இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இலவசமாக பெற்ற மொபைலும் அதனால் உண்டான மனநோவும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இலவசமாக பெற்ற மொபைலும் அதனால் உண்டான மனநோவும்!
Permalink  
 


கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது கம்பனியின் டைரக்டர் அவர்கள் என்னிடம் ஒருபழைய  சோனிஎரிக்சன் மொபைலை கொண்டுவந்து கொடுத்தார்கள். 1994 ம் வருட மாடலான அந்த மொபைல் அந்த நேரத்தில் சுமார் 20000 ரூபாய் மதிப்புள்ள மிகவும் அருமையானதாக  இருந்தாலும் தற்ச்சமயம் அதற்க்கு பெரிய மதிப்பேதும் இல்லாத நிலையில் இருந்தது.  மிகப்பெரிய ஸ்கிரீன் உள்ள அதை பாத்ததும்  மொபைல் போன்களின் மேல் சற்று ஆசை  உள்ள நான், அதை உடனே வாங்கி எனது வீட்டுக்கு கொண்டுசென்றுவிட்டேன். எனது பசங்கள் அதை கேம் விளையாட பயன்படுத்தி வந்தார்கள்.
 
இந்த காரியம் நடந்து சில நாட்களுக்குள்  எனக்கும் எனது டைரடருக்கும் இரண்டு சாதாரண விஷயங்களில் கடுமையான மோதல் உண்டாகிவிட்டது. என்னை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும் என்னை ஒருபோதும் கடிந்து பேசவேமாட்டார்கள். எந்த ஒருவிசயத்துக்கும் என்னை கன்சல்ட் பண்ணிவிட்டே செய்யும் அவர்கள் ஒரு 500  ரூபாய் ஒருவருக்கு கொடுததிநிமித்தம் என்னை கடிந்துகொண்டார்கள்.
 
யாரிடமும் ஒரு சிறிய பேச்சுகூட வாங்ககூடாது என்றநிலையில் எதற்கும விட்டு
கொடுத்து வாழு  நினைக்கும் எனக்கு, இங்கு நடந்த இரண்டு சம்பவங்கள் மிகுந்த மன வேதனையை தந்தது. கம்பனியை விட்டு வெளியேறிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கே வந்து   மிகுந்த  கோபத்தில் இருந்த நான் ஆண்டவரிடம்,  ஆண்டவரே அவர்கள் எந்த தைரியத்தில் என்மேல் இவ்வளவு அதிகாரம்  செலுத்து கிறார்கள். அவர்களின் காசில் எந்த காசையும் நான் எடுத்து பயன்படுத்த வில்லை. அவர்களுக்கு நான் எந்த விதத்திலும் கடன்படவில்லேயே பிறகு ஏன் அவர்களை  என்மேல் இவ்வளவு அதிகாரம் செலுத்த அனுமதிக்கிறீர்? என்று மன சோர்வோடு நான் ஆண்டவரிடம்   புலம்பிக்கொண்டு அமர்ந்திருந்தபோது  எனது கடைசி மகன் என்னிடம் வந்து "டாடி, அக்கா எனக்கு அந்த மொபைல்போனை  கேம்விளையாட   தரமாட்டேன் என்று சொல்கிறாள்" என்று சொல்லிக்கொண்டு வந்தான். 
 
அதுவரை அந்த மொபைலை பற்றி சற்றும் யோசித்து பார்க்காத எனக்கு உடனே  நான் செய்திருக்கும் மடத்தனம் அப்பொழுதுதான்  புரிந்தது. அனைத்துக்கும் காரணம் நான் ஓசியில் வாங்கிவந்த செல்போன்தான் என்பதை ஆண்டவரும் எனக்கு தெளிவாக உணர்த்தினார்.
 
அவர்கள் என்மேல் அதிகாரம் செலுத்துவதற்கு காரணம் அவர்களிடம் இருந்து நான் இலவசமாக பெற்ற அந்த செல்போன்தான் என்பதை துல்லியமாக அறிந்துகொண்டு உடனே அந்த போனை திருப்பிகொடுத்துவிடும் முடிவை எடுத்தேன்.  அதன்பின் எங்களுக்கும் மீண்டும் பழைய  நிலை திரும்பியது.
 
பிறரிடம் கடன் வாங்குவதற்கும் இலவசமாக பொருட்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கும் அநேகர் சற்றும் தயங்குவது இல்லை. யார் ஓசியில் எதாவது கொடுக்கமாடார் என்று எத்தனையோபேர் ஏங்குகிறார்கள். ஆனால் ஓசியில் ஒருவரிடம் இருந்து எதையாவது பெறுவது அல்லது எதிர்பாப்பதுகூட
ஒரு சரியான காரியம் அல்ல.  அடுத்தவரிடம்  வாங்கிய கடனோ அல்லது இலவசமாக நாம் பெற்ற பொருளோ நம்மிடம் இருக்கும்வரை அவர்களுக்கு  நம்மேல் அதிகாரம் செலுத்த அனுமதி கிடைக்கிறது.  ஊளியத்துக்கென்று நாம் பெற்றும் பணம்கூட ஒவ்வொரு காசும்  ஆண்டவருக்கென்று சரியாக பயன்படுத்த
படவேண்டும் இல்லையேல் கடுமையான தணடனையை பெற நேரிடலாம்!   
 
உலகில் நமக்கு நடக்கும் எந்த ஒரு தவறான  காரியமும் நம்முடைய தவற இல்லாமல் நடப்பதே இல்லை.  உங்களிடம்  எந்த தவறும் இல்லாமல் உங்களை யாரும்  மனம்  நோக பேசகூட முடியாது ஆண்டவர் அதை  அனுமதிக்கவே மாட்டார். 
 
நமக்கு ஏற்ப்படும் மன கஷ்டம் அல்லது துன்பத்துக்காக பிறரை குற்றம் சுமத்தும் முன்னர் நம்மை நாமே சோதித்து அறிந்து நம்மை திருத்தி கொள்வதுதான் சிறந்தது.
        
 I கொரிந்தியர் 11:31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard