இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிருஸ்துவின் நாமத்தை தொழுது கொள்ளலாமா?


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
இயேசு கிருஸ்துவின் நாமத்தை தொழுது கொள்ளலாமா?
Permalink  
 


இயேசு கிருஸ்துவின் நாமத்தை தொழுது கொள்வது பற்றி இயேசுவிற்கு பின் வந்த அப்போஸ்தலர்கள் சொல்லியுள்ளனர். அவ்வாறு அவரது நாமத்தை தொழுது கொள்வது என்றால் என்ன? அது சரியானதா? என்பதை தள சகோதரர்கள் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன்.



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
RE: இயேசு கிருஸ்துவின் நாமத்தை தொழுது கொள்ளலாமா?
Permalink  
 


இது வேறு ஒரு திரியில் சகோதரர் அன்பு அவர்களோடு விவாதித்த போது அவர்கள் சொன்ன கருத்தாகும்.

/இயேசுவின் நாமத்தை தொழுது கொள்வது என்பது வேதத்தின்படி சரியானது. இவ்வாறே அப்போஸ்தலர் அனைவரும் இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டனர்.- சரி / தவறு//

சகோதரர் அன்பு எழுதியது,

//சகோ.சந்தோஷ் அவர்களே!

தொழுதுகொள்தல் என்பதை எந்த அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை. ஒருவேளை மத்தேயு 4:10-ல் இயேசு கூறுகிற ஆராதனையைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்றால், இயேசுவின் நாமத்தை தொழுதுகொள்தல் என்பது நிச்சயம் தவறுதான்.

மாறாக, இயேசுவின் நாமத்தால் தேவனிடம் வேண்டுதல் என்ற அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்றால் அது சரியே.//

வேதம் சொல்வது போல இயேசு கிருஸ்துவின் நாமத்தில் மட்டுமே பிதாவை வேண்டிக் கொள்ள வேண்டும் என்பதை அவரும் ஏற்று கொண்டுள்ளார் என்பதை அவரது இந்த பதிவிலிருந்து அறிய முடிகிறது.

ஒரு வேளை இதை தான் இயேசு கிருஸ்துவை ஆராதிப்பது என்று ஜான் அவர்களும், ஜான்12 அவர்களும் சொல்கிறார்களா என்று விளக்க வேண்டுகிறேன். 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சந்தோஷ் அவர்களே! நித்திய ஜீவன் தளத்தின் ஒரு பதிவின் ஒரு பகுதியை நீங்கள் இங்கு மேற்கோள் காட்டியிருப்பதால், இத்தள அன்பர்கள் எனது கருத்தை முழுமையாக தெரிந்துகொள்ளும்படி, அப்பதிவை சற்று விரிவாகவும், அப்பதிவையொட்டிய பிற பதிவுகளின் முக்கிய கருத்துக்களையும் இங்கு பதிப்பது நலமாயிருக்கும் என கருதுகிறேன்.

நித்திய ஜீவன் தள பதிவுகளிலிருந்து:

அன்பான சகோ.சந்தோஷ் அவர்களுக்கு!

ஏற்கனவே பிதாவை ஆராதிப்பது எப்படி என்ற தலைப்பில் நான் ஒரு திரியைத் துவக்கியதை நீங்கள் கவனித்தீர்களா எனத் தெரியவில்லை. உங்களுக்காகத்தான் அத்திரியைத் துவக்கினேன். அதே தலைப்புக்கு ஒத்ததாக பிதாவை வணங்குவது எப்படி என்ற தலைப்பில் நீங்கள் திரியைத் துவக்கியுள்ளீர்கள்.

இக்கேள்விகளுக்கான எனது பதிலும் உங்கள் பதிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் உள்ளன. ஆகிலும் உங்கள் கோட்பாட்டை நிலைநாட்டத்தக்கதாக சில வரிகளையும் சேர்த்துள்ளீர்கள்.

sandosh wrote:
//மத்தேயு 4.10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இந்த வசனத்தில் தேவனாகிய கர்த்தர் என்பது யாவே தேவனையும் குறிக்கும். கர்த்தராகிய இயேசு கிருஸ்துவையும் குறிக்கும் என்பதால் இயேசுவுக்கு ஆராதனை செய்வது தவறில்லை என்று சொல்லலாம்.//

தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே என வசனம் தெளிவாகக் கூறுகையில், உங்கள் மனம் போல் தேவனாகிய கர்த்தர் என்றால் அது யாவே தேவனையும் இயேசுவையும் குறிக்கும் எனச் சொன்னால் இது எத்தனை பெரிய வேதப்புரட்டாகும்? சற்று சிந்தியுங்கள் சகோதரரே! “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்”.

sandosh wrote:
//மேலும் மத்தேயு 4.10ல் இயேசு சொன்னது பழைய ஏற்பாட்டு ஆராதனை சடங்குகளையே. புதிய ஏற்பாட்டு காலத்தில் அவை முற்றிலும் மாற்றப்பட்டு விட்டதால் அந்த ஆராதனை வேறு இப்போதைய ஆராதனை வேறு என்றாகி விட்டது. அப்படி இருக்கும் போது இந்த வசனத்தை அடிக்கடி மேற்கோள்வது காட்டுவது சரியான வழியில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு இடறலை உண்டாக்கும் ஒரு தந்திரமே ஆகும்.//

புதிய ஏற்பாட்டு காலத்தில் மாற்றப்பட்ட ஆராதனை முறை என்பது எது? அதற்கான வசன ஆதாரத்தைக் கொடுங்கள். மத்தேயு 4:10-ஐ அடிக்கடி மேற்கோள் காட்டக்கூடாது என்பது உங்கள் தீர்ப்பெனில், எத்தனை தடவை மேற்கோள் காட்டலாம், எந்த சந்தர்ப்பத்தில் மேற்கோள் காட்டலாம், அல்லது மேற்கோள் காட்டவே கூடாதா எனும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

sandosh wrote:
//புதிய ஏற்பாட்டு காலத்தில் மனிதனே தேவனுடைய ஆலயமாக மாறி விட்டதால், மனிதனுடைய மனதும், சரீரமும் பரிசுத்தமாக காக்கபட வேண்டும். தேவனிடத்தில் எப்போதும் அன்பு கூறுவதனால் கிருபையை விட்டு விலகாமல் காத்து கொள்ள வேண்டும். தேவனின் நாமத்தை எப்போதும் துதிக்க வேண்டும் என்பது போன்றவைகள் ஆராதனை முறைகளாயின. இவைகளை சரியாக காத்து கொள்ளும் போது தேவ சமூகம் நம்முடனே எப்போதும் கூட இருக்கும்.//

உங்களது இக்கருத்தை நான் முழுமையாக ஏற்று வரவேற்கிறேன். ஆனால் “இயேசுவுக்கு ஆராதனை” எனும் சுலோகனை பலரும் ஓயாமல் கூறிவருவதால்தான், ஆராதனையை ஒருவருக்குச் செலுத்தவேண்டுமெனில் அதை பிதாவாகிய தேவனுக்கு மட்டுமே செலுத்தவேண்டும் எனக் கூறுகிறேன்; அதற்கு ஆதாரமாக மத்தேயு 4:10-ஐ சுட்டிக்காட்டுகிறேன்.

தொடரும் ...



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

நித்திய ஜீவன் தள பதிவுகளிலிருந்து:

இயேசுவைத் தொழுதுகொள்ள வேண்டும் என்பதற்கு ஆதாரமாக பின்வரும் வசனங்களைக் காட்டியுள்ளீர்கள்.

அப்போ 9.13. அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.
14. இங்கேயும் உம்முடைய (இயேசுவின்) நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.

அப்போ 9.20. தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே (பவுல்) பிரசங்கித்தான்.
21. கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த (இயேசுவின்) நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.

ரோமர் 10.13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

1 கொரி 1.2. கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:


இவ்வசனங்கள் இயேசுவைத் தொழுதுகொள்வது பற்றி கூறுவது மெய்தான். ஆனால் தொழுகொள்தல் என்றால் என்ன, ஆராதனையிலிருந்து தொழுதுகொள்தல் எவ்வாறு வேறுபடுகிறது என்பதைச் சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

மாத்திரமல்ல, மேற்கூறிய வசனங்களில் தொழுதுகொள்தல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தமென்ன, ஆங்கிலம் போன்ற பிற மொழிபெயர்ப்புகளின் அவ்வார்த்தை எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தறியவும் நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

இதையெல்லாம் ஆராயாமல் வெறுமனே தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் வைத்து எடுக்கிற முடிவு தவறாக இருக்க அதிக வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும். மேற்கூறிய வசனங்கள் KJV ஆங்கில வேதாகமத்தில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை முதலாவதாகப் பார்ப்போம்.

Acts 9:13-14 Then Ananias answered, Lord, I have heard by many of this man, how much evil he hath done to thy saints at Jerusalem: And here he hath authority from the chief priests to bind all that call on thy name.

Acts 9:20-21 And straightway he preached Christ in the synagogues, that he is the Son of God. But all that heard him were amazed, and said; Is not this he that destroyed them which called on this name in Jerusalem, and came hither for that intent, that he might bring them bound unto the chief priests?

Rom 10:13 For whosoever shall call upon the name of the Lord shall be saved.

1 Cor 1:2 Unto the church of God which is at Corinth, to them that are sanctified in Christ Jesus, called to be saints, with all that in every place call upon the name of Jesus Christ our Lord, both theirs and ours:

தொழுதுகொள்தல் என தமிழ் வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள், call on அல்லது call upon என ஆங்கில வேதாகமத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

மூலபாஷையில் இதற்கு இணையான வார்த்தை epikaleomai (ep-ee-kal-eh'-om-ahee, NT:1941) என்பதாகும். இதன் அர்த்தம்:

middle voice from NT:1909 and NT:2564; to entile; by implication, to invoke (for aid, worship, testimony, decision, etc.):

KJV - appeal (unto), call (on, upon), surname.
என்பதாகும்.

உதவிக்காக/தொழுதுகொள்வதற்காக/சாட்சிக்காக/தீர்ப்புக்காக - வேண்டுதல்/அழைத்தல்/உட்படுத்துதல் ஆகியவை இதன் அர்த்தங்களாகும்.

அப்போஸ்தலர் 25:11-ல் இராயருக்கு பவுல் அபயமிடுதலுக்கும் இதே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்பொழுது நீங்களே சொல்லுங்கள், நீங்கள் சுட்டிக்காட்டின வசனங்களின் உண்மையான அர்த்தம் எதுவென.

தொடரும் ...



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

நித்திய ஜீவன் தள பதிவுகளிலிருந்து:

சகோதரர் அன்பு அவர்களே,

வேதத்தின் அடிப்படையில் எழுந்த என்னுடைய இந்த கருத்துக்களும் சரியா, தவறா என்பதை நீங்களும், கோவை பெரியன்ஸ் அவர்களும் சொன்னால் நலமாயிருக்கும். இந்த கருத்துக்கள் தவறாய் இருக்கும் பட்சத்தில் இந்த கேள்விகளுக்கு தனி திரி தொடங்கி விவாதிக்கலாம்,

1. இயேசுவின் நாமத்தை தொழுது கொள்வது என்பது வேதத்தின்படி சரியானது. இவ்வாறே அப்போஸ்தலர் அனைவரும் இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டனர்.- சரி / தவறு

2. இயேசு கிருஸ்துவுக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்துவது என்பது பிதாவை மகிமைப்படுத்துவதாகும். - சரி / தவறு

பிதாவை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்று சரியாக சொன்ன நீங்களும், கோவை பெரேயன்ஸ் அவர்களும்

1. ஆவியினாலே பிதாவை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதையும்

2. ஆவியோடும், உண்மையோடும் பிதாவை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்பதை பற்றி எதுவும் எழுதாதது வருத்தமளிக்கிறது. அதைப் பற்றி விரைவில் விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 

சகோ.சந்தோஷ் அவர்களே!

தொழுதுகொள்தல் என்பதை எந்த அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை. ஒருவேளை மத்தேயு 4:10-ல் இயேசு கூறுகிற ஆராதனையைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்றால், இயேசுவின் நாமத்தை தொழுதுகொள்தல் என்பது நிச்சயம் தவறுதான்.

மாறாக, இயேசுவின் நாமத்தால் தேவனிடம் வேண்டுதல் என்ற அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்றால் அது சரியே.

//இயேசு கிருஸ்துவுக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்துவது என்பது பிதாவை மகிமைப்படுத்துவதாகும். - சரி / தவறு//

சகோ.சந்தோஷ் அவர்களே!

இவ்விஷயத்தில் நாம் அப்போஸ்தலரின் மாதிரியைப் பின்பற்றுவதாக இருந்தால், இயேசு கிறிஸ்து மூலமாக தேவனுக்கே நம் ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தவேண்டும். ஏனெனில் அப்போஸ்தலரின் நிருபங்கள் முழுவதிலும் அவர்கள் தேவனுக்கே ஸ்தோத்திரம் செலுத்துவதாகத்தான் வசனங்கள் கூறுகின்றனவேயொழிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தியதாக ஒரு வசனமும் கூறவில்லை. (ஒருவேளை இயேசுவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தியதாக ஏதேனும் வசனம் இருந்தால் அதை எடுத்துக்காட்டும்படி வேண்டுகிறேன்)

எபிரெய ஆக்கியோனின் பின்வரும் வசனத்தை சற்று படியுங்கள்.

எபிரயர் 13:15 ஆகையால், அவருடைய (இயேசுவின்) நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

ஸ்தோத்திரபலியை எப்போதும் தேவனுக்கே செலுத்தவேண்டுமென எபிரெய ஆக்கியோன் கூறுகிறார். ஆனால் இயேசுவின் மூலமாக அதைச் செலுத்தவேண்டுமென்றும் அவர் கூறுகிறார். இதன்படி நாம் நடந்தாலே போதுமானது. மற்றபடி, உங்கள் கேள்வியில் கூறப்பட்டுள்ளபடி இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவதைப் பற்றி வேதாகமத்தின் எந்த வசனமும் கூறவில்லை என்பதே நான் அறிந்ததாகும்.

ஆயினும், வெளிப்படுத்துதலின் இரு வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன.

வெளி. 5:12,13 அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

ஆட்டுக்குட்டியானவர் என்பது இயேசுவையே குறிப்பிடுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆட்டுக்குட்டியானவராகிய அவர் ஸ்தோத்திரத்தைப் பெற்றுக்கொள்ள பாத்திரராயிருக்கிறார் என 12-ம் வசனம் கூறுகிறது. வானத்திலும் பூமியிலும் சகல சிருஷ்டிகளும் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக எனக் கூறுவதாக 13-ம் வசனம் கூறுகிறது.

சகல சிருஷ்டிகளும் என்றால் மரம், செடி, கொடி போன்ற சகல வஸ்துக்களுமாகும். வெளி. 5:13 சொல்கிறபடி, தற்காலத்தில் “சகல வஸ்துக்களும்”  சொல்கின்றனவா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

நான் புரிந்தவரையில், வெளி. 5:13-ல் கூறப்பட்டுள்ளவை எதிர்காலத்தில் (அதாவது மறுமையின் காலத்தில்) நடைபெறக்கூடியவையாகும் என்றே கருதுகிறேன். உங்கள் புரிந்துகொள்தலை நீங்கள் சொல்லுங்கள்.

தொடரும் ..



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

நித்திய ஜீவன் தள பதிவுகளிலிருந்து:

sandosh wrote:
//பிதாவை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்று சரியாக சொன்ன நீங்களும், கோவை பெரேயன்ஸ் அவர்களும்

1. ஆவியினாலே பிதாவை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதையும்

2. ஆவியோடும், உண்மையோடும் பிதாவை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்பதை பற்றி எதுவும் எழுதாதது வருத்தமளிக்கிறது. அதைப் பற்றி விரைவில் விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். //

பிதாவை எப்படி ஆராதிக்கவேண்டும் என பல திரிகளில் எழுதியிருந்தும், அவற்றைப் படிக்காமல் எங்கள்மீது நீங்கள் வருத்தப்படுவது எங்களை வருத்தப்படுத்துகிறது. இதே திரியில் எனது முதல் பதிவில்கூட “பிதாவை ஆராதிப்பது எப்படி” எனும் திரியின் தொடுப்பைக் கொடுத்துள்ளேன். இதுபோக “இயேசு தொழத்தக்க தெய்வமா?” எனும் திரியிலும் பிதாவை ஆராதிப்பதைக் குறித்து எழுதியுள்ளேன். இவ்விரு திரிகளையும் படித்துப்பாருங்கள்; தங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.

இயேசுவின் வசனங்கள் “ஆவியாயும் ஜீவனாயும்” இருப்பதாக யோவான் 6:61 கூறுகிறது. ஆவியாயிருக்கிற “இயேசுவின் வசனங்களுக்கு” கீழ்ப்படிவதுதான் பிதாவை மெய்யாகவே ஆராதிப்பதாகும். இதற்கு மேலாக எந்தவொரு சடங்காச்சார ஆராதனையையும் பிதாவாகிய தேவன் நம்மிடம் எதிர்பார்க்கமாட்டார் என என்னால் திட்டமாகச் சொல்லமுடியும்.

பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம் எனும் வசனத்தையும் (1 சாமுவேல் 15:22), பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் எனும் வசனத்தையும் (மத்தேயு 9:13) நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பிரதான கற்பனையாக இயேசு கூறுவதென்ன? தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூரவேண்டும் என்பதுதானே? தேவனுக்கு முழு மனதுடன்/இருதயத்துடன்/ஆத்துமாவுடன்/பலத்துடன் கீழ்ப்படியாமல் எப்படி அவரிடம் அன்புகூரமுடியும்?

எனவே கீழ்ப்படிதல்தான் மெய்யான ஆராதனை. தமது நேசகுமாரனாகிய இயேசுவுக்குச் செவிகொடுக்கவேண்டும் என்பதுதான் பிதாவின் கட்டளை/சித்தம் (மத்தேயு 17:5). எனவே இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படிவதுதான் மெய்யான ஆராதனை. இதுவே ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்தல் அல்லது ஆராதித்தலாகும். பின்வரும் வசனங்களையும் சற்று படியுங்கள்.

ரோமர் 12:1 சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

ஆம், நாம் நம்மையே முழுமையாக தேவனிடம் ஒப்புக்கொடுப்பதுதான் புத்தியுள்ள ஆராதனை. இதற்கும் மேலாக ஆராதனை பற்றி நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.

உங்களுக்கு மற்றொரு விஷயமும் சொல்ல விரும்புகிறேன். நம் மூத்த சகோதரரான இயேசு, மகா பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார் (எபிரெயர் 4:14). அவரே தற்போது ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆசாரியராக இருக்கிறார் (எபிரெயர் 8:2). பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஆசாரியர்கள்தான் ஆராதனைக்குரிய காரியங்களை செய்தனர். அதேவிதமாக தற்போது பிரதான ஆசாரியராயுள்ள இயேசுவே ஆராதனைக்குரிய காரியங்களை செய்கிறவராக இருக்கிறார். எனவே நம்மைப்பொறுத்தவரை சடங்கான ஆராதனைகளை செய்யவேண்டியதில்லை. கீழ்ப்படிதல் மட்டுமே போதுமானது.

பிதாவின் சித்தப்படி செய்கிறவன் பரலோக ராஜ்யம் பிரவேசிப்பான என இயேசு தெளிவாகச் சொல்லிவிட்டார். அதன்படி பிதாவின் சித்தம் செய்வோம்; இயேசுவின் வசனங்களின்படி நடப்போம். இதற்கு மிஞ்சினதொரு ஆராதனை இருக்குமென நான் நினைக்கவில்லை.

நித்திய ஜீவன் தள பதிவுகள் முற்றும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard