இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏன் சாபமாக எண்ணப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
ஏன் சாபமாக எண்ணப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது?
Permalink  
 


இவ் வார்த்தையில் இப்படி சொல்லப்பட காரணம் என்ன?

 

நீதி 27 : 14 

ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.

 

ஏன் சாபமாக எண்ணப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது? 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

பிரசங்கி 3:1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

காலம் மாறி சில காரியங்களை செய்யும்போது அது நேர் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிய முடிகிறது.

ஆனால் எதனால் அப்படி எண்ணப்படுகிறது என்பதை அறிய முடியவில்லை அது தேவனுக்கே வெளிச்சம்.

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கடடளைகளை ஏன் என்று ஆராயாமல் அது தேவனின் கடடளை அதை கைக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எடுத்து கொள்பவன் நான்.

அதாவது வேதத்தில் ஒரு வசனம் உண்டு

யோபு 12:12. முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.

13. அவரிடத்தில்(தேவனிடத்தில்) ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
அதாவது தேவனுக்கு தெரிந்த அநேக காரியங்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை நம் அறிவுக்கு எட்டுவது இல்லை.

எனவே அவர் சொல்லியிருக்கும் ஒரு காரித்தை ஏன் அப்படி செய்ய வேண்டும்? என்று கேள்விகேட்டுக்கொண்டு இருப்பதைவிட அவரிடத்தில் வல்லமையும் ஞானமும் அதிகம் உண்டு எனவே அவர் எது சொன்னாலும் நம் நன்மைக்குத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

சரி அண்ணா

ஆனால் நம் தேவன் எம்மை சபிக்கிறவர்களையே ஆசீர்வதிக்க சொல்லி இருக்கிறார் .. இந்த வசனம் எனக்கு புதிதாக இருந்தது அதான் கேட்டேன்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard