இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "தேவ கிருபை" "தேவ கட்டளை"களை வியர்த்தமாக்காது!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
"தேவ கிருபை" "தேவ கட்டளை"களை வியர்த்தமாக்காது!
Permalink  
 


தேவ கிருபையை நம்பியிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அநேகர் துணிந்து இயேசுவின்  வார்த்தைகளை மீறி நடந்து பாவம் செய்கிறார்கள்.  அப்படிபட்டவர்கள் தேவன் என்றும் எப்பொழுதும் பாவத்துடன் சமரசம் செய்பவர் அல்ல! என்பதை கண்டிப்பாக அறியவேண்டும். 
 
"கிருபை" மட்டும் போதும் என்றால் கிருபையின் நாயகனாகிய இயேசு அனேக கற்பனைகள் அறிவுரைகளை போதிக்க வேண்டிய அவசியமே இல்லை. மறித்து உயிர்த்த பின்னர்கூட ஆவியானவர் மூலம் 
 
I கொரிந்தியர் 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
I கொரிந்தியர் 6:10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
 
கலாத்தியர் 5:21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
 
எனவே கிறிஸ்த்துவுக்கு முன்பும் சரி பின்பும் சரி,
 
லூக்கா 12:47. தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
48 அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். 
 
அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் பாவம் பாவம்தான் ஆனால் தண்டனையின் அளவில் மாற்றம் உண்டு. 
 
ஆண்டவராகிய இயேசுவையும் அவர் வார்த்தைகளையும் அறிந்தும் துணிந்து பாவம் செய்பவர் அனேக அடிகள் அடிக்கபடலாம்.   எனவே வஞ்சிக்கபடாதிருங்கள்! 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: "தேவ கிருபை" "தேவ கட்டளை"களை வியர்த்தமாக்காது!
Permalink  
 


எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

ரோமர் 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.

போன்ற வசனங்கள் கிருபையின் மேன்மையை விளக்குகின்றன.  

அதாவது "பாவியான ஒரு மனுஷன் இரட்சிக்கபடுவது முற்றிலும் தேவ கிருபையே.  வேறு எந்த ஒரு கிரியையினாலும் எவரின் நன் நடத்தையாலும் இரட்சிப்பானது உண்டாகவே முடியாது" என்பதையே இங்கு பவுல் சொல்கிறார்.

இதை சொன்ன பவுலே 

கலாத்தியர் 5:21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

என்றும் சொல்கிறார் அதையும் நாம் கவனத்தில் கொல்வது அவசியம்.   

இதன் பொருள் என்ன? 

இரட்சிப்பட்ட பின்னர் மேற்கண்ட காரியங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும். இல்லையேல் தேவனின் ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என்ற பொருளையே இந்த வசனம் தருகிறது 

இதில் "கொலைகள்" என்ற வார்த்தை "கொலை செய்யாதிருப்பாயாக" என்ற பத்து கற்பனைகளில் ஒன்றுதான்.  

எனவேதான் சொல்கிறேன்  "கிருபை என்பது தேவனின் கற்பனைகளை வியர்த்தமாக்காது "

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard