இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவிக்குரிய பெருமையில் விழுந்தால் தேவனின் பார்வையில் அருவருப்பே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஆவிக்குரிய பெருமையில் விழுந்தால் தேவனின் பார்வையில் அருவருப்பே!
Permalink  
 


ஒருவர்  என்னதான் ஆவியில் நிறைந்து ஜெபித்தாலும் குதித்தாலும் உருண்டாலும்  பிறண்டாலும் அவரிடம் இருக்கும் ஒரே ஒரு சிறு தேவையற்ற அசிங்கமான காரியம் தேவன் அவரை அங்கீகரிக்க முழு தடையாக இருந்துவிட வாய்ப்புண்டு. . 
 
காரணம் அக்காரியம்  தேவனின் பார்வையில் மிகுந்த அருவருப்பாக இருப்பதுதான்.
 
அதுபோன்ற முக்கியமான ஒரு அருவருப்பான காரியம் "ஆவிக்குரிய பெருமை" என்பது.
 
யோபு 35:12 அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை
 
அனேக சீனியர்கள் தங்களிடம் வரும் ஜூனியர்களை அற்பமாக எண்ணி நடத்துவது தேவனுக்கு அருவருப்பான ஓன்று. நான் அறிந்த சீனியர் பாஸ்டர் ஒருவர் தான்  ஜீனியரை தான் முகம் பார்க்கும்போது கண்ணாடி பிடிக்க பயன்படுத்துகிறார். எத்தனை வேதனை பாருங்கள்!  
 
எரேமியா 13:9 இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்
 
என்று கர்த்தர் சொல்லியிருக்கிறாரே! 
 
இந்த புதிய விசுவாசியைவிட நான் ஆண்டவரை அறிந்து இத்தனை வருடம் ஆகிறது/ வேதத்தை இந்ததனை முறை படித்துவிட்டேன்/ நான் பண்ணாத பிரசங்கம் கிடையாது /நான் வெளிநாட்டுக்கெல்லாம் சென்று பிரசங்கித்துள்ளேன் பல ஆவிக்குரிய புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் / எனக்கு தனியாக சபை இருக்கிறது போன்ற எந்த உலக  எக்ஸ்பீரியன்ஸ்களும் தகுதிகளும்  உங்களை தேவனுக்கு முன்னாக தகுதியுள்ளவனாக நிலைநிறுத்த மாட்டாது என்பதை ஐயமற அறிந்துகொள்ளுங்கள்.  
 
ஏசாயா 10:15 கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ?
 
கர்த்தர் உன்னை பயன்படுத்துகிறார் அதில் நீ பெருமை பாராட்ட என்ன இருக்கிறது? அவர் நினைத்தால் ஒரு கழுதையை கூட பயன்படுத்த முடியுமே! 
 
அப்படிபட்ட அந்த சர்வ வல்ல  தேவனின் பார்வையில் நேற்று வந்த அந்த மிக சிறியவனான ஜூனியரைவிட மட்டுமல்ல அவர் பயன்படுத்திய கழுதையைவிடகூட நீ எந்த விதத்திலும் பெரியவன் அல்ல என்பதை மனதார அங்கீகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் தேவனால் உங்களை மனதார அங்கீகரிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
 
ஆவிக்குரிய மேன்டிமையாகி தேவனுக்கு அருவருப்பாக ஆகி போகாதீர்கள்!
 
I பேதுரு 5:5  பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.  

 



-- Edited by SUNDAR on Thursday 12th of February 2015 08:40:34 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
RE: ஆவிக்குரிய பெருமையில் விழுந்தால் தேவனின் பார்வையில் அருவருப்பே!
Permalink  
 


sundar wrote...\\
I பேதுரு 5:5 பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
...//

மேலே தலைப்பில் சொல்லப்பட்ட காரியத்தை நன் ஏற்றுகொள்கிறேன்.

மனுஷனுடைய எல்லா பெருமையும் இந்த உலகத்துக்கும் சகமனுசனுக்கும் முன்பாக ஒருவேளை பயன்படலாம் ஆனால் கர்த்தருக்கு முன்பாக அவைகள் ஒரு நாளும் ப்ரோயோஜனபடது மாறாக தேவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

பிரதான தூதன் தள்ளபாட்டதை நினைத்து கொள்வது அவசியமாகிறது. தேவனோடு இருந்தவனுக்கு அந்த நிலைமை என்றல் சாதாரண நம்மை போன்ற மனிதர்களின் நிலைமையை யோசிக்கவேண்டியது அவசியமாகிறது.

இயேசு கிறிஸ்துவை நினைத்துகொள்ளுங்கள்
1. தேவனுடைய ரூபமாய் இருந்தும்.!
2. தேவனுக்கு சமமாய் இருந்தும்.!
3. மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தம் தன்னை தாழ்த்தினார் என்று வேதம் சொல்கிறது. அப்படி இருக்க நாமெல்லாம் எம்மாத்திரம்..!

கர்த்தர் நம்மை நினைபதற்கும் நம்மை விசரிபதற்கும் நாம் ஒரு பொருடெல்லவென்று நான் நினைக்கிறன்.


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard