இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிருஷ்டிப்பில் இருந்து பிசாசின் விழுகையின் காலம் வரை....


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
சிருஷ்டிப்பில் இருந்து பிசாசின் விழுகையின் காலம் வரை....
Permalink  
 


சகோதர்களே!!

வேதத்தின் அடிப்படையிலான சிருஷ்டிப்பை பற்றின நம்மவர்களுக்கு இடையிலேயே குழப்பங்கள் அதிகம். அவைகளை வேத வெளிச்சத்தின் அடிப்படையில் நீக்க முயற்சிப்பது என்பது சரியானதே. நான் சிருஷ்டிப்பை பற்றியும், பிசாசின் சிருஷ்டிப்பு தொடர்பான எனது பார்வையின் அடிப்படையிலான கருத்துகளை பதிந்துள்ளேன்.

தெளிவான வேதவெளிச்சம் இக்காரியத்திற்கு உண்டு என விசுவாசிக்கிறேன். கர்த்தர் எவற்றை,என்ன கால அளவில் படைத்தார் என்கிறவைகளை வேதத்தின் படி கொண்டு பார்க்கும் போது  பிசாசின் சிருஷ்டிப்பைப் பற்றி என்பதை அறிய கூடும்..
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் உள்ள சிருஷ்டிப்பு பின்வரும் கால அளவுகளின்/நிலைகளின் படியானது ..

ஆதியில் (orgin)  - வானம் பூமி (காலத்தின் தொடக்கம்)
முதல் நாள்          -  இருள்,வெளிச்சம் 
இரண்டாம் நாள் - வானத்தில் உள்ள ஜலஇதற்கும் பூமியின் ஜலத்திற்கும் பிளவு உண்டாகுகிறார்.. (கற்பனை கூட செய்து பார்க்க இயலுமா!!)
மூன்றாம் நாள்    - செடி கொடிகள் 
நான்காம் நாள்   - சூரியன் (பெரிய சுடர்  ),சந்திரன்(சிறிய சுடர் ) மற்றும்  நட்சத்திரங்கள் 
ஐந்தாம் நாள்     -  மகா மச்சங்கள்,நீந்துவன,பறப்பன 
ஆறாம் நாள்      - மனிதன் ,மனுஷி,சர்வ சேனை 
ஏழாம் நாள்       - ஓய்வு நாள்

பொதுவாக இரவு,பகல் சூரியனை பூமி சுர்த்ருவதை பொருத்து கணிக்கபடுகிறது. ஆனால் சூரியன் படைக்கபடாத முதல்,இரண்டாம்,மூன்றாம் கால அளவுகளை நாள் என குறிப்பிடுதல் அல்லது தற்கால 24 மணிநேர நாள் அளவுடன் ஒப்பிடுதல் சரியான அணுகுமுறையாகாது. 

மேலும் பகலை பற்றியும்,வெளிச்சத்தை பற்றியும் வேதத்தில் நான்காம் நாளுக்கு முன்னமே பேசப்பட்டுள்ளதால் சூரியன் இல்லாத பகலை குறித்து 
சிந்திக்கவேண்டியதாகிறது..இதை பற்றி வேதத்தில் ஆராயும்போது. பின்வரும் வசனங்கள் பதில்களை தருகின்றன..

வெளி 22:5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரேஅவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

சங்கீதம் 84:11 தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்;

அதாவது, தேவனே பூமின் மீதிலும் வானத்தின் மீதிலும் பிரகாசமாய் இருந்திருக்கிறார்.. அவருடைய மஹா வல்லமையான பிரசன்னத்தில் பூமியும் வானமும் உண்டாக்கபட்டதை அறிய இயலுகிறது. எனவே சூரியன் இல்லாத பொழுது கர்த்தர் பகலை/வெளிச்சத்தை ஆண்டு இருக்கிறார் என்பது தெளிவாகிறது.. இதனால் சூரியன் உண்டாகிறதற்கு முன் நாள் என வேதத்தில் கூறப்பட்டவைகள் சாயங்காலம்,பகல் என இரு பகுதியை கொண்டிருந்தாலும் அவைகள் நிச்சயமாக 24 நான்கு மணிநேரம்  கொண்ட நாளாக இருந்திருக்க இயலாது. இந்த கால அளவு யுகமாகவும், அதிகதிகமான வருடமாகவும் கூட இருக்க இயலும்..பூமி தேவனை மூன்று கால அளவிற்கு சுற்றி வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. பிரபஞ்சத்தை பார்க்கிலும் தேவன் பெரியவராமே!!
அவரை சுற்றி வந்து இரவு,பகல் நிகழ்ந்திருக்குமானால் காலத்தை அனுமாநிப்பதிற்க்கில்லை.. 

பிசாசின் சிருஷ்டிப்பின் கால அளவினை அறிகிறதற்கு முன் சர்வ சேனை என்றால் என்ன? என்பதை அறிவதும் அவசியமே.

சர்வ சேனை 

ஆதியாகமம்(2 :1 )இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.

இந்த வசனத்தில் சர்வ சேனை என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் 'all  hosts '  என வருகிறது.. இந்த பதத்தின் பொருளை பலர் வேதத்தின் படி அறிகிறதில்லை.. இந்த சர்வ சேனை என்ற பதம் மனிதனை உள்ளடக்காதது. ஆகவே தான் பகலையும் இரவையும் ஆளும் படி ஏற்படுத்தப்பட்ட மகத்தான சுடர்கலான சூரியனையும்,சந்திரனையும்,மற்ற நட்சத்திரங்களையும் சர்வ சேனை என குறிப்பிட்டு அவைகளை சேவிக்காதபடிக்கு கட்டளையிடுகிறார்.. 

உபாகமம் 4:19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். 

திரளான இந்த 'வானத்தின் சர்வசேனை'க்கு இணையாக தம்முடையவர்களை உருவாக்க தானே அபிரகாம் நட்சத்திர எண்ணிக்கைக்கு இணையான பரிசுத்த சந்ததியை பெற ஆசிர்வதிக்கப்பட்டார்!!

பிசாசானவனின் சிருஷ்டிப்பின் கால அளவு ..

ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் எந்த தேவ தூதர்களின் உருவாக்கத்தை பற்றியும்,விழுகையை பற்றியும் நேரடியாய் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் நட்சத்திரங்களை பற்றியும் அவைகள் உருவாக்கப்பட்ட காலத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளது.. நட்சத்திரங்களும் சூரியனும்,சந்திரனும் நான்காம் நாள் என சொல்லபடுகிற கால அளவில் சிருஷ்டிக்கபட்டவைகள். இவைகளின் மகிமைகள் வெவ்வேரானவைகள் எனவும் வேதம் சாட்சி தருகிறது..

I கொரிந்தியர் 15:41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. 

வேதத்தில் அனேக வசனங்களில் நட்சத்திரங்கள் , தூதர்களுக்கு பதிலாக பயன்படுத்தபடுகின்றன..

நியாயாதிபதிகள் 5:20 வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின.

யூதா 1:13 தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

வெளி 1:20 .. அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்;.. 

தானியேல் 8:10 அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது. (பின்வரும் வசனம் இவ்வசனத்திற்கு சரியாய் பொருந்தக்கூடியது..)

வெளி12 :7 .8 .9  . வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டதுஅதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.

இவ்வசனங்களில் இருந்து தூதர்கள் தான் நட்சத்திரங்கள் என்பதையும், சர்வசேனையில் இருந்து விழுந்து போன தூதர்கள் தான் சாத்தானும் அவனது கூட்டமும். இன்றைக்கும் நவகிரக வழிபாட்டிற்கும்,அனேக மதங்களில் காணப்படும் பிறை,நட்சத்திர வழிபாடுகளும் நட்சத்திரங்கள் தூதர்கள் என்கிற அடிப்படையில் இருந்து உண்டானவைகள் என்பதை மறுக்கவோ,மறைக்கவோ இயலாது..

இப்படியான புரிதல் இயேசுவின் காலத்தில் உண்டாயிருந்ததர்க்கு ஆதாரம் வேதத்தில் உண்டு..
ஆகவே தான் தேவ தூதர்களை போன்ற தேவ மகிமை பொருந்தி வாழ்ந்த தேவ மனிதர்களான பவுல்,பர்னப என்பவர்களை கிரகங்களுக்கு  ஒப்பிடுகிறார்கள்.

அப்போஸ்தலர் 14:12 பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.

மேற்கூறியவைகளில் இருந்து நட்சத்திரங்கள்,சந்திரன்,மற்ற கிரகங்கள்,நட்சத்திரங்கள் அனைத்தும் வானத்தின் சர்வ சேனை எனவும்,இவைகள் வேதத்தில் தேவ தூதர்கள் எனவும் அறிய முடியும்..

இயேசுவின் வழிகாட்டும் நட்சத்திரம்..

மத்தேயு 2:2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். 
தேவ குமாரன் மனிதராய் தாழ்மையை தரித்து வந்தார். எந்தமனிதர்க்கும் தனி தனி நட்சத்திரம் கொடுக்கபடுகிறதில்லை ஆனால் தனி தூதர்கள் கொடுக்கபடுகிரார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் இயேசுவின்  இந்த வழிகாட்டும் நட்சத்திரமும் ஒரு தூதன் தான் ,அவரை பலபடுத்திய தூதர்களும் ,உயர்தேளுதலின் போது காணப்பட்ட தூதர்களும் அவருக்காக பிதாவின் சமூகத்தை தரிசிக்கிற அவருக்கான தூதர்கள் . மேலும் இந்த புரிதல் பின்வரும் வசனத்திற்கு சான்றாக இருப்பது ஆச்சர்யமளிக்கிறது..

மத்தேயு 18:10 இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

ஆகவே நான்காம் நாளில் பிசாசானவன் சிருஷ்டிக்கபட்டிருகிறபடியினால் தான்  நான்காம் நாளின் கால அளவிற்கும், ஐந்தாம் நாளின் கால அளவிற்கும் மத்தியில் மேட்டிமைனால் விழுந்து, பின் ஐந்தாம் நாள் சிருஷ்டிப்பில் மிருக வகையினை சார்ந்த வலுசர்ப்பத்தை விழ செய்து, பின் ஆறாம் நாள் கால அளவில் சிருஷ்டிக்கபட்ட  மனுகுலத்தை ஏழாம் நாளுக்கு பின் வஞ்சித்தான்.
சகோதரர்களும் தாங்கள் அறிந்த தொடர்பான காரியங்களை பதிந்தால் அநேகருக்கு பிரயோஜனமாய் இருக்கும்!!!
--------------------------------------------------------------------------------------------------------
GLORY TO GOD!!


-- Edited by JOHN12 on Tuesday 18th of September 2012 07:09:34 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோதரர் அவர்களின் மேலான விளக்கங்களுக்கு நன்றி. தங்களின் நட்சத்திரங்கள் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை. தங்கள் விளக்கப்படி நட்சத்திரங்கள் தூதர்களுக்கு இணையாக கூறப்பட்டிருப்பதை நாம் பல இடங்களில் அறியமுடிகிறது.

தங்களின் விளக்கத்தின் கடைசி பகுதியான:

JOHN12 Wrote///நான்காம் நாளில் பிசாசானவன் சிருஷ்டிக்கபட்டிருகிறபடியினால் தான் நான்காம் நாளின் கால அளவிற்கும், ஐந்தாம் நாளின் கால அளவிற்கும் மத்தியில் மேட்டிமைனால் விழுந்து, பின் ஐந்தாம் நாள் சிருஷ்டிப்பில் மிருக வகையினை சார்ந்த வலுசர்ப்பத்தை விழ செய்து, பின் ஆறாம் நாள் கால அளவில் சிருஷ்டிக்கபட்ட மனுகுலத்தை ஏழாம் நாளுக்கு பின் வஞ்சித்தான்.///          என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

தேவனின் ஏழு நாட்கள் சிருஷ்டிப்பு முடியும் முன்னர் பிசாசின் வீழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை என்பது என்னுடைய கருத்து. காரணம் கீழ்கண்ட வசனம்:

ஆதி 1:31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

தேவன் ஆறாம் நாளில் மனுஷனை படைத்தபிறகு தான் உண்டாக்கின எல்லா கிரியைகளையும் பார்க்கும்போது அது மிகவும் நன்றாயிருந்தது; என்று வசனம் சொல்வதால், அந்நேரத்தில் நல்லாயில்லாத தீமை அதில் இல்லை! சுருக்கமாக சொன்னால் அதற்க்கு முன்னர் தூதனின் வீழ்ச்சியோ அல்லது அல்லது சாத்தானின் தோற்றமோ ஆதியாகமம்  முதல்  அதிகாரத்தில் இல்லை  என்பது எனது கருத்து.



-- Edited by SUNDAR on Saturday 22nd of September 2012 03:48:57 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Bro.Sundar/// /நான்காம் நாளில் பிசாசானவன் சிருஷ்டிக்கபட்டிருகிறபடியினால் தான் நான்காம் நாளின் கால அளவிற்கும், ஐந்தாம் நாளின் கால அளவிற்கும் மத்தியில் மேட்டிமைனால் விழுந்து, பின் ஐந்தாம் நாள் சிருஷ்டிப்பில் மிருக வகையினை சார்ந்த வலுசர்ப்பத்தை விழ செய்து, பின் ஆறாம் நாள் கால அளவில் சிருஷ்டிக்கபட்ட மனுகுலத்தை ஏழாம் நாளுக்கு பின் வஞ்சித்தான்.///    என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.//

தங்களின் பார்வையின்படியான பதிலுக்கு நன்றி.. 

தாங்கள் லூசிபர் உட்பட அனைத்து தூதர்களும் நட்சத்திரங்கள் அல்லது கிரகங்கள் என வேதத்தில் மறைமுகமாய் தரபட்டுலதை அறிந்திருக்கிறபடியால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.கர்த்தரின் கிருபையுடன் தங்களின் பதிலுக்கு என்னுடைய விளக்கங்களை வேதத்தின் அடிப்படையில் தருகிறேன்.

 Bro//தேவனின் ஏழு நாட்கள் சிருஷ்டிப்பு முடியும் முன்னர் பிசாசின் வீழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை என்பது என்னுடைய கருத்து.// காரணம் கீழ்கண்ட வசனம்:ஆதி 1:31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கினn எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.தேவன் ஆறாம் நாளில் மனுஷனை படைத்தபிறகு தான் உண்டாக்கின எல்லா கிரியைகளையும் பார்க்கும்போது அது மிகவும் நன்றாயிருந்தது; என்று வசனம் சொல்வதால், அந்நேரத்தில் நல்லாயில்லாத தீமை அதில் இல்லை! //

சேனைகளின் கர்த்தர் சர்வத்தையும் உண்டாக்கினார் அல்லவா!! 

எரேமியா 10:16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்லஅவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்;சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம். 

அவர் நன்மையையும்,தீங்கையும் உண்டாக்கினவர் என்பதை பின் வரும் வசனங்களைகொண்டு அறியலாம்
பலுகிப்பெருக வேண்டிய  ஆதி ஆதாரமான அனைத்தையும்,நித்தியப்பிரமானமுடைய மற்றவைகளையும் ஆறு நாட்கள் என ப்படும் கால அளவில்சிருஸ்டிதபின் ஏழாம் நாளில் தேவன் ஓய்ந்திருந்தார் . 

ஏசாயா 45:7 ஒளியைப் படைத்துஇருளையும் உண்டாக்கினேன்சமாதானத்தைப்படைத்து
 தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானேஇவைகளையெல்லாம் செய்கிறவர். 


ஆறாம் நாளில் தேவன் கூறிய பின்வரும் வாரத்தைகளை மேற்கோள்  காட்டி தங்கள்பதிலை பகிர்ந்திருந்தீர்கள்.

ஆதி1:31.அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார்,அதுமிகவும் நன்றாயிருந்ததுசாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

தேவன் தேவன் தாம் உண்டாகின யாவையையும் நன்றாய் இருக்கின்றன என்கிறார்,நல்லது!! 

அவர் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் அல்லவாசேர்த்து மற்றவைகளோடு முளைப்பித்தார். இவைகளை மூன்றாம் நாளில் தானே இந்தவிருட்சங்கள் அனைத்தையும் படைத்திருந்தார்.  இவைகளும் தேவ திட்டத்தின் படிஉண்டாக்கபட்டவைகள்.இவைகளை பார்த்து தானே நல்லது என்றார்.  ஆதி 1:11,12. அப்பொழுது தேவன்பூமியானது புல்லையும்விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும்,பூமியின்மேல் தங்களில் தங்கள்  விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியேகொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்அது அப்படியே ஆயிற்று. பூமியானதுபுல்லையும்தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள்ஜாதியின்படியே தங்களில் தங்கள்  விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும்முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 

ஆதியாகமம் 2:9 தேவனாகிய கர்த்தர்பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமானசகலவித விருட்சங்களையும்தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும்நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். 

தேவன் தாம் உண்டாகின இந் நன்மை தீமை அறிகிற விருட்சத்தையும்நெளிவானசர்ப்ப நட்சத்திரத்தையும்  சேர்த்தான் தாம் படித்தவைகளை நல்லது எனக் கண்டார்.அவைகள் அவர் திட்டபடியே உருவாக்கப்பட்டதே  அதற்ககு காரணம். 

யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல்உண்டாகவில்லை. 
என்ற வசனத்தின் படி பார்த்தல் இந்த சர்ப்ப நட்சத்திரத்தையும் தேவன் தான் சிருச்டித்திருப்பரல்லவா!!!  
இதை பற்றி தேவனுடைய தாசன் யோபு கூறுகிறாரே!! 

யோபு 26:13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று. 
நட்சத்திரங்களை படைத்த நாளில் அல்லாமல் வேறெந்த நாளிலாவது புதுநட்சத்திரங்களை தேவன் உண்டாகினதாக  வேதத்தில் உள்ளதா இல்லை.  இந்த சர்ப்பநட்சத்திரம் அனைத்து நட்சத்திரங்களும் உண்டான நாளில் தானே  உண்டாக்கபட்டிருக்ககூடும்இந்த சர்ப்ப நட்சத்திரம் கேருபாய் இருந்த பிசாசே!! எனவே ஆதியாகமம்  முதாலாம் அதிகாரம் பிசாசின் சிருஸ்டிபையும் உள்ளடக்கியதே என்பது வெளிச்சமாகிஉள்ளது. 

bro//சுருக்கமாக சொன்னால் அதற்க்கு முன்னர் தூதனின் வீழ்ச்சியோ அல்லது அல்லது சாத்தானின் தோற்றமோ ஆதியாகமம்  முதல்  அதிகாரத்தில் இல்லை  என்பது எனது கருத்து.//

யோபு 38: 6-7  அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டதுஅதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. 
இவ்வசனத்தில் பூமியின் கோடிக்கல் வைக்கப்பட்ட காரியம் சொல்லப்பட்டுள்ளது.. அது எந்நாளில் வைக்கப்பட்டது அதை பற்றி ஆதியாகமத்தில் குறிப்பு எதுவும் இல்லை ஆனால் யோபினுடன் பேசிய கர்த்தரின் வாய் மொழிகள் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் என்பதால் அதிக கவனத்துடன் கவனிக்கபடத்தக்கவைகள்.  ஆனாலும்மேற்கூறிய வசனத்தில் இருந்து நட்சத்திரங்கள் (நான்காம் நாள்உண்டாக்கப்பட்ட நாளுக்கு  பின் தான்பூமிக்கு கோடிக்கல்  கர்த்தரால் வைக்கப்பட்டுள்ளது நிருபணமாகிறது. ஆகவே ஆதியாகமத்தில் பூமிக்கு தேவன் கொடிக்கல்லை வைக்காமல் சிருச்ட்டிப்பை முடித்தார்என நாம் கூறுவோமானால் அது தவறானதாகிவிடும். அதைப்போலவே லூசிபர் நட்சத்திரம் தான் ஆனால் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் அவனது சிருஷ்டிப்பு இல்லை என்கிற கருத்தும் அமையும்.

மேலும் ஒரு நாளில் தான் லுசிப்பர் சிருஷ்டிக்க பட்டிருக்கிறான் என்பதை வேதம் தெளிபடுத்துகிறது..

எசேக்கியேல் 28:13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்பத்மராகம்புஷ்பராகம்வைரம்படிகப்பச்சைகோமேதகம்யஸ்பிஇந்திரநீலம்மரகதம்,மாணிக்கம்  முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும்  உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன்நாகசுரங்களும் உன்னிடத்தில்  ஆயத்தப்பட்டிருந்தது.

அந்த நாள் நட்சத்திரங்களை படைத்த  நாலாம் நாள் தான். இதில் தெளிவு பெறும்போது தான் ஐந்தாம் நாளில்(கால அளவில் ) படைக்கப்பட்ட சர்ப்பத்தை பிசாசு எவ்வாறு வஞ்சித்தான்,பின் ஆறாம் நாளில் படைக்கப்பட்ட மனுசனை எவ்வாறு மோசம்போக்கினான் என்கிறதின் கால நேரங்களை அறிய முடியும். 

---------------------------------------------

 கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!!

 
-- Edited by JOHN12 on Friday 28th of September 2012 07:46:15 PM



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
RE: சிருஷ்டிப்பில் இருந்து பிசாசின் விழுகையின் காலம் வரை....
Permalink  
 


சாத்தான் விழுகையின் காலம் தேவன் படைக்க ஆரம்பித்த பிறகு அல்ல. சாத்தான் விழுகையே பூமியானது வெறுமையும், ஒழுங்கின்மையும் ஆனதற்க்கு காரணம்.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

SANDOSH wrote:

சாத்தான் விழுகையின் காலம் தேவன் படைக்க ஆரம்பித்த பிறகு அல்ல. சாத்தான் விழுகையே பூமியானது வெறுமையும், ஒழுங்கின்மையும் ஆனதற்க்கு காரணம்.


 சகோ. சந்தோஷ் சொல்வதுபோல் ஆதியாகமம் முதல் வசனத்துக்கும் இரண்டாம் வசனத்துக்கும் இடையில் சாத்தானின் வீழ்ச்சி இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன். அதற்க்கு காரணங்கள் இதோ:

1. இரண்டு வசனங்களுக்கு இடையில் "இப்படி நடந்திருக்கலாம்" என்ற அனுமானங்கள் அர்த்தமற்றது. அப்படி நாம் அனுமானிக்க ஆரம்பித்தால் எத்தனையோ கற்பனைகளை வேதத்துக்குள் புகுத்திவிட முடியும்.

 

2. வெளிச்சத்தை படைத்த தேவன் "அதை நல்லது என்று கண்டார்" என்று சொல்வதோடு பல படைப்புகளை அவர் முடிக்கும்போது "நல்லது என்று கண்டார்" என்று வேதம் சொல்கிறது. அதன் பொருள் அதற்க்கு முன்னர் அவர் அதுபோல் ஒன்றை படைத்திருக்க வாய்ப்பில்லை என்று எடுத்து கொள்ள முடியும்.      

 

3. மூன்றாவதாக முதல் அதிகாரத்தின் கடைசி வசனம் " 

ஆதி 1:31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது
இந்த வசனம் சொல்லப்படும்போது  வரை, தேவன் உண்டாக்கிய எல்லாமே நன்றாகத்தான் இருந்தது என்று  நாம் திட்டமாக சொல்ல முடியும்.    

இறுதியாக ஆதியாகமம் முதல் அதிகாரம், முதல் வசனத்துக்கும் இரண்டாம் வசனத்துக்கும் இடையில் பெரும் கால இடைவெளி இல்லை என்பதை விளக்க வேத ஆராச்சியாளர் சகோ. வசந்த குமார் எழுதிய கட்டுரையை படிக்க கீழே சொடுக்கவும்  

 சிருஷ்டிப்பு இடைவெளி 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

FROM THE "LIFE STUDY OF THE BIBLE" GENESIS BY WITNESS LEE

a. The Origin of Satan

Satan was an angel created by God before He created the earth. The book of Job (38:4-7) tells us that when God laid the
measure of the foundation of the earth, the sons of God (the angels) shouted for joy. This proves that God created the angels before He created the earth. From Ezekiel 28 we see that Satan was not only one of the angels, but the highest archangel, the head of all the angels.
---------------
the Lord Jesus called him "the ruler of this world" (John 12:31). The Apostle also calls him "the ruler of the authority of
the air" (Eph. 2:2). Luke 4:5-6 also confirms this. "And he led Him up and showed Him all the kingdoms of the inhabited earth
in a moment of time. And the Devil said to Him, To You I will give all this authority and their glory, because to me it has
been delivered, and to whomever I want I give it." Was this a lie? If it was a lie the Lord Jesus surely would have rebuked
Satan. Since the Lord did not rebuke him, it must be a fact. Satan, the Devil, told the Lord that all the kingdoms of the
world and all their glory had been delivered to him. Satan also said, "to whomever I want I give it." When did God deliver
all of this to Satan? This was definitely something pre-Adamic, before the world of Adam. By reading the full revelation of
the Bible, we can realize that God did appoint Satan the head of that universe, and that God had delivered all created things
in the heaven and on the earth into his hand. So he became "the ruler of this world." His position and rank were so high that even "Michael the archangel...did not dare to bring a reviling judgment against him" (Jude 9). Michael is one of the
archangels (Dan. 10:13). His daring not to rebuke Satan proves that Satan's rank must be even higher than his. Thus, we can infer that Satan must be the highest archangel.
-----
Beside Ezekiel 28, Isaiah 14:12 also helps us to see Satan's origin. It tells us that Satan was the "Daystar [for Lucifer
according to Hebrew], son of the morning." Just as the daystar is the leading one among the stars, so Satan must be the head of all the angels. The title "son of the morning" shows that he was there early, in the morning of the universe. Thus, Satan, from the earliest days of the universe, was the head of the angels, bright as the daystar.

Satan's origin was wonderful. He was God's anointed cherub, the one closest to God, holding the highest position in God's
creation. He had not only the kingship, but also the priesthood, the very position that we, God's redeemed people, have
forever (Rev. 5:9-10; 20:4-6). But he was deprived of his position and offices when he rebelled against God. Now God has
chosen us to be His priests and kings, to take over Satan's position and offices, to put him to shame, and to glorify God.
------------
b. The Rebellion of Satan

Ezekiel 28:15 says that Satan was perfect in his ways from the day he was created. Of course, God didn't create an evil
Satan. God created a good and perfect archangel. But at a certain time, this archangel, the anointed cherub, rebelled against God.

1) The Cause

Satan rebelled against God because of pride in his heart. Ezekiel 28:17 says that his heart was lifted up because of his
beauty, that he corrupted his wisdom by reason of his brightness. He was "full of wisdom and perfect in beauty"; he "sealed
up the sum," (Ezek. 28:12) meaning that he had the full measure of completeness and was short of nothing. But he gazed on his beauty and was proud. He looked at his brightness and became corrupted. To look at what God has made us and forget God Himself always tempts us to be proud. Pride was the cause of Satan's rebellion. So, the Apostle would never allow "a novice" to be an elder in the church, "lest being blinded with pride he fall into the judgment of the Devil" (1 Tim. 3:6). All the natural virtues and attributes, and all the spiritual gifts can be utilized by the Devil to make us proud. Even the Apostle Paul could be "exceedingly lifted up by the transcendence of the revelations" (2 Cor. 12:7). The proud Devil is still
prowling about on the earth, seeking the proud ones whom he may devour (1 Pet. 5:8). The only way to "resist" him is to
"humble" ourselves, to gird ourselves with humility because "God resists the proud, but gives grace to the humble" (1 Pet.
5:9, 5-6). The Lord Jesus is a good example in this matter. Satan exalted himself, but the Lord Jesus "humbled Himself"
(Phil. 2:8). Thus, the Lord overcame Satan, and Satan had nothing in Him (John 14:30).

2) The Purpose

The purpose of Satan's rebellion was to exalt himself to be equal with God. In Isaiah 14:13-14 we find that five times Satan
said "I will," at the time of his rebellion. "I will ascend..I will exalt my throne..I will sit also upon the mount..I will
ascend above the heights of the clouds; I will be like the most High." Satan wanted to be equal with God. That was the
purpose of his rebellion against God.

Ambition for position was the motivation of every rebellion recorded in the Bible. The rebellion at Babel (Gen. 11:4), the
rebellion of Dathan, Abiram, and the two hundred and fifty princes of the Israelites (Num. 16:1-3), and the rebellion of
Absalom (2 Sam. 15:10-12), were all because of the evil ambition for position. But the Lord Jesus "emptied Himself, taking
the form of a slave...Wherefore also God highly exalted Him and bestowed on Him the name which is above every name" (Phil. 2:7, 9).

3) The Process

Satan initiated the rebellion against God with the evil intention to overthrow God's authority (Ezek. 28:15-18; Isa.
14:13-14). Not only he rebelled, but a great part of the angels who were under his hand also rebelled. In Revelation 12:4, 9 we see that one-third of the heavenly stars, that is one-third of the angels, followed him. (In Revelation stars represent angels.) In Matthew 25:41 the Lord Jesus said, "The Devil and his angels." Ephesians 2:2 describes Satan as "the ruler of the authority of the air," and Ephesians 6:12 tells us that the principalities and powers are in the air. These principalities and powers were the angels under Satan's hand, ruling over the pre-Adamic universe. So, they are the powers of the air. When Satan rebelled against God, most of his angels followed him in his rebellion, becoming the fallen angels, the evil spirits. Today, in the universe there are two categories of angels, good angels and bad angels. The good angels stand with God; the bad ones are allied with Satan against God. The living creatures which were on the earth at that time, and later became the demons on the earth, also joined Satan in his rebellion.

If we read the four Gospels we will see that on the earth there is another kind of spirit—the demons. Who and what are
demons? Most Christians think that demons are identical with the fallen angels, but, according to Ephesians, the fallen
angels live in the air, not on the earth. The four Gospels reveal that, strictly speaking, demons never enter the air, but
either move upon the earth or else go into the water which is their lodging place. Remember the incident of the men possessed with many demons (Matt. 8:28-32). When the Lord Jesus cast out the demons, they begged Him for permission to enter into a herd of swine. After the demons entered the swine, the swine rushed into the water, where the demons like to stay.

Matthew 12:22-27 and 43-45 are quite meaningful in this regard. In this portion of the Word, we can see that Satan has his
devilish kingdom and that he is "the ruler of the demons." Verse 43 says, "When the unclean spirit [the demon] goes out from a man, it passes through waterless places, seeking rest, and does not find it." The demon that was cast out of the blind and dumb man was seeking rest which he could not find in the waterless places. This shows that the resting place, the lodging place of the demons, is in the water. Verse 44 tells us what happens if they can't find water. "Then it says, I will return into my house..." This "house" is the physical body of human beings. The lodging place of the demons is the water, and their temporary dwelling place is the human body.

Acts 23:8-9 proves that the demons are not fallen angels. In these two verses we see that angels and spirits are classified
as two different kinds of beings. Even the ancient Jewish Pharisees put demons and angels into separate categories. If we
read the four Gospels carefully, we will discover that the demons are also called evil spirits. Not only the angels are
spirits; demons also are spirits.

Who are the demons? Why do demons like to get into water or into a human body? In his famous book, Earth's Earliest Ages, G. H. Pember has made a scholarly and thorough study of this matter. Geology and archaeology have discovered that the earth is not only six thousand years old, but much older. Because of the concept that the earth is just six thousand years old according to the age of Adam, some atheists and modernistic Christians said that there was an error in Genesis 1.

Archaeologists have discovered fossil remains of bones which are thousands and thousands of years old. But Mr. Pember found the answer. Between Genesis 1:1 and 1:2 there was a period of time which he called the interval. No one can say how long this interval was. At any rate, it must have been a very long period of time. After studying this matter thoroughly, Pember inferred that at a certain time after the original creation, Satan and his angels rebelled. Moreover, Pember inferred from the biblical record that in this pre-Adamic age there existed on the earth some living beings with spirits and that these
beings also joined Satan in his rebellion against God. Thus, Satan, his fallen angels, and these living beings were all
judged by God. After they were judged by God, these beings lost their bodies and became disembodied spirits. This is the
reason that demons want to enter a physical body.

The water with which God judged them became the deep where the demons must live. Pember even proved that under this deep water there is the so-called abyss. The Greek translation of Genesis 1:2 uses the word "abyss" to translate the word "deep." The deep water is the demons' dwelling place.

One day, while Jesus was sailing across the sea, a strong wind blew and a great storm arose. The Lord Jesus didn't pray; He
commanded the wind to stop and the storm to be silent (Matt. 8:23-27). Why did the air become windy and the water stormy?

Because there were the fallen angels in the air and demons in the water. They knew that Jesus was going over to the other
shore to cast out demons (Matt. 8:28-32). Today the air is still full of fallen angels and the earth full of demons.
As the children of God, we should know something of these points concerning the universe and, especially, the earth. The bad angels followed Satan in rebellion against God. The demons, another kind of being, are disembodied spirits who live in the water and work on the earth. Satan is the prince of this world which includes the earth and the air. In Satan's kingdom there are the fallen angels in the air, the demons in the water, and the fallen human beings on the earth.



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

4) The Result

a) Satan Was Judged by God

Satan's rebellion brought in God's judgment. God cannot tolerate any rebellion among His creatures. Immediately after Satan's rebellion, God declared His judgment on him. "Iniquity was found in thee. By the multitude of thy slander [G. H. Pember says that according to the root of the Hebrew word, here 'merchandise' can be translated 'slander.']...thou hast sinned: therefore I will cast thee as profane out of the mountain of God: and I will destroy thee, O covering cherub, from the midst of the stones of fire. Thine heart was lifted up...thou hast corrupted thy wisdom...I will cast thee to the ground....Thou hast defiled thy sanctuaries by the multitude of thine iniquities..." (Ezek. 28:15-18). "Thou shalt be brought down to hell, to the sides of the pit" (Isa. 14:15).

b) The Heavens and the Earth Were Judged

The heavens and the earth surely were defiled by Satan's rebellion. God rebuked Satan, "Thou hast defiled thy sanctuaries" (Ezek. 28:18). So, the heavens and the earth were also judged by God. Job 9:5-7 says that God overturned the mountains in His anger, shook the earth out of its place, commanded the sun not to rise, and sealed the stars. When did God do this? We cannot find a record of such an event in human history. It must have happened before the Adamic world, at the time God judged the heavens and the earth due to the rebellion of Satan and his followers. Because of God's judgment, the heavens did not shine. The earth was covered by darkness. The fact that the earth, after being judged by God, was buried under the deep water proves that God must have judged the earth by flooding it with water. So, "the earth became waste and empty," buried under deep water, and covered with darkness (Gen. 1:2).

Isaiah 45:18 tells us, "God created the earth not a waste" (Heb.). Job 38:4-7 shows that God created the earth in good order. It says that when God "laid the foundations of the earth," "laid the measures thereof," and "stretched the line upon it," "the morning stars sang together, and all the sons of God [the angels] shouted for joy." When God laid the foundations of the earth, He laid the measure upon it and stretched the line upon it. This means that He created it in good order. So, when the morning stars saw it, they were excited and sang, and when all the angels saw it, they shouted for joy. When did this happen? It must have happened in Genesis 1:1, not in Genesis 1:2. How could the morning stars sing and the angels shout for joy when the earth became waste and empty?

Whenever these two words "waste" and "empty" are used together in the Old Testament, they always denote a result of judgment. We see this in Jeremiah 4:23 ("without form, and void" should be "waste and empty," Heb.), in Isaiah 24:1, and in Isaiah 34:11 ("confusion" should be "a waste," Heb.). Whatever has been judged by God becomes waste and empty. The earth became waste and empty because it was judged by God.

The darkness which was upon the surface of the deep was also a sign declaring that the universe of that age was judged, because darkness comes from God's judgment (cf. Exo. 10:21-22; Rev. 16:10).

Thus, the earth mentioned in Genesis 1:2 was not in the same condition as when created by God originally. It was created by God in a good order, but it "became" waste and empty. The word "became" is the same word as used in Genesis 19:26 which says that Lot's wife "became a pillar of salt." She was not a pillar of salt, but she became one. In the same principle, the earth originally was not waste and empty, but it became so.



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

Have you ever noticed in Genesis 1 that on every day, except the second, after God had accomplished something He looked at it and it was good. But on the second day there is no such record. Genesis doesn't say that God saw the waters and the air and said that they were good. Why? Because the air is full of fallen angels and the waters full of demons. Remember that the demons have their dwelling place in the waters. On the second day, there was something which really was not good: in the air were the fallen angels and in the waters were the demons.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சிருஷ்டிப்பில் இருந்து பிசாசின் விழுகையின் காலம் வரை....
Permalink  
 


சகோதரர் அவர்களே, தாங்கள் பதிவிட்டுள்ள கட்டுரை ஆசிரியரின் அனேக கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன் ஆகினும் சாத்தானின் வீழ்ச்சி  எப்பொழுது நடந்தது என்பது குறித்த கருத்தில் சற்று மாறுபடுகிறேன். 
.
தாவது கட்டுரை ஆசிரியரின் கருத்துப்படி ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரத்திலேயே "காற்றும் நீரும் அசுத்த ஆவியால் மாசு பட்டு இருந்தது" என்று சொல்கிறீர்கள் நல்லது! ஆகினும் அந்த காற்றை உண்டாக்கியவர் யார்?  
.
ஆமோஸ் 4:13 அவர் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும்,.........  பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
.
அதாவது காற்றையும் உண்டாக்கியவரும் கர்த்தராக இருக்கிறார். இந்நிலையில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் காற்றும் நீரும் மாசுபட்டு போயிருந்தால் "31. தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது;" என்ற  வார்த்தைகள்  முதல் அதிகாரத்தின் முடிவில் வர வாய்ப்பே இல்லை. அதாவது இந்த ஆதியாகமம் முதல் அதிகாரம் 31ம்  வசனம் வரை "எல்லாமே நன்றாயிருந்தது என்பது வசனம் சொல்லும் கருத்து.    
.
அடுத்து தேவ புத்திரர்கள்  என்னும்  SON OF GOD ஐ "தேவர்கள் / தேவ குமாரர்கள் / தேவ புத்திரர்கள்"  என்று தனிப்பட்டமுறையில் வேதம் 
குறிப்பிடுகிறது இவர்களையும்  "தேவ தூதர்கள்  என்னும் ANGELS"களையும் ஒன்றாக கருதுவது ஏற்புடையது அல்ல! 
யோபு வசனப்படி பூமிக்கான அஸ்திபாரம் போடப்படும்போது  
.
யோபு 38:7 விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
என்று வசனம் சொல்வது தேவ புத்திரர்களேயன்றி  (SON OF GOD) தேவ தூதர்களைபற்றி சொல்லவில்லை!
.
இந்த தேவ புத்திரர்கள் யார்? என்பதை நாம் அறிதல் அவசியம். இவ்வாறு நாம் அறியவேண்டும் என்றால் ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரத்தில் தேவன் படைத்த மனுஷர்களுக்கும், ஆதியாகம் இரண்டாம் அதிகாரத்தில் தேவனாகிய கர்த்தர் மண்ணினால் படைத்த மனுஷர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிய வேண்டும் 
.
புதிய ஏற்ப்பாட்டில் இந்த "தேவ புத்திரர்களை" நம் போன்ற  மனுஷர்களாகவே வசனம் சுட்டிக்காட்டுகிறது.
ரோமர் 8:14  எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
கலாத்தியர் 3:26 நீங்களெல்லாரும் கிறிஸ்துஇயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.    
(இந்த வசனத்தின்படி நாம் கிறிஸ்த்துவை பின்பற்றுவதால் தேவ தூதர்களாவதில்லை (ANGELS) மாறாக SON OF  GOD ஆகிறோம்.
 
எனவே "தேவ தூதர்கள்"  என்பவர்கள் வேறு "தேவ புத்திரர்கள்" வேறு !
ஆசிரியர் குறிப்பிடும் "லூசிபரின் வீழ்ச்சி" என்பது எப்பொழுது நடந்தது என்பதை  தீர்மானிக்கும் விஷயத்தில்  இந்த வீழ்ச்சியின் கால கட்டங்களை நாம் அறியவேண்டும் என்றால் ஆதியாகமத்தில் சிருஷ்டி நாயகரை "தேவன்" என்று குறிப்பிடும் வேதம், ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் மனுஷனை மண்ணினால் உருவாகும் போது "தேவனாகிய கர்த்தர்" என்ற பதத்தில் வேதம் குறிப்பிட காரணம் என்னவென்பதை அறிய வேண்டும்.
    
ஆதி 1:27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதி 2:7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
.
வேதத்தில் ஒரு சிறு எழுத்து அல்லது எழுத்தின் உறுப்பு மாற்றத்துக்கும் காரணம் உண்டு! எதையும் சுலபமாக எடுத்துகொள்ள கூடாது.   
ஆதியாகம் முதல் அதிகாரத்தில் எல்லாவற்றையும் சிருஷ்டித்துவிட்டு அதை "நல்லது" என்று தேவன் கண்டார் என்று வேதம் சொல்கிறது ஆனால் இரண்டாம் அதிகாரத்தில் ஆதாமை தேவன் படைத்தபோது முதல் முதலில் "நல்லதல்ல" என்ற வார்த்தை உபயோகிக்கபடுகிறது.
.
18. பின்பு தேவனாகிய கர்த்தர்மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.   
.
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் எல்லாமே நல்லதாகவே இருந்தது ஆனால் இரண்டாம் அதிகாரத்திலோ படைத்தல் முடியும் முன்னரே 
"நல்லதல்ல" என்ற ஒரு நிலை வருகிறது.
.
எனவே எனது கணிப்புப்படி ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் உள்ள  சிருஷ்டிப்பும் ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் உள்ள சிருஷ்டிப்பும் வேறுபாடு உண்டு என்றும்  "நல்லது" என்று தேவன் சொல்வதற்கும் "நல்லதல்ல" என்று தேவனாகிய கர்த்தர்  சொல்லும் இந்த இரண்டு படைப்புக்கும் இடையிலேயே சாத்தானின் வீழ்ச்சி இருக்கிறது என்பது எனது கருத்து!  


-- Edited by SUNDAR on Friday 5th of October 2012 02:57:15 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.சந்தோஷ் அவர்களின் கட்டுரையைப் படித்தேன் அதில் பிசாசானவன் 'ஒரு நாளில்' தான் படைக்கப்பட்டிருக்கிறான் என்கிற வசனத்தை தவிர மற்ற அனேக வர்த்தமானங்கள் உள்ளன.


bro .sandosh//சாத்தான் விழுகையின் காலம் தேவன் படைக்க ஆரம்பித்த பிறகு அல்ல. சாத்தான் விழுகையே பூமியானது வெறுமையும், ஒழுங்கின்மையும் ஆனதற்க்கு காரணம்.///

பூமியைப் பற்றிப் பேசும் போது பொதுவாக தற்கால 'globe 'போன்றதொன்றையே சகோதரர் கருத்தில் நிறுத்தி பேசுவதாக தோன்றுகிறது.  ஆதியாகமம் பரலோகம் அல்லது வானம் எவ்வாறு படிப்படியாக முழுவுரு பெறுகிறது என்பதைப் பற்றி தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பூமி எவ்வாறு படிப்படியாக முழுஉரு பெறுகிறது  என்பதைப்பற்றி ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் செவ்வையாய் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். இந்த இடத்திலே பூமி மற்றும் வானம் எனப்படுவது ஒரு 'குயக்கலமே'ஆகும். அது முழுமையான தோற்றத்தை உடனடியாக பெறாமல், படிப்படியாக தேவ திட்டத்தின்படி முழு உரு பெறுகிறது.முழுமை பெறுவதற்கு முன்பு எந்தொரு படைப்பும் வெறுமையும்,ஒழுங்கின்மையுமாய் இருப்பதில் குழப்பம் தேவை இல்லை.முதலாம் அதிகாரத்தில் ஒவ்வொரு படைப்பின்  நிலையிலும் படைப்பானது பூமி,நிலம் என கூறப்படுவதால், எடுத்த எடுப்பிலேயே தேவன் பூமியை முழுமைபெற்ற படைப்பாக தான் படைத்தார் என கூறுவது  ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தின் சாரமற்ற கருத்து.
எசேக்கியேல் 28:13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம்புஷ்பராகம், வைரம்,  படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி,
இந்திரநீலம், மரகதம்,மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும்  உன்னை
மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன்நாகசுரங்களும்
உன்னிடத்தில்  ஆயத்தப்பட்டிருந்தது.
வசனம் தெளிவாக 'சிருஷ்டிக்கப்பட்ட நாளை' கூறும்போது, தாங்கள் எவ்வாறு பின்வருமாறு உள்ள ஒரு கட்டுரையின் கருத்தை முன்வைக்க இயலும். 

//Satan was an angel created by God before He created the earth. The book of Job (38:4-7) tells us that when God laid the 
measure of the foundation of the earth, the sons of God (the angels) shouted for joy. This proves that God created the angels before He created the earth. From Ezekiel 28 we see that Satan was not only one of the angels, but the highest archangel, the head of all the angels.//

இவ்வாறு தாங்கள் கூறுவதன் மூலம் ஆதிக்கு முன்பாகவே பிசாசானவன் உருவாக்கபட்டுள்ளான் எனக்காட்டி, காலத்திற்கு அப்பாற்பட்டவனாக காட்டுகிறீர்கள்..இது மிக தவறு. அவன் சிருஷ்டிக்கபட்ட   நாள் என்பது ஆதிக்கு (orgin) பின்னாளில் தான் நிகழ்கிறது என்பதை கட்டுரை ஆசிரியர் முன்வைக்காத காரியம் சரியற்றது.. 
அப்படியே ஆதிக்கு முன்னாளில் அவன் சிருஷ்டிக்க பட்டிருந்தால், காலத்திற்கு அப்பாற்பட்டவனை குறித்து எவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்க முடியும்..சிந்தியுங்கள்!!

Job (38:4-7) வசனத்தை முன் வைத்திருகேறீர்கள்.. இதில் 'நட்சத்திரங்கள் ஏகமாய் பாடி' என வருவதை கவனித்தீர்களா?  நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்ட நாள் நான்காம் நாள். ஆகவே பூமிக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள் நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்ட நாளுக்கு பின்னான நாள். ஆகவே தேவபுத்திரர்,நட்சதிரங்களாகிய தூதர்கள் சிருஷ்டிக்கப்பட்ட பின் தான் அஸ்திபாரம் போடப்பட்டுள்ளது என்பது தெளிவு..

சங்கீதம் 18:15 அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
இந்த அஸ்திபாரங்கள் கடலுக்கு அடியில் ஒருவரும் கண்டிராத மஹா ஆழத்தில் உள்ளவைகள் என தாவீதும் கூறுகிறார் .

///Have you ever noticed in Genesis 1 that on every day, except the second, after God had accomplished something He looked at it and it was good. But on the second day there is no such record. Genesis doesn't say that God saw the waters and the air and said that they were good. Why? Because the air is full of fallen angels and the waters full of demons. Remember that the demons have their dwelling place in the waters. On the second day, there was something which really was not good: in the air were the fallen angels and in the waters were the demons.///

தாங்கள் கூறும் காற்றை பற்றிய கருத்து பின் வரும் வசனங்களோடு வைத்து பார்க்கையில் ஏற்புடையதே..

சங்கீதம் 104:4 தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்.
எபிரெயர் 1:7 தேவதூதரைக்குறித்தோ தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.
எபேசியர் 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
 
பிசாசானவன் வானமண்டலத்தில் இருக்கிறான் என்பது பரலோகத்தில் இருக்கிறான் என பொருள் தராது.. அவன் மூன்றாம் வானமாகிய பரலோகத்தின் வாயிலுக்கு புரம்பானவனாக இருக்கிறான். மூன்றாம் வானமண்டத்திர்க்கு கீழான வான அடுக்குகளிலும், பூமியிலும், பாதாளத்திலும் அவனாலும் அவன் தூதர்களாலும் இருக்க இயலும். 

ஆனால் தண்ணீரை எவ்வாறு பிசாசின் இடமாக எவ்வாறு கூறுகிறீர்கள்!!!!??

சங்கீதம் 77:19 உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.
என்கிற வசனத்தை கொண்டு பார்த்தால் ஜலம் அல்லது தண்ணீர் என்பது பிசாசின் இடமாக இருக்க இயலாது என அறிய இயலுகிறது..

வெளி 16:5 அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.
 
'தண்ணீர்களின் தூதன்' தேவனுக்கு கீழ்பட்டவன் என்பதையும் அறிய முடிகிறது. அல்லது தண்ணீர் என்பதை ஜனத்திரள் எனப்பின்வரும் வசனத்தை கொண்டு கருதினால்,பிசாசின் மக்களை கருத்தில் கொண்டு தண்ணீர் பிசாசின் இருப்பிடம் என கூற இயலும். 

வெளி 17:15 பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
 
மற்றபடி நாம் விவாதத்தின் படி தண்ணீரைப் பிசாசின் குடியிருப்பாகக்கருத இயலாது..
--------------------------------------------------------------------------------------
தேவனுக்கே மகிமை!!!



-- Edited by JOHN12 on Wednesday 10th of October 2012 04:49:16 PM



__________________


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
RE: சிருஷ்டிப்பில் இருந்து பிசாசின் விழுகையின் காலம் வரை....
Permalink  
 


Dear brother,

NINGAL SONNADHU POLA DEVANUDAIYA 6 DAY PADAIPPUKAL NALLATHAKAVE IRUNDHADHU SARITHAN,

ANAL PISASIN VIZHUCHCHI ANTHA 6 DAYS  NADAIPERA VILLAI, BUT 7 DAY THAN AVAN VIZHUCHCHI ADAINTHAN, EAPPADI EANRAL....

 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

எசேக்கியேல் 28-13,14

DEVAN AVANAI ADAMAI & EAVALAIYUM  காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; KAPPATRUVADHARKKAKA ஏதேனில் VAITHAR ANAL AVAN IRUTHAIYAM METTIMAI ADAINTHAN.....

 

 

  
 
-

ஏசாயா 14-13,14

INTHA VARTHAIKALAI AVAN ஏதேனில் IRUNDHU THAN, THAN MANATHI SONNAN ATHANAL THAN AVAN PATHALATHTHUKKU THALLAPATTAN........

ATHANAL PISASIN VIZHUGAI ANDAVAR OYNTHIRUNTHA 7 DAY EANPADHU EANDUTAI ARACHCHIIN ANSWER.........

Regards

jagan

9790024606



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரர்.ஜெகன் அவர்களே!!!

கர்த்தரின் பரிசுத்த நாமத்தில் வாழ்த்துக்கள். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தமிழில் பதிந்தீர்கலானால் மிக சரியாய் புரிந்துகொள்ள முடியும். google transliteration பயன்படுத்தி தாங்கள் தமிழில் பதியலாம்.

glory to god!!!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

 

அன்பான சகோதரே, no

நீங்கள் சொன்னது  போல  தேவனுடைய  6 நாள்  படைப்புகள்  நல்லதாகவே  இருந்தது  சரிதான்  சகோதரே,

 

ஆனால்  பிசாசின்  விழுச்சி  அந்தா 6 நாள்  நடைபெற வில்லை,  

ஆனால் 7 நாள் தான் பிசாசின் விழுச்சி  அடைந்தான், 

என்பது என்னுடைய பதில் ஏண் என்றால்??

 ( 7-ஆம்  நாள் தேவன் ஓய்ந்திருந்தார் )

 

no நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

 

hmmநீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

                                                                (எசேக்கியேல் 28-13,14)

 

biggrinதேவன் லுசிபரை  ஆதமையும் ஏவலையும்,  காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; காப்பற்றுவதர்க்காக  ஏதேனில் வைத்தவர்  ஆனால்  அவன்  இருதயம்  மேட்டிமை  அடைந்தான் .....

awwநான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

 disbeliefநான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே...  (ஏசாயா 14-13,14)

noஇந்த  வார்த்தைகளை  அவன்  ஏதேனில் இருந்துதான்  தன் மனதில்  சொன்னான்  அதனால்  தான்  அவன் பாதாளத்துக்கு  தள்ளப்பட்டான் .......

 

 

அதனால்  பிசாசின்  விழுகை  ஆண்டவர்  ஓய்ந்திருந்த  7 நாள்  என்பது  என்னுடைய  ஆரச்சியின்  பதில்  .........



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

jagan wrote:

 

  

அதனால்  பிசாசின்  விழுகை  ஆண்டவர்  ஓய்ந்திருந்த  7 நாள்  என்பது  என்னுடைய  ஆரச்சியின்  பதில்  .........


 

சகோதரர் கருத்தை நானும் ஏற்கிறேன்.
 
அதாவது ஆறு நாட்களில் தேவன் படைத்த எல்லாம் நல்லதாகவே காணப்பட்டது. ஏழாவது நாளில் தேவன் ஓய்ந்திருந்தார் அந்நாளில் லூசிபரின் வீழ்ச்சி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
   
ஆனால என்னுடைய கருத்துப்படி தேவன் ஓய்ந்திருந்த அந்த ஏழாம் நாளுக்கு பின்னர் சில யுகங்கள் கடந்திருக்கிறது. அந்த இடைவெளியில் லூசிபரின் வீழ்ச்சி நடைபெற்றது என்று கருதுகிறேன்  
 
மேலும்  தேவன் முதலில் ஆணும் பெண்ணுமாக படைத்த மனுஷர்களுக்கும்  அதாம் ஏவாள் படைப்புக்கும் சில வேறுபாடுகள் உண்டு என்பதும் எனது கருத்து. 
 
இந்த கருத்தின் விளக்கங்களை அறிய கீழ்கண்ட தொடுப்பை  சொடுக்கவும்.
 

ஜெபத்தோடு வாசித்து  அராய்ந்து அறியும் உண்மைகளை பதிவிடவும் 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
சிருஷ்டிப்பில் இருந்து பிசாசின் விழுகையின் காலம் வரை....
Permalink  
 


அன்பு சகோ.ஜெகன் அவர்களே,
 
நான் ஏற்கனவே பதிந்தா கருத்தை தாங்கள் படிக்கவில்லையா?? நான் எல்லாம் நாளுக்கு பின் மனிதர்கள் வஞ்சிக்கபட்டார்கள் என்றே 
பதிந்திருக்கிறேன். பாருங்கள் !!!
///ஆகவே நான்காம் நாளில் பிசாசானவன் சிருஷ்டிக்கபட்டிருகிறபடியினால் தான்  நான்காம் நாளின் கால அளவிற்கும், ஐந்தாம் நாளின் கால அளவிற்கும் மத்தியில் மேட்டிமைனால் விழுந்து, பின் ஐந்தாம் நாள் சிருஷ்டிப்பில் மிருக வகையினை சார்ந்த வலுசர்ப்பத்தை விழ செய்து, பின் ஆறாம் நாள் கால அளவில் சிருஷ்டிக்கபட்ட  மனுகுலத்தை ஏழாம் நாளுக்கு பின் வஞ்சித்தான்!!!//
 
சகோ. சுந்தர்  //என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை./// //சகோதரர் கருத்தை நானும் ஏற்கிறேன்./// 
சகோ.சுந்தர் அவர்கள், உடன்பாடு இல்லை என்று தாம் கூறின  அதே கருத்திற்கு இப்போது உடன்படுகிறார்!!!
 
சரி, ஜெகன் அவர்களே..தங்களின் கருத்துகளை தெளிவாய் தந்தமைக்கு நன்றி..
 

சகோ.ஜெகன் //ஆனால்  பிசாசின்  விழுச்சி  அந்தா 6 நாள்  நடைபெற வில்லை,  என்பது என்னுடைய பதில் ஏண் என்றால்?? ( 7-ஆம்  நாள் தேவன் ஓய்ந்திருந்தார் )//

ஏழாம் நாளுக்கு பின் இடறினான் என்பது என் பதில். ஆனால் செத்தகிரியை இன்றி வேத வெளிச்சத்தில் சொல்லப்படுமானால் தங்களின் கருத்தும் உண்மையாய்  இருக்கலாம் !!!

ஏனென்றால் .,சில திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட மதத்தின் கடவுள்களுக்கு சக்தி இல்லது போய்விடுமாம். அப்போது அசுத்த சக்திகள் தலைவிரித்தாடும் போன்ற காட்சிகளை பார்த்து நகைதிருக்கிறேன்..

நாளுக்கு உட்பட்டவரா நாளை உருவாக்கினார் !! தேவன் காலத்திற்கு அப்பாற்பட்டவர் ஆனால் காலத்திற்குள்ளும் பிரவேசித்திருக்கிறார் குமாரனாய்!!!! அவர் ஓய்வு நாளுக்கும் ஆண்டவர்!! ஆகவே உறங்காத தேவன் ஏமார்ந்த வேளையில் பிசாசு மனிதர்களை கெடுத்தான் என்பது வேத விரோதமாய் இருக்கும். ஏனென்றால் இஸ்ரவேலின் பரிசுத்தர் தூங்குவது இல்லை!!! அனைத்தும் தேவனின் அநாதி தீர்மானத்தின் படியே நிகழ்ந்தன!! நாம் விவாதிப்பது கால வேளைகளை பற்றியே!!!

தங்களின் பதில் எனக்கு ஒருவிதத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது!! ஏனென்றால் இவைகள் தங்கள் ஆராய்ச்சிகளால் நேராமல் தேவனால் உணர்த்தபட்டதை போலவே நான் உணருகிறேன்!! ஆனால் அதற்க்கு தாங்கள் முன்வைத்துள்ள வேத விளக்கங்கள் சரியாய் அமையவில்லை!!!

கவனியுங்கள்..

'லூசிபர்" காப்பாற்றுவதற்காக படைக்கப்பட்ட கேருப் தான். ஆனால் யாரை,எதை காப்பாற்றுவதற்காக என்பதை வேதம் சொல்லவில்லை!!!! 

ஆனால் நீங்கல் மனிதர்களை என்று கருதுகிறீர்கள்.. வேதம் அதைப்பற்றி எதையும் கூறவில்லை!!!

///நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே...  (ஏசாயா 14-13,14)//

இந்த  வார்த்தைகளை  அவன்  ஏதேனில் இருந்துதான்  தன் மனதில்  சொன்னான்  அதனால்  தான்  அவன் பாதாளத்துக்கு  தள்ளப்பட்டான் .......//

 எப்படி எதினால் இருந்து தான் சொன்னான் என எண்ணுகிறீர்கள்!!மேகங்கள் பூமியில் மாத்திரம் இருக்கிறது என்பது தங்கள் எண்ணமாக இருப்பதை அறியமுடிகிறது.. ஏனேனன்றால் 'மேகத்திற்கு மேலாக' என்றால் பூமியில் இருந்து  மேகத்தை தாண்டி (விமானம் போவதை போல!!!) வானத்திற்கு ஏறுவது என எண்ணியே தாங்கள் கூறுகிறீர்கள்.

உண்மையாய் தங்களுக்கு கூறுகிறேன்!! பரலோகத்திலும் 'மேகம்' உண்டு!!! வசனங்களைப்  பாருங்கள்

வெளி 14:14 பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.

வெளி 14:15 அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.

வெளி 14:16 அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

சகோ.ஜெகன் //நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,//

உன்னதத்திற்கு  வடக்காக ஆராதனை கூட்டத்தின் பர்வதம்  உள்ளதாக வேதம் கூறுகிறது!!! (பரலோகத்திலும் திசைகள் உண்டு என்பதை நாம் அறிய வேண்டியது!!)

லூசிபர்  உலாவின பர்வதம் இந்த பர்வதம் தான்!!!

நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்

நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

 நட்சித்திரங்கள்,விண்கற்கள்  போன்றவற்றால் தான் பூமியில் உலோகங்கள் உண்டாயின என்றொரு அறிவியல் ரீதியான கருத்து மேல் உள்ள வசனத்தை !!ஏற்றுகொள்கிறது!

ஏனென்றால் பொன்னை மண்ணில் இருந்து பிரித்தெடுக்க , விலையுயர்ந்த கற்களை பிரித்தெடுக்க கட்டுமானங்களும்,மனிதர்களும்  இல்லாத நிலையில் லூசிபர் இவைகளை உடையவனாக ஏதேனில் உலாவி இருக்கிறான் என்பதை கற்பனை  செய்ய முடிகிறதா ?? அவன் கர்த்தருக்கு முன் இசைப்பதற்காக மேள வாத்தியங்கள்  ஆயத்தபட்டிருந்ததென்றால் ஆயத்தபடுத்தினது யார்?? தங்களுக்கு தெரியுமா?? லூசிபர் மனிதர்களுக்கு முன்பாக உண்டாக்கபட்டிருக்க அவைகளை யார் ஆயதம் ?செய்தார்? வேதத்தில் தேவன் 'ஆயத்தபடுதினேன்' என்று சொல்லாமல் 'ஆயத்தபடுத்தபட்டது' என்று கூறுகிறாரே.. இவைகளை நீங்கள் அறியும் போது உன்னதத்தையும் வலப்புற பர்வததியும் ஆராதனை கூடத்தையும்,ஆக்கிநி மயமான கற்களையும் அறியக்கூடும்!!!

 தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாகுக!!!



-- Edited by JOHN12 on Tuesday 15th of October 2013 05:23:28 PM

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard