இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனிதனுக்கு இன்றைய தேவை என்ன ?


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
மனிதனுக்கு இன்றைய தேவை என்ன ?
Permalink  
 


இன்றைய  உலகில் மனிதன்  ஏதோ ஏதோ  தேடி அலைகிறான் எந்த எந்த காரியதிற்கோ   தன் நேரங்களையும் காலத்தையும் செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் மனிதனுக்கு தேவையானது என்னவென்று  தெரியாதபடியால் அவர்கள்

தேடுகிறதை  கண்டடையாமல் போகிறார்கள்.



மனுஷனுக்கு செம்மையை தோன்றுகிற வழி உண்டு அதன் முடிவோ மரண

வழிகள்
என்று வேதம் போதிக்கிறது.




தேவன் மனிதனை படைப்பதற்கு முன்பாகவே அவனுக்கு வேண்டியவைகளை

படைத்து விட்டு பின்பு அவனை அந்த தோட்டத்தில் கொண்டு வந்து விடுகிறார்.


நீங்கள் வேண்டிகொள்வதர்க்கு முன்பே உங்களுக்கு இன்னது தேவை என்று

பரமபிதா அறிந்து இருக்கிறார்
. என்று வேதம் போதிக்கிறது.


முதலாவது தேவனுடைய  ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும்

தேடுங்கள் பின்பு இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும்
 என்று இயேசு கிறிஸ்து 

கூட சொல்லி இருக்கிறார்.
 


மனிதன் அவைகளை எல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒன்றை தேடி தன்

வாழ்கையை தொலைத்து விட்டு அலைகிறான்.
 


தேவையானது ஒன்று மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்லை பங்கை

தெரிந்து கொண்டால்
என்று வேதம் சொல்கிறது.
 


தேவனுக்குரியவைகளுக்காக மனிதன் நேரங்களையும் காலங்களையும் செலவு

செய்யும் போது தேவன் தம்முடைய பிள்ளைகளுடைய காரியங்களை தேவன்

பார்த்து கொள்வார்.என்று நான் நம்புகிறேன்.
 


மனிதன் செய்ய வேண்டியது என்ன என்று தேவ சமுகத்தில் அமர்ந்து

தேவனிடத்தில் விசாரிக்கும் போது நிச்சயமாக தேவன் ஒவ்வொருவரையும்  வழி
நடத்துவார். என்று நான் நம்புகிறேன்.
 


நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்

என்றும் உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்

என்றும் கர்த்தர் சொல்லி இருகிறாரே.



அவர் பொய் சொல்ல மனிதன் அல்ல மனம்மாற அவர் மனுபுத்திரனும் அல்ல.


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Stephen wrote:

இன்றைய  உலகில் மனிதன்  ஏதோ ஏதோ  தேடி அலைகிறான் எந்த எந்த காரியதிற்கோ   தன் நேரங்களையும் காலத்தையும் செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள். 

 
நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்

என்றும் உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்

என்றும் கர்த்தர் சொல்லி இருகிறாரே.


 

சகோதரர்  ஸ்டீபன்  அவர்களே உங்கள் வார்த்தைகளில் உண்மை இருப்பதை அறியமுடிகிறது. ஆண்டவரை அறிந்த தொடக்க காலங்களில் இதே  கொள்கைதான் நான் உறுதியாக கொண்டிருந்தேன். இன்றும் அதைதான் தொடர்கிறேன்.  

எல்லாமே தேவன்தான்!  அவர் கொடுத்த வேதமே நமக்கு வழிகாட்டி!  அதை தவிர,  வேறு எந்த திட்டம் நம் வாழ்வில் வைத்து  இருந்தாலும் அது வீண் என்றே நான் கருதுகிறேன்.
 
இதை அறியானத ஜனங்கள் ஓடுகிறார்கள் பாடுபடுகிறார்கள் திருப்திதராத எதையோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சொன்னாலும் புரியப்போவதும் இல்லை. ஒருமுறை ஆவியானவரின் துணையோடு நாம் சொல்லும்போது எல்லாமே புரிந்துவிட்டதுபோல கேட்கும் அவர்கள்  சில நாட்களில் மீண்டும் பழைய நிலையிலேயே தங்கள் வாழ்வை தொடர்கின்றனர். அவர்களை பார்க்கும்போது பரிதாபம்தான் வருகிறது. ஆனால் அவர்களோ   "கடவுளை தேடுவது சரிதான் ஆனால் ஒரேயடியாக  இப்படி  இருக்ககூடாது" என்று  அறிவுரை வழங்குகின்றனர். இவர்களை  பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
 
அதை செய்யலாமா? இதை செய்யலாமா?எங்கு யாரிடம்  போய்   நாலு காசு   சம்பாதிக்கலாம் என்று  நாம் சுய திட்டம் போடுவதைவிட, ஆண்டவரின்  பாதத்தில்  உண்மையான வாஞ்சையோடு  அமர்ந்தால் போதும் அனைத்தையும் அவரே நம்மை பொறுப்பேற்று நடத்துவதை பார்க்கமுடியும்.   ஒரு வழி மூடும் போது இன்னொரு வழி தானாக  திறப்பதை அறியமுடியும்! எது  வழி என்று தேடி ஆலயவேன்டியாய தேவையே இல்லை  என்றே நான் கருதுகிறேன்!  
  
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard