இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புதிய ஏற்பாட்டு சபையை பற்றிய வாக்குத்தத்தம் என்ன?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
புதிய ஏற்பாட்டு சபையை பற்றிய வாக்குத்தத்தம் என்ன?
Permalink  
 


சபை என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இரத்தம் சிந்தி சம்பாதித்துள்ள ஜனங்களின் கூட்டத்தை குறிக்கும் என்று கருதுகிறேன். 
 
புதிய ஏற்பாட்டு  சபை என்பது பழையஏற்பாட்டு சபையை போல் அல்லாமல் யார் வேண்டுமானாலும்  எப்பொழுது  வேண்டுமானாலும் வந்து இணைந்து கொள்ளலாம் என்னும் நிலையில் உள்ளது.
 
உலகில் உள்ள எல்லோருக்கும் இந்த சபை குறித்த அழைப்பு
உண்டு. யூதனென்றும் கிரேக்கன் என்றும் பாகுபாடு இல்லை. எவர் இரட்சிக்கபட்டு இயேசுவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டாரோ அவர்  இந்த சபையின் உறுப்பினர் ஆகிவிட முடியும்.         
 
இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார். (அப் 2:47) 
 
இந்த புதிய ஏற்பாட்டு சபையை குறித்த வாக்குத்தத்தம் என்ன வென்பதில் பல்வேறு குழப்பமான கருத்துக்கள் நிலவுகிறது.  
 
சபையை குறித்து ஆண்டவராகிய இயேசு சொல்லியிருக்கும் மேலான வாக்குத்தத்தம் என்ன?   
 
சபை எப்பொழுது எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறித்து வேதவசனம் என்ன சொல்கிறது?
 
தெரிந்தவர்கள் வசனத்தின் அடிப்படையில் சற்று விளக்கவும்.   


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard