இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனுஷர்கள் சிருஷ்டிப்பில் இருவேறு நிலைகள்!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
மனுஷர்கள் சிருஷ்டிப்பில் இருவேறு நிலைகள்!
Permalink  
 


இத்திரியை மீண்டும் வாசித்ததில் மேலும் ஒரு சில காரியங்கள் புரிகிறது. முதல் நிலை படைப்பிட்கும் இரண்டாம் நிலை படைப்பிட்கும் வித்தியாசம் இருப்பது போல தெரிகிறது.

இதை மேலும் தேவ உதவியோடு ஆராய்ந்து புரிந்துகொள்வேன்.

ஆனால் முதல் மனுஷனை படைத்து மீண்டும் ஏன் இன்னொருவனை உருவாக்க வேண்டும் ?

முதல் மனுஷனிலே பாவம் வந்துவிட்டதா? அல்லது ஆதாம் மூலம் வந்ததா?

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

தேவனால் முதல் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ன ஆனார்கள்.? அவர்கள் பாவம் செய்து வீழ்ச்சியடைந்தார்களா? அல்லது இரு கூட்டத்தாரும் கலந்து விட்டார்களா?
“தேவன் ஒருவனையல்லவா படைத்தார்“ என்று வேதம் சொல்கிறதே? இருவரை படைத்தார் என்று சொல்லப்படவில்லையே?



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

t dinesh wrote:

தேவனால் முதல் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ன ஆனார்கள்.? அவர்கள் பாவம் செய்து வீழ்ச்சியடைந்தார்களா? அல்லது இரு கூட்டத்தாரும் கலந்து விட்டார்களா?
“தேவன் ஒருவனையல்லவா படைத்தார்“ என்று வேதம் சொல்கிறதே? இருவரை படைத்தார் என்று சொல்லப்படவில்லையே?


 

 மல்கியா 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? 
 
ஆம் பிரதர் அவர் மண்ணின் மூலம் படைத்து ஆதாம் என்னும் ஒருவனைத்தான். 
 
னால் முதலில்  ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார் 
 
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். 
 
"படைத்தல்" வேறு "சிருஷ்ட்டித்தல்" வேறு " ஜெநிப்பித்தல்" வேறு 
 
தேவனால் சிருஷ்ட்டிக்கப்படடவர்கள்தான் தேவர்கள் மற்றும் தேவ புத்திரர்கள்.
 
இந்த தேவ புத்திரர்கள்தான் மனுஷ குமாரத்திகளோடு
சேர்ந்து பிள்ளைகளை பெற்றார்கள்  
    1. ஆதி 6 :1. மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:


  1. 2. தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
 
 
இந்த தேவ புத்திரர்கள் நமது உலகம் உண்டாவதற்கு முன்னரே இருந்தார்கள் என்பதை யோபு புஸ்தகத்தில் வாசிக்கலாம்.
 
    1. யோபு 38 :4. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.


    1. 5. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.


    1. 6. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?


    1. 7. அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி,
தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
 
பூமி அஸ்திபாரப்படுத்துகிறபோதே தேவ புத்திரர்கள் இருந்தார்கள் ஆனால் ஆதாம் ஏவாளோ பூமி உண்டாக்கப்பட்டு பின்னர் அதன் மண்ணில் இருந்து படைக்கப்படடவர்கள்   
 
 
மேலும் இவர்கள் ஆதாம் ஏவாளுக்கு முன்னரே நன்மை தீமை அறிந்து வீழ்ந்துபோனவர்கள் அதனால்தான் சாத்தான் ஆதாம் ஏவாளிடம் சொல்லும்போது.
 
5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்
 
இந்த தேவர்கள் ஆதாம் ஏவாள் கனியை புசிக்கும் முன்னரே
நன்மை தீமையை அறிந்திருந்தார்கள்.  
 
இவர்கள் சாத்தனிடம் வீழ்ந்துபோனதால் இவர்கள்  நடுவில் 
எப்பொழுதும் சாத்தான் அலைந்தான்.
 
யோபு 2:1 பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.  
 
 
இன்னும் அநேக வசனங்கள் இந்த தேவர்கள் மற்றும் தேவ புத்திரர்கள் குறித்து வேதத்தில் உண்டு.
 
 

 

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

ஆனால் முதல் மனுஷனை படைத்து மீண்டும் ஏன் இன்னொருவனை உருவாக்க வேண்டும் ?

முதல் மனுஷனிலே பாவம் வந்துவிட்டதா? அல்லது ஆதாம் மூலம் வந்ததா?

முதல் மனுஷனுக்குள் எப்படி பாவம் வந்தது

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard