இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விசுவாசமும் கிரியையும் பற்றி ஒரு விளக்கம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
விசுவாசமும் கிரியையும் பற்றி ஒரு விளக்கம்
Permalink  
 


விசுவாசத்தை பற்றியும் கிரியை பற்றியும் அனேக வசனங்கள் இருந்தாலும் சுருக்கமாக சொல்ல விரும்புகின்றேன்

 
சகோதரர்களே தேவனை அறிந்த சிலர் விசுவாசம் நமக்கு  இருந்தால் மட்டும் போதும்  
என்று   நினைத்து கிரியை செய்வதை   விட்டு விடுகின்றார்கள்
 
 
 
 
ஆனால் வேதம் கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்று சொல்கின்றது
 
 
 
 
 
யாக்கோபு : 2
 
 
17. அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்
 
 
 
26. அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது
 
 
 
 
ஆம் சகோதரர்களே நமக்கு  விசுவாசம் மட்டும் இருந்தால் போதாது அதனுடன் சேர்ந்து கிரியையும் இருக்கவேண்டும்
 
 
 
சிலர் விசுவாசம் தான் மிக பெரியது என்று சொல்கின்றார்கள் விசுவாசம் பெரியது தான் நானும் இல்லையன்று சொல்லவில்லை
 
 
 
ஆனால் அந்த விசுவாசத்துடனே சேர்ந்து கிரியை இருந்தால் தான் அந்த விசுவாசத்திற்கு மதிப்பு இல்லையென்றால்
யாக்கோபு சொல்வது போல அது செத்ததாய்   தான் இருக்கும்
 
 
 
 
 
 
விசுவாசம் மட்டும் என்று சொல்கின்றவர்களுக்கு ஒரு சில கருத்துகளை சொல்லவிரும்புகின்றேன்
 
 
 
14. என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?
அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
 
 
விசுவாசம் மட்டும் என்னை இரட்சிக்கும் என்று சொல்லாதீர்கள் நண்பரே
 
 
 
ஒரு வேலை கிரியை இல்லாத விசுவாசம் கூட எங்களை இரட்சிக்கும் என்று  நீங்கள்
சொன்னால் லூசிபெரும் அவனுடன் சேர்ந்த சாத்தானும் நிச்சயமாக இரட்சிக்க படுவார்கள் என்பது நீங்கள் 
கூறும்  விசுவாசமே சொல்கின்றது
 
 
 
 
19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன
 
 
 
பிசாசுகளும் தேவன் உண்டென்று விசுவாசித்து நடுகின்றன என்று வேதம் சொல்வதால் தேவன் பிசாசுகளையும் இரட்சிப்பாரா சொல்லுங்கள் சகோதரரே
 
 
 
சகோதரரே பிசாசுகளுக்கு தேவன் உண்டென்று விசுவாசிக்கின்றன அவைகள் விசுவாசிப்பதினால்  ஒன்றும் ப்ரோஜினமில்லை
ஏனென்றால்  அவைகளிடம் கிரியைகள் இல்லாததினால் அந்த விசுவாசம் ஒன்றுக்கும் உதவாது அது செத்து போனது
 
 
 
 
சிலர் உடனே நான் விசுவாசத்தை மட்டு படுத்துகின்றேன் என்று சொல்லாதீர்கள் நான் தேவனை  பிசாசுகளை போல இருக்கின்றார் என்று 
விசுவாசிக்காமல் அவர் விரும்பும் நற்கிரியைகளை செய்ய வேண்டும் என்றும் அதையே  என் தேவனாகிய கர்த்தர் எதிர்
பார்கின்றார் என்று நம்பி அவரை  விசுவாசிக்கிறேன்
 
 
 
 
ஏனென்றால் தேவனின் குமாரன் நம்மை  நீயாயம்  தீர்க்கும் பொழுது
 
 
 
வெளிபடுத்தல் : 20 ௦
 
 
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன;
ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே
மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்
 
 
 
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும்
தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
 
 
 
என் சகோதர்களே இந்த இரண்டு வசனங்களிலும் எந்த ஒருவரும் அவர்கள் விசுவாசத்தின் படி நீயாயதீர்ப்பு அடையாமல்  அவர்களுடைய கிரியைக்கு
தகுந்த படி நீயாயதீர்ப்பு அடைந்தார்கள் என்று வேதம் சொல்வதை கவனியுங்கள்
 
 
 
 
சகோதரர்களே பல இந்துக்கள் அவர்கள் தங்கள் தெய்வத்தை வணங்கினாலும் நான்
அவர்களுக்கு இயேசுவை பற்றி சொல்லும் பொழுது நானும் இயேசுவை விசுவாசிக்கின்றேன் என்று 
எனக்கு தெரிந்து அனேக சகோதரிகளும் சகோதரர்களும்  சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றேன்
 
 
 
 
விசுவாசம் பெரியது தான் ஆனால் அந்த விசுவாசம் கிரியைகளுடன் சேர்ந்து இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த விசுவாசத்திற்கு ஜீவன் இருக்கும்
இல்லையென்றால் அந்த விசுவாசம் செத்தது செத்தது என்பதே  என் கருத்து.......................


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 8th of October 2011 04:39:21 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

BRO. EDWIN SUDHAKAR Wrote
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன
 
பல இந்துக்கள் அவர்கள் தங்கள் தெய்வத்தை வணங்கினாலும் நான்
அவர்களுக்கு இயேசுவை பற்றி சொல்லும் பொழுது நானும் இயேசுவை விசுவாசிக்கின்றேன் என்று  எனக்கு தெரிந்து அனேக சகோதரிகளும் சகோதரர்களும்  சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றேன்
 =======================================================================================
 
கிரியை  அவசியம்  என்பதை உறுதிப்படுத்த இரண்டு முக்கிய விளக்கத்தை தந்துள்ளீர்கள். 
  
1. பிசாசுகள்கூட "தேவன் உண்டு என்று விசுவாசித்து  நடுங்குகிறது" ஆனால் அவைகளிடம் இறைவனுக்கு ஏற்ற கிரியை இல்லை என்பதாலேயே அவைகள் பிசாசு என்ற  நிலையில் இருக்கின்றன 
 
2. பிற மதத்தை சேர்ந்த பலரும் "இயேசுவை நானும் விசுவாசிக்கிறேன்" "எனக்கும் அவரை பிடிக்கும்" நானும் கிறிஸ்த்தவ சபைக்கு போவது உண்டு என்று சொல்லி  பலமுறை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் இவர்களிடம் விசுவாசத்துக்கு ஏற்ற கிரியை இல்லாத பட்சத்தில் அந்த விசுவாசத்தால் பயனேதும் இல்லை. 
 
விசுவாசம் பெரியதுதான். அனால் "கிரியை இல்லாத விசுவாசம் செத்தது"  என்பதை இதன்மூலம் சுலபமாக நாம்  புரிந்துகொள்ள முடியும்.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard