இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜீவனுள்ளோருக்கு மட்டுமா தேவன்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
ஜீவனுள்ளோருக்கு மட்டுமா தேவன்?
Permalink  
 


மரித்தோருக்கு இரக்கம் செய்கிறவர் என்று வேதம் சொல்லியிருக்க இந்த வசனத்தில் இயேசு இப்படி சொல்கிறார் சற்று தெளிவாக விளக்கவும் 

  1.  தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார். மத்தேயு 22:32


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

சகோதரி மரித்தோருக்கு இரக்கம் செய்கிறவர் என்று எந்த வசனத்தை அடிப்படையாக வைத்து சொல்ல வருகிறீர்கள்? தயவாய் கூறுங்கள்



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 


ரூத் 2:20 அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்;


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இந்த கேள்விக்கான என்னுடைய புரிதலை நான் இங்கு தர வாஞ்சிக்கிறேன் சகோதரி.
 
தேவனின் பார்வையில் இந்த உலகத்தில் உள்ளவர்கள் இரண்டாக பிரிக்கப்படுகின்றனர் 
 
1. மரித்தோர்  - அதாவது இறந்து போன்றவர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் போவதுபோல தேவன் சொல்லும் இந்த  மரித்தவர்களால் தேவனுக்கு எந்த பயனும் ஒருநாளும் கிடைக்க வாய்ப்பே இல்லை  எனவே இவர்களை தேவன் மரித்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
 
மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
 
2. ஜீவனுள்ளோர் :  உயிருள்ள ஒருவனால் இன்னொருவருக்கு ஏதாவது பயன் ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா அதுபோல் இந்த ஜீவனுள்ள ஒருவனால் தேவ சித்தம் நிறைவேற ஏதாவது பயன் உண்டாக வாய்ப்பு இருக்கிறது இவர்களை தேவன் ஜீவன் உள்ளவர்கள் என்கிறார்
 
இங்கு தங்கள் கேள்வி "தேவன் மரித்தோருக்கு தேவனாய் இராமல் ஜீவனுள்ளோருக்கு தேவனாய் இருக்கிறார்" என்ற வசனம் என்ன பொருளில் இயேசு சொல்கிறார் என்பதுதான்.
 
மரித்தவர்கள் தேவனை தேவனாக ஏற்றுக்கொண்டது இல்லை எனவே அவர்களுக்கு தேவன் தேவனல்ல. மேலும் மரித்தவர்களுக்கு தேவன் தேவனாக இருந்தோ இல்லாமலோ யாருக்கும் எந்த பயன்பாடும் கிடையாது எனவே அவர்களுக்கு தேவனாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை குறிப்பிடவே இயேசு இவ்வாறு கூறுகிறார்.
 
ஆனால் மரித்தோறால் தேவனுக்கு எந்த பயன்பாடும் இல்லை என்றாலும்  தேவனின் செயல்பாடுகளில் மரித்தோருக்கு தயை செய்யும் காரியமும் அடங்கியிருக்கிறது. அதாவது மரித்தவர்களின் நலனுக்காகவும் தேவன் செயல்படுகினார் எனவேதான் நகோமி இவ்வாறு கூறுகிறார். 
 
    1. 20. அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற 
கர்த்தராலே
  1.  அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்;
 

 

அதாவது மரித்தவர்களையும் தேவன் உயிரோடு எழுப்பி அவரவர் கிரியைக்கு தக்க பலனை கொடுப்பார்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

//////////////////////////////மரித்தவர்கள் தேவனை தேவனாக ஏற்றுக்கொண்டது இல்லை எனவே அவர்களுக்கு தேவன் தேவனல்ல//////////////////////////


மரித்தவர்கள் உள்ளோரும் தேவனை ஏற்றுக்கொள்ளவில்லை என கூற முடியாதே அண்ணா,, எத்தனையோ ஆண்டவரை அறிந்தவர்கள் மரித்திருக்கிறார்களே ..

சற்று தெளிவாக விளக்கவும்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

//////////////////////////////மரித்தவர்கள் தேவனை தேவனாக ஏற்றுக்கொண்டது இல்லை எனவே அவர்களுக்கு தேவன் தேவனல்ல//////////////////////////


மரித்தவர்கள் உள்ளோரும் தேவனை ஏற்றுக்கொள்ளவில்லை என கூற முடியாதே அண்ணா,, எத்தனையோ ஆண்டவரை அறிந்தவர்கள் மரித்திருக்கிறார்களே ..

சற்று தெளிவாக விளக்கவும்


 சிஸ்ட்டர் இங்கு இயேசு சொல்லும்  "மரித்தோர்"  "ஜீவனுள்ளோர்" என்பதற்கு சரீர பிரகாரமாக  மரித்தவர்களை பற்றி வேதம் சொல்லவில்லை. 

 
அப்படி சிந்தித்தால் இயேசு சொல்வதுபோல் மரித்தவர்களை மரித்தவர்கள் எப்படி அடக்கம் பண்ண முடியுமா? 
 
மரித்தவர்களை உயிருள்ளவர்களே அடக்கம் பண்ண முடியும் 
 
இயேசு " ,மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்" என்று சொல்கிறாரே.
 
எனவே இங்கு மரித்தோர் என்பது ஆவியில் மரித்து ஆவிக்குரிய ரீதியில் தேவனுக்கு பயனற்று போனவர்கள்.
 
ஜீவனுள்ளோர் என்பது வெறும் உயிர் உள்ளவர்கள் மட்டுமல்ல உயிரோடு இருந்து தேவனுக்கு பயன்படும் நிலையில் இருப்பவர்கள்.
 
இந்த அடிப்படையில் என் பதிலை வாசித்து பாருங்கள்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Understood Anna ,,, Thanks

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard