இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் வாசம் செய்யும் இடங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தேவன் வாசம் செய்யும் இடங்கள்!
Permalink  
 


தேவன் வாசம் செய்யும் இடங்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது எனபது குறித்து இந்த திரியில் நாம் ஆராயலாம் 
 
 
நொறுங்குண்ட இதயம்!  
 
நொறுங்குண்ட இருதயமே தேவன் வாசம் செய்யும் இடங்களில் மிக முக்கியானது ஆகும்!  
 
ஏசாயா 57:15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்,நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.
 
தேவன் வாசம் செய்ய ஏற்ற இடம் நொறுங்குண்ட பணிந்த ஆவியுடைய இருதையமே! 
 
சந்தோசத்திலும் களிப்பிலும் பெருமையிலும்  திளைத்திருக்கும் எந்த ஒரு இருதயத்திலும் தேவன் வாசம் செய்ய விரும்புவது இல்லை!  
 
அதே நேரத்தில் நொறுங்குண்ட இருதயத்தை தேவன் ஒருபோதும் புரங்கநிப்பது இல்லை! 
 
சங்கீதம் 51:17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
 
தாவீது மிகப்பெரிய பாவம் செய்திருந்த போதிலும் அவன் தனது இருதயத்தை நொறுக்கி தேவ சமூகத்தில் ஊற்றியபோது தேவன் மீண்டும் அவனுள் வந்து வாசம் செய்து பெரிய காரியங்களை செய்தார்.
 
எனவே அன்பானவர்களே நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியையும் களிப்பையும் தரும் இன்பமான காரியங்களில் மனதை அலையவிடாமல் நொருக்கபட்ட இருதயத்தோடு தேவனுக்குள் மாத்திரம் மகிழ்வாய் இருக்க கடவோம்  
 
 
இன்னும் தேவன் வாசம் செய்யும் இடங்கள் குறித்து விபரம் அறிந்தவர்கள் தொடர்ந்து பதிவிடலாம்.
 


-- Edited by SUNDAR on Saturday 4th of May 2013 04:18:05 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

 II நாளாகமம் 6:18 தேவன்மெய்யாகமனுஷரோடேபூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதிவானங்களும்உம்மைக்கொள்ளாதே; நான்கட்டினஇந்தஆலயம்எம்மாத்திரம்?

தானியேல் 2:11 ராஜாகேட்கிறகாரியம்மிகவும்அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாததேவர்களேயொழியராஜசமுகத்தில்அதைஅறிவிக்கத்தக்கவர்ஒருவரும்இல்லைஎன்றார்கள்.

அப்போஸ்தலர் 17:24 உலகத்தையும்அதிலுள்ளயாவற்றையும்உண்டாக்கினதேவனானவர்வானத்திற்கும்பூமிக்கும்

ஆண்டவராயிருக்கிறபடியால்கைகளினால்கட்டப்பட்டகோவில்களில்அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

 

மேலே கூறப்பட்ட வசனங்களின் படி சாலமோன், பாபிலோன் ஞானிகள், பவுல் ஆகியோர்

தேவன் பூமியிலும் , மனுஷர்கள் மத்தியிலும், ஆலயங்களிலும் வாசம்பண்ணுகிறதில்லைஎன்றுகூறுகின்றனர்

ஆனால் தேவன் என்ன சொல்லுகிறார் என்று கீழுள்ள வசனங்களில் காண்க

 

யாத்திராகமம் 29:45 இஸ்ரவேல்புத்திரரின்நடுவேநான் வாசம்பண்ணி, அவர்களுக்குத்தேவனாயிருப்பேன்.

எண்ணாகமம் 35:34  கர்த்தராகிய நான்இஸ்ரவேல்புத்திரர்நடுவே வாசம்பண்ணுகிறேன்என்றுசொல்என்றார்.

I இராஜாக்கள் 6:13 இஸ்ரவேல்புத்திரர்நடுவிலே வாசம்பண்ணி, என்ஜனமாகியஇஸ்ரவேலைக்

கைவிடாதிருப்பேன்என்றார்.

ஏசாயா 57:15 நித்தியவாசியும்பரிசுத்தர்என்கிறநாமமுள்ளவருமாகியமகத்துவமும்உன்னதமுமானவர்சொல்லுகிறார்:  பணிந்தவர்களின்ஆவியைஉயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின்இருதயத்தைஉயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டுபணிந்தஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்

சங்கீதம் 68:18 தேவரீர்உன்னதத்திற்குஏறி, சிறைப்பட்டவர்களைச்சிறையாக்கிக்கொண்டுபோனீர்;

தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகியமனுஷர்களுக்காகவும்

வரங்களைப்பெற்றுக்கொண்டீர்.

சகரியா 2:10 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்

என்று கர்த்தர் சொல்லுகிறார்.

யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்,

நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு

ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது

 

யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால்,

அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள்

அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

 

சாலமோன், பாபிலோன் ஞானிகள், பவுல் ஆகியோர் தேவன் பூமியிலும் ,

மனுஷர்கள் மத்தியிலும், ஆலயங்களிலும் வாசம்பண்ணுகிறதில்லைஎன்றுகூறினாலும்  

தேவனோ மனிதரின் மத்தியில் வாழ விரும்புவதாக தெரிகின்றது. நம்மில் பரிசுத்தம்

காக்கப்பட்டால் அவரின் பிள்ளைகளான நம் மத்தியில் அவர் வாசம் பண்ணுவார்.

இதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

 

ஆனால் பிரசங்கியார்கள் சாலமேன் சொன்ன படி தேவாலயத்தில் கர்த்தர் வசிப்பதில்லை

நமது சரீரமே அவரின் ஆலயம் என்று பிரசங்கிக்கினறனர்

நமது சரீரமே அவரின் ஆலயம் என்பது சரிதான் கீழுள்ள வசனங்கள் அதை ஒத்து கொள்கின்றன .

I கொரிந்தியர் 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில்

வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

I கொரிந்தியர் 6:19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடையஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

II கொரிந்தியர் 6:16
 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?

நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடையஆலயமாயிருக்கிறீர்களே.

ஆனால் தேவாலயத்தில் கர்த்தர் வசிப்பதில்லை  என கூறுவது சரியா? சாலமோன் சொன்னதை நம்புவதா

கர்த்தர் சொன்னதை நம்புவதா?

 

 

 

 

 



-- Edited by t dinesh on Thursday 9th of May 2013 09:13:11 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

அடுத்து தேவன் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்று கீழுள்ள இந்த வசனங்கள் கூறுகின்றன.

சகரியா 8:3 நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்;

I நாளாகமம் 23:25 அவர் என்றென்றைக்கும் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்றும்,

எஸ்றா 1:3 எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.

எஸ்றா 7:15 ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின்

தேவனுக்கு மனப்பூர்வமாய்...

சங்கீதம் 46:4 ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர்

வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.

சங்கீதம் 135:21 எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.



மேலும் தேவன் கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிறவர் என கீழுள்ள வசனங்கள் கூறுகின்றன

II இராஜாக்கள் 19:15 கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின்

தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்;

நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

I நாளாகமம் 13:6 கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம்

தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை...

அதாவது இங்கு கேருபீன்கள் என்பது உடன்படிக்கை பெட்டியின் மேலுள்ள கேரூபீன்களையே குறித்து கூறப்படுகின்றது

அப்படியானால் தேவன் பெட்டிக்குள்ளே இருந்தாரா என்பது கேள்வி?






__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

இது தவிர தேவன் உன்னதங்களில் வாசம்பண்ணுகிறார் எனவும் வேதம் தெளிவாக கூறுகிறது.

சங்கீதம் 113:5 உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?

ஏசாயா 57:15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்:
உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான்,

உன்னதங்கள் என்ற இடத்தைப் பற்றி விளக்கம் தெரிந்தவர்கள் கூறுங்கள் please



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

மனிதரின் மத்தியில் வாசம் செய்யும் தேவன்...

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard