இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்த உலகில் ஏன் இவ்வளவு துன்பம்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
இந்த உலகில் ஏன் இவ்வளவு துன்பம்?
Permalink  
 


இந்த உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? 

 

இந்த உலகில் பல மக்கள் வேதனைப்படுகிறார்கள்.. சிலருக்கு எல்லாம் இருக்கிறது (உதாரணம் :  பணம், அந்தஸ்து, புகழ், நிம்மதி, நோயில்லா வாழ்க்கை , இரட்சிப்பு ) 

 

ஆனால் இன்னும் சிலருக்கு பணமும் இல்லை நோய்களும் அதிகம் நிம்மதியும்  இல்லை அந்தஸ்தும் இல்லை.. எதுவுமே இல்லை 

 

இது ஏன் ?

 

மனதுக்குள் பல கேள்விகள் உண்டாகிறது.. எங்கள் அயலில் உள்ள ஒரு வயதான அம்மாக்கு பிள்ளைகளும் அவர்களை கவனிப்பதில்லை, இருக்க ஒரு வீடு இல்லை, பணம் இல்லை, மேலும் அவர்களுக்கு சரீரத்தில் பல நோய்கள் (கேன்சர், நீரிழிவு)

 

இப்படி ஏன் நடக்கிறது? நாமே இவைகளை பார்த்துக்கொண்டு  இருக்க முடியாத பட்சத்தில் இரக்கமுள்ள தேவன் இவைகளை எப்படி பார்க்கிறார்? 

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சிஸ்டர் தங்கள் இந்த கேள்வி என்னையும் பாதித்தால் அதற்க்கான பதிலை ஆண்டவரிடம் எதிர்பார்த்து காத்து கேட்டு அறிய வேண்டியதாயிருந்தது.
 
ஒவ்வொரு மனுஷனும் தான் விதைத்ததன் பலனையே இங்கு இருக்கிறார்கள்.  
 
அதற்க்கு இரண்டு வசனங்கள் உதாரணமாக கூறப்பட்டது 
 
கலாத்தியர் 6:7 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
 
ஏசாயா 33:1 நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.
 
அதாவது கை கால்கள் நன்றாக இருக்கும்போது அநேகர் ஆடாத அடடமெல்லாம் ஆடுகிறார்கள் இறுதியில் அவர்கள் கைகால்கள் வலுவிழந்து  அடங்கிப்போகும்போது அவர்கள் செய்ததின் பலன் திரும்பி கிடைக்கிறது.
 
நமக்கு அதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது ஆனால் பூமியில் செய்ததன பலனை பூமியிலேயே அனுபவித்து முடித்தால்தான் மரித்த பிறகு ஒரு கொடூரமான இடத்துக்கு போவதை தவிர்க்க முடியும்.
 
எனவே பிறரின் வேதனையை பார்த்து பரிதபிக்கும் நாம் நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து அவர்களின் துயரங்களை குறைக்க முயல்வோம் மற்றபடி நிர்ணயிக்கப்பட்ட்து நடந்தே தீரும்.   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அப்படியானால் நல்ல மனிதர்களுக்கும் அப்படி நடக்கிறதே அது எப்படி அண்ணா?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Answer pls



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

மாற்கு 10:18  தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.

பிரசங்கி 7:20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.

 

நீதிமொழிகள் 11:31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; 

சங்கீதம் 34:19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

 



-- Edited by SUNDAR on Thursday 17th of June 2021 11:38:31 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சிஸ்ட்டர் நான் கடந்த 28 வருடத்தில் கஷடம் மற்றும் துன்பங்களுக்கு காரணம் என்னவென்பதை  தெளிவாக அறிந்துகொண்டுள்ளேன்.
 
I யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
 
என்ற வசனம் 100% உண்மையானது.
 
இப்படி நியாயப்பிரமாணத்தின் எந்த ஒரு சிறு பகுதியை மீறினாலும் அதற்க்கு துன்பம் உண்டு.
 
நல்லவன் என்பது வேறு நியாயப்பிரமாணத்தை சரியாக கைக்கொண்டு நடப்பது என்பது வேறு.
 
தீயவன் ஒருவரான நியாயப்பிரமாணத்தை மீறினால் அதை பிசாசு பெரிதாக எடுத்துகொள்ளாது ஆனால் நல்லவன் ஒருவன் நியாயப்பிரமாணத்தை மீறும்போது அதற்க்கு அதிக தண்டனை கிடைக்கிறது.
 
மேலும் நியாயப்பிரமாணம் என்பது 10 கற்பனை மட்டுமல்ல அதனோடு கூடிய நீதி நியாயங்கள் எல்லாமே. அடக்கம். இன்னும் அநேக மைனுடான விஷயங்களும் அதனுள் உள்ளது  
 
நான் நியாயப்பிரமாணத்தை ஊக்குவிக்க இதை சொல்லவில்லை மாறாக உண்மை என்னவென்பதை  சொல்கிறேன்.
 
நியாயப்பிரமானத்தால்  மாத்திரம் ஒருவன் பரலோக தகுதியை பெறமுடியாது ஆனால் பூலோக துன்பங்களுக்கு நியாயப்பிரமாணம் மீறப்படுவதே காரணம் அன்றி வேறெதுவும் இல்லை.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Thanks Anna...



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard