"விக்கிரக ஆராதனை" என்பது தேவனால் கடுமையாக வெறுக்கப்படும் ஒரு காரியம் என்பதை பல சகோதரர்கள் அறிந்திருக்கலாம். ஆனால் எதெல்லாம் விக்கிரக ஆராதனைக்குள் அடங்கும் என்பதை நாம் கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.
பொதுவாக "விக்கிரக ஆராதனை" என்பது ஏதாவது ஒரு சிலையோ அல்லது படத்தையோ அல்லது ஒரு உருவத்தையோ தெய்வமாக நினைத்து வழிபடுவதே குறிக்கும்.
இதை கொஞ்சம் விளக்கமாக சொன்னால் "ஏதோ ஒன்றை" அது பொருளோ பணமோ இயற்க்கை சக்தியோ படமோ சிலையோ அல்லது வீடோ நிலமோ அல்லது மனைவியோ பிள்ளைகளையோ அல்லது பார்க்கும் வேலையையோ அல்லது கம்பனி முதலாளியையோ தேவனுக்கு நிகராக நமது முக்கிய நம்பிக்கையாக உயர்த்துவதே விக்கிரக ஆராதனை எனப்படும்.
"உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கடவுள்" அவருக்கு இணையாக அல்லது ஈடாக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அவரை தவிர வேறு எந்த ஒன்றின் மேல் நமது நம்பிக்கை இருக்கும்என்றால் அது விக்கிரக ஆராதனை ஆகிவிடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் தாங்கள் வணங்கும் சிலைகளை உடைத்தால் கையை வெட்டுவேன் என்று வைராக்கியமாக இருந்தால் சிலர் எங்கள் நபியை குறை சொன்னால் கைகளை வெட்டுவோம் என்று சொல்லி செய்யவும் செய்கின்றனர். சிலர் எங்கள் வேதத்தை யாரும் குறைகூறினால் சாபம் விடுவோம் என்று விடுகின்றனர். எல்லாமே ஒரே தன்மையை சார்ந்ததே!
தேவன் மேலுள்ள வைராக்கியத்தை தவிர ஒரு நபியின் மேலோ அல்லது ஒரு புத்தகத்தின் மேலோ அல்லது எந்த ஒரு பொருளின் மேலோ வைத்திருக்கும் வைராக்கியம் எல்லாமே விக்கிரக ஆராதனையே சாரும் என்பதை அறியவேண்டும்.
இன்றைய கிறிஸ்த்தவ இஸ்லாமிய சகோதரர்களுக்கு தங்கள் தங்கள் வேதத்தின் மீதும் தங்கள் தங்கள நபிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மீதும் அளவற்ற வைராக்கியமும், அவர்கள் நம்பிக்கை வைத்திரக்கும் எந்த ஒன்றை சற்று குறைத்து கூறிவிட்டாலும் தாங்கமுடியாமல் கூச்சலிடும் மார்க்கபேதமும் அதிகமாகவே உள்ளது அனால் எல்லா மதங்களும் சுட்டிக்காட்டும் எதையும் சகித்துகொள்ளும் மனபக்குவம் மட்டும் எங்கோ தொலைந்து போய்விட்டது.
தங்கள் நினைத்த காரியங்களை சாதிக்கவும் தங்களுக்கு விருப்பமில்லாத காரியங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ஜெபங்களும் போராடங்களும் எங்கும் பெருகியுள்ளது ஆனால் இயேசு சொன்னதுபோல்
மத்தேயு 5:40உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன்அங்கியையும் விட்டுவிடு.
என்று விட்டுவிட யாருக்கும் மனதில்லை!
நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை அராய்ந்து அதன்படி வாழவே தேவனால் அந்த வேதம் தரப்பட்டுள்ளதே அன்றி, என் வேதம் பெரியதா உன்னுடையது பெரியாத்தா என்று போட்டிபோட அல்ல!
அடுத்தவர் வேதங்களை சுலபமாக பழித்துபேசும் ஒருவருக்கு தங்க வேதத்தையோ அல்லது நபியையோ சற்று குறித்து கூறிவிட்டாலும் தங்க முடிவதில்லை வேதத்தையும் நபியையும் தேவனையும் தாங்கள்தான் இத்தனை காலம் காப்பாற்றிக்கொண்டு வருவதுபோலவும், இவர்கள் வைராக்கியமாக இல்லை என்றால் எல்லாமே முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இவர்கள் வாழ்கின்றனர். அனால் உண்மையில் இவர்கள் தங்கள் மாமிசகிரியைகளை வெளிப்படுத்து கிரார்களேயன்றி வேறொன்றும் அல்ல!
நீங்கள் எத்தனை வேத புத்தகத்தை படித்தாலும் அதன்படி வாழவில்லை என்றால் அந்த புத்தகத்தால் உங்களுக்கு பலன் எதுவும் இல்லை. அப்படி வேதத்தின்படி தேவனின் வார்த்தைகளின்படி வாழ்பவன் அவ்வளவு சீக்கிரம் பிறரை பழிக்கவும் மாட்டான்.
மத்தேயு 3:9ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்ற ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் சொல்கிறேன், எந்த ஒன்றையும் இதுதான் முடிவானது என்று எண்ணி கொள்ளாதீர்கள்! நாங்கள் உண்மையை அறிந்திவிட்டோம் எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்பு அடையாதீர்கள்! எந்த ஒரு வார்த்தையையும் தேவன் தன்னுடைய வார்த்தையாக மாற்றி, எந்த வேதத்தையும் பொய்யாக்கவும் எந்த வேதத்தையும் மெய்யாக்கவும் தேவனாலே கூடும்!
எனவே நீங்கள் எதை வேண்டுமாலும் ஆராயுங்கள்! ஆனால் ஆராய்ந்து அறிந்த உண்மைகளின்படி வாழ முற்ப்படுங்கள். உங்கள் நம்பிக்கையோ உலகில் உள்ள எந்த ஒன்றின் மேலும் வைக்காமல் ஜீவனுள்ள தேவன் மேல் மட்டும் வையுங்கள்! எதையும் பொய்யாக்கவும் எதையும் மெய்யாக்கவும் அவர் ஒருவராலே ஆகும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆண்டவராகிய இயேசுவை சோதிக்க வந்த பிசாசானது வேதபுத்தகத்தில் இருந்து பல வசனங்களை சுட்டிகாட்டி கேள்விகளை கேட்டது. அதை சற்று ஆராய்து பார்த்தால் "வேதத்தில் இவ்வளவு ஞானம் உள்ள ஒருவனை "பிசாசு" என்று வேதம் ஏன் குறிப்பிடுகிறது இயேசு ஏன் அவனை பார்த்து "அப்பாலேபோ சாத்தானே" என்று கூறினார் என்று ஆச்சர்யப்பட தோன்றும்.
வேதாகமம் புத்தகமாக உருவாகவும் அது உலகெங்கும் பரவவும் அனேக தடைகளை சாத்தான் உண்டாக்கினான் பல உயிர்களை பலிகொண்டான் இறுதியில் பல காரியங்களை செய்தும் பருப்பு வேகாத சாத்தான் இப்பொழுது ஒரு புது யுக்தியை கையில் எடுத்துகொண்டான்!
என்ன தெரியுமா? "நான் வேதபுத்தகத்தை பத்திரமாக பாதுகாக்க போகிறேன் என்பதுதான்!
வேதத்தை ஒருவன் கையில் வைத்திருப்பதாலோ அல்லது அதை கரைத்து குடித்து மனப்பாடம் செய்வதாலோ அல்லது அதை பத்திரமாக ரெங்கு பெட்டியில் மூடி பாதுகப்பதாலோ அல்லது பிறரிடம் அதைப்பற்றி பெருமையாக போசுவதாலோ அவனுக்கு எந்த பலனும் நேர்ந்துவிடபோவது இல்லை அதில் உள்ள வார்த்தைகள் நம் வாழ்வில் கிரியை செய்து, நம் வாயிலும் உன் செயலிலும் வெளிப்பட்டால் மட்டுமே நமக்கும் சாத்தனுக்கும் வேறுபாடு தெரியும்.
நீர் இங்கு வார்த்தைகளை எழுதும்முன்னே நேற்றே எனக்கு ஆவியானவர் உம்மைப் பற்றி தெரிவித்துவிட்டார். நன்றாக ஆவியில் நிறைத்து ஜெபியும், என்னைப்பற்றி ஆவியானவர் உமக்கு வெளிப்படுத்துவார். எப்பொழுதும் ஆண்டவருடன் தொடர்பு நிலையில் இருந்தால் இதுபோன்ற வார்த்தைகளை எழுதுவதை ஆண்டவர் நிச்சயம் கண்டிப்பார்!
பரிசுத்த ஆவி இல்லை என்று சாதித்து மோசமான வார்த்தைகளை எழுதும் சிலருக்கும் ஆவியை பெற்றுள்ளேன் என்று சொல்லிக்கொண்டு அதே வார்த்தைகளை பயன்படுத்து உமக்கும் என்ன வேறுபாடு?
நீர் எழுதுவதுபோல் என்னால் எழுத முடியாது! உம்மைப்போல தரம்கெட்ட வார்த்தைகளை எழுதி கோபம் கொள்ளுவேன் என்று எதிர்பார்க்காதீர்! நிச்சயம் தொற்றுபோவீர்!
sundar wrote: //தேவன் மேலுள்ள வைராக்கியத்தை தவிர ஒரு நபியின் மேலோ அல்லது ஒரு புத்தகத்தின் மேலோ அல்லது எந்த ஒரு பொருளின் மேலோ வைத்திருக்கும் வைராக்கியம் எல்லாமே விக்கிரக ஆராதனையே சாரும் என்பதை அறியவேண்டும்.//
//நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை ஆராய்ந்து, அதன்படி வாழவே தேவனால் அந்த வேதம் தரப்பட்டுள்ளதே அன்றி, என் வேதம் பெரியதா உன்னுடையது பெரியதா என்று போட்டிபோட அல்ல!//
//நீங்கள் எத்தனை வேத புத்தகத்தை படித்தாலும் அதன்படி வாழவில்லை என்றால் அந்த புத்தகத்தால் உங்களுக்கு பலன் எதுவும் இல்லை. அப்படி வேதத்தின்படி தேவனின் வார்த்தைகளின்படி வாழ்பவன் அவ்வளவு சீக்கிரம் பிறரை பழிக்கவும் மாட்டான்.//
//ஆண்டவராகிய இயேசுவை சோதிக்க வந்த பிசாசானது வேதபுத்தகத்தில் இருந்து பல வசனங்களை சுட்டிக்காட்டி கேள்விகளை கேட்டது. அதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் "இவ்வளவு வேதஞானம் உள்ள ஒருவனை "பிசாசு" என்று வேதம் ஏன் குறிப்பிடுகிறது, இயேசு ஏன் அவனை பார்த்து ‘அப்பாலே போ சாத்தானே’" என்று கூறினார் என்று ஆச்சர்யப்பட தோன்றும்.
வேதாகமம் புத்தகமாக உருவாகவும் அது உலகெங்கும் பரவவும் அனேக தடைகளை சாத்தான் உண்டாக்கினான்; பல உயிர்களை பலிகொண்டான்; இறுதியில் பல காரியங்களை செய்தும் பருப்பு வேகாத சாத்தான் இப்பொழுது ஒரு புது யுக்தியை கையில் எடுத்துகொண்டான்!
என்ன தெரியுமா?
"நான் வேதபுத்தகத்தை பத்திரமாக பாதுகாக்க போகிறேன் என்பதுதான்!”
வேதத்தை ஒருவன் கையில் வைத்திருப்பதாலோ அல்லது அதை கரைத்து குடித்து மனப்பாடம் செய்வதாலோ அல்லது அதை பத்திரமாக ட்ரெங்கு பெட்டியில் மூடி பாதுகாப்பதாலோ அல்லது பிறரிடம் அதைப்பற்றி பெருமையாகப் பேசுவதாலோ அவனுக்கு எந்த பலனும் நேர்ந்துவிடப்போவது இல்லை. அதில் உள்ள வார்த்தைகள் நம் வாழ்வில் கிரியை செய்து, நம் வாயிலும் உன் செயலிலும் வெளிப்பட்டால் மட்டுமே நமக்கும் சாத்தனுக்கும் வேறுபாடு தெரியும்.//
ஆம், வேதாகமத்தின் மீது வைராக்கியம் காட்டுவதில் பயனில்லை; அதில் கூறப்பட்டுள்ள போதனைகளின்படி நடப்பதில் வைராக்கியம் காட்டுவதுதான் பயன்தரும்.
ஆம், வேதாகமத்தின் மீது வைராக்கியம் காட்டுவதில் பயனில்லை; அதில் கூறப்பட்டுள்ள போதனைகளின்படி நடப்பதில் வைராக்கியம் காட்டுவதுதான் பயன்தரும்.
நீண்ட நாட்களுக்குபின் தளத்திற்குவந்து பதிவிட்டுள்ள சகோதரர் அன்பு அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி. நாம் இருவர் கருத்துக்களுக்கும் இடையில் அதிக வேறுபாடு கிடையாது. மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் கடின வார்த்தைகளை பிரயோகபடுத்தாத மேன்மையான தன்மையை தேவன் தங்களுக்கு கொடுத்திருப்பதால் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்.
தேவனின் வார்த்தைகளின்படி வாழவேண்டும் என்பதை நான் எனது பதிவுகள் எல்லாவற்றிலும் வலியுருத்தி வருகிறேன். வேதவசனங்களும் மிக அதிகமான இடங்களில் வேத வசனங்களின்படி வாழும் வாழ்க்கையை வலியுறுத்துகிறது.
யோவேல் 2:11கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; ...... அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது;
ஆம்! தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து செய்கிறதற்கு தனி வல்லமை உண்டு!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆதியில் இருந்து கடந்த 6000௦௦௦ வருட வரலாற்றை மற்றும் தேவ ஆவியானவரின் நடபடிகளை எடுத்துரைக்கும் வேத புத்தகத்தை தேவன் தனது ௦பார்வையில் வைத்து பாதுகாத்து வருகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
எதற்காக?
ஆதாம் ஏவாளில் இருந்து இன்றுவரை இந்த உலகை கெடுத்து பாழ்படுத்தி வரும் சாத்தானின் ராஜ்யத்துக்கு முடிவுண்டாக்கும் வழி அதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதை ஆராய்ந்தறிந்து அதன்படி வாழ்ந்து யாராவது ஒருவர் சாத்தனை முறியடித்து அதன் சாம்ராஜ்யத்துக்கு முடிவை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே!
அக்காலகட்டத்துக்குபின தேவனின் வார்த்தைகள் அனைத்தும் மனிதனின் இருதயத்திலேயே எழுதப்பட்டுவிடும்!
எரேமியா 31:33 அந்நாட்களுக்குப் பிற்பாடு, ..............., அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒரு முறை ஆண்டவர் என்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வேத புத்தகத்தை கையில் எடுத்து கொண்டு போகும்படி கட்டளையிட்டார்.
நானும் உடனே அவர் சொல்லுக்கு கீழ்படிந்து புறப்பட்டேன். இடம் தூரமாக இருந்ததால் வழி செலவுக்கு கொஞ்சம் பணம் எடுத்து அதை ஒவ்வொன்றாக வேத புத்தகத்தினுள் பக்கத்துக்கு ஒன்றாக வைத்துக்கொண்டேன். அந்நேரம் ஆண்டவர் இடைபட்டு பணத்தை வேத புத்தகத்துக்குள் வைக்காதே என்று பேசினார். ஆனால நானோ ஆண்டவரே நான் போகும் பிரயாணம் தூரம், ஒருவேளை வேறு எங்கும் பணத்தை வைத்து அது திருட்டு போய்விடகூடாது பைபிள் என்றால் நான் எப்பொழுதும் அதை எனது கையிலேயே வைத்து பாதுகாப்பேன் எனவே அதனுள்ளேயே இருக்கட்டும் என்று சொல்லி வைத்துக்கொண்டேன்.
இறுதியாக கஷ்டப்பட்டு நெடுந்தூரம் பிரயாணப்பட்டு அவர் சொன்ன இடம் வந்து சேர்ந்தேன் சிறிதுநேரத்தில் அங்கு இருந்த ஆண்டவரை அறியாத ஒருவர் என்னிடம் வேகமாக வந்து "நான் என்ன சொன்னேன் நீ என்ன செய்கிறாய்? என்று கோபத்தில் பேசிக்கொண்டு எனது கையில் இருந்த வேத புத்தகத்தை பிடுங்கி, இது என்ன உள்ளே பணம் என்று கத்திக்கொண்டு அட்டையோடு சேர்த்து ஐந்தாறு பக்கங்களை கிழித்து தூர வீசிவிடார். என் சொல்படி கேட்கவில்லை என்றால் உனக்கு இந்த புத்தகம் தேவையில்லை திரும்பி போ" என்று கத்தினார். எனக்கு ஆண்டவரே அவ்வாறு பேசியதாகவே தோன்றியது பின்னர் அழுதுகொண்டு ஒவ்வொரு பக்கமாக எடுத்து ஒட்டி அந்த புத்தகத்தை பத்திரமாக வைத்திருந்தேன்.
கர்த்தரின் ஆலயத்தில் என்னுடைய கண்கள் எந்நாளும் இருக்கும் என்று தேவன் சொல்லியிருந்தாலும் இஸ்ரவேல் ஜனங்கள் வெறும் ஆலயத்தின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து தேவனின் வார்த்தைகளை விட்டு வழிமாறியபோது அதை அவர் ஆலயத்தையே நேபுகாத்நேச்சர் கையில் சுட்டெரிக்க ஒப்புகொடுத்தார்.
அதுபோல் கர்த்தரின் உடன்படிக்கை பெட்டி வல்லமை வாய்ந்ததாக இருந்தாலும் ஏலியின் நாட்களில் அதை பாளையத்துக்கு கொண்டுவந்தால் ஜெயித்துவிடாலாம் என்று அந்த பேட்டிமீது மட்டும் நம்பிக்கை வைத்து தேவனின் வார்த்தைகளை கைகொண்டு நடக்க மறந்துவிட்ட இஸ்ரவேலரை யுத்தத்தில் தோற்றோட செய்ததும் அல்லாமல் தேவனின் பெட்டியும்கூட பெலிஸ்தியரால் பிடிபட்டு போனது
அதுபோல் கர்த்தரின் வல்லமையுள்ள ஜீவனுள்ள வார்த்தைகள் வேத புத்தகத்தில் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை! ஆனால் அந்த வேதபுத்தகத்தை கையில் வைத்துகொண்டு அதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் வாழ்பவர்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை!
தேவன் தான் கட்டளையிட்ட வார்த்தைகளிபடி நடக்காதவன், ஆலயத்தில் இருக்கிறானா அல்லது வேதத்தை கையில் வைத்திருக்கான என்றெல்லாம் பார்க்கமாட்டார்!
எரேமியா 7:23. என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;
இறுதியாக நான் சொல்வது!
உலகத்தில் உள்ள மற்றெல்லா புத்தகங்களையும் அனைத்து உலக சொத்து சுகங்களையும் ஒருபக்கமும் வேத புத்தகத்தை ஒரு பக்கமும் வைத்து எது பெரியது? என்று கேட்டால் "வேத புத்தகம்தான் பெரியது" என்று சொல்ல முடியும்! ஆனால் தேவன் ஒருபக்கமும் வேதபுத்தகம் ஒருபக்கவும் இருந்து எது பெரியது? என்று கேட்டால் தேவனே பெரியவர்!
அறிவதற்கு ஞானம் உள்ளவர் அறிந்துகோள்ளக்கடவர்!
-- Edited by SUNDAR on Monday 30th of August 2010 03:19:18 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)