இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுளின் பிள்ளைகளை கேலி கிண்டல் செய்யாதே


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
கடவுளின் பிள்ளைகளை கேலி கிண்டல் செய்யாதே
Permalink  
 


 
ஒரு ஊரிலே  ஒரு வாலிபன் இருந்தான் அவன் யாரும் இல்லாத அநாதை

அவன் தினமும் தூங்குவது சாப்பிடுவது எல்லாம் சப்வே கீழேதான்  

அவன் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டவன் அவன் சாப்பிடும் போது

துங்கும் போது எப்பொழுது ஜெபம் செய்கின்ற பழக்கம் 

உடையவன்  அவன் அருகில் அநேகர் இருந்தார்கள் அவன் ஜெபம் செய்யும்

போது அவனை கேலிசெய்வது அவர்களிடம்  வழக்கமாய் இருந்தது ஒரு நாள்

அவர்கள் எல்லோரும்  ஒன்றாய் சாப்பிடும் போது எல்லாரும் சாப்பிட்டார்கள்

ஆனால் இந்த வாலிபன் மட்டும் வாங்கிய உணவில் கையை வைத்து ஜெபம்

செய்து கொண்டு இருந்தான் திடிரென்று ஒரு நாய் அவனுடைய சாப்பாட்டின்

கவரை பிடுங்கி செயன்றது அவன் பக்கத்தில் இருந்தவர்கள்அவனை பார்த்து

இயேசு உன் உணவையே காப்பாற்ற முடிய வில்லை எப்படி உன்னை

காப்பாற்றுவார் என்று கேலி செய்தனர் அவன் அழுது கொண்டு நாய் பிடுங்கி

சென்ற அந்த கவரை போய் எடுக்க சப்வே வெளியே ஓடினான் அந்த வாலிபன்

வெளியே வந்ததும் ஒரு பெரிய சத்தம் கேட்டது திரும்பி  பார்த்தால் அந்த சப்வே

இடிந்து கிலே விழுந்து கிடந்தது சப்வே உள்ளே இருந்த நபர்கள் மறித்து

விட்டார்கள் ஜெபித்தவன் காப்பாற்ற பட்டான் கேலி கிண்டல் செய்தவர்கள் அழிந்து
போனார்கள்  (என் போதகர் ஒரு பிரசங்கத்தில் சொன்ன கதை இது )
 


கடவுளின் பிள்ளைகளை நாம் கேலி கிண்டல் செய்யும் போது  தேவனுடைய கோவம் நம் ஜீவனை  கூட  எடுத்து  விடலாம்
 


11 ராஜாக்கள் : 2  - 23 ,24
தீர்கதரிசியான எலிசாவை கேலிசெய்த 42 சிறு பிள்ளைகளை இரண்டு கரடி பீறி  போட்டது என்பது வேதத்தில்  உள்ளது
 

கடவுள் பிள்ளைகளை கேலி கிண்டல் செய்வதை தவீர்த்து விடுவோம்
 


இரக்கம் உள்ள தேவனும் அவர்தான்
எரிச்சல் உள்ள தேவனும் அவர்தான்


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 7th of October 2010 09:49:03 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

கடவுளின் பிள்ளைகளை மட்டுமின்றி, எவரையுமே பரியாசம் செய்வதை வேதாகமம் கண்டிக்கிறது.

நீதிமொழிகள் 24:9 பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.

நீதிமொழிகள் 3:34 இகழ்வோரை அவர் இகழுகிறார்;

நீதிமொழிகள் 9:12 நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய்.

நீதிமொழிகள் 19:29 பரியாசக்காரருக்குத் தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.

நீதிமொழிகள் 22:10 பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.


தேவஜனங்களான இஸ்ரவேலர்கள், தங்கள் தீர்க்கதரிசிகளை நிந்தித்து பரியாசம் பண்ணினதினிமித்தம் தேவகோபம் இஸ்ரவேலர் மீது எவ்வளவாய் இறங்கியது என்பதை பின்வரும் வசனம் கூறுகிறது.

2 நாளாகமம் 36:16 ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard