இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நமக்கு மிகவும் பிடித்த வேதாகம மனிதர்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
நமக்கு மிகவும் பிடித்த வேதாகம மனிதர்!
Permalink  
 


வேத புத்தகத்தில் தேவன் தனது திட்டத்தை நிறைவேற்ற பயன்படுத்திய அனேக னிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.
 
ஆதாமில் இருந்து பவுல்வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தேவனின் திட்டத்தை நிறைவேற்றுவதில் பங்கு எடுத்துகொண்டவர்கள். 
 
அதில் சிலருடைய வாழ்க்கை நமக்கு எச்சரிப்பாகவும் சிலருடைய வழக்கை நமக்கு முன்மாதிரியாகவும் சிலருடைய வாழ்க்கை நமக்கு போதனையாகவும் அமைந்ததாக இருக்கிறது.
 
அவ்வேதாகம மனிதர்களில் நமக்கு மிவும் பிடித்த ஒரு மனிதரை அதற்க்கான காரணத்தின் அடிப்படயில் விளக்கி பதிவிடுவோமானால் வேத வசனங்களை தியானிப்பதற்கு நமக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
 
தேவனுக்கு மிகவும் கீழ்படிதல் உள்ள அல்லது  தேவனுக்கு மிகவும் பயந்து நடந்த அல்லது தேவனின்திட்டத்தை சரியாக நிறைவேற்றிய அல்லது தேவனின் கரத்தில் தன்னை முழுவதும் ஒப்புகொடுத்து  வாழ்ந்த  அல்லது தேவனின் பிஷேகத்தில் பராக்கிரமம் செய்த  தங்களுக்கு பிடித்த எந்த ஒரு வேதாகம மனிதரைப்பற்றி வேண்டுமாலும் எழுதலாம்.
 
ஆண்டவராகிய இயேசு மனிதனாக வந்தாலும் அவர் உன்னதத்தில் இருந்து இரங்கி வந்தவர் ஆகையால் அவர் ல்லோருக்குமே பிடித்தவர் தேவனுடய மாரன் என்ற நிலையில் பாவித்து நம்போன்ற மனிதர்களை மாத்திரம் தெரிவு செய்வோம்.




__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

1 சாமுவேல் 24
 
4 அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.
 
5 தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது.
 
6 அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
 
7 தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.
 
8 அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி,
 
9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
 
10 இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
 
11 என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்றுபோடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
 
12 கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
 
13 முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை.
 
14 இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
 
15 கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
 
16 தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
 
17 தாவீதைப் பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன்.
 
18 நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை  
 
நம் தேவன் தாவீதை என் இருதயத்துக்கு  ஏற்றவன் என்று சொல்வதற்கு காரணம் என்ன என்பதற்கு பல சம்பவங்கள் இருந்தாலும் எனக்கு பிடித்த ஒரு சம்பவம் கீழே எழுதி உள்ளேன்
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
எனக்கு வேதாகமத்தில் மிகவும் பிடித்த தேவ மனிதர் தாவீது ஆவார்
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard