நண்பர் இறைநேசன் ஐயா அவர்களுக்கும் மற்றும் நண்பர் வட்டாரத்துக்கும் வணக்கம்.நானும் இறைவனை உணரவேண்டும் எனற கூட்டத்தில் இருக்கும் சாதாரண மனிதன். என் பெயர் ராஜா அண்னாமலை. நான் சென்னையில் வசிக்கிறேன்.தற்போது எனக்கு வயது 39 ஆகிறது. திருமணமானவன் ஏழு வயதில் ஒரு பையன் இருக்கிறான். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் சிஸ்டம் அட்மினிஸ்ரேட்டாராக பணி புரிகிறேன். இறைநம்பிக்கை உண்டு மூடநம்பிக்கை இல்லை.ஆதி அந்தம் இல்லாதவனை ஆரயா முடியாது ஆகையால் இறைவனை பற்றி ஆராய வேண்டும் என்பதை விட உணரவேண்டும் என்பதில் தான் என் முழுமனமும் லாயிக்கிறது. என்னைப்பற்றி என்னிடம் இதற்கு மேல் சொல்வது ஒண்ணுமிலை ஆகையால் என்னப்பற்றிய அறிமுகம் இதுவே போதும் என நினைக்கிறேன்.