இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என்னைப்பற்றி (அந்தோணிமுத்து)...


இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
என்னைப்பற்றி (அந்தோணிமுத்து)...
Permalink  
 


என்னை வாழ்த்தி வரவேற்ற சகோ. இறைநேசம் அவர்களுக்கு  ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
 
நான் எங்கள் குடும்பத்திலே பாரம்பரியமாய் கடைப்பிடித்து கொண்டிருக்கிற கத்தோலிக்க சபையில்இருந்து இரட்சிக்கப்பட்டு, நானும் என் குடும்பமுமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதித்து கொண்டிருக்கிறோம். இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். நான் தற்போது சவுதி தேசத்திலே பணியாற்றி கொண்டிருக்கிறேன். இந்த தேசத்திலும் நாங்கள் தேவனுடைய மகிமைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக தேவனை துதிக்கிறேன். நான் கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவன்.
 
என் வாஞ்சை:
அனுபவத்தின் வழியாய் தேவனை அறிந்து கொண்ட தேவ தாசர்கள் மூலமாய் நாம் ஆராதிக்கிற தேவன் எப்படிபட்டவர் என்று உணர்ந்து, இன்னும் விசுவாசத்திலும், தேவஅன்பிலும், தேவனுக்கேற்ற கிரியையிலும், வேத அறிவிலும் வளர (இன்னும் பல உண்டு...) விரும்புகிறேன். இத்தளத்தின் அனுபவமிக்க தேவ தாசர்கள் எனக்கு உதவி செய்வார்கள் என நம்புகிறேன்.
 
இத்தளத்தில் பதிவுகளை கொடுத்து கொண்டிருக்கிற மற்றும் தளத்தை பார்வையிடுகிற எல்லா உறுப்பினர்களுக்கும் இயேசுவின் நாமத்தில் நன்றி சொல்லுகிறேன்.
 
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்!!!
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோதரர் அந்தோணி முத்து அவர்களை இந்த தளத்தில் வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
 
உங்கள் ஊழியங்களை ஆசீர்வதித்து,  தங்கள் வாஞ்சைகளையும் விருபங்களையும் நிறைவேற்ற ஆண்டவர்தாமே அதிகமாய் உதவிசெய்வாராக.
 
எனது  தாழ்மையான கருத்து என்னவெனில் வேத புத்தகத்தை குறைந்தது மூன்று முறையாவது முழுவதும் படியுங்கள். ஆண்டவர் தங்களோடு நிச்சயம் பேசுவார்.
 
ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் அதிகம் வளர தேவையான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள ஆண்டவர் தாமே உதவி செய்வாராக!
 
கிறிஸ்த்துவுக்குள் வாழ்த்துக்களுடன்!
சுந்தர்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

மிகவும் நன்றி சகோ. சுந்தர் அவர்களே

வேத புத்தகத்தை இன்னும் அதிகமாக படிப்பேன் சகோ. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் வளர தங்களின் வழி நடத்தல் அவசியம் வேண்டும்.

தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக!.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard