இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீங்கை உண்டாக்கியதாக சொல்வதன் அர்த்தம் என்ன?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தீங்கை உண்டாக்கியதாக சொல்வதன் அர்த்தம் என்ன?
Permalink  
 


ஏசாயா 45 : 7 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.


தீங்கை உண்டாக்கியதாக சொல்வதன் அர்த்தம் என்ன?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தீங்கை உண்டாக்கியதாக சொல்வதன் அர்த்தம் என்ன?
Permalink  
 


இதற்கான பதில் எனக்கு கூட நீண்ட நாடகளாக தெரியாமல் இருந்தது. தேவன் வேண்டுமென்றே தீங்கை உண்டாக்கினாரா? வேண்டுமென்றே இருளை உண்டாக்கினாரா?
 
பிறகு ஏன் வசனம் இப்படியும் சொல்லவேண்டும்?
 
II கொரிந்தியர் 6:14  நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?  
 
ஆபகூக் 1:13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே;  
 
சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த கேள்விக்கான பதிலை தேவன் விளங்க பண்ணினார். 
 
அநேகர் சொல்வதுபோல் வேண்டுமென்றே தேவன் இருளை படைக்கவும் இல்லை தீமையையோ சாத்தனையோ அவர் வேண்டுமென்று உண்டாக்கவும் இல்லை 
 
நீங்கள் குறிப்பிட்டுள்ள  வசனத்தை சற்று கூர்ந்து நோக்கினால் அதன் உண்மை நமக்கு புரியவரும்.
 
ஏசாயா 45 : 7 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.  
 
 
ஒளியை படைத்து   -  இருளை உண்டாக்கினேன் 
 
சமாதானத்தை படைத்து -  தீங்கை உண்டாக்கினேன்.
 
அதாவது ஒளியை படைத்தபோது இருள் என்ற ஓன்று உண்டானது அதற்க்கு காரணரும் தேவனே 
 
சமாதானத்தை படைத்தபோது - தீங்கு என்று ஓன்று உண்டானது அதற்க்கு காரணரும் தேவனே 
 
புரியவில்லை என்றால் ஒரு உதாரணத்தின் மூலம் புரிய வைக்கிறேன்.
 
முன்பெல்லாம் அடுப்பு எரிக்க விறகை பயன்படுத்துவார்கள் எனபது எல்லோருக்கும் தெரியும்.
 
நம் பசியை போக்க நாம் உணவு தயாரிக்க வேண்டும் என்றால் அநேக விறகுகளை எரிக்க வேண்டும். விறகை எரித்து சாப்பாடு சமைத்த பிறகு இறுதியில் அந்த இடத்தில் கரி சாம்பல் போன்றவை மீதமாக கிடைக்கும். அந்த சாம்பல் / கரி போன்றவை துணி/ முகத்தில் படடால் முகமெல்லாம் கரியாகிவிடும். அது ஒரு கழிவு என்று எடுத்து கொள்வோம்.
 
இப்போது என்னுடைய நோக்கம் என்ன?
 
சமையல் செய்து பசி ஆறுவது.
 
இப்படி என்னுடைய நோக்கத்தை நான் நிறைவேற்றும்போது  கரி என்ற கழிவு அங்கு உண்டாகிவிட்ட்து.
 
இப்போது அந்த கரி என்ற கழிவை உண்டாக்கியது யார்?
 
நானே தான்.
 
ஆனால் என் நோக்கம் கரியை உருவாக்குவதா?  கிடையாது 
 
நான் பசியாற ஒரு நல்லதை செய்தேன்  ஆனால் இன்னொரு கழிவு அங்கே உண்டாகிவிட்ட்து.
 
இதே நிலைதான் தேவனுக்கும் உண்டானது.
 
அவர் நல்லவைகளை தன்  நோக்கமாக கொண்டு அதை ஒன்றாக இணைத்து எல்லாம் நல்லது என்றே கண்டார் அப்போது தீயவைகளை தனியே பிரிக்கப்படடன.
 
நல்லதை தேவன் படைத்தார்!
 
அதன் கழிவாக சில தீயவைகளை உண்டாகின!
 
அது உண்டாக காரணம் தேவனே!
 
இதையே வசனம் இவ்வாறு சொல்கிறேது! 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தீங்கை உண்டாக்கியதாக சொல்வதன் அர்த்தம் என்ன?
Permalink  
 


Understood anna.. Thanks

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard