சி.எஸ்.ஐ. சபையைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சி.எஸ்.ஐ. சபையில் அங்கம் வகிப்பவன். ஆயினும் சி.எஸ்.ஐ.-யின் பல கோட்பாடுகளோடு கருத்திசைவு இல்லாதவன்.
அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் 20 வருடங்கள் பணிபுரிந்து விருப்பஓய்வு பெற்ற நான், தற்போது பூரண சற்குணராகுங்கள் எனும் மாதப் பத்திரிகை மூலம் தேவனுக்குப் பணிசெய்துவருகிறேன்.
இத்தளத்தின் மூலமும் தேவனுக்குப் பணிசெய்ய தேவன் தந்த வாய்ப்புக்காக தேவனைத் துதிக்கிறேன். தள நிர்வாகிகளுக்கும் நன்றி கூறுகிறேன்.
தங்கள் மாத பத்திரிக்கையில் உள்ள அனேக கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தவை அக்கருத்துக்கள் தாங்கள் வேத வாக்கியங்களின்மேல் வைத்துள்ள அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது!
என்னை பொறுத்தவரை, நீங்கள் அறியவேண்டியவற்றை சரியாக அறிந்துகொண்டீர்கள் என்றே கருதுகிறேன்!
தங்களுடய பதிவுகள் கருத்துசெறிவு மிக்கதாயும், வசனத்தின்படி இருப்பதும், மிக முக்கியமாக யாரையும் புண்படுத்தாதபடி மிருதுவாக இருப்பதும் மிகவும் போற்றத்தக்கது
தொடர்ந்து நல்ல கருத்துக்களை தாருங்கள்!
ஆண்டவர் தங்களை இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிப்பாராக!
chillsam wrote:என்னைப் பத்தி எனக்குத் தெரியாது எந்தன் வாழ்வை என்னால் சொல்லமுடியாது என் பாதை தெரிந்தவர் என் வாழ்வை அறிந்தவர் என் நேசர் ஒருவரே என் இயேசு நடுவரே..!
அநாதையாய் நான் அலைந்தபோது அன்போடு அரவணைத்ததேது அவர் அன்பின் கரங்களே அவர் பாசக் கரங்களே பாதம் தொட்டு பணிவேன் இப்போது
(இது எனக்குப் பிரியமானதொரு சாட்சிப் பாடல்..!)
நண்பரே!
இதையே உங்கள் அறிமுகமாக தனி தொடுப்பில் பதிந்துவிடலாமே!
என்னை அன்புடன் வரவேற்று வாழ்த்தின சகோதரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
chillsam wrote: //"அவன் அந்த ஒளியல்ல;அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தவனாயிருந்தான்" என்ற வேத வாக்கின்படி தாங்கள் சிறப்படைய வாழ்த்துகிறேன்..!//
ஒளியாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுத்த யோவான்ஸ்நானகனின் சில வார்த்தைகள்:
மத்தேயு 3:11,12 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.
யோவான் 1:29-34 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.
இயேசுவே சர்வவல்லவராகிய பிதாவாகிய தேவன் என்று சாட்சி சொல்லாமல், அவர் தன்னிலும் வல்லவர் என சாட்சி சொன்னவர் யோவான்ஸ்நானகன்.
பிதாவாகிய தேவனுக்குச் சமமான மற்றொரு தேவன் என இயேசுவைக் குறித்து சாட்சி சொல்லாமல், அவர் தேவ ஆட்டுக்குட்டி என்றும், தேவனுடைய குமாரன் என்றும் சாட்சி சொன்னவர் யோவான்ஸ்நானகன்.
இன்றைய பாஸ்டர்களைப்போல் தான் கொடுத்துக்கொண்டிருந்த தண்ணீர் ஞானஸ்நானத்தை முக்கியப்படுத்தாமல், பரிசுத்த ஆவியாலும் அக்கினியாலும் இயேசு கொடுக்கப்போகிற ஞானஸ்நானத்தை முக்கியப்படுத்தி சாட்சி சொன்னவர் யோவான்ஸ்நானகன்.
இயேசு கிருபையும் இரக்கமும் உள்ளவர் என்பதைச் சொல்லாமல், பதராகிய துன்மார்க்கரை அவர் அக்கினியால் சுட்டெரிப்பார் எனக் கூறி சாட்சி சொன்னவர் யோவான்ஸ்நானகன்.
அப்படிப்பட்ட யோவான்ஸ்நானகனைப்போல் நானும் இயேசுவுக்கு சாட்சி சொல்லும்படி வாழ்த்தின சகோ.சில்சாமுக்கு எனது நன்றி.
இறைநேசன் எழுதியது: //தங்களுடய பதிவுகள் கருத்துசெறிவு மிக்கதாயும், வசனத்தின்படி இருப்பதும், மிக முக்கியமாக யாரையும் புண்படுத்தாதபடி மிருதுவாக இருப்பதும் மிகவும் போற்றத்தக்கது
தொடர்ந்து நல்ல கருத்துக்களை தாருங்கள்!//
என்னைக் குறித்த சகோ.இறைநேசனின் கருத்துக்களுக்கு நான் மெய்யாகவே தகுதியாகும்படியும், சகோதரரின் எதிர்பார்ப்புகளை நான் நிறைவேற்றும்படியாகவும் தேவன்தாமே எனக்கு கிருபை செய்ய ஜெபிக்கும்படி தள சகோதரர்களை வேண்டுகிறேன்.