என்னை பற்றி சொல்லும்படியாக ஒன்றும் பெரிசாக இல்லை. வேதத்தை ஆராய்ந்து அறியும் நோக்கத்தில் மாத்திரமே வேதத்தை வாசிக்கிறேன். வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் தேவனின் வார்த்தைகள் என்று நம்புகிறேன். நான் சொல்லுவது இப்பொழுது கைகளில் இருக்கும் "பரிசுத்த வேதாகமமோ" அல்லது "கிங் ஜேம்ஸ்" இல்லை. ஆராய்வதற்கு இவை இரண்டு மாத்திரம் இல்லை, இன்னும் பல மொழிப்பெயர்ப்புகளை கொண்டு தான் வேதத்தை ஆராய்ந்து வருகிறேன். தேவனின் சித்தத்தை புரிந்துக்கொள்ள தேவனிடத்தில் பேசிபவன் இல்லை, மாறாக தேவன் தந்திருக்கும் வார்த்தைகளை பற்றி தேவனை அறிந்துக்கொள்ளுகிறேன்.
நன்றி..
தளத்துக்கு புதிதாக வருகை தந்துள்ள வேத மாணவர் அவர்களை ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்தில் வரவேற்கிறேன்!
வேதத்தை நமது அற்ப அறிவால் ஆராய்வதைவிட பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் ஆண்டவர் பாதத்தின் அமர்ந்து அதன் விளக்கத்தை அறிவது நலம் என்று நான் கருதுகிறேன்!
ஆகினும் ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஒவ்வொரு நோக்கத்துடன் அழைக்கிறார். தாவீதை அழைத்த நோக்கம் வேறு சாலமோனை தெரிந்துகொண்ட நோக்கம் வேறு.
நீங்கள் கூறியபடி, வேதாகமத்தின் பல மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து, தேவனின் வார்த்தைகளின் சரியான கருத்தை அறிந்து, இத்தளத்தில் பகிர்ந்துகொள்ளும்படியான தேவஞானத்தை தேவன்தாமே உங்களுக்கு அருளும்படி ஜெபிக்கிறேன், வாழ்த்துகிறேன்.
சகோ.வேதமாணவன் அவர்களே! உங்கள் அறிமுகத் தலைப்பை, “வேதமாணவனாகிய நான்” எனத் திருத்திவிட்டால் போதும். ‘ண’ இருக்கவேண்டிய இடத்தில் ‘ன’ வந்ததுதான் குழப்பங்களுக்குக் காரணம். பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழைப் பாடமாகக் கல்லாமல், இந்த அளவிற்கு தமிழில் எழுதுகிற உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.