இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் கிரியைக்கு தக்க பலனளிக்கிறாரா? அவருடைய கிருபையினால் பலனடைகிறோமா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் கிரியைக்கு தக்க பலனளிக்கிறாரா? அவருடைய கிருபையினால் பலனடைகிறோமா?
Permalink  
 


தேவன்  கிரியைக்கு தக்க பலனளிக்கிறாரா? அவருடைய கிருபையினால் பலனடைகிறோமா?

 

வேதத்தில் அநேக வசனங்கள் மூலம் தேவன்  கிரியைக்கு தக்க பலன் அளிக்கிறார் என வாசிக்க முடிகிறது. 

 

நீதிமொழிகள் 24:12 அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

 

மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

 

அதேபோல கிருபையினால் தேவன் நமக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்.. 

 

ஏசாயா 60:10 அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.

 

ரோமர் 4:16 ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.

 

II கொரிந்தியர் 1:12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.

 

கலாத்தியர் 1:15 அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,

 

இவை இரண்டையும் சற்று விரிவாக விளக்க முடியுமா? இரண்டிற்கும் உள்ள தொடர்பு மற்றும் விரிவான விளக்கத்தை தரும்படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.. 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவன் கிரியைக்கு தக்க பலனளிக்கிறாரா? அவருடைய கிருபையினால் பலனடைகிறோமா?
Permalink  
 


கிருபை என்பது  நம்மால் செய்யமுடியாத ஒரு காரியத்துக்கு தேவன் உதவி செய்வது   
 
நம்மால் செய்ய முடிந்த ஒரு  காரியத்தை தேவன் செய்ய சொல்வதும் அதை நாம் செய்வதும் கிரியை. 
 
கிருபை என்பது எந்தவித விலையும் இல்லாமல் இலவசமாக கிடைப்பது 
 
ஆனால் கிரியைக்கோ ஏற்ற பலன் நிச்சயமாக உண்டு!  
 
நல்ல கிரியைக்கு நற்பலன்களும்  தீய கிரியைக்கு தீய பலன்களும் நிச்சயம் உண்டு.
 
 
உதாரணமாக லோத்தின் சம்பவத்தை எடுத்துகொள்வோம்:
 
சோதோம் கோமரா படடணம் தீக்கிரையாக்க போவதை கர்த்தர் சொல்லி லோத்துவை ஓட சொல்கிறார் அவன் தாமதித்தபோது   
 
ஆதி 19 16. அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
 
இதுதான் தேவனின் கிருபை.  
 
 
ஆனால் 
ஆதி 19:17 அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
 
 "பின்னிட்டு பாராதே" என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை மீறி 
கிரியை செய்த லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆனாள்.  அது அவள் கிரியைக்கு கிடைத்த பலன் 
 
  
 
 ஆதியாகமம் 19:26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
 
இதற்க்கு ஒப்பீடாக 
 
பாவம் என்ற படுகுழியில் விழுந்து எழும்பி வெளியே வரவே முடியாமல் கிடந்த நம்மை ஆண்டவராகிய இயேசு தன சொந்த
இரத்தத்தை கிரையமாக செலுத்தி குழியில் இருந்து தூக்கிவிடடார்.   
 
நம்மால் சுயமாக வெளியில் வரவே முடியாது எனவே அது கிருபை 
 
வெளியே வந்த நம்மை பார்த்து ஆண்டவர் "தாழ்மையாய் இரு, உண்மையாய் இரு, இரக்கம் உள்ளவனாக இரு,  ஏமாற்றாதே 
திருடாதே,  பொய்ச்சொல்லாதே என்று சொல்கிறார்.
 
அதுவே தேவன் நம்மை செய்ய சொல்லும் கிரியைகள.  
 
அவர் சொல்ல வார்த்தைகளை நம் வாழ்வில் அப்பியாசப்படுத்தும்போது  அதற்க்கேற்ற பலன்கள் நிச்சசயம் உண்டு.
   
 
எனவே இரண்டுமே ஒரு மனுஷனுக்கு  அவசியமானது.  
 

 

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் கிரியைக்கு தக்க பலனளிக்கிறாரா? அவருடைய கிருபையினால் பலனடைகிறோமா?
Permalink  
 


Thanks anna.. Please write continuously .. Don't Stop..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

ஆவிக்குரிய வரங்கள் என்பது கிருபை மூலம் மட்டுமா கிடைக்கின்றது? அல்லது நல் கிரியை மூலமாகவும் கிடைக்கிறதா?

சற்று தெளிவாக விளக்கவும்

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

வசனத்தோடு விளக்குபடியாக பணிவுடன் கேட்குறேன் சுந்தர் அண்ணா

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard