ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானிப்பதற்கும், அவரைக் குற்றவாளியாகத் தீர்த்தல் என வேதாகமம் கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

அந்த வித்தியாசம் என்னவென்பதைப் பார்ப்போம்.

ஒரு செயல் குற்றம் அல்லது தவறு என தீர்மானிக்கக்கூடிய அறிவு நிச்சயமாக நம் அனைவருக்கும் உண்டு. மனச்சாட்சிப்படியோ அல்லது வேதாகம கற்பனைகளின்படியோ, எந்தவொரு செயலும் குற்றமா இல்லையா என்பதை நிச்சயமாக நம்மால் தீர்மானிக்க இயலும். இந்த அறிவு நமக்கு இல்லையெனில், நாம் செய்கிற ஒரு செயல் குற்றமா இல்லையா என்பதை நம்மால் தீர்மானிக்க இயலாது.

எனவே, ஒரு செயலை நாம் செய்தாலும் சரி, மற்றவர்கள் செய்தாலும் சரி, அது குற்றமா இல்லையா என்பதை நம்மால் தீர்மானிக்கும் இயலும் என்பது நிச்சயம். அவ்விதமாக ஒரு செயலை குற்றம் என நாம் தீர்மானித்தால், அக்குற்றத்தைச் செய்தவரை குற்றவாளி என்றுதான் கூறமுடியும். இப்படிச் சொல்வதில் தவறு எதுவுமில்லை.

உதாரணமாக, ஒருவன் மற்றொருவரின் பொருளை திருடிவிட்டான் என வைத்துக்கொள்வோம். அப்போது நாம் எல்லோரும் அவனைத் திருடன் என்றுதான் சொல்லுவோம். திருடுவது ஒரு குற்றம் அல்லது பாவம் என இச்சமுதாயமும் கூறுகிறது, சட்டமும் கூறுகிறது, வேதாகமும் கூறுகிறது. எனவே திருடனை ஒரு குற்றவாளி என்றுதான் நாம் சொல்லவேண்டும். இப்படிச் சொல்வதை தவறு அல்லது குற்றம் என வேதாகமம் சொல்வதில்லை. ஒரு திருடனை, திருடன் அல்ல என்று சொல்வதுதான் குற்றம். பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

நீதிமொழிகள் 17:15 துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

நீதிமொழிகள் 24:24 துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.

ஏசாயா 5:20 தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!

உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார். எனவே, ஒருவன் செய்வது துன்மார்க்கம் அல்லது குற்றம் எனத் திட்டவட்டமாகத் தெரிந்தால் அவனைத் துன்மார்க்கன் அல்லது குற்றவாளி என்றுதான் நாம் சொல்லவேண்டும். இதற்கு மாறாகச் சொன்னால், நாம் குற்றவாளியாகிவிடுவோம்.

இனி, “குற்றவாளியாகத் தீர்த்தல்” என வேதாகமம் கூறுகிற சொற்றொடருக்கான அர்த்தத்தைப் பார்ப்போம்.

மத்தேயு 7:1-ல் காணப்படும் “தீர்த்தல்” எனும் சொல்லுக்கு இணையான கிரேக்க சொல் “கிரினோ (krino)” என்பதாகும்.

இவ்வார்த்தைக்கான அர்த்தங்கள்:  properly, to distinguish, i.e. decide (mentally or judicially); by implication, to try, condemn, punish:

KJV - avenge, conclude, condemn, damn, decree, determine, esteem, judge, go to (sue at the) law, ordain, call in question, sentence to, think.


அதாவது, தீர்மானித்தல், தீர்மானிக்க முயல்தல், கண்டித்தல், தண்டித்தல் எனும் 4 அர்த்தங்களைத் தருகிறது.

அடுத்து, மத்தேயு 7:2-ல் காணப்படும் “தீர்ப்பு” எனும் வார்த்தைக்கான அர்த்தத்தைப் பார்ப்போம்.

“தீர்ப்பு” எனும் சொல்லுக்கு இணையான கிரேக்க சொல் “கிரிமா (krima)" என்பதாகும்.

இவ்வார்த்தைக்கான அர்த்தங்கள்: a decision (the function or the effect, for or against ["crime"]):

KJV - avenge, condemned, condemnation, damnation, + go to law, judgment.


அதாவது, ஒரு குற்றத்திற்கு எதிரான செயலை அல்லது குற்றத்திற்கான தண்டனையை “கிரிமா” எனும் வார்த்தை குறிப்பிடுகிறது.

இப்போது மத்தேயு 7:1,2 வசனங்களைப் படித்துப் பார்த்து அவற்றின் சரியான அர்த்தத்தைப் பார்ப்போம்.

மத்தேயு 7:1,2 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

நம்மைக் குற்றவாளியெனத் தீர்க்கிற தேவன், நமக்குத் தண்டனை எதுவும் தராவிடில் நமக்கு நஷ்டம் அல்லது கஷ்டம் எதுவுமில்லை. நம் குற்றத்திற்கு தேவன் தண்டனையளித்தால்தான், நாம் குற்றவாளிகளென தீர்க்கப்படாதபடிக்கு ஜாக்கிரதையாயிருக்க அவசியமாகிறது. எனவே “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு” எனும் சொற்றொடரின் அர்த்தம் “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படாதபடிக்கு” எனபதே சரியாக இருக்கும்.

அதாவது, நம் குற்றத்தினிமித்தம் நாம் தண்டிக்கப்படாதபடிக்கு, மற்றவர்களின் குற்றத்தினிமித்தம் அவர்களை நாம் தண்டியாதிருக்க வேண்டும் என்றே இயேசு கட்டளையிடுகிறார். இக்கருத்து, பின்வரும் வசனங்களோடு ஒத்திருப்பதைக் கவனியுங்கள்.

லூக்கா 11:4 எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;

மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.


மத்தேயு 7:1-ல், “தீர்த்தல்” என்ற வார்த்தை “தண்டித்தல்” எனும் செயலையும் குறிப்பிடுவதால்தான், “மற்றவர்களுக்கு அளத்தல்” எனும் செயலுடன் இயேசு அதை ஒப்பிடுகிறார். எனவே மத்தேயு 7:1,2-ஐ பின்வரும் அர்த்தத்தில் புரிந்துகொள்வதே சரியானதாக இருக்கும்.

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்து தண்டியாதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்த்து தண்டிக்கிறபடியே நீங்களும் தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

இதே அர்த்தத்தில்தான், ரோமர் 2:1-லும் பவுல் கூறுகிறார். எனவே மற்றவர்களை குற்றவாளியெனத் தீர்மானிப்பதில் தவறில்லை. குற்றவாளியாகத் தீர்த்து, அவர்களைத் தண்டிப்பதுதான் தவறாகிறது.

தண்டித்தல் என்றால், பழி வாங்குதல் போன்ற வெளிப்படையான தண்டித்தல் மட்டும் அல்ல.

குற்றம் செய்தவன் தேவனால் தண்டிக்கப்பட வேண்டும் என நினைப்பது, சாபம் கொடுப்பது, சட்டம் தடுப்பதால் பழிக்குப் பழி வாங்க முடியாவிட்டாலும் மனதில் பழி உண்ர்ச்சி இருப்பது இவையெல்லாமும் தண்டிப்பதற்குச் சமமானவைகளே.

குற்றம் செய்த ஒருவர் ஏதேனும் துன்பத்திற்குள்ளாகும்போது, அவர் செய்த குற்றத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறார் என நினைப்பதுகூட அவரைத் தண்டிப்பதற்குச் சமமே.

இப்படி பலவிதங்களில், பிறரைக் குற்றந்தீர்த்து தண்டிப்பது (அல்லது தண்டிக்கப்பட நினைப்பது) தான் கூடாது என மத்தேயு 7:1,2-ல் இயேசு கூறுகிறார். ரோமர் 2:1-ல் பவுல் கூறுகிறார்.

அப்படியானால், மற்றவர்கள் குற்றம் செய்யும்போது நாம் என்ன செய்யவேண்டும்?

இக்கேள்விக்கான பதிலை அடுத்த பதிவில் பார்ப்போம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

மற்றவர்கள் குற்றம் செய்யும்போது நாம் என்னசெய்ய வேண்டும்?

மற்றவர்களின் குற்றத்தை 3 பிரிவுகளாகப் பிரித்து, இக்கேள்விக்கான பதிலைக் காண்போம்.

1. நமக்கு விரோதமானதும் நம்மை மட்டும் பாதிக்கிறதுமான குற்றம்:

2. வேறு யாரையும் பாதிக்காமல், தங்களை மட்டும் பாதிக்கிறதான தனிப்பட்ட குற்றம்

3. இடறல்கள் மூலம் பிறரைப் பாதிக்கிறதான குற்றம்.


1. நமக்கு விரோதமானதும் நம்மை மட்டும் பாதிக்கிறதுமான குற்றம்:

இவ்விஷயத்தில் வேதாகமம் 2 ஆலோசனைகளை நமக்குத் தருகிறது.

i. மன்னித்து விடுவது

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.

லூக்கா 17:3,4 உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக.

நமக்கு விரோதமாக நம் சகோதரனோ அல்லது வேறு யாரோ குற்றஞ்செய்தால், அவர்கள் மனஸ்தாபப்பட்டாலும் படாவிட்டாலும் மன்னிக்க வேண்டும் என்றே வேதாகமம் கூறுகிறது.

ஏனெனில், நம்மில் எவருமே குற்றமற்றவர்கள் அல்ல. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிறருக்கு விரோதமாகவோ தேவனுக்கு விரோதமாகவோ நாம் கட்டாயம் குற்றம் செய்திருப்போம். அக்குற்றம் நமக்கு மன்னிக்கப்படவேண்டுமெனில், பிறர் நமக்கு விரோதமாக செய்கிற குற்றத்தை நாம் மன்னித்தேயாக வேண்டும்; அதுவும் மனப்பூர்வமாய் மன்னிக்க வேண்டும். என வேதாகமம் கூறுகிறது.

ii. சபைக்குத் தெரியப்படுத்துவது

மத்தேயு 18:15-17  உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன்

உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

நம் சகோதரனோடு உள்ள உறவை ஆதாயப்படுத்தும்வண்ணம், சகோதரனை நேருக்கு நேராகக் கடிந்துகொள்ளலாம்; அதில் பயன் இல்லையெனில் சாட்சிகள் மூலமாகவும், பின்னர் சபை மூலமாகவும் கடிந்துகொள்ளலாம். இவற்றில் எதிலும் பயன் இல்லையெனில், சகோதரனோடு உள்ள உறவை விட்டுவிடலாம் என வேதாகமம் ஆலோசனை கூறுகிறது.

2. வேறு யாரையும் பாதிக்காமல், தங்களை மட்டும் பாதிக்கிறதான தனிப்பட்ட குற்றம்

இக்குற்றத்தை ஒருவர் செய்தால் நாம் என்னசெய்ய வேண்டும் என பின்வரும் வசனம் கூறுகிறது.

1 தீமோத்தேயு 5:20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

கேட்டுக்கு நேராகச் செல்பவர்கள் மனந்திரும்புவதற்கு ஏதுவாக, அவர்களைக் பிறர் நடுவில் கடிந்துகொள்ள வேண்டும் எனப் பவுல் கூறுகிறார். தீமோத்தேயுவைப் போன்ற ஊழியர்களுக்கு இந்த அதிகாரத்தைப் பவுல் கொடுத்துள்ளார். நாம் மெய்யாகவே தேவனுக்கு ஊழியஞ்செய்தால், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாவஞ்செய்பவர்களை கடிந்துகொள்ளலாம்.

3. இடறல்கள் மூலம் பிறரைப் பாதிக்கிறதான குற்றம்.

இக்குற்றம், முதல் 2 குற்றங்களைவிட மிக மோசமானது என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாயுள்ளது.

மத்தேயு 18:6,7 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

இடறல் செய்பவர்கள், மற்றவர்களை ஐயோ எனும் நிலைக்கு ஆளாக்குவதோடு, தங்களையும் ஐயோ எனும் நிலைக்கு ஆளாக்கிவிடுகின்றனர். இவர்களைக் குறித்து மிகுந்த எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென இயேசுவும் அப்போஸ்தலரும் கூறியுள்ளனர் (ரோமர் 16:17).

நம் கையோ காலோ இடறல் உண்டாக்கினால் அவற்றைக்கூட வெட்டியெறியும்படி மத்தேயு 18:8,9 வசனங்களில் இயேசு கூறுவதால், இடறல் உண்டாக்குகிறவர்களை நம்மைவிட்டு விலக்குவது அவசியமாகும். அவர்களை விலக்கவேண்டுமெனில், அவர்களை நாம் அடையாளங்காண வேண்டும். எனவே இடறல் செய்பவர்களை அடையாளங்காட்டும் பணிதான் இந்நாட்களில் மிகமிக முக்கியமானது. தேவனின் மெய்யான ஊழியர்கள் இப்பணியைச் செய்யவேண்டும்.

இடறல் செய்பவர்களின் இடறல்களை எடுத்துரைப்பது, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதாகாது.

மத்தேயு 13:24-30 வசனங்களில், ஓர் உவமையைக் கூறும் இயேசு, அதற்கான விளக்கத்தை 36-43 வசனங்களில் கூறுகிறார். அதில் ராஜ்யத்தின் புத்திரருக்கு நிகராக, இடறல் செய்பவர்களும் வளர்வார்கள் என இயேசு கூறுகிறார். எனவேதான் விசுவாசிகளை இடறச்செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் ஏராளமாகப் பெருகியுள்ளனர். அவர்களை விசுவாசிகளிடம் அடையாளங்காட்டுவது மெய்யான ஊழியர்களின் கடமையாகும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

குற்றவாளி என்று தீர்ப்பதற்கும  கடிந்துகொள்ளுதலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. குற்றம்  செய்தவர்களை   மட்டும்தான் கடிநதுகொள்ள வேண்டும் என்பதில்லை. 
கண்டிப்பாக ஒரு காரியத்தை  நீ செய்யகூடாது (அல்லது நல்லதோ தீயதோ)  என்று சொல்வதுதான் கண்டிப்பு.   
 
கண்டிப்பு என்பது நமக்கு மிக வேண்டியவர்கள் நமது பிள்ளைக்கு /சகோதரனுக்கு நண்பனுக்கு இப்படி ஆகிவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் சில காரியங்களை இப்படி செய்  கண்டிப்புடன் கூறுதல்!    
 
 மாற்கு 8:32 இந்த வார்த்தையை அவர் தாரளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
 
இங்கு  இயேசு  குற்றம்  எதுவும்  செய்யவில்லை  அனால் பேதுரு 
அவர் மீதுள்ள அன்பினிமித்தம் கடிந்துகொண்டான்  
 
  
பழைய உடன்படிக்கைக்கும் பவுல் கூறும்  புதிய உடன்படிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை நாம்  நிச்சயம்   அறிந்துகொள்ள வேண்டும்.   புதிய உடன்படிக்கையில்  இருப்பவர்களுக்கு நன்னடத்தைகளைவிட (கிரியைகளை விட)  ஆவியில்  நடத்தப்படுதல்தான் மிகவும்  அவசியம்.    
 
ரோமர் 8:1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்ட வர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
 
கிரியையின்படி பார்த்தால் ஒருவனும் தேவனுக்கு முன்னால் நீதிமானாக முடியாது எனவே கிருபை இருக்கும் இடத்தில் கிரியைக்கு முக்கியத்துவம் இல்லை.
 
ரோமர் 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால்\ கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே 
 
பவுல் சொல்லும் புது பிரமாணத்தையும்  நம்பும்  அதே நேரத்தில் பழைய பிரமாணத்தையும் கைகொள்ள நினைபது  நல்லதும் மேன்மையானதும் கூட,. அனால்  அதற்காக புதிய உடன்படிக்கையில் இருப்பவரை  நமது  நிலையில் இருந்து  ஆராய்ந்து குற்றம் கூறமுடியாது. அவர்களுக்கென்று தனி வார்த்தைகள் இருக்கிறது.  
  
ரோமர் 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
 
ஆம்! கிறிஸ்த்து இயேசுவுக்குள் கிருபைக்குகீழ்   இருபவருக்கு பாவம் மரணம் என்ற பிரமாணமே கிடையாது  அவர்களை பாவம் மேற்கொள்ளவே முடியாது என்று  பவுல் சொல்கிறார்  
 
ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
 
"பாவம் மேற்கொள்ள முடியாது" என்பதன் பொருள்   அவர்களை எந்த பாவமும் கிருபையை விட்டு வெளியே தள்ளமுடியாது.  இயேசுவை  மறுதலித்தலும்  சுயநீதியின் அடிப்படையில் தேவநீதியை தேடுவதும்   ஆவியானவரை துக்கப்படுத்தி அவிந்துபோக செய்தலுமே ஒருவரை கிருபைலிருந்து விழப்பண்ணும்.  

புதிய ஏற்பாட்டில் பாவம்என்பது என்னவென்று  தீர்மானிப்பது ஆவியானவர்  மட்டும்தான். அவரால் நடத்தப்படும்போது அவரே நமக்கு பாவம் என்னவென்று உணர்த்துவார். மற்றபடி மனிதர்கள் சொல்வதை கேட்டுத்தான் நாம் திருந்தவேண்டும் என்ற அவசியம் இல்லை. 
 
 I யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
 
என்று  வேதம் தெளிவாக  நமக்கு வலியுறுத்துகிறது அவர் அவர்களுக்கு என்ன போதித்திருக்கிறார் என்று அறிவது நம்மால் முடியாது. அதற்கு சரியான வசன அதாரம்  நிச்சயம்  இருக்கும்.  எனவே நாம் ஆராய்ந்து  முதலில் அறியவேண்டியது நம்மிடம் சரியான ஆவியானவர் இருக்கிறாரா என்பதுமட்டும்தான்.    
   
எந்த தவறையும் ஆவியானவர் கண்டிக்காமல் இருக்கவே மாட்டார். அப்படி தவறுகளை  கண்டிக்கவில்லை என்றால்   அது வஞ்சகஆவி!
 
ஆவியானவரின்  வார்த்தைகளை மீறி நடப்பவர்களிலும் இரண்டு வகை உண்டு!  ஓன்று உள்ளிருக்கும் அவருள்  இருக்கும்   ஆவியானவருக்கு  கீழ்படியாமல் நடப்பவர்கள். இப்படி  பலமுறை அவர் குரலை அசட்டை பண்ணுபவர்களை விட்டு   ஆவியானவர் வெளியேற
(I தெச 5:19 ஆவியை அவித்துப்போடாதிருங்கள்)
உடனே  வஞ்சக ஆவி உள்ளே வந்துவிடும். இது இரண்டாம்வகை, இப்படி  வஞ்சகஆவி பெற்றோரை என்ன சொல்லியும் திருத்த முடியாது அவர்கள்  மறுதலித்து போனவர்கள்  என்று வேதம் சொல்கிறது
 
எபி:6
4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
6. மறுதலித்துப்போனவர்கள், ........ அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.

எனவே எவ்விதத்திலும் புதிய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை  இது ஆவியானவரின் செயல்பாட்டு  காலம். இங்கு  யார் என்ன நோக்கில் செயல்படுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் எனவே   உண்மை என்னவென்று அறியாமல் அபிஷேகம் பெற்றவர்களை  நியாயம் தீர்ப்பது  தண்டனைக்கு வழி வகுக்கும்!  
 
அபிஷேகத்தின் முக்கியத்துவத்தை பார்க்கவேண்ட மென்றால் பழைய ஏற்பாடு காலத்திலே  அபிஷேகம் பெற்ற  சவுல் செய்வது தவறு என்று தாவீதுக்கு நன்றாக தெரியும், சவுலை விட்டு கர்த்தரின் ஆவி வெளியேறிய பிறகு கூட தாவீது அவர் கர்த்தரால்  அபிஷேகம் பெற்றவர் என்று பயந்து அவன் மேல் கைபோடவில்லை 
 
I சாமுவேல் 26:9 தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? .
 
என்று சொல்லி, சவுல் எவ்வளவோ தவறு செய்தும்  தாவீது அவனை நிந்தித்து ஒருவார்த்தைகூட சொல்லவில்லை அவன்   கர்த்தரின் இருதயத்துக்கு ஏற்றவனானான் என்று வேதம் சொல்கிறது   
 
எனவே நமக்கு சிலர் செய்வது  தவறாக தெரியும் பட்சத்தில் பொதுவான எச்சரிப்பை கொடுக்கலாம்: மற்றபடி நம்மீது அதற்காக  எந்த  குற்றம் சுமராது என்றே நான் கருதுகிறேன்நமது எழுத்தை பார்த்து ஆவியானவர் அவர்களுக்கு   உணர்த்தி, தங்கள் நிலையை அறிந்துகொண்டால் கொள்ளட்டும் அல்லது அது அவர்களுக்கும் ஆவியானவருக்கும்  இடையில் உள்ள காரியம் இங்கு நாம் இடையில்போய் நிற்ப்பது
 
யாக்கோபு 4:12  அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
 
என்று தேவன் நம்மை பார்த்து கேட்கும் நிலைக்கு 
வந்துவிடகூடாது. உண்மையான  அக்கறை  இருந்தால்   அவர்களுக்காக  நாம் மன்றாடி  
ஜெபிக்கலாம்  
 
சகோ. சாம்சன் பால் அவர்களின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் சகோ. டிஜிஎஸ் பற்றியும் அவர் ஊழியங்கள்  பற்றியும் கடுமையாக விமரிசிப்பார். அவர் சொல்லும் காரியங்கள் எல்லாமே நியாயமானதுதான்! அனால்  இருவருமே ஆண்டவருக்கு ஊழியம் செய்பவர்கள். இவருக்கு வேறுபணி அவருக்கு வேறுபணி அப்படியிருக்க  
ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது எவ்விதத்திலும் ஏற்றதல்ல. தேவனின்  ஊழியக்காரனை  குற்றம் சொல்ல நாம் யார்?
அவரால் இரட்சிப்பை அனுபவித்தவர்கள் எத்தனையோபேர் இருக்க
ஒருவேளை அவர்
தவறியிருந்தால் கூட அதை பொதுவில் சொல்லி குற்றப்படுத்துவது சரியல்ல. அது அவர்மேலிருந்த  
அபிசேகத்தை 
குற்றப்ப்டுத்துவதுபோலாகும்;  மற்றும் இந்த கருத்துக்களை புது விசுவாசிகளும் படிப்பதால் அது இடரலுக்கு வழி செய்யும்.  
 
ரோமர் 8:33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
 
உலகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் கருத்தை   சொல்லுங்கள் விசுவாசிகளுக்கு விளக்கம் கொடுங்கள்   அல்லது எல்லோருக்கும்  பொதுவாக  இது தவறு என்று   எழுதுங்கள். ஆனால் அபிஷேகம்  பெற்ற ஊழியர்களை குறிப்பிட்டு  குற்றப்படுத்துவது நமக்கு அடுத்ததல்ல.    
 
இது என்னுடைய கருத்து! 

தங்களுக்கு அபிஷேகம் பெற்றவர்களின் 
குற்றத்தை
கண்டுபிடித்து கண்டிக்கும் ஒரு உக்கிராண  பொறுப்பை ஆவியானவர் கொடுத்திருந்தால், "நீங்கள் இதை செய்யகூடாது" என்று சொல்ல எனக்கு தகுதியில்லை!
அப்படி ஒரு உக்கிராண பொறுப்பு எல்லோருக்கும் கிடைக்காது, ராஜாவாகிய தாவீது கடிந்துகொள்ள விரும்பாத 
சவுலை சாமுவேல் கடிந்துகொண்டான்    
 

ஆனால் எனக்கு அந்த அதிகாரம் கிடையாது
!            



-- Edited by SUNDAR on Thursday 18th of February 2010 11:54:29 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே!

நீங்கள் புரிந்துகொண்ட அபிஷேகத்தைப் புரியாதவனும், நீங்கள் நினைக்கிற ஆவிக்குரிய நிலையில் இல்லாதவனுமாகிய நான், இவ்விவாதத்தில் தொடர்ந்து பங்களிக்கலாமா என்பதைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:

சகோ.சுந்தர் அவர்களே!

நீங்கள் புரிந்துகொண்ட அபிஷேகத்தைப் புரியாதவனும், நீங்கள் நினைக்கிற ஆவிக்குரிய நிலையில் இல்லாதவனுமாகிய நான், இவ்விவாதத்தில் தொடர்ந்து பங்களிக்கலாமா என்பதைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.



 
நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நான் எழுதும் எல்லா காரியங்களுக்கும் என்னால் வசன ஆதாரம் கொடுக்க முடியாத காரணத்தால், மேல்கொண்டு மனமுறிவு வராமல் இருக்க நாம் தனித்தனியே எழுதுவதுதான் சிறந்தது ! 
 
சூரியன் காலையில் புறப்பட்டு மாலையில் மறையும் என்பது பொதுவான கருத்து
 
அது எப்படி புறப்பட்டு எப்படி போகிறது என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல முடியும். பத்து மணிக்கு இந்த இடத்தில் இருக்கும் பன்னிரண்டு  ஐந்து  மணிக்கு இந்த இடத்தில் இருக்கும் என்று எங்காவது வசன ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் அதற்க்கு பதில் சொல்ல முடியாது

உங்கள் கருத்தை நீங்கள் எழுதுங்கள் எனது கருத்தை நான் எழுதுகிறேன் யார் மனதில் ஆண்டவர் எதை எவுகிராரோ அவரவர் உண்மையை அறிந்துவிட்டு போகட்டும் .
 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

போதகர்களையும் ஊழியர்களையும் குறை கூறி கொண்டு இருப்பது   இப்பொழுது ஒரு பொழுது போக்கு போல ஆகிவிட்டது அவர்களை பற்றி ஏதாவது ஒன்று தெரிந்தாலோ அல்லது கேள்விபட்டாலோ அவ்வளவு தான் சும்மா பிச்சி உதர வேண்டியதுதான்
 
எல்லா கிறிஸ்தவ சகோதரருக்கும் ஒன்று  சொல்கின்றேன்
 
ஒருவரை குற்றபிடிக்க வேண்டும் என்று நினைத்தால் மிக சுலபமாகபிடிக்கலாம் இப்பொழுது ஓவ்வொரு ஊழியர்களையும் கூரை கூறிகொண்டு திரிகின்றவர்களே நான் கிலே சொல்ல போகின்றவர்களை நீங்கள் என்ன சொல்ல போகின்றீர்கள்
 
பேதுரு
(1 )மாயமாலம் செய்தது அதை பார்த்து பவுல் பேதுருவை கடிந்து கொண்டது (மாயமால செய்த பேதுரு )
 
பேதுருவின் வசனங்களை நாம் படிக்கலாமா இயேசுவை அறிந்து
பரிசுத்தாவியை பெற்று இவன் இப்படி செய்கின்றானே
 
பவுல்
(1 மற்ற சீஷர்களை போல நானும் மனைவிகளை கூட்டி கொண்டு
 ஊழியம் செய்யலாமே (மற்றவர்களை குற்றபடுத்துதல் )
(2) மற்ற சீஷர்களை விட நான் அதிகமாய் பிரியாசபட்டேன் (பெருமை )
(3 ) பவுலுக்கும் பர்னபாவுக்கும் சண்டை (வாக்குவாதத்தினால் ஏற்பட்ட பிரிவு )
(4 ) பல வாக்குவாதங்கள்

பவுல் இங்கு சீஷர்களை குற்ற படுத்துகின்றார் பெருமையாய் பேசுகின்றார்
இவர் ஒழுங்கான ஊழியரா இவர் எழுது காரியத்தை நாம் படிக்கலாமா
 
தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாக இருந்த தாவிது உரியாவின்
மனைவியிடம் சயனித்தது (விபச்சாரம் ) இவரை என்ன வென்று சொல்வது
 
சகோதரரே இன்னும் வேதத்தில் இருந்து பல ஊழியர்களின் குறைகளை
சொல்லி கொண்டே போகலாம்


அதற்காக வேதத்தில் யாரும் ஒழுங்கானவர்கள் அல்ல என்று சொல்லலாமே

இவர்கள் தவறு செய்தாலும் தேவ கிருபையால் திரும்பவும் நின்று தேவனுக்கு
உண்மையாய் வாழ்ந்தார்கள்  தவறு செய்த இவர்களுடிய பெயர் இன்று வரை பேச படுகின்றது  


சிலர் புரிந்து கொள்வதற்காகவே இதை எழுதுகின்றேன் 
 
தவறு செய்யாதவன் ஒருவனும் இல்லை என்பதை அறிந்து மற்றவ ஊழியர்களையும் போதகர்களையும் குற்ற படுத்தி படம் போட்டு காட்டுவதை
விட்டு விட்டு அவர்களுக்கா ஜெபம் செய்யுங்கள் அதைவிட்டு குறைகளை 
ஊதி தள்ளாதீர்கள்
 
வேதத்தில் உள்ளவர்கள் எல்லாம் திரும்ப்பவும் திருந்தி தேவனுக்கு உண்மையாய் வாழ்ந்தார்கள் என்று நீங்கள் சொல்வீராகில் அதே போல நீங்கள் குற்ற படுத்திய ஊழியர்களையும் போதகர்களையும் தேவனாகிய கர்த்தர் நிலை நிறுத்த வல்லவராய் இருக்கின்றார் என்று அறிந்து அவர்களுக்காக ஜெபியுங்கள் இதுவே தேவன் சித்தம் நீங்கள் எல்லோருக்கும் படம் போட்டு காட்டுவதல்ல தேவனின்
சித்தம்.................
 


-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 21st of December 2010 06:13:37 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard