இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முழுமையான விடுதலைக்கு ஏன் தாமதம்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
முழுமையான விடுதலைக்கு ஏன் தாமதம்?
Permalink  
 


தேவன் எம்மை முழுமையாக விடுவிக்க முடிந்தும் இன்னும் ஏன் உலகில் பாவம் பெருகுகிறது? 

 

மனுஷனை பாவத்திலிருந்தும் நோய்களில் இருந்தும் போராட்டங்களில் இருந்தும் முழுமையாக விடுவித்து விடலாமே? 

 

முழுமையான விடுதலைக்கு ஏன் தாமதம்?

 

விளக்கவும் 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

தேவன் எம்மை முழுமையாக விடுவிக்க முடிந்தும் இன்னும் ஏன் உலகில் பாவம் பெருகுகிறது? 

 

மனுஷனை பாவத்திலிருந்தும் நோய்களில் இருந்தும் போராட்டங்களில் இருந்தும் முழுமையாக விடுவித்து விடலாமே? 

 

முழுமையான விடுதலைக்கு ஏன் தாமதம்?

 

விளக்கவும் 


 

இந்த கேள்வுக்கு பதில் வேண்டும் என்றால் இன்னொரு கேள்விக்கு நீங்கள் உங்களுக்கு தெரிந்த பதிலை தரவும்:

 
எவனோ ஒரு ஆதாம் பாவம் செய்தான்!  அந்த பாவமானது இந்த உலகத்தில் பிறந்தவர் எல்லோரையும் ஆடடமேட்டிக் ஆக பாவியாக்கிவிடுகிறது.
 
ஒருவன் ஆதாம் பாவம் செய்தான் என்று விசுவாசித்தலும் சரி விசுவாசிக்கவிடடாலும் சரி அவன் ஆதாமின் பாவம் மூலம் பாவியாகிவிடுகிறான் அல்லவா?
 
ஆனால் ஆண்டவராகிய இயேசு எல்லோருடைய பாவத்துக்காகவும் மரித்து இருந்தும்  அவரை விசுவாசத்தால் மட்டுமே பாவத்தில் இருந்து விடுதலை அடைய முடிகிறது அது ஏன்?
 
எப்படி ஆதமின் பாவம் எல்லோர் மேலும் தானாக அப்ளை ஆகிறதோ துபோல்  இயேசு தரும் இரட்சிப்பும் எல்லோர் மேலும் தானாக அப்ளை ஆவதில்லையே ஏன்?
 
இதற்க்கான பதிலை தங்களால் நிதானிக்க முடியுமா?


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

No anna.. please answer

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

தேவன் தாமே முழுமையாக பூமிக்கு வந்து பலியாகாமல் தன வார்த்தையை மாத்திரமே மாம்சமாக்கி பூமிக்கு பலியாக அனுப்பினார். 
 
யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.  14. அந்த வார்த்தை மாம்சமாகி .....நமக்குள்ளே வாசம்பண்ணினார்;
 
அதனால்தான் ஒருபங்கு தேவனின் செயல்பாடு மறுபங்கு மனுஷனின் விசுவாசம் மற்றும் அறிக்கையிடுதல் தேவைப்படுகிறது. 
 
ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 
 
இங்கு இயேசுவை அறிக்கையிட வேண்டும் அவரை எழுப்பிய தேவனை விசுவாசிக்க வேண்டும்  
 

தேவன் தன பங்குக்கு செய்யவேண்டியதை முழுமையாக செய்து முடித்துவிடடார்.  ஆனால் மனுஷர்களில் முழுமையான விடுதலைக்கு மனுஷன் செய்யவேண்டிய பங்கு இன்னும் பாக்கியிருப்பதால் முழுமையான விடுதலையை எடட முடியாமல் இருக்கிறது.

 
அதற்க்கு தேவ புத்திரர் வெளிப்பட வேண்டும்.
ரோமர் 8:
  1. 19.
  1. மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது
  1. .
 
22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
 
அவர் வெளிப்படும்போதுதான்  சர்வ சிருஷ்டிக்கும் முழுமையான விடைத்தலை கிடைக்கும்.   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அப்படியாயின் தேவன் எப்பொழுது வெளிப்படுவார்?

நியாயத்தீர்ப்பின் பின்னரே முழுமையான விடுதலை கிடைக்கும்?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

பவுல் தன்னுடைய காலத்திலேயே கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகை அமையும் என்று விசுவாசித்த்து இவ்வாறு எழுதினர் 

 
I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.  
 
இவ்வார்த்தையில் பவுல் தன்னையும் சேர்த்து "நாமெல்லாம் நித்தரை (சரீர மரணம்) அடைவதில்லை" என்று எழுதியிருக்கிறார்.
 
ஆனால் அப்படி நடக்கவில்லை அதுபோல் அநேகர் ஆண்டவர் வரும் நாளை முன்குறித்து ஏமாந்து போயிருக்கிறார்கள்.
 
எனவே ஆண்டவரின் வருகை மற்றும் முழுமையான விடுதலை குறித்து யாரும் சரியாக எழுதிவிட முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது.
 
எனக்கு தெரிவிக்கப்படடபடி ஆண்டவரின் வருகை நிகழ ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்பது மாத்திரம் என்னால் அறிய முடிகிறது.
 
அது என்னவென்றால் "சத்துருவானவன் ஒரு மனுஷனால் ஜெயிக்கப்பட வேண்டும்" 
 
எனவே எவ்வளவு தேவ வார்த்தைக்கு பயந்து கீழ்ப்படிந்து நடக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் முடிவு என்பது வர வாய்ப்புண்டு. 
 
எப்படி ஆண்டவராகிய இயேசு தேவனுக்கு கீழ்ப்படிந்து  சாத்தானை  ஜெயித்தாரோ அதுபோல், ஒரு மனுஷன் அவர் கொடுத்துள்ள ஆவியானவரின் பெலத்தால் சந்துருவை முழுமையாக ஜெயிக்க வேண்டும்.  அங்கு மரணம் ஜெயிக்கப்படும்!  அப்பொழுது சத்துருவுக்கு மனுஷர்கள் மேலுள்ள அதிகாரம் பிடுங்கப்பட்டு அவன் பாதாளத்தில் அடைக்கப்படுவான்.
 
வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்  
 
அதன் பின்னரே முழுமையான முடிவு வரும்.
 
அதற்குரிய காரியங்கள் 99% நடந்து முடிந்து விட்டது என்பதை அறிய முடிகிறது.
 
விரைவில் முழுமையான விடுதலையை எதிர்பார்க்கலாம் ஆனால் சரியான நேரம் காலம் தேவன் ஒருவருக்கு மட்டுமே தெரியும்! 
    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Thanks anna

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard