இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெற்றோரை நாம் ஆசிர்வதிப்பது எப்படி?


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
பெற்றோரை நாம் ஆசிர்வதிப்பது எப்படி?
Permalink  
 


நீதி 30:11
தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு தாயாரை ஆசீர்வதிக்க வேண்டுமென வசனம் சொல்கிறது. எப்படி ஆசீர்வதிப்பது?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

timothy_tni wrote:

நீதி 30:11
தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு தாயாரை ஆசீர்வதிக்க வேண்டுமென வசனம் சொல்கிறது. எப்படி ஆசீர்வதிப்பது?



தாங்கள்  சுட்டியுள்ள  வசனம் கொஞ்சம் வித்தியாசமானதுதான்.  

யாத்திராகமம் 21:17
தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்

உபாகமம் 27:16 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்;
 
என்று வசனங்கள் சொல்வதால் தனதாயை சபிக்காமலோ அல்லது தூஷிக்கமலோ
இருந்தாலே அது அவர்களை ஆசீர்வதிப்பதற்கு சமமாகலாம்
 
நீதிமொழிகள் 15:20  மதியற்றமனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்
 
தன தாயை அலட்சியம் பண்ணாமல் அவர்களது ஆசீர்வதத்துக்காகவும் நன்மைக்காகவும் ஜெபிபதர்க்காகவும் இவ்வார்த்தைகள் சொல்லபட்டிருக்கலாம்.
 
"அம்மா  உங்களை ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் மனதார ஆசீர்வதிக்கிறேன், உங்களுக்கு எந்த செல்வமும் குறைவுபடாமல்   நோய் நொடிகள் இன்றி  நன்றாக வாழவேண்டும்".   
 
என்று  நமது  தாயை அசீர்வதித்து விடலாமே!


இதற்க்கு வேறு ஏதாவது விளக்கம் இருதால் தெரிவியுங்கள் சகோதரரே.




__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//இதற்க்கு வேறு ஏதாவது விளக்கம் இருதால் தெரிவியுங்கள் சகோதரரே.//

சென்ற வாரம் காலை தியானத்தில் ஏற்பட்ட சந்தேகம் தான் இது..
எனக்கும் பெரிதாக வேறு ஒன்றும் தெரியவில்லை...

தாங்கள் சொல்லியது போல தேவனின் நாமத்தில் ஆசீர்வதிக்கலாம்..

ஆயினும், இந்த வாழ்த்துதலை யாருக்கு வேண்டுமானாலும் (வயது வித்தியாசமின்றி) சொல்ல முடியும்.. ஆனால், இந்த வசனத்தில் ஆசீர்வதிப்பது நல்லது என்பதை விட ஆசீர்வதியாமலிருப்பது தவறு என்பது போல கூறப்பட்டுள்ளது. எனவே, இது ஒரு வாழ்த்துதலாகவோ அல்லது சிறப்பு நிகழ்வாகவோ இல்லாமல் தினசரி நிகழ்வை குறிப்பதைக் காணலாம்.

ஆசீர்வதித்தல் - என்பது பல காரியங்களை உள்ளடக்கியது.. எனவே இங்கு இதற்கு நிச்சயம் ஏதேனும் சில சிறப்பு அர்த்தம் இருக்கும் என எண்ணுகிறேன்..

தொடர்ந்து தேவனிடம் தேடுவோம்.. சகோதரர்கள் உதவுவார்கள் என எண்ணுகிறேன்..

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard