இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு
Permalink  
 


கிறிஸ்தவர்களுக்கு

கிறிஸ்தவர்கள்   ஊழியர்களை மதிப்பது கனம் பண்ணுவது  தவர்

இல்லை நிச்சயம் அப்படி செய்ய வேண்டும்

ஆனால்  கடவுள் போல் எண்ணுவது தான் மிக பெரிய தவறு

ஒரு முறை dgs தினகரன் அவர்கள் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு பெரிய சபைக்கு வந்து இருந்தார்கள் அவர் வந்து காரை விட்டு இறங்கும் பொது மக்கள் அவர் காரை தொட்டு கும்பிடுவது அவர் கைகளை தொட்டு குப்பிடுவது அவரை தொட்டு பார்த்து அழுவது அவர் தடுத்தும் அவரை நெருக்கி விட்டு அவரை தொட ஆசை படுகிறார்கள் தொடுவது தவறு என்று சொல்ல வில்லை
 
நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் ஒரு மனிதனிடம் தொடுவது அவரை தொட்டால் சரி ஆகிவிடும் என்று இருக்கிற நம்பிக்கை ஏன் தேவனிடம் இல்லை
 
அதே வாஞ்சை அதே தாகம் அதே ஆசை
தேவனிடம், இருந்தால் நம் தேவன் எவ்வளவு சந்தோசம் படுவார்
சகலத்தையும் உண்டாக்கிய அவருக்கு அதுதானே பிரியம

மனிதனை  நம்புவதை  பார்க்கிலும்  கர்த்தர்  பேரில்  பற்றுதலாய்  இருப்பதே  நலம்   



ஊழியர்களுக்கு   


ஒரு முறை சாது  சுந்தர் சிங் அவர்கள் நோய்களுக்க ஜெபம் செய்த பொது அனேக நோய்கள் குணமாகியது மக்கள் கூட்ட கூட்ட மாக வந்து நிரம்பிவிட்டனர் இதை பார்த்த சாது ஐயோ ஆண்டவரே என்னிடத்தில் இருந்து இந்த வரத்தை எடுத்து விடும் என்று ஜெபம் செய்தார் ஏனென்றால் யேசுவிடம் சென்றால் நோய் குணமாகும் என்று வர வில்லை சாதுவிடம் சென்றால் குணமாகும் என்று தான் வந்தார்கள் 
 
வேதத்தில் தேவனுடைய உழியர்கள் எப்படி இருந்தார்கள்

அப்போஸ்தலர்


11. குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.

12. பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?
 
அப்போஸ்தலர்

14 அதிகாரம்

9. பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:

10. நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.

11. பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,

12. பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.

13. அல்லாமலும் பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடையகோவில் பூஜாசாரி எருதுகளையும் மாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.

14. அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்

15. மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போலப்பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
 
இப்படி தான் இருக்க வேண்டும் தேவனுடைய உளியக்காரர்கள்
மகிமையை தங்களுக்கு அல்ல தேவனுக்கு கொடுக்க வேண்டும்
மக்களை தன் பக்கம் அல்ல தேவன் பக்கமே திருப்ப வேண்டும்.............................

அது  தான்  தேவனுக்கு    நாம்  செய்யும்  ஊழியம்............................. 



-- Edited by இறைநேசன் on Thursday 4th of March 2010 03:03:50 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

////   //உளியக்காரர்கள் ...................?//

அகராதியில் இல்லாத வார்த்தைகளையெல்லாம் தயவுசெய்து பயன்படுத்தவேண்டாமே.!//////





ஒரு சில வார்த்தைகள் இப்படிதான் வரும்
 
சில்சாம் ஒன்று சொல்கிறேன் எல்லோரும் அவர்கள் எழுதுவது 
நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் எழுதுவார்கள்
ஒரு சில வார்த்தைகளில் நிச்சயம் தவர்கள் ஏற்படும் அதை புரிந்து கொண்டு
நாம் தான் படிக்க வேண்டும்............................


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 4th of March 2010 11:14:46 AM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard