இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சத்திய வேதாகமம் கூறும் தேவனுடைய தன்மை குணலட்சணங்கள்!


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
சத்திய வேதாகமம் கூறும் தேவனுடைய தன்மை குணலட்சணங்கள்!
Permalink  
 


4)சத்திய வேதாகமம் கூறும் தேவனுடைய தன்மை குணலட்சணங்கள் என்ன?(சுட்டது)

(1) தேவன் ஆதியும் அந்தமும் இல்லாதவராய் அநாதியாய் இருக்கிறவர். உபா 33:27. சங் 41:13, 90 : 1-3, 93:2, 106 :48 ரோமர். 16:25


(2) தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலிருந்து என்றும் மாறாமல் இருக்கிறவராகவே இருக்கிறார். அவர் ஒருவரே இருந்தவரும், இருக்கிறவரும், இருக்கப்போகிறவருமான நித்திய தேவன். அவர் எவ்விதமான அவதாரமெடுத்து மாறுகிறவர் அல்ல. யாத் 3:14, மல்கியா 3:6. வெளி 1:8.


(3) தேவன் ஒருவரே சாகாமையுடையவராய், தம்மில் தாமே ஜீவனுள்ளவராயிருக்கிறார். எரே 10:10. 1தீமோ 6:16. யோவான். 5:26. இவர் எவ்விதத்திலும் சாகவே முடியாது.


(4) தேவன் ஆவியாயிருக்கிறார். அதாவது எலும்பு, மாம்சம், இரத்தம் முதலியவை இல்லாமல் ஆவிக்குரிய தேகத்தில் செரூபியாயிருக்கிறார். யோவான் 4:24, 5:27, 6:46, ஆதி 1:26, லூக்கா 24:39, அவருக்கு ஒர் ரூபம் உண்டென்று அறிகிறோம்.


(5) தேவன் மனிதக்கண்களுக்கு காணப்படாதவராயிருக்கிறார். யாத்  33:20,யோவா1:18, 1தீமோ.6:16,17; 1யோவா 4:12 தேவனுடைய பிரசன்னத்தை சிலர் தரிசனங்களில், அக்கினி, மேகம், மின்னல், மற்றும் தேவதூதருடைய தோற்றங்கள், அசரிரி வாக்குகள், மூலமாய் அறிந்துக்கொண்டார்கள். ஆனால் ஒரு மனிதனும் தேவனுடைய சுய ரூபத்தைக்கண்டதில்லை. ஆதி 16 :7-13, யாத் 3:2-4, 33 : 20 -23, ஏசாயா 6:1-5.


(6) தேவன் தூணிலும், துரும்பிலும், எங்கும் நிறைந்தவரல்ல, ஆனால் சர்வ உலகங்களின் ஓர் மத்திய, முக்கிய ஸ்தானமாகிய பரலோகம் என்னும் தம்முடைய வாசஸ்தலத்திலே இருக்கிறார். ஆனால், அவருடைய சர்வ வல்லமையுள்ள ஆவி, சர்வ உலகமெங்கும் சென்று கிரியைச் செய்யக்கூடியதாயிருக்கிறது. அவருடைய ஆவிக்கு மறைவான இடமே கிடையாது. 2 நாளா 6 : 21, 30, 39, மத் 6:9, சங் 139 : 5-10, எரே 23 : 23, 24, ஆமோஸ் 9 :2,3.


(7) தேவன் சர்வவல்லமையுடையவராயிருக்கிறார். ஆதி 17 :1, 35:11. யாத் 6:3, சங் 91:1, 2 கொரி 6:18, வெளி 1:8, 4:8, 21:22.

(8) தேவன் சர்வ ஞானமுள்ளவராயிருக்கிறார். யோபு 12:13,16. எரேமியா 10:12. தானி 2:20. ரோமர். 11:33. 1தீமோ 1:17.

(9)தேவன் நீதியுள்ளவர். 2 நாளா 12:6, சங் 11:7, எஸ்றா 9:15,16 யோவா 17:25, வெளி 16:5,7; 19:1,2.

(10) தேவன் பரிசுத்தராயிருக்கிறார். லேவி 11:44,45; 1பேதுரு 1:15,16; வெளி  4:8. ஏசா 6:3.

(11) தேவன் அன்புள்ளவராயிருக்கிறார். 1 யோவன் 3:1, 4:8.

(12) சிருஷ்டிகர். ஆதி 1:1,31, சங் 19 : 1-4, அப் 4:24, 14:15.

(13) ஒப்புமையில்லாதவர். யாத் 15:11; சங் 86:8; எரே 10:6; ஏசா.46:5; 40:18



-- Edited by abreham1975 on Friday 14th of January 2011 03:14:14 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தேவனின்  குணாதிசயங்கள் பற்றி மிக அருமையான வார்த்தைகளை பதிவிட்டுள்ளீர்கள்!
நன்றி!

எனக்கு தெரிந்த இன்னும் சில வசனங்கள் இதோ!
 
தேவன்  நீடிய  சாந்தம்  உள்ளவராய் மிகுந்த இரக்கமும் கிருபையுள்ளவராய்  இருக்கிறார்  
 
சங்கீதம் 103:8 கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
சங்கீதம் 145:8 கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
யோவேல் 2:13  அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்
 
ஜனங்களை தண்டிக்கிறவரும்  காக்கிரவரும் இரட்சிக்கிரவரும் அவரே!   
 
யோபு 36:31 அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.

சங்கீதம் 68:19
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே

தானியேல் 6:27  அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார்

தன்னை நோக்கி கூட்ப்பிட்டு  தேடுகிறவர்களுக்கு பதிலளிப்பவராய் இருக்கிறார்!
 
சங்கீதம் 50:15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

சங்கீதம் 91:15
 என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்
 
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

உத்தமமாய் நேர்மையாய்  நடப்பவர்களுக்கு  உற்ற 
துணையை இருக்கிறார்.
 
II நாளாகமம் 16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது
 
II நாளா 19:11 உத்தமனுக்குக் கர்த்தர் துணை  
 
யோபு 8:20  தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.

சங்கீதம் 37:18
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

பாவத்தையும் தீமையையும் வெறுருக்கிரவராக இருக்கிறார் 
    

சங்கீதம் 5:5
வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.

சங்கீதம் 101:3
தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்;

நீதிமொழிகள் 8:13
  பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்
 
சகரியா 8:17 ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அவர் எரிச்சல் உள்ளவரும்  பட்சிக்கிற அக்கினியுமாய் இருக்கிறார்    

உபாகமம் 4:24 உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.

எபிரெயர் 12:29
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே

இன்னும் நமது கர்த்தரின் மேன்மை பற்றி  எழுதிக்கொண்டே போகலாம்.....


 

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard