இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என்னைப் பத்தி...(chillsam)


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
என்னைப் பத்தி...(chillsam)
Permalink  
 




-- Edited by chillsam on Tuesday 23rd of November 2010 06:32:18 AM

__________________

"Praying for your Success"


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

அன்பு சகோதரர் சில்சாமுக்கு எனது வேண்டுகோளுக்கு இணங்கி தனியாக உங்களை அறிமுகம் செய்துகொண்டதற்கு மிக்க நன்றி!  தங்களைப்பற்றிய மேற்ப்படி தகவல் எதுவும் வேண்டாம் அனைத்தும் ஆண்டவருக்கு தெரிந்தால் போதும்!
 
தங்களின் செய்திகளில் பல ஆழமான கருத்துக்கள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன் மற்றும் மற்ற மார்க்கங்களைபற்றிய  அடிப்படை  அறியும் உங்களிடம் உண்டு என்றே நான் கருதுகிறேன்.  அனால் என்னை பொறுத்தவரை உங்கள் பதிவுகளில் தேவைப்படும்  சில மாற்றங்களை சுட்டிகாட்ட விரும்புகிறேன் அதன் அறிவுரையாக எடுத்துகொள்ளாமல் எனது ஆலோசனையாக எடுதுகொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்!
 
சில கருத்துக்களை தவிர "எல்லா கருத்துக்கும் எதிர்வாதம்" என்ற கொள்கையில் நீங்கள் வாதிடுவதுபோல் எனக்கு அறியமுடிகிறது. எதிர் வாதம் செய்யவேண்டும் என்றால் எல்லா கருத்துக்களுக்கும் நிச்சயம் செய்யமுடியும் ஆனால் நாம் நமது கருத்து என்னவென்பதை சொல்வதிலேயே ஆர்வம் காட்டுவது  நல்லது என்று கருதுகிறேன்.
 
"வார்த்தைகளை சரியாக கையாள்வதில் சற்று யோசனை தேவை" என்று கருதுகிறேன். தங்களில் பல பதிவுகள் கிண்டல் நிறைந்ததாக இருக்கிறது. அப்படி பதிவது தங்களின் விசேஷ குணமாக இருக்கலாம் ஆனால் அது பிரசங்கம் செய்யும்போது பலருக்கு பயனளிக்கும் ஆனால்  நாம் இங்கு விளையாட்டாக   விவாதிக்கவில்லை. உன்னதமான தேவனைப்பற்றி விவாதிக்கிறோம் இதில் சொல்லவேண்டிய கருத்துக்களை தெளிவாக சொல்லிவிட்டால் எங்களுக்கு உங்கள் கருத்தில் உள்ள உண்மையை அறியமுடியும்.
 
புரிந்துகொண்டமைக்கு நன்றி. நிச்சயம் விவாதத்தில் பங்குகொள்ளுங்கள்!  


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

எனது வார்த்தைகள் உங்களை சங்கடப்படுத்தியிருந்தால்  மன்னிக்கவும். அப்படி எதுவும் நோக்கில் நான் எழுதவில்லை. யோபுவின் பாடுகள் பற்றிய விவாதத்தில் வெறுமனே வந்து "இதோ யோபுவின் நவீன கால சிநேகிதர்கள்" என்று மட்டும் எழுதிவிட்டு சென்றிருக்கிறீர்கள். இதை  நான் திருப்பி கேட்டால் "நீங்கள் தான் யோபுவின் அந்தகால சிநேகிதரா?" என்ற கேள்வியாகும். அது அப்படியே வளர்ந்து தேவையில்லாத விவாதமாக மாறிப்போகும் அதனால் பயன் ஏதும்  இல்லை. எனவே தேவையானதை மட்டும் விவாதிக்கலாம்  என்பதற்காகத்தான் அப்படி குறிப்பிட்டேன்.   நம்மை பற்றி ஒருவரால் ஒரு காரியம் சொல்லப்படும்போது அது உண்மையா என்பதை முதலில் ஆழமாக  ஆராய்து தவறிருந்தால்  திருத்திகோள்ளலாம் அல்லது விட்டுவிடலாம் இது ஒரு பெரிய குற்றசாட்டாக எடுத்துகொள்ள வேண்டாம்! இங்கு மட்டுமல்ல பல்வேறு தளங்களில் உங்கள் கருத்துக்களை படித்து என் மனதுக்கு எட்டியதை நான் எழுதினேன் எனது கருத்து தவறாய் இருந்தால் மன்னிக்கவும்!    
 
chillsam wrotes:
///இன்னும் உங்களது சர்ச்சைக்குரிய விவாதங்களில் நான் பங்கேற்கவில்லை; காரணம்,நான் என்னுடைய கருத்தை முழுவதும் எடுத்து வைத்த பிறகு உங்களுக்கெல்லாம் பேச ஒன்றுமிராது எனும் நம்பிக்கையே..!///


வேத கருத்துக்கள் பற்றிய விவாதத்துக்கு என்றுமே பஞ்சம் இருக்காது ஏனெனில்  வேதம் அதிசயம் நிறைந்த புத்தகம் . நாம் மனதில் வரையறுத்த கருத்து நமக்கு மிகும்  சரியாகத்தான் தோணும் ஆனால் அதை மற்றவர் முன் வைக்கும்போதும் அவர்கள் அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்பும்போதும்தான் தெரியும் அதில் உள்ள குழப்பங்கள் மற்றும் குறைகள்.   யாரும் தேவனையும் வேதத்தையும்  முழுமையாக அறியவில்லை அறியவும்  முடியாது என்றே நான் கருதுகிறேன் . யானை  பார்த்த  குருடன்போல அவரவர்  தேவனின் ஒருபுறத்தை பார்த்துவிட்டு இதுதான் தேவன் என்று தங்கள் மனதில் எண்ணிக்கொள்கிறார்கள்.
 
இவ்வளவு கஷ்டப்பட்டு விவாதிக்கிறோம்  காரணம் உண்மை என்னவென்று  அறிந்துகொள்ளலாம் என்பதற்க்காகத்தான். உண்மையை அறிந்த நீங்கள் தெரிவிக்கலாமே! 
     
 
 
 
   


-- Edited by இறைநேசன் on Tuesday 19th of January 2010 11:12:45 AM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

chillsam wrote:
////அன்புக்குரிய எனது நண்பருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்:
உங்கள் தலைப்புகள் ஆண்டவரை மகிமைப்படுத்துவதாக இருக்கட்டும்; அவரை சிறுமைப்படுத்தி- பெருமைப்படுத்த எண்ணாதிருங்கள்;////



தேவனை நான் எங்கும் விட்டுகொடுத்து பேசியது இல்லை. அவரிடம் ஒரு சிறு குறையும் கண்டுபிடக்க நாம் யார்? நம்முடைய தவறான புரிதலின் காரணமாகவோ அல்லது  நமது அற்பஅறிவுக்கு எட்டாத காரணத்தாலோ சில நேரங்களில் ஆண்டவரை குறைகூறுகிறோம் 
 
ஆகினும் நான்   ஆண்டவரை சிறுமை படுத்தும் அளவுக்கு ஏதாவது   
கருத்துக்கள்        எழுதியிருந்தால்  தயவு செய்து சுட்டி காட்டவும் திருத்திகொள்கிறேன்.

நீங்கள் சொல்வதில் காரணம் இல்லாதிருக்காது எனவே ஏதாவது ஓரிரண்டை நிச்சயம் சுட்டி
காட்டவும். 






__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard