இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள்!
Permalink  
 


நமது  ஆவிக்குரிய  வாழ்வை நன்றாக அனல்மூட்டி வந்தால் அனுதினமும் ஆண்டவரிடமிருந்து  வரும் புதிய புதிய ஆவிக்குரிய காரியங்ககளை  தியானித்து உணரமுடியும்.
 
இந்நிலையில் 1992ம வருடம் நடந்த இந்த பழைய காரியங்கள் மற்றும் நடத்துதல்கள் குறித்து திரும்பவம் எழுதுவது  அவசியமா? என்ற கேள்வி எனக்குள் எழுவதால். இந்த கட்டுரை தொடர்வதை தற்சமயம் நிறுத்தி வைக்கலாம்  என்று முடிவெடுத்துள்ளேன்.
 
கர்த்தர் எழுதும்படி  ஏவினால் திரும்ப தொடர்வேன் சகோதர/சகோதரிகள் மன்னிக்கவும்.
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

அன்பு சகோதரருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
 
"நமது ஆவிக்குரிய வாழ்வை நன்றாக அனல்மூட்டி வந்தால் அனுதினமும் ஆண்டவரிடமிருந்து வரும் புதிய புதிய ஆவிக்குரிய காரியங்ககளை தியானித்து உணரமுடியும்."
கர்த்தர் எழுதும்படி ஏவினால் திரும்ப தொடர்வேன் சகோதர/சகோதரிகள் மன்னிக்கவும் என பதிந்துள்ளீர்கள், உண்மையில் சொல்லப்போனால் என்னுடைய ஆவிக்குரிய வாழ்வை அனல் மூட்டிக் கொண்டிருக்கும் தங்களின் அனுபவங்கங்களை / நடந்த உண்மை சம்பவங்களை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாய் இருக்கிறேன். நீங்கள் பெற்றுக்கொண்ட தேவனின் வெளிப்பாடுகள் எனக்கு மட்டும் அல்ல இன்னும் அநேகருக்கு கண்டிப்பாக பிரயோஜனம் உள்ளதாகவே இருக்கும்.
 
சகோதரர் தயவு கூர்ந்து திரும்பவும் தொடர்ந்து எழுத வாஞ்சிக்கிறேன்.
 
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பிறன் மனைவியை தொட்டு இச்சையால் வீழ்ந்தேன்!
Permalink  
 


மும்பைக்கு  வந்த  நான், நல்ல நார்மல் நிலையிலேயே இருந்தேன் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.  இந்நிலையில் வீட்டின் தொந்தரவு தாங்க முடியாமல்  எங்கள்  ஊர் பக்கத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு  சம்மதித்தேன். அந்த பெண்ணின் அக்காள் மும்பையில் இருந்தார்கள் அவர்கள் மூலமாக நானே பேசி அந்த பெண்ணை திருமணம் செய்ய மனதே இல்லாமல் ஏதோ விதி வழியில் ஏற்ப்பாடு செய்து கொண்டுஇருந்தேன். இடையில் கர்த்தர் ஏதாவது அற்ப்புதம் செய்வார் என்று நம்பினேன்.  
 
நடந்து முடிந்த சம்பவங்களின் பாதிப்பு என்னில் அதிகமாக இருந்தாலும் இன்னும் மனதின் ஒருபுறத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆண்டவர் எனக்கு கட்டளை யிட்டவைகளை ஓரளவுக்கு உண்மையான மனதுடன் சரியாகவே நிறைவேற்றி யிருந்தேன். பெரிய மீறுதல்கள் எதுவும் நான் செய்திருக்கவில்லை. எனவே  மீண்டும்  ஆண்டவர் நிச்சயம் என்னுள் வருவார் என்று நம்பினேன்.  இதற்கிடையில் பைபிளை மிக அதிகமாக படித்து தியானிக்க ஆரம்பித்தேன்.
 
இந்நிலையில் ஒருநாள் என்னுடய வேலை ஸ்தலத்துக்கு  செம்பூரில் இருந்து 92 ம் எண் வண்டியில்  நான் போய்கொண்டு  இருக்கும்போது, நான் அமர்ந்திர்ந்த சீட்டுக்கு வலது புறம் உள்ள சீட்டில் (பெண்கள  பக்கம்) ஒரு அழகான பெண்  அமர்ந்திருந்தாள். அந்த பெண் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள்.  அந்த பெண்ணை கொஞ்சம் அதிகமாகவே நோக்கிய நான், "அந்த பெண் என்னுடய சீட்டுக்கு முன்னால் உள்ள சீட்டுக்கு வந்து அமர்ந்தால்  நலமாக இருக்குமே" என்று என்னுடய  மனதில்தான் நினைத்தேன். சற்று நேரத்தில் ஆச்சர்யமாக  அந்த பெண் எழுந்துவந்து, நான் நினைத்தபடியே  என்னுடைய இருக்கைக்கு முன்னால் உள்ள சீட்டில் வந்து அமர்ந்துவிட்டது.
 
(இதை எல்லாம் எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும். உள்ளதை உள்ளபடி எழுதுவதாலும், பாவத்தினால் வரும் தண்டனை  கொடியது அதை யாராலும் நிவர்த்தி செய்யமுடியாது , பாவம் செய்யும்போது  இன்பமாக இருக்கும் ஆனால் முடிவிலே அது விஷபாம்புபோல கடிக்கும் என்பதை அனைவரும் அறியவேண்டும் என்பதற்காகவும் இக்காரியங்களை இங்கு வெளிப்படையாகவே  எழுதுகிறேன்)
 
பின் சீட்டில் அமர்ந்திருந்த எனக்கு, அந்த பெண்ணின் உடையில்லாத முதுகுபுறம் என்னுடய கையின் அருகில் இருந்தது. கழுத்தில் மஞ்சள் கயிறு மற்றும் தாலி செயின் இருந்ததால், அது திருமணமான பெண் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அந்த பெண்ணின் முதுகை சற்று தொட்டுப்பார்க்கும் இச்சையான எண்ணம் மனதில் உருவானது. இன்னொரு மனதில் ஆவியானவர் "பிறர் மனைவியை தொடுபவன் ஆக்கினை தீர்ப்புக்கு தப்பான்"  என்று எச்சரித்தார். ஆனால் சாத்தானால் உருவான அந்த மாம்ச இச்சை  என்னை மேற்கொள்ளவே, தற்ச்செயலாக தொடுவதுபோல் லேசாக தொட்டு பார்த்தேன். அந்த பெண்ணிடம் எந்த ரீஆக்சனையோ எதிர்ப்பையோ காணவில்லை  (மும்பையில் சில பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்)  பின்னர் கொஞ்சம் அதிகமாகவே தொட்டு பார்த்து விட்டேன். 
 
தொடும்போது நன்றாகத்தான் இருந்தது, அடுத்து என்னுடைய ஸ்டாப் வந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே என்னுடய மனதை ஏதோ கசக்கி பிழிவதுபோல உணர்ந்தேன். "நீ  மரணத்து கேதுவான தப்பு செய்துவிட்டாய், உன் கதை முடிந்து விட்டது, நீ உனக்கு கிடைத்த அனைத்து மேன்மையையும் இழந்துவிட்டாய், உன்னால் இனி ஆண்டவர் முன்னால் நிற்கவே  முடியாது. நீ மரணத்துக்கு பாத்திரவான்" என்று திரும்ப திரும்ப என் மனதில் யாரோ  சொன்னது என்னை பயங்கர வேதனைக்கு கொண்டு சென்றது. என்னால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை.
 
அதை  மறக்க சிகரெட் வாங்கி குடிக்க ஆரம்பித்தேன் பின்னர் பான் பராக் போட ஆரம்பித்தேன். ஆனாலும் என்னால் இந்த குரலை அமுக்கவே முடியவில்லை. "நீ பாவம் செய்துவிட்டாய்" என்ற அந்த வார்த்தை என்னை கரையான் போல மனதில் இருந்து  அரித்துகொண்டே இருந்தது. அத்தோடு என்னுடய மனம் கொஞ்சம் கொஞ்சமாக கடினபட்டுக்கொண்டேபோனது! தேவனின் பிரசன்னத்தை முற்றிலும் இழந்த நிலைக்கு தள்ளப்பட்டேன்.
 
ஆண்டவர் என்னை அழைத்தபோது  எந்த கெள்வியும் கேட்காமல், எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் புறப்பட்டு,  தேவனுக்கு என்று என்னை விட்டு  கொடுத்து அவர் கட்டளையிட்ட காரியத்தை எல்லாம் கைகொண்டு, என்னெவென்று கூட கேட்காமல் அவர் காடிய திக்கெலாம் ஓடி அலைந்த நான் இந்த மாம்ச இச்சையில் ஏற்கெனவேவீழ்ந்து தேவனால் தூக்கி எடுக்கப்பட்ட நான் மீண்டும் அதே சோதனையில் வீழ்ந்துபோனேன்!     
 
 கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்......


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
மனுஷனால் மரணத்தை ஜெயிக்கமுடியும் - ஆண்டவர் வெளிப்படுத்திய உண்மை!
Permalink  
 


(மாம்ச  இட்சையில் நான் வீழ்ந்துபோனபின்னர்ஆண்டவரால்  என் மனதில் சொல்லப்பட்ட கருத்தை நான் அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.  இக்கருத்தை ஏற்க்க விருப்பமுள்ளவர்கள் ஏற்கலாம் ஏற்க்க விரும்பாதவர்கள் விட்டுவிடலாம். (அவரவர் விசுவாசத்தின்படியே  அவரவருக்கு நடக்கும்)  அந்நேரத்தில் எனக்கு வசன ஆதாரம் எதுவும் தெரியாது. ஆனால் வேதத்தை படித்தபோது அன்று சொல்ல பட்ட எல்லா உண்மைகளுக்கும் வசன ஆதாரம் இருப்பதை அறியமுடிந்தது. எனவே இங்கு வசன ஆதாரத்தோடு பதிவிடுகிறேன்)    

அதாவது ஒரு மனுஷன் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிப்புக்குள் கடந்து வரும்போது அதற்க்கு முன்னர் அவன் செய்திருந்த எப்பேர்பட்ட பாவமானாலும் மன்னிக்கப்படும். இயேசுவின் கிரைய  பலியால் இந்த மீட்பு நிறைவேறுகிறது. அதன்மூலம் அவன் பிறவி பாவம் (அதாவது ஆதாமின் பாவத்தால் நன்மை தீமை அறிந்து அதன் மூலம்  தாயின் கர்ப்பத்தில் மாம்சமாக  உருவான பாவம்) நீங்குகிறது. (இந்த பிறவி பாவத்தை வேறு எந்த நற்செயலினாலுமோ அல்லது வேறு யாராலும்கூட நீக்கவே முடியாது. ஏன் பிதாவாகிய தேவனிடம் போனால்கூட, அவர் "நான் உனக்காக உருவாக்கியுள்ள ஒரேவழியாகிய  இயேசுவின் வழியே கடந்துவா"என்றுதான் சொல்லுவார்) அவரன்றி யாருக்கும் இரட்சிப்பில்லை!   
 
எனவே ஒரு மனுஷன் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆதிபாவத்தில் இருந்து விடுபடும்போது பாவத்தினால் உண்டான மாம்ச மரணத்தையே ஜெயிக்கும் வல்லமையையும் அவன் பெறுகிறான்.  அதாவது பாவம் செய்த ஆதாமை பார்த்து தேவன் "நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கு திரும்புவாய்" என்று சொன்னார். இயேசுவின் பலியானது சர்வலோகத்திலும்உள்ள எல்லா  பாவத்தையும் நீக்குவதால் இயேசுவை ஏற்றுக்கொண்ட அந்நேரமே அவன் மாம்ச மரணத்தையும் ஜெயிக்கும் வல்லமை பெறுகிறான்.   ஆனால் இயேசுவை ஏற்றுக் கொண்டு எல்லா பாவங்கள் கழுவபட்டபின்னர் ஒருவன் மரணத்துக்கேதுவான எந்த ஒரு பாவமாகிலும் செய்வானாகில் மீண்டும் அவன்  மரிக்கவேண்டிய கட்டாயநிலையை அடைகிறான். பின்னர் அவனை அதிலிருந்துமீட்க வேறொருபலியும் கிடயாதநிலை உருவாகிறது. வேறொரு பலியே இல்லை  எபிரெயர் 10:26 பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல் (இருக்கும்நிலை இருக்கிறது)
 
மருரூபமாகி மரணத்தை ஜெயிக்கமுடியும் என்ற உண்மையானது வேதத்தில் பல வசனத்தில் சொல்லபட்டிருந்தாலும் சாத்தான் அதை மறைத்து, இயேசு இந்த பூமியில் மனுஷனாக பிறந்து வந்து மாம்சத்தில் அனுபவிக்கும் அதிகம் கொடூர வேதனையை மாம்சத்தில் தாங்கி தன்னை தானே பலியாக்கி பெற்றுத்தந்த மீட்பானது இம்மைக்காகவோ அல்லது இந்த மாம்ச சரீரத்துக்க்காகோ அல்ல என்பது போன்ற ஒருபுரிதலை ஏற்ப்படுத்தி அவரது பலியின் முக்கிய நோக்கத்தை மறைத்துவிட்டான்.    
 
உண்மை அநேகரால் மறைக்கப்பட்டுவிட்டதால் புதிதாக  இயேசுவை ஏற்றுக் கொண்டு, மரணத்தை ஜெயிக்கும் வல்லமையை பெற்ற ஒருவர்கூட, சரியான வழிநடத்துதல் இல்லாத நிலையில் மீண்டும் மரணத்துகேதுவான பாவங்களை செய்து மரணத்தை சந்திக்கும் கட்டாய நிலையை அடைகிறார். தேவனின் வார்த்தைகள்மேல் முழு விசுவாசமில்லாத  அனேக மனுஷர்களும் சாத்தானுடன் சேர்ந்துகொண்டு தானும் நம்பாமல் அடுத்தவரையும் இந்த உண்மையை அறியவிடாமல் மற்றவர்களை இடரசெய்வதால் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் வசனங்கள் சொல்லும் இந்த உண்மையானது இன்றுவரை யாராலும்  நிறைவேற்ற முடியாமல் ஒரு மறைபொருளாகவே  இருக்கிறது. எனவேதான் ஆண்டவர்
என்னிடம் திரும்ப திரும்ப சொன்னது "நாசியில் சுவாசமுள்ள மனுஷர்களை நம்பவேண்டாம்"  "என்னை கேள் நான் உனக்கு உண்மையை தெரிவிப்பேன்" என்று கூறினார். அதற்க்கு ஒப்பாக பவுல் அவர்களும் 
 
ரோமர் 3:4  , தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
 
என்று எழுதிவைத்துள்ளார். இதன் அடிப்படையிலேயே நான்இங்கு திரும்ப திரும்ப எழுதுவது "ஒருவேளை நான்கூட உங்களை தவறான பாதைக்கு திருப்பிவிட்டு விடலாம், அல்லது நான் எழுதிய இந்த உண்மைகளை நாளை  தேவன் மாற்றி விடலாம். எனவே சரியான உண்மையை அறிந்துகொள்ள  கட்டாயம்  தேவனிடம் நேரடி தொடர்புள்ளவர்களாக இருங்கள். தேவனோடு பேசுங்கள்! உங்கள் வாயில் வரும் வார்த்தைகளை எல்லாம் அவரிடம் சொல்லி கேள்வி கேளுங்கள். உங்கள் குறைகளை எல்லாம் அவரிடம் சொல்லிஅழுங்கள்! அவரிடம் உங்களுடய எல்லா காரியங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் நினைக்கலாம் நான் மட்டும்தானே சொல்லிக்கொண்டு  இருக்கிறேன் தேவன் அதை கேட்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லையே எனக்கு எந்த பதிலும் இல்லையே என்று, ஆனால் உங்கள் கேள்விகள் சந்தேகங்கள் அனைத்துக்கும் அவர் ஏதாவது ஒரு வழியில் நிச்சயம் பதில் தருவார். அதை நாம் சரியாக புரிந்து கொள்வதர்க்கு நம் இருதயத்தை உலகத்தால் மாசுபடாமல் தேவனுக்கு ஏற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நமது  கடமை.          
     
தொடர்ந்து:
 
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே
 
என்று பவுல் சொல்லியிருக்கிறபடி, ஒருதரம் மரிப்பது என்பது எல்லோருக்கும் நியமிக்கபட்டிருந்தாலும், மரணம் இல்லாமல் மறுரூபம் ஆகும் ஒரு நிலையும்
இருக்கிறது என்பதையும் அவரே சொல்லியிருக்கிறார்    
 
 கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்
 
இங்கு நித்திரை என்பது மரணத்தை குறித்து சொல்லப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம்.  இப்படி நித்திரை(மரணம் இல்லாமல்) மறுரூபம் அடைவதையே மாம்ச
மரணத்தை ஜெயித்தல் ஆகும்!  
 
தேவன் முன் குறித்துள்ள அந்த நாளில், யாரெல்லாம் தேவன் எதிர்பாக்கும்
பரிசுத்தமடைந்து மறுரூப நிலையை எட்டியுள்ளார்களோ அவர்கள் எல்லோருமே இந்த மாம்ச மரணத்தை ஜெயித்துவிட முடியும்!  இதை மரணத்தை ஜெயித்தல் குறித்தே பழைய ஏற்பாட்டில் சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறான்:   
 
சங்கீதம் 68:20 ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு
 
அடுத்து ஓசியா தீர்க்கதரிசி மூலம் கர்த்தர்  இவ்வாறு கூறுகிறார்
 
ஓசியா 13:14  அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்;
 
நாம் ஆண்டவராகிய இயேசு மிக தெளிவாக இவ்வாறு கூறுகிறார்
 
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 
இயேசு மெய்யாகவே மெய்யாகவே சொல்கிறேன் என்று சொன்ன வார்த்தையை  லேசாக புரட்டி இது இரண்டாம் மரணத்தை குறித்தது என்று போதித்து அவ்வார்த்தையின் மகிமையை சாத்தான் குறைத்துவிட்டான். மனுஷர்கள் எல்லோரும் அதை நம்பிவிட்டிருப்பது  அவர்களுக்கு வேத வசனத்தின்மேலுள்ள போதிய விசுவாசமின்மையை காட்டுகிறது.
 
உபாகமம் 8:3  , மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்
 
என்ற வசனத்தின் அடிப்படையில் இயேசு சாத்தானிடம் சவால்விட்டு கூறியிருப்பதை நாம் அறிவோமே.
 
ஆகினும்  நீதி12:28 நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. என்று சொல்லும் வார்த்தைகளை அநேகரால் ஏற்க்க முடியவில்லை என்பது எனக்கு புரியவில்லை.  இவ்வசனங்களில்  எங்காவது  இரண்டாம் மரணம் அல்லது நித்திய மரணம் என்று சொல்லபட்டிருக்கிறதா இல்லையே! பிறகு எப்படி எல்லோரும் இவ்வார்த்தைகள் எல்லாம் இரண்டாம் மரணத்தை குறித்து சொல்லப்பட்டது என்று சொல்லி போதித்து, அன்று கானான் தேசத்தை வேவு பார்க்கப்போன இஸ்ரவேல் கோத்திரத்தாரில் அநேகர் "ஏனோக்கியரை ஜெயிக்க முடியாது" என்று சொல்லி துர்செய்தியை பரப்பியது போல, இன்றும் இந்த  மாம்சமரணத்தை ஜெயிக்கவே முடியாது என்று போதிக்கிறீர்கள்?  கர்த்தர் நம்மோடு இருப்பாராகில் நிச்சயம் நாம் மாம்ச  மரணத்தை ஜெயித்து நித்திரை அடையாமல் மறுரூபம் ஆகமுடியும்! 
 
மாற்கு 10:27  தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
மாற்கு 9:23  நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
 
அந்நாட்களில்  ஆண்டவரால் எனக்கு தெரிவிக்கபட்ட கருத்துக்களே எனது அடிப்படை கருத்தாக இந்த தளத்தில் பதிவிட்டு வருகிறேன்,  கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து நடந்த உண்மை சம்பவங்களை பார்க்கலாம்......



-- Edited by SUNDAR on Tuesday 6th of September 2011 09:47:40 PM



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
எதிர்பார்ப்பற்ற எனது திருமணம்.
Permalink  
 


மேலேயுள்ள காரியங்கள் தேவனால் எனக்கு தெரிவிக்கபட்டபோது, அக்காரியங்களின் அடிப்படையில் நான் என்னுடைய நிலைமையை சற்று ஆராய்ந்து பார்த்தேன். இயேசுவை ஏற்றுக்கொண்டு என்னுடய பாவங்கள் எல்லாம்
கழுவப்பட்டு மரணத்தை ஜெயிக்கும் வல்லமையை பெற்றிருந்த நான், பிறன்  மனைவியாகிய அந்த ஸ்திரியை இச்சையோடு தொட்டதிநிமித்தம் பாவம் செய்து என்னுடய பரிசுத்தத்தை இழந்திருந்தேன். 
 
இதற்க்கான தண்டனை என்னவென்று நான் வேதத்தின்படியே ஆராய்ந்தால்,
 
நீதிமொழிகள் 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்
 
நான் ஆக்கினை தீர்ப்புக்கு தப்ப முடியாது என்பதை அறிந்துகொள்ள முடியும். அனால் அது நித்திய ஆக்கினையோ மரணத்துகேதுவான பாவமோ  அல்லாமல் தண்டனைகேதுவான குற்றமாக இருந்தது.     
 
ஒருவேளை நான் பிறன் மனைவியோடு சயனித்து விபச்சாரம் செய்திருந்தால் அது மரணத்துகேதுவான பாவம் ஆகிவிடும்.   
 
லேவியராகமம் 20:10 ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
 
ஆனால் நானோ ஏதோ ஆண்டவர் புண்ணியத்தில் மரணத்துக்கேதுவான பாவம் செய்யாமல்  தப்பித்துகொண்டுவிட்டேன். அது எனக்கு எச்சரிக்கையாக தேவனாலேயே நடந்த செயலாக நான் கருதுகிறேன். சாத்தான் என்னை கவிழ்ப் பதற்காக அந்த பெண்ணை ஏன் முன்னால் கொண்டுவது என்னுடய மாம்ச இச்சை தூண்டி என்னை கெடுக்க முயன்றான். ஆனால் ஆண்டவரோ அந்த காரியத்தின் மூலம் எனக்கு ஒரு மிகப்பெரிய உண்மையை போதித்து சரியான நேரத்தில் சரியான எச்சரிப்பு ஒன்றை கொடுத்தார். அக்காரியம் இந்நாள்வரை நான் அதிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள மிகவும் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது.
 
ஆகினும் நான் ஆக்கினை தீர்ப்பு அடையவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். ஆக்கினை தீர்ப்பு என்றால் எப்படியிருக்கும் என்பது பற்றி எனக்கு  அந்நேரம் எதுவும் தெரியாது. 
 
நான் பயங்கர குழப்பத்தில் இருந்த இந்த நேரத்தில் என்னுடய சரியான அனுமதி யிலாமலே  எனக்கு திருமணம் திருமணம் நடந்தது. நான் மும்பை பட்டணத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தபோது ஒருநாள் எனக்கு ஒரு திருமண
அழைப்பிதல் போஸ்ட்டில் வந்தது. எனக்கு யார் "திருமண அழைப்பு"அனுப்பியது என்று புரியாமல் பிரித்து பார்த்தபோது, உள்ளே மணமகன் ஸ்தானத்தில் என்னுடய பெயர் இருந்தது. அதற்கு பிறகுதான்  எனக்கு திருமணம் என்றே நான் அறிந்து கொண்டேன். எல்லா காரியங்களும் என்னிடம்  அனுமதி பெறாமலேயே, எனது ஊரில் நடந்துள்ளது நான் எதுவும் அறியாமல் மும்பையில் இருந்தேன். 
 
ஏற்கெனவே  அதிக மன உளைச்சலில் இருந்த நான் அந்த அழைப்பிதழை பார்த்து மிகவும் நொந்துபோனேன். அடுத்த வாரம் திருமணம் ஆனால் எனக்கு ஊருக்கு போகவே மனதில்லை. இன்னும் ஒருமுறை எப்படியாது ஆண்டவரிடம் பேசிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருந்தேன். ஆனால் ஆண்டவர் எந்த பதிலும் தரவில்லை.  இந்நிலையில் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது "ஊருக்கு போகலாமா வேண்டாமா" என்று சீட்டு போட்டு பார்க்க முடிவுசெய்து. பலமுறை  சீட்டு போட்டு பார்த்தேன் ஆனால் எல்லா முறையும் "போகவேண்டாம்" என்றே வந்தது. சரி போகவேண்டாம் என்று முடிவெடுத்து, யாரும் எக்கேடும் கெட்டு போகட்டும் என்ற முடிவில் ஓரிருநாட்கள் தள்ளிவிட்டேன். இறுதியில் என்னுடய மனதில் இப்படியொரு எண்ணம் எழுந்தது அதாவது பெண் பார்த்த இடமோ ஒரு சிறிய கிராமம்.  திருமண நாள் அன்று மணமகன் வரவில்லை என்று கேவலமாகி ஒருவேளை திருமணப்பெண் தற்கொலை எதுவும் செய்துகொண்டால் நம்மேல் நீங்காத பழியாகி போய்விடுமே  என்று பயந்து திருமணத்துக்கு புறப்பட்டேன்.
 
எப்படியோ என்னுடய திருமணம் நடந்தேறியது. நானோ நடப்பது எதையும் சரியாக கிரகிக்க முடியாத  ஒரு பித்துபிடித்த நிலையிலேயே இருந்தேன். என் மனமெல்லாம்  நடந்த நிகழ்வுகளிலேயே லயித்து இருந்தது.  ஓரிரு நாட்களில் நானும் என் மனைவியும் மும்பை கிளம்பி விட்டோம். நான் ஆண்டவரைப்பற்றி என் மனைவியிடம் சொன்ன எந்தஒரு காரியத்தையும் புரியும்தன்மை அவளுக்கு இல்லை. ஏனெனில் எனக்குஅமைந்த மனைவி ஆண்டவரைபற்றி சிறிதும் அறியாத கோவிலுக்கு வருஷா வருஷம்  கிடாவெட்டும் பரம்பரை இந்து குடும்பத்தை சேர்ந்தவள். அவளுள் ஒரு இந்து தேவியின் ஆவி இருப்பதை என்னால் பலமுறை பார்க்க முடிந்தது. நான் சொன்ன எதையும் அவள் நம்பவில்லை அல்லது புரியும் திறன் அவளுக்கு இல்லை. எனவே அவளிடம் என்னுடய காரியங்கள் எதையும் பகிந்து கொள்ள முடியாத ஒரு நிலையில் இருந்தேன்.  
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்........


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள்!
Permalink  
 


என் மனைவியுடன் மும்பை சென்ற  நான்,  ஏறக்குறைய  15 நாட்கள் ஒழுங்காக வேலைக்கு போனேன். அடுத்து வந்த வெள்ளிகிழமை ஏதோஒரு இந்து திரு விழாவாக இருந்தது எனவே  அரைநேர  வேலையை முடித்துவிட்டு மதியம் சுமார் ஒண்ணரை மணிக்கு ஹாஜியலி என்னும் இடத்துக்கு வந்து கொண்டிருந்த போது, ஆண்டவர் மீண்டும் என்னோடு பேச ஆரம்பித்தார், 'உன்னுடைய காலில் இருக்கும்  ஷூவை கழற்றி கையில் எடுத்துகொண்டு இந்த இடத்தில்  இருந்து வோர்லி என்னும் இடம்வரை வெறும்காலோடு நட" என்றார். மிக கடுமையான் வெயிலுள்ள பெப்ருவரிமாத கடைசி நேரம் அது! அந்த கடும் வெயிலில் வெறும் காலோடு தார் சாலையில் சுமார் 1 கிமீ நடந்த்தில் என்னுடைய காலில் எல்லாம் பொக்களம் வந்து வலி எடுக்க ஆரம்பித்து விட்டது.  அத்தோடு நொண்டி நொண்டி அப்படியே வீட்டுக்கு வந்தேன். இதற்க்கு முன்னர் எல்லாம் என்ன நடந்தாலும் கேட்க நாதியில்லாமல் தனியாக இருந்தேன் என்னை யாரும் எந்த கேள்வியும்  கேட்கவில்லை. ஆனால் இப்பொழுதோ என்னுடய மனைவிக்கு நான் பதில்சொல்லியாக வேண்டும் "ஆண்டவர் சொன்னார்" என்று சொன்னால் அதை  அவளுக்கு ஏற்க்க முடியவில்லை. என்னால் பொய்யும் சொல்ல முடியாது, எனவே அவளை சமாளிப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. எப்படியோ சொல்லி சமாளித்தேன்.  ஆனால் அன்று இரவே ஆண்டவர் என்னிடம் நீ தவறவிட்டு இப்பொழுது சாத்தானின் கையில் இருக்கும் "பணம்" என்னும்

ஆயுதத்தை மீண்டும் தேடி பிடிக்கவேண்டும் உடனே புறப்பட்டு என்று கூறியதால், வீட்டுக்கு வந்த நான் இரவு 8 மணிக்கு என் மனைவியை தனியே வீட்டில் விட்டு விட்டு என் மனைவியின் எந்தஒரு வார்த்தையையும் காதில்போட்டு கொள்ளாமல் ணத்தை பிடிப்பதர்க்காக புறப்பட்டு விட்டேன்.
 
ஆண்டவர் நடத்துதலின்படி ஆவியில் உணர்ந்து  இரவு முழுவதும் மும்பையில் பல்வேறு இடங்களில் தவறவிட்ட பணத்தை தேடி அலைந்தேன். கடைசியில் காலை 5 மணியளவுக்கு ஒரு அற்புதமான சம்பவம் மூலம் பணத்தை தேடி பிடித்துவிட்டேன். காலை 8மணிக்கு மிகுந்த சந்தோஷத்துடன வீட்டுக்கு வந்து சேர்ந்த போது என் மனைவி மிகவும் பயந்திருந்தாள். இரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லையாம்  "இந்த பாஷை தெரியாத இடத்தில் என்னை இனி தனியாக விட்டு போகாதீர்கள்" என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
 
அவளை சமாதானபடுத்திய நான்  சனிக்கிழமையாகிய அன்று  நான் வேலைக்கு போகவில்லை. அப்பொழுதுதான் நம் தமிழகத்தில் எஜமான் படம்  ரீலிசாகி இருந்தது. மும்பையில் இருந்த எனது தமிழ் நண்பர் ஒருவர் எஜமான் படபாடல் கேசட்டை என்னிடம் கொடுத்து, இதில் உள்ள பாடல்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது போட்டு கேட்டுப்பார் என்று சொல்லி கொடுத்தார் (நான் ஒரு தீவிர
சினிமாப்பாட்டு ரசிகன் என்று முன்னமே எழுதியிருகிறேன்) அந்த கேசட்டில் இருந்த அட்டையில் நம்  ரஜினி அவர்கள் மிகுந்த சந்தோசத்தோடு கையை தூக்கி காட்டி ஏதோ பாடல் பாடுவதுபோல் படம் இருந்தது. அந்த படம் எனக்கு "நீ ஜெயித்து விட்டாய், இனி இந்த மும்பையில் இருக்காமல்  உடனே புறப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிடு" என்று கையைகாட்டி சொல்வதுபோல் இருந்தது.  சென்னைக்கு புறப்படலாம் என்று எண்ணினேன், அனால் ஆண்டவரோ "நாளை   ஓய்வுநாள் (ஆறுநாள் வேலை செய்தால் ஏழாவதுநாள் ஓய்வுநாள்) அன்று நீ எந்த வேலைக்குமோ அல்லது பயணமோ போகக்கூடாது யாருக்கும் எந்த பணமும்  வெளியே கொடுக்ககூடாது என்றும், அந்த ஒருநாள் மட்டும் நீ பிடித்த பணத்தை  பத்திரமாக பாதுகாத்து விட்டால் பின்னர் பணத்தை யாரும் உன் கையில் இருந்து பிடுங்க முடியாது.  அதனால் மிகப்பெரிய காரியம் நடக்கும் என்று கண்டிப்பாக கட்டளை இட்டார். அன்று முழுவதும் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஒருநாள்மட்டும் எப்படியாவது இருந்துவிட்டு ஞாயிறு முடிந்ததும் தமிழ் நாட்டுக்கு ஓடிவிடவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தேன்.
 
மறுநாள் ஞாயிற்று கிழமை! உலகத்தையே நான் பார்க்க விரும்பவில்லை. எங்கள் வீட்டு கதவைகூட திறக்கவேயில்லை! ஆனால் சாத்தான் என்னை விடவில்லை காலை சுமார்  10 மணிக்கு எனது நண்பர் ஒருவர் வந்து என்னிடம் நீண்ட நாட்களுக்கு முன்னர் கொடுத்து வைத்திருந்த  கொடுத்துவைத்திருந்த அவரது பணத்தை உடனடியாக தரவேண்டும் என்று பிடிவாதமாக கேட்க ஆரம்பித்தா (யாருடைய பணத்தையோ பொருளையோ சும்மாகூட வாங்கி வீட்டில் வைக்காதீர்கள் அது ஒருநாள் நமக்கு கடும் பிரச்சனையை ஏற்ப்படுத்திவிடும்)   நான் எவ்வளவோ சொல்லி  மறுத்தும் நாளை தருகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. எனக்கு அவருடன் அதிகம் வாக்குவாதம் செய்வதற்கு  அசிங்கமாக இருந்தாலும் என் மனைவியிடம் சரியான பதிலை சொல்லமுடியாத காரணத்தாலும்  கடைசியில் அந்த பணத்தை எடுத்துஒரு இடத்தில்வைத்து அவரை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுசொன்னேன். அவர்அதை எடுத்துகொண்டு வெளியே போன உடனே என் மனம் எல்லாம் மீண்டும் உடைந்து, என் சந்தோசம் எல்லாம் கரைந்து விட்டது. அந்த பணம் உடனடியாக அரபு கண்ட்ரியில் இருக்கும் சாத்தானின் தலைமை  இடத்தை நோக்கி போவதாக  எனக்கு ஆவியில் உணர்த்தபட்டது.  
 
உடனே சுதாரித்துகொண்ட நான், அந்த நண்பனை பிடித்து அந்த பணத்தை திரும்ப வாங்கிவிடவேண்டும் என்ற நோக்கில் போட்டிருந்த பனியனோடு தெருவில் ஓடினேன். ஆனால் அவரை எங்குதேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நண்பர்  வீடுவரை லுங்கி பனியனோடு ஓடிய நான் அங்கும் அவர் இல்லாததால் மீண்டும் மிகவும் மனது நொறுங்கி வீடு திரும்பினேன். நான் என் மனைவியிடம் எதுவும் சொல்லாமல் ஓடியதையும் மிகுந்த சோர்வுடன் திரும்பி  வந்த என் கோலத்தையும்  பார்த்து என் மனைவி மிகவும் பயந்துவிட்டாள்.  உடனே "என் அக்கா வீட்டுக்கு போவோம் வாருங்கள்" என்று என்னை கட்டாயபடுத்தி கூட்டி சென்றுவிட்டாள் (அவர்கள் வீடு 4 தெரு தள்ளி இருந்தது) . அங்கு போகும் போது மனிதர்கள் எல்லாம் மீண்டும் பேய்களாக தெரிய ஆரம்பித்தார்கள் நான் மீண்டும்  கிடத்தட்ட சுயபுத்தியை இழந்து விட்டேன்.
 
அதாவது, சுயபுத்தியை இழந்து விடுவது என்றால், நான் சுயமாக காரியங்கள் செய்யும் செயல் திறனை இழந்து ஒரு குழந்தைபோல ஆகிவிடுவேன். நடப்பது எல்லாம் எனக்கு நன்றாக தெரியும் ஆனால் என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. வேறு ஒருவர்தான் என்னை நடத்த வேண்டிய நிலைக்குள் ஆகிவிடுவேன்.
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்......


-- Edited by SUNDAR on Friday 9th of September 2011 06:06:33 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இவ்வாறு  என்  மனைவியின் அக்காளின் வீட்டுக்கு வந்த எனக்கு கண்கள் திறக்க பட்ட நிலையில் இருந்ததால் இருக்கும் மனிதர்கள் எல்லோருமே ஒவ்வொருவரும் ஒவ்வொருவித பேய்களாக தெரியவே, எதுவும் பேசமுடியாமல் அப்படியே திகைத்து விட்டேன் (அவர்கள் காலசாமி என்ற ஒரு இந்துசாமியாடும் குடும்பம்) என்னை கட்டிலில் படுக்க வைத்துவிட்டார்கள். அங்கு படுத்திருந்த எனக்கு  பாதாளத்தில் கேட்பதுபோல பலவிதமான ஓலங்களையும் அழுகுரல்களை கேட்க முடிந்தது. கலங்கி ஒன்றுமறியாத நிலையில் இருந்த எனக்கு அவர்கள் வீட்டில் இருந்த சுவரில் ஒட்டியிருந்த ஒரு படத்தின் மூலம் ஒரு  உண்மை  உணர்த்தப்படது. அந்த படம்  என்னுடய மனதில் உடுருவி இவ்வாறுசொன்னது "உனக்கு கிடைத்திருக்கும் மனைவி ஒரு வல்லமை வாய்ந்த தேவதை, உன்னை காப்பற்றி உனக்கு துணை நிற்கவே அவள் உன்னோடு இருக்கிறாள் எனவே நீ பயப்படாதே" என்று சொல்ல பட்டது. அந்த உண்மையை அறிந்த உடனேயே நாள் துள்ளி எழுந்துவிட்டேன். உடனே என்னுடைய பயம் கலக்கம் எல்லாம் பறந்துவிட்டது. என் மனைவியை அழைத்துக் கொண்டு என்னுடய வீட்டுக்கு போக புறப்பட்டேன் அவளோ  ஒன்றும் புரியாமல் விழித்து என்னுடன் வர தயங்கினாள். 
 
நான் புறப்பட தயாரானபோதும் என்னுடய அண்ணன்(மனிவியின் அக்காள் கணவர்) என்னை வெளியில் போக விடாமல் வாசலில் மரித்து நின்று கொண்டு அவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு இந்து சாமி படத்தை  காண்பித்து "அந்த சாமி யார் என்று மட்டும் சொல்லிவிட்டு போ" என்று கூறினார். ஆனால் ஆவியானவரோ என்னுடய மனதில் "அந்த சாமியின் பெயரை சொல்லாதே, எந்த வேற்று தேவர்களின் பெயரும் உன் வாயில் வரக்கூடாது" என்று திரும்பதிரும்ப சொல்லிக் கொண்டு இருந்தார். 
 
யாத் 23:13 அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்
 
எனக்கு அந்த வீட்டில் இருக்கவே  பிடிக்கவில்லை  நான் பலமுறை வீட்டைவிட்டு வெளியேற முயன்றும் என் அண்ணன் "அந்த சாமி பெயரை மட்டும் சொல்லி விட்டுதான் போயேன்" என்று பிடிவாதமாக கேட்கவே, அவர் எதற்க்காக கேட்கிறார் என்பதே  சரியாக  புரியாதநிலையில், அந்த சாமியின் பெயரை சொல்லி, இதுதான் அந்த படத்தில் இருக்கும் சாமி என்று சொன்னேன்.  அடுத்த நிமிடமே என்னுடய இருதயம் அப்படியே உடைந்து இளகிபோனது, (புலம்பல் 2:11  என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது)
 
என் தைரியம் எல்லாமே காணாமல்போய் அப்படியே நானே உள்ளே போய்  கட்டிலில் சாய்ந்துவிட்டேன். அதன்பின்னர்  நான் முற்றிலும் சுய நிலையை இழந்து போனேன்!   
 
நான் மீண்டும் சுய தன்மையை இழந்து ஒன்றுமே தெரியாமல் போனதை அறிந்த என் அண்ணன (மனைவியின் அக்கா கணவர்) உடனே என்னை ஊருக்கு கொண்டு விட்டுவிட திட்டமிட்டு, அவர், என் மனைவி மற்றும் என் நண்பன் மத்தேயுஸ் என்பவர் எல்லோரும் மும்பையில் இருந்து சென்னைக்கு உடனே புறப்பட்டோம். முழுவதும் கண்கள் திறக்கபட்ட நிலையில் இருந்த எனக்கு இரயிலில் ஏறி பார்த்தால் உள்ளே கூட்டம் கூட்டமாக பேய்கள், ஒன்றுக்கு கண் கோணலாக இருக்கிறது ஒன்று வாய் கோணலாக இருக்கிறது அப்பப்பா என்னால் பார்க்கவே முடியவில்லை. துண்டை எடுத்து என் முகத்தை சுற்றி கட்டிவிட்டு ஒரு ஓரத்தில் அமர்த்து விட்டேன். 
 
ரயில் போகப்போக அது கடக்கும் ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு ஆவிகள் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், ஒரு ராஜாவை போல எல்கை  போட்டு அவைகள் ஆண்டுகொண்டு இருப்பதுவும் எனக்கு ஆவியில் தெரிந்தது. அத்தோடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரும்போது உலகில் விக்கிரமாக வணங்கும் எல்லா தெய்வங்களையும் மலையாளத்தில் பூமிக்கு அடியில் ஒரு இடத்தில் வைத்து மந்திரம்போட்டு கட்டி வைத்திருப்பதுவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. சில இடங்களில் பைபிளுக்கும் செய்வினை வைத்து அதன் வல்லமையை கட்ட முயன்றிருப்பதும் எனக்கு தெரிவிக்கபட்டது. அதனால்தான் அதை படிக்கும்போது
தூக்கம் வருவதாகவும் எளிதில் புரியமுடியாமல் போகிறதாகவும் தெரிவிக்கப் பட்டது.  

ரயில் ஓடுகிறது ஆனால் அதைவிட வேகமாக என் கண்முன்னால் ஓடுவதுபோல மிகப்பெரிய படம் ஓடிக் கொண்டே இருந்தது. ரயில் மகாராஷ்ட்ரவை கடந்து கர்நாடக வந்தபோது பகல்நேரத்தில் கொஞ்ச நேரம் என்னை சாப்பிட சொல்லி எழுப்பினார்கள். எழுந்து அமர்ந்தேன். எனது முன்னேபின்னே இருந்த ஒரு 8பேரில் அநேகர் கடுமையான பேய்களின் அவியுடனும், எனது அண்ணன் ஒரு மந்திரவாதி யின் ஆவியுடனும் எனது மனைவி ஒரு இந்து சாமியுடன் கலந்த பிசாசின் ஆவி யுடனும் எனது நண்பர் மத்தேயுஸ்  விழுந்துபோன தேவதூதன் ஆவியுடனும் இருப்பதை அப்படியே என்னால் பார்க்க முடிந்தது. என் கண்களுக்கு அவர்களது 
சொந்த உருவத்தை பார்க்கமுடியாமல் உள்ளிருக்கும் ஆவியே பார்க்க முடிந்தது.  

ஒவ்வொரு மனிதனுக்குள் ஒவ்வொரு ஆவி அதில் இந்து சாமிகள், பிசாசுகள், மந்திரவாதிகள், பணபேய்கள் வஞ்சக ஆவிகள், கொலைவெறி ஆவிகள் என்று எல்லா ஆவிகளுமே  கடவுள் எங்கே  என்று ஓடி ஓடி தேடிக்கொண்டு இருப்பது போல் தெரிந்தது. கடவுள்மட்டும் கையில் கிடைத்தார்என்றால் எல்லா ஆவிகளும் சேர்த்து உடனே கொன்றுவிடும் அவ்வளவு கடும்  கோபத்துடன் எல்லோரும் என் முகத்தை பார்ப்பது எனக்கு பயங்க நடுக்கமாக போய்விட்டது. .
 
ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துவிட்டேன்!
உள்ளே இருக்கும் பேய்கள் எல்லாம் என்னையே பார்ப்பது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. "அதாவது இவனுக்குள் இறைவன் வந்திருந்தார், இவனை கொன்றால் எல்லாம் சரியாகி விடும்" என்று அவைகள் நினைப்பது எனக்கு தெரிந்தது. உடனே திடீர் என்று எழுந்து ஓடி ஓடும் ரயிலில் இருந்து குதித்து விட்டேன். நல்ல வேளையாக  ரயில் கொஞ்சம் மெதுவான வேகத்தில் ஓடிக் கொண்டு இருந்ததால் எனக்கு பெரியஅடி எதுவும்படவில்லை எனவே  எழுந்து ஓடவும் ஆரம்பித்து விட்டேன். என் அண்ணன் (மனைவியின் அக்கா கணவர்) ரயில்வேயில் வேலை பார்ப்பவர். அவர் உடனே அபாயசங்கிலியை பிடித்து வண்டியை நிறுத்திவிட்டார். எல்லோரும் ஓடி வந்து என்னை குண்டு கட்டாக தூக்கி மீண்டும் ரயிலில் போட்டுவிட்டனர். இன்றோடு நாம் தொலைந்தோம் பிசாசுகள் கையில் வசமாக மாட்டிக்கொண்டோம் என்று துண்டை எடுத்து முகத்தை நன்றாக மூடி படுத்துவிட்டேன். 

இரயில் ஆந்திரா பக்கம் வந்தவுடன் அதுவும் திருப்பதி பக்கம் வந்தவுடன் எதோ ஒரு வல்லமையான சக்தி அந்த இடங்களை ஆளுவதை எனக்கு உணர்த்தியது. ஓரளவு எனக்கு சரியானது போல இருந்தது. திருப்பதியில் இருக்கும் சாமிக்கு தீய சக்திகளை ஓரளவு கட்டுப்படுத்தும் வல்லமை இருப்பது எனக்கு தெரிவிக்கப் பட்டது ஆனாலும் அந்த வல்லமையால் எந்த பயனும் இல்லை ஏனெனில் அதன் வல்லமை ஒரு குறிப்பிட்ட எல்கை வரை மட்டுமே இருந்தது.

திருப்பதியை கடந்து வர வர நான் மீண்டும் ஓரளவு நல்ல நிலைக்கு திரும்ப ஆரம்பித்தேன். வண்டி சென்னை வந்து சேரும் போது இரவாகி இருந்தது. என்னை மிக பத்திரமாக கையைபிடித்து பாதுகாப்போடு அழைத்து சென்றனர். சென்னையில்
இருந்து ஒரு பஸ் ஏறி தூத்துக்குடி புறப்பட்டோம். தமிழ் நாட்டை வேறொரு இந்து சாமியின் ஆவி ஆழுகைசெய்வது எனக்கு தெரிந்தது. அதுமிகவும் நல்ல சாமியாக இருந்தது. தனது பக்தர்களை மிக கரிசனையோடும் சமாதானத்தோடும் காக்கும் வல்லமை உடையதாக இருந்தது. ஆனாலும் அந்த ஆவியும் இறைவனின் திட்டத்துக்கு கெடுதலாகவே இருந்தது எனக்கு தெரிவிக்கப்பட்டது. .

நான் பஸ்சில் போகும் போது அனேக வெளிப்பாடுகள் கிடைத்தது பல இந்து சாமிகள் பற்றிய உண்மை  எனக்கு தெரிவிக்கப்பட்டது அவை எனக்கு சரியாக புரியவில்லை (கணபதி என்ற சாமியை பற்றி படம்போல ஓடி என் கண்களுக்கு தெரிவிகபட்ட உண்மை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது) அந்நேரம் எனது திருமணமாகாத தங்கை ஒரு இந்துகுடும்பத்துக்கு மருமகளாக போய் விடுவாள் என்பதும் என்னுடய கடைசி தம்பி எங்கள் எல்லோரையும் விட்டுவிட்டு வேறு ஒரு இடம் போய் விடுவான் என்பதும் தெரிவிக்கப்பட்டது அது பல வருடங்களுக்கு பிறகு அப்படியே நடந்தேறியது.
 
மறுநாள் காலையில் தூத்துக்குடி வந்து சேர்ந்தோம்! அங்கிருந்து என்னை ஆட்டோவில் ஏற்றி எனது வீட்டுக்கு கொண்டுபோய் சேர்த்தனர். நான் இன்னும் ஒன்றுமறியாத தானாக எதுவும் செய்ய தெரியாத குழந்தையாக இருந்தேன். என்னை பார்த்து எனது அம்மா, மிகவும் அழுதார்கள் அவர்களுக்கு என்னால் ஒரு ஆறுதலும் சொல்ல முடியவில்லை. என் உடன் பிறந்த அண்ணன் ஒருவர் உண்டு அவர் என்னை பார்த்து மிகவும் கண்ணீர் விட்டு அழுதார் "நமது வீட்டிலே எல்லோரிலும் நீதானடா  நன்றாக படித்தாய், இப்படி பயித்தியமாக  திருபிவரவா நீ பம்பாய் போனாய்" என்று சொல்லி எதற்குமே அழாத என் அண்ணன் அழுதார்கள். 
 
மும்பையில் நல்ல வேலையில் இருக்கிறேன் என்று என் அம்மா எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தார்கள் நான் இந்த நிலையில் வந்தது தெரிந்து பக்கத்து வீட்டில் அநேகர் கூடிவிட்டனர். ஒவ்வொருவரும் அந்தகோவில் போங்கள் சரியாகி விடும் இந்த மந்திரவாதியிடம் போங்கள் சரியாகிவிடும் என்று ஆளுக்கு ஆள் அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

எனது அம்மாவுக்கும் அண்ணனுக்கும் என்னை அழைத்து வந்த என் மனைவியின் அக்கா கணவர்மீதும் எனது நண்பர் மத்தேயுஸ் மீதும் சந்தேகம் ஏற்பட்டு, அவர்கள் எதோ சொல்லி அடித்து பயம் காட்டியுள்ளனர் அதனால் தான் நான் இப்படி ஆகி விட்டேன் ன்று நினைத்து அவர்களோடு சண்டைக்கு நின்றனர். பிறகு எனது நண்பர் மத்தேயுஸ் அழ ஆரம்பித்து விட்டார். நான் இவருக்கு எவ்வளவு நாள் நண்பனாக உள்ளேன் என் வேலையே எல்லாம் போட்டுவிட்டு உடனே இங்கு புறப்பட்டு வந்தேன் என்று சொல்ல அவர்கள் சமாதானமாகி. அடுத்து என்னசெய்ய என்று யோசிக்க ஆரம்பித்தனர்.  எல்லாவற்றையுமே நான் ஒரு குழந்தை போல அமர்ந்து ஒரு பார்வையாளனாக பார்த்துகொண்டு இருக்கிறேன் ஆனால் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. சுயமாக எந்த ஒரு கருத்தையும்  சொல்லவும் முடியவில்லை.   
 
அதற்குள் எனது அம்மாவுக்கு தெரிந்த  ஒருவர் ஒரு தேங்காயை கொண்டு வந்து "இது மந்திரம் பண்ணியது இதை இரண்டு கையில் வைத்துக்கொண்டு தூங்க சொல்லுங்கள் எல்லாம் சரியாகிவிடும்" என்று சொன்னார்கள். உடனே என் அம்மா
அந்த தேங்காயை வாங்கி எனது கையில் கொடுத்து "இதை நன்றாக பிடித்துக் கொண்டு கட்டிலில் படுத்து தூங்கு எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்லி அந்த மந்திரித்த தேங்காயை என் கையில் கொடுத்தார்கள். நானும் அப்படியே அதை பிடித்துக்கொண்டு பகல் சுமார் 1மணிக்கு கட்டிலில் படுத்தேன் அவ்வளவு தான். சிறிது நேரத்தில் ஒரு மிகப்பெரிய படுகுழிக்குள் இரங்க ஆரம்பித்துவிட்டேன்.  
 
புலம்பல் 3:47 திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்.................


-- Edited by SUNDAR on Friday 23rd of September 2011 11:09:15 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

Mr.SUNDAR wrote:

இரயில் ஆந்திரா பக்கம் வந்தவுடன் அதுவும் திருப்பதி பக்கம் வந்தவுடன் எதோ ஒரு வல்லமையான சக்தி அந்த இடங்களை ஆளுவதை எனக்கு உணர்த்தியது. ஓரளவு எனக்கு சரியானது போல இருந்தது. திருப்பதியில் இருக்கும் சாமிக்கு தீய சக்திகளை ஓரளவு கட்டுப்படுத்தும் வல்லமை இருப்பது எனக்கு தெரிவிக்கப் பட்டது ஆனாலும் அந்த வல்லமையால் எந்த பயனும் இல்லை ஏனெனில் அதன் வல்லமை ஒரு குறிப்பிட்ட எல்கை வரை மட்டுமே இருந்தது.


Dear Brother,
மத்தேயு 12 : 25,26 -ல் இயேசு கிறிஸ்து ஏன் இப்படி சொல்லுகிறார் ..?

25: இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: "தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம், தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது."

26: சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே, அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?


______________________________________________________
Mr.SUNDAR wrote:


தமிழ் நாட்டை வேறொரு இந்து சாமியின் ஆவி ஆளுகை செய்வது எனக்கு தெரிந்தது. அதுமிகவும் நல்ல சாமியாக இருந்தது. தனது பக்தர்களை மிக கரிசனையோடும் சமாதானத்தோடும் காக்கும் வல்லமை உடையதாக இருந்தது



மத்தேயு 19 : 17

அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

மாற்கு 10 : 18

அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே

லூக்கா 18 : 19

அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.


ஒரு அந்நிய தெய்வத்தை நீங்கள் நல்ல சாமி என்று கூறினால், மேற்கண்ட வசனங்களில் இயேசு கிறிஸ்துவே ஏன் இப்படிக் கூறுகிறார் ..?

and

 

சமாதானத்தை இயேசு கிறிஸ்து மாத்திரமே தான் மனிதர்கள் எவருக்குமே தர முடியும். ஏனென்றால் அவர் தான் சமாதனப்பிரபு (ஏசாயா 9:6) 

 

அவர்தான் சமதானக் காரணர் ..! ( மீகா 5:5)

 

நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது ..!(ஏசாயா 53:5) 

ஆக, இந்த பூமியில் இயேசு தருகிற சமாதனம் தவிர, வேறே  சமாதனம் என்ற ஒரு விஷயம் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..

ஏனென்றால் இயேசு கிறிஸ்து ஒருவர்  மாத்திரமேதான் ஆக்கினை அடைந்து சமாதானத்தை உண்டுபண்ணி இருக்கிறார்.. 

அந்நிய தெய்வங்கள் சமாதானம் தருவது போல நடிக்கலாம். அதை நம்புவதோ அல்லது இப்படிச்சொல்வதோ மிக மிக தவறான காரியம் .



-- Edited by sekariam on Saturday 24th of September 2011 12:45:23 PM



-- Edited by sekariam on Saturday 24th of September 2011 12:46:55 PM

__________________

"கர்த்தர் நல்லவர்



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

SEKARIAM WROTE :

____________________________________________________________________________________________

Dear Brother,
மத்தேயு 12 : 25,26 -ல் இயேசு கிறிஸ்து ஏன் இப்படி சொல்லுகிறார் ..?

25: இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: "தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம், தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது."

26: சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே, அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

______________________________________________________________________________________________

 

 

சகோ : sekariam  அவர்களே உங்களுக்கு நான் சுருக்கமாக சொல்கின்றேன் புரிந்து கொள்ளுங்கள்

 

உங்களுக்கு சாத்தானை துரத்தும் ஊழியர்களை தெரியும் என்று எண்ணுகின்றேன் சாத்தானை துரத்துகின்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது அவர்களுக்குள் இருக்கும் பெருமையான ஆவி பொருளாசை உள்ள ஆவி அவர்களுக்கு இருப்பதை நான் பகுத்தரிந்து இருக்கின்றேன் ஆசுத்தங்களை  உள்ளே வைத்து கொண்டு பேய்களை துரத்துகின்றார்கள் உண்மையை சொல்ல வேண்டும் என்றால்  இவர்களும் பேய்கள் தான் இந்த பேய்களே மற்ற மனிதர்களுக்குள் இருக்கும் பேய்கள துரத்துகின்றது ஆனாலும் அவர்கள் முளுநிளையான சாத்தான் அல்ல அல்லது அவர்களுடைய கை ஆட்களும் அல்ல சாத்தானால் பாதிக்க பட்டவர்களே


 

ஆனால் நீங்கள் குறிப்பிட்டு உள்ள வசனம்

SEKARIAM  WROTE :

==========================================================

26: சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே, அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்

==========================================================

 

 

இந்த வசனத்தின் கருத்து என்னவென்றால் லுசிபெரும் அவனுடன் சேர்ந்த தூதர்களும் அசுத்த ஆவிகளை துரத்தினால்  அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்

 

அசுத்த ஆவிகளால் பிடிக்க பட்டு  போன இந்து சாமிகள் சாத்தானின் முழுநிலை அல்ல சாத்தானால் பாதிக்க பட்டவர்களே

 

 

SEKARIAM WROTE :

____________________________________________________________________________________________________

SUNDAR :
தமிழ் நாட்டை வேறொரு இந்து சாமியின் ஆவி ஆழுகைசெய்வது எனக்கு தெரிந்தது. அதுமிகவும் நல்ல சாமியாக இருந்தது. தனது பக்தர்களை மிக கரிசனையோடும் சமாதானத்தோடும் காக்கும் வல்லமை உடையதாக இருந்தது



மத்தேயு 19 : 17

அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

மாற்கு 10 : 18

அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே

லூக்கா 18 : 19 

____________________________________________________________________________________________________________________________

 

தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே என்பது 100  / 100  உண்மை அவரை தவிர நல்லவன்  ஒருவரும் கிடையாது

 

நீங்கள் உங்கள் தாய் தகப்பன்  மற்றும் நண்பர்கள் இவர்கள் நல்லவர்களாக அல்லது நல்ல குணங்கள் உள்ளவர்களாக  இருந்தால் அவர்களை மற்றவர்களிடத்தில் சொல்லும் பொழுது என்ன சொல்வீர்கள் என் தகப்பனார் மிகவும் நல்லவர் என் நண்பன்  ஒருவன் இருக்கின்றான் அவன் மிகவுன் நல்லவன் என்று தானே சொல்வோம்

 

தே போல் தான் சகோ : சுந்தர் அவர்களும் அதுமிகவும் நல்ல சாமியாக இருந்தது. தனது பக்தர்களை மிக கரிசனையோடும் சமாதானத்தோடும் காக்கும் வல்லமை உடையதாக இருந்தது என்று  அதின் குணங்களை வைத்து தான் சொல்கின்றார் என்பது தெரிய வருகின்றது

 

SUNDAR  WROTE  : 

____________________________________________________________________________________________________________

உலகில் விக்கிரமாக வணங்கும் எல்லா தெய்வங்களையும் மலையாளத்தில் பூமிக்கு அடியில் ஒரு இடத்தில் வைத்து மந்திரம்போட்டு கட்டி வைத்திருப்பதுவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது 

இந்து சாமி படத்தை  காண்பித்து "அந்த சாமி யார் என்று மட்டும் சொல்லிவிட்டு போ" என்று கூறினார். ஆனால் ஆவியானவரோ என்னுடய மனதில் "அந்த சாமியின் பெயரை சொல்லாதே, எந்த வேற்று தேவர்களின் பெயரும் உன் வாயில் வரக்கூடாது" என்று திரும்பதிரும்ப சொல்லிக் கொண்டு இருந்தார். 

_____________________________________________________________________________________________________________

 

நண்பர் SEKARIAM  அவர்களே இந்த வார்த்தைகள் உங்கள் கண்களில் படவில்லையா

 

சுந்தர்  இந்து சாமியை உயர்த்த வேண்டு என்றோ அல்லது அந்த சாமியை நல்ல சாமியென்று காட்டவேண்டும் என்று இருந்தால்

மேலே சொன்னது போல அந்த சாமியின் பெயரை சொல்ல வேண்டாம்

விக்ரமாக வணங்கும் எல்லா தெய்வங்களையும் மந்திரம்போட்டு கட்டி வைத்திருப்பதுவும் தெரிவிக்க பட்டது என்று போன்ற வார்த்தைகளை எழுதி இருக்க மாட்டார்

இந்த வார்த்தைகளை சொல்ல மறந்துவிட்டீர்களா நண்பர் SEKARIAM  அவர்களே

 

தேவன் அவருக்கு என்னசொன்னாரோ  அவருக்கு என்ன வெளிபடுத்தினாரோ அதை தான் சுந்தர்  எழுதிகின்றார் என்பது அவர் எழுது வார்த்தைகளின் மூலம் தெரிங்கின்றது.....



-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 24th of September 2011 02:02:14 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

தேவ ஆவியானவர் சகோதரர் அவர்களுக்கு
அந்நிய தெய்வத்தின் பெயரைக்கூற வேண்டாம் என்று சொன்ன விஷயத்தை
அவர் அப்படியே இங்கு உண்மையாக கூறியிருப்பது சரி ..


ஆனால் ....

" இந்து சாமி என்பவைகளில் நல்ல சாமிகளும் உண்டு ..

அவைகளும் தான் சாத்தானால் பாதிக்கப்பட்டு உள்ளன " என்ற கருத்தைப்பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள் ..?


இந்து சாமிகள் என்பவை இருக்கின்றனவா..?

அவைகளுக்கும் சாத்தானுக்கும் அப்படி என்ன பெரிய வேறுபாடு..?

மேலும்,
ஒரு அந்நிய தெய்வம் எப்படி தனது பக்தர்களை மிக கரிசனையோடு, சமாதானத்தோடு, காக்கும் வல்லமையுடையதாக இருந்தது ..?

வேத வசன ஆதாரம் தாருங்கள் ...!



-- Edited by sekariam on Saturday 24th of September 2011 02:55:46 PM

__________________

"கர்த்தர் நல்லவர்



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

sekariam wrote:

 இப்படிச்சொல்வதோ மிக மிக தவறான காரியம் .


சகோதரர் அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி!

ஒருவர் வாழக்கையில்நடந்த உண்மை சம்பவங்களை எழுதும்போது அதில் தவறு என்று சொல்வதற்கோ, அல்லது அதை விவாத பொருளாக்கி விவாதிப்பதற்கோ அங்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றே கருதுகிறேன். நீங்கள் தவறு என்று சொல்வதற்காக நான் நடந்த காரியத்தை மறைத்து உங்களுக்கு ஏற்றாற் போல் ஏழுதமுடியுமா?  நடந்தது நடந்ததுதானே?  

நான் எழுதும் இந்த கருத்துக்கள் யாருக்கும் பாடமாகவோ அல்லது யாருக்கும் போதனயாகவோ எழுதவில்லை. அல்லது யாரும் நம்பவேண்டும் என்று கட்டாயப் படுத்தவும் இல்லை! எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் என்று எழுதி அதையும்  கிறிஸ்த்தவ தலைப்பின் கீழ் இல்லாமல்   மனதை கவர்ந்த/பாதித்த சம்பவங்கள் செய்திகள்!  என்ற தலைப்பின் கீழேயே எழுதி வருகிறேன். 

ஒரு கருத்தை எழுதும்முன்னர் எவ்வளவு பிரயாசம் எடுத்து, அது குறித்து ஆண்டவரிடம் பலமுறை விசாரித்து தியானித்து  உறுதி செய்தபின்னரே கருத்தை இங்கு பதிவிடுகிறேன். எனது அலுவல்களுக்கிடையிலும் இந்தபதிவுகளை இடுவது ஒரு கடினமான செயலே ஆங்கினும் எனது சிந்தனையில் ஆண்டவரைப்பற்றிய  நினைவுகளே எப்பொழுதும் இருக்கவேண்டும் என்பதற்காக இதை விட்டுவிடாமல் தியானித்து எழுதி வருகிறேன்.

நீங்கள் இந்த தளத்தில் எந்த ஒரு கட்டுரையோ அல்லது முழுமையான செய்தியோ இதுவரை எழுதவில்லை ஆகினும் "இப்படிச்சொல்வதோ மிக மிக தவறான காரியம்" என்று மிக சுலபமாக, நான் எழுதியது தவறு என்று எழுதிவிட்டீர்கள்.  

நான் எழுதிய காரியங்களை தவறு என்று எழுதும் முன்னர் ஆண்டவரிடம் இது குறித்து எத்தனை முறை ஜெபித்தீர்கள்?  
 
ஒருசெயலை செய்வதைவிட அதை குறைகூறுவது எல்லோருக்கும் மிக எளிதான காரியம்! நான் ஒருகருத்தை எழுதும்முன்னர் பலமுறை ஆண்டவரிடம் விசாரித்து விட்டு எழுதும்போது அதை குறை கண்டு பிடிப்பதற்கு நிச்சயம் அதைவிட அதிகமான நேரம் நீங்கள் ஆண்டவரிடம் விசாரிப்பது அவசியமல்லவா?    
 
தாங்கள்  கேட்ட பலகேள்விகளுக்கான பதில் இந்த தளத்தில் இருக்கிறது. அதையும், தாங்கள் கணித்தது தவறு என்பதை  நிரூபிக்கும்  சரியான விளக்கத்தோடு, நீங்கள் சுட்டியுள வசனத்த்ன் அடிப்படையிலேயே  வேறு ஒரு திரியில் விளக்குகிறேன்
 
மற்றபடி உங்களுக்கு சில உண்மைகள் தெரியாமல் இருக்கலாம் அல்லது அதை தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தெரிதும் ஏற்க்க மனதில்லாமல் இருக்கலாம் அதற்காக உங்களுக்காகவோ அல்லது வேறு எந்த கிரிஸ்த்தவருக்காகவோ இங்கு  எழுதப்படும் உண்மை சம்பவங்களைமாற்றி பொய் சம்பவங்களை எழுத  நான் விரும்பவில்லை.
 
நடந்ததை நடந்தபடி எழுததான் எனக்கு தேவ உத்தரவு இருக்கிறது! அதன் அடிப்படையில் நான் எழுதியிருக்கும் கருத்தில் எந்த ஒரு தவறும் இல்லை, உங்கள் புரிதலில் தான் தவறு இருக்கிறது என்பதை தனி திரியில் விளக்குகிறேன். அதை படித்திவிட்டு அங்கு உங்களது எதிர் கருத்தை தாங்கள்!     
 
கேள்வி கேட்கவும் எதிர் கருத்தை தெரிவிக்கவும் எல்லோருக்கும் நிச்சயம் உரிமை  இருக்கிறது!  தாங்கள் கேட்ட கேள்விகளிலும்  எந்த தவறும் இல்லை! ஆனால் என்னுடைய எழுத்தில் இருக்கும் முழு கருத்தையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்து கேள்வியை முன்வைக்காமல் ஒரு வரியை பிடித்துகொண்டு தவறு என்று தீர்த்து, கேள்வி கேட்பதுதான் வருத்தமளிக்கிறது!

 

சகோதரர் அவர்களின் கேள்விக்கும் முடிந்த அளவு விளக்கத்தை  கீழ்கண்ட திரியில் தர விளைகிறேன்  

 Add/remove tags to this thread
 16-em-plus-b-d.png

சகோதரர் SEKARIAM அவர்களின் பின்னூட்டத்திற்கு விளக்கம்! (
 



-- Edited by SUNDAR on Tuesday 27th of September 2011 03:23:27 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

சகோதரர்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.

சகோதரர் sekariam தெரிந்தோ தெரியாமலோ அல்லது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலோ அல்லது மற்ற தெய்வங்கள் எப்படி நம் தேவனுக்கு ஈடாகும் என்ற நோக்கத்திலோ சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார் என நினைக்கின்றேன்.

தள சகோதரர்கள் பொறுமையுடனும் விளக்கமாகவும் பதில் கொடுக்கலாம் என நினைக்கிறேன். காரணம் என்னவென்றால்,
 
சகோதரர் எட்வின் சுதாகர் எழுதிய விளக்கங்களில் இருந்து நானும் எனக்கு தெரியாத நிறைய காரியங்களை அறிந்து கொண்டேன். இது போல சகோதரர்கள் எழுப்பும் கேள்விகள் பதில் தெரிந்த தங்களைப் போல வேத விளக்கம் அறிந்தவர்களுக்கு எளிதான கேள்வியாக இருக்கலாம். ஆனால் என்போன்ற வளரும் விசுவாசிகளுக்கு மிகவும் பிரயோஜனம் உள்ளதாகவே இருக்கும்.
 
சகோதரர் எப்படிப்பட்ட மனநிலையில் இக் கேள்வியை எழுப்பி இருந்தாலும் தங்களின் விளக்கங்கள் என்போன்ற அனேகருக்கு பிரயோஜனமுள்ளதகவே இருந்தது (இருக்கும்) என நம்புகிறேன்.
 
என் மனநிலையைப் புரிந்து கொண்டதற்காக நன்றி.


-- Edited by Muthu on Monday 26th of September 2011 09:00:41 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சங்கீதம் 89:48 தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்
யோபு 24:19 வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.
 
கண்கள் திறக்கபட்ட நிலையில் நான் இருந்தாலும், எனக்குள் தேவ ஆவியானவர் இருந்ததற்கான எந்த அத்தாட்சியும்இல்லை! நான் முன்பொருமுறை ஆண்டவரின் ஆவியுடன் எங்கள் வீட்டுக்கு  வந்திருந்தபோது 'எனது வீட்டு பக்கத்தில் பாதாளம் போகும் வழி ஒன்று இருப்பதும், அந்த வழிமூலம் பூமிக்குள் இருந்து  பிசாசுகள் ஏறுவதும் இறங்குவதும் தெரிந்தது' என்று எழுதி இருந்தேன். அதே இடத்திலேயே என்னை கொண்டு படுக்க போட்டுவிட்டனர்.
 
சிறிது நேரத்தில் என்னுடய  இருதயத்தினுள்  ஓட்டை ஓன்று ஏற்பட்டு கீழேபோகும் வழிபோன்று  உருவாகி  என் ஆத்துமா என் இருதயத்தின் வழியாகவே பாதாளத்தில் இறங்க ஆரம்பித்தது!
 
ஐயோ! அதோ ஒரு முடிவில்லாத  மிகப்பெரிய படுகுழியாக இருந்தது. மிகவும் விசாலமான அந்த இடம் உள்ளே முழுவதும் மரித்த ஆத்துமாக்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி  வைக்கப்பட்டு இருந்தன. அவரவர் செய்த நன்மை தீமைக்கு தகுந்தாற்போல் மேலிருந்து கீழாக ஒன்றன்மேல் ஒன்றாக ஒரு கண்ணாடி கூடை நிறைய மீன்களை போட்டுவைத்ததுபோல் இருந்தது,  அவைகள்  என்று ஒன்றை ஒன்று தள்ளிக்கொண்டு கிடந்தன. அதன் வலது ஓரத்தில் ஒரே ஒரு இறங்கு வழி மாத்திரம் கீழ்நோக்கி போய்கொண்டு இருந்தது அதன் வழியாக நான் கீழே கீழே போய்கொண்டு இருந்தேன்.  
 
நான் ஓரளவு நல்லவன் என்று நினைத்திருந்தேன்,  ஆனாலும் எனக்கு மேலே
எங்கும் தங்குவதற்கு இடமே கிடைக்கவில்லை!  மிக மிக ஆழமாக போய்க் கொண்டே இருந்தேன். திடீர் என்று ஓர் இடத்தில் ஒரு வளைவுபோல் ஓன்று வரவே,  கொஞ்சம் அந்த இடத்தில்  நின்றேன்.  "அப்பட்டா! இத்தோடு படுகுழி முடிந்து விட்டது" என்று நினைத்து  சற்று  திருப்தியாகும்  வேளையில் அந்த சின்ன வளைவுபோல இருந்த இடத்தை சற்று வளைந்து கடந்து மீண்டும்  கீழ்  நோக்கி இரங்க ஆரம்பித்தேன்! அவ்வளவுதான் அதன்பின்னர் என்னால் தாங்கமுடியவில்லை "ஐயோ, அம்மா" என்று சத்தம் போட்டு துடிதுடித்து எழுந்து கதறினேன்.
 
என் அம்மா அப்பா தங்கை நண்பன் எல்லோரும் பதறியடித்து  ஓடி வந்து என் முன்னால்  நின்று என்ன? என்ன ஆச்சு? என்று கேட்கின்றனர்! ஆனால் நானோ மீண்டும்மீண்டும் பாதாளத்தின் அடியில் போய்கொண்டு இருந்தேன். நான் கீழே போவதை அவர்களால் தடுக்க முடியவில்லை! அவர்களுக்கு என்னால் எந்த  பதிலும் சொல்ல முடியவில்லை!  என் நிலையை புரிந்துகொள்ள அவர்களால் முடியவில்லை.  ஏதோ  பெரிய பேய் ஓன்று  என்னை பிடித்துகொண்டு பயம் காட்டுகிறது என்று அவர்கள் எல்லோரும் கருதினர். ஆனால் என்மாம்சம் மாத்திரம் பூமியில் தனியே நின்றது.  "நான்" என்ற நிலையில் இருக்கும்  என் ஆத்துமாவோ யாராலும்  மீட்க முடியாத படுகுழிக்குள் உள்ளே உள்ளே போய்கொண்டு இருந்தது! யாராலும்  ஒன்றுமே செய்யமுடியவில்லை. பெரிய சத்தம் போட்டு அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டேன்.
 
(பாதாளத்தில் இறங்கையில் நான் சிறிதுநேரம் நின்ற அந்த வளைவுபோன்ற இடம், மேல் பாதாளம் மற்றும்  கீழான பாதாளம் இரண்டையும் பிரிக்கும் ஒரு வளைவாக இருந்தததும், பெருந்தலைவர் காமராஜர் போன்ற நல்லவர்கள் அந்த மேல் பாதாளத்தில் இருப்பதாகவும் பின்னால் எனக்கு தெரியவந்தது! நான் ஒருவேளை இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல் அந்நேரம் மரித்திருந்தால், நான் செய்திருக்கும் பாவங்களினிமித்தம் நான் போகவேண்டிய இடம் எது என்பது எனக்கு அங்கே தெரிவிக்கப்பட்டதாம்
 
நான் அனுபவித்து பார்த்த அந்த பாதாளம் குறித்த காரியகளை மேலும் அறிய கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி அறிந்துகொள்ளலாம் (என்னால் இயன்றஅளவு வசன ஆதாரமும் கொடுத்துள்ளேன்)
 

மயக்கம்போட்டபின்னர்  நடந்த எந்த  சம்பவம் எதுவும் எனக்கு தெரியாது! நான் லேசாக மயக்கம் தெளிந்தபோது பார்த்தால் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் என்னை வைத்து  இரண்டுபேர் உறுதியாக  பிடித்துக்கொண்டு எங்கோ கொண்டுபோய் கொண்டு இருதனர். கடைசியில் எங்கு என்று பார்த்தால் அது ஒரு ஆஞ்சநேயர் கோவில்!  யாரோ சொன்னார்கள் என்று ஒரு ஆஞ்சநேயர் கோவிலில் கொண்டு போய், பேய் விரட்ட ஏற்பாடு செய்திருந்தனர். 
 
நானோ முன்புபோல் என் சுய திறமை எல்லாமே இழந்திருந்தேன்!
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...............


-- Edited by SUNDAR on Wednesday 28th of September 2011 03:46:32 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

பாதாள காட்சிகளை பார்த்து பயந்து  திகைத்து கதறிய எனக்கு, ஏதோ பேய் பிடித்திருக்கிறது  என்று கருதிய  எனது  வீட்டார் எல்லோரும் என்னை ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவில் ஏற்றி ஒரு கோவிலுக்கு பேய் விரட்ட  கொண்டுபோனார்கள். அதுஒரு ஆஞ்சநேயர்கோவில்! அந்த கோவிலில் கருகருவென்று  மிக பயங்கரமான பூசாரி ஒருவர் இருந்தார். அவர் அச்சு அசல்  ஒரு பேயாக எனக்கு தெரிந்தார்!
 
என்னை உள்ளே கொண்டுபோனதும்  என்னைபார்த்து பயங்கரமாக முறைத்த அந்த பூசாரி, "நீ எங்கிருந்து வந்தாய்?" என்று கேட்டார். அவரது குரலை கேட்டு நடுங்கிபோய் நின்ற நான் "மும்பையில் இருந்து வந்தேன்" என்று சொன்னேன். உடனே அவர், ஒ! மும்பைகாரனா?   நீ  எழுந்து ஓடி இந்த  கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலையை சுற்றி சுற்றி வா" என்று  அதட்டி சொன்னார்! உடனே நான் பயந்துபோய் எழுந்து ஓடினேன். இரண்டு மூன்று முறை சுற்றி வந்து பின்னர்  அவர்களுடன் அமர்ந்துவிட்டேன். "என்ன அதற்குள் அமர்ந்து விட்டாய் இன்னும் ஓடு" என்று விரட்டினார்.  நான் சரியாக சாப்பிட்டு எத்தனையோ நாட்கள் ஆகி விட்டிருந்தன அதனால் என்னால் ஓடமுடியவில்லை என்றேன். "என்ன முடியாதா இப்பொழுது உன்னை என்ன செய்கிறேன் பார்"  என்று கத்திக்கொண்டு என்னிடம்  வந்த அந்த பூசாரி  "இனிமேல் இங்கு வருவியா? வருவியா? நீ இங்கு உள்ள ஆளே கிடையாது, வேறு எதோ நாட்டில் உள்ளவன், இனி இந்தபக்கம் வரக்கூடாது" என்ற என் தலையில் அவர் தலையை வைத்து கடுமையாக முட்டி முட்டி சொன்னார். அதாவது ஒரு பேய் கடவுளின் ஆவியை விரட்ட முயல்வதை போன்ற ஒரு காட்சியை  என்னால் பார்க்க முடிந்தது. (ஆவியானவர் எனக்குள் இருந்தாலும் நான் செய்த பல தவறுகளுக்காக தேவன் என்னை அவர்கள் கையில் ஒப்பு கொடுத்துவிட்டிருந்தார்) 
 
அவர் தலையில் முட்டியதால் வேதனை தாங்க முடியாமல் வேறுஒரு பக்கம் திரும்பினேன் அந்த இடத்தில்   நிறைய சின்ன சின்ன இந்து சாமி சிலைகள் இருந்தன. அவற்றுக்கெல்லாம் சிறு சிறு துண்டு துணிகளை உடுத்தி  வைத்து இருந்தனர். அதில் முருகர், பிள்ளையார் மற்றும் பலர் இருந்தனர். நான் அந்த பக்கம் திரும்பி  அழுதபோது, அவர்கள் என்னை நோக்கி "இந்த மனித பேய்கள்  எங்களை எல்லாம் என்ன பாடு படுத்துகிறார்கள் பார். நீயாவது துணி உடுத்தி
இருக்கிறாய், எங்களுக்கு  உடுக்க ஒரு நல்ல துணிகூட  இல்லாமல்  எல்லாவற்றையும் உரிந்து கொண்டு விட்டார்கள். நாங்கள் வெளியில் எங்குமே போக முடியாதபடி கதவை அடைத்து பூட்டி விட்டு போகின்றனர். அவர்கள் இருக்கும்போதும் எங்களால் எங்கும் வெளியே போக முடியாமல் காவல் காக்கின்றனர். நீயும் வந்து இவர்களிடம மாட்டிகொண்டாயே  என்று சொல்வது போல் என் மனதில் பேசியது.
 
"அங்கு என்ன பார்வை" என்று என்னை அதட்டிய பூசாரி, "அதெல்லாம் உனக்கு எந்த ஒரு உதவியும் செய்யாது" என்று கத்தியதொடு, முகத்தை  கொடூரமாக வைத்து கொண்டு மீண்டும் பலமாக என் தலையில் முட்ட ஆரம்பித்தார்.  ஏற்கெனவே மிகுந்த பெலகீனமாக இருந்த நான் அவர் தலையில் திரும்ப திரும்ப முட்டியதன் வலியை தாங்க முடியாமல்  மீண்டும் மயங்கிவிட்டேன். .

கண்ணை விழித்து பார்த்தபோது இரவாகி இருந்தது! கோவில் பூசாரி மற்றும் இன்னும் பலர் சேர்ந்து, என் கால் கைகளை  பிடித்து ஒரு இடத்துக்கு தூக்கி கொண்டுபோய் ஒரு சேவலை வாங்கிவந்து  என்மீது வைத்து ஏதோ மந்திரம்ஓதி பின்னர்  பலிகொடுத்தனர். இன்னும் ஏதேதோ பூஜை எல்லாம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் செய்யும் பூஜை எல்லாம், மனுஷர்கள் இந்த உலகைவிட்டு  ஆண்டவரிடம் போகும் வழிகள் எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டு இருப்பது எனக்கு தெரிந்தது! அவர்கள்  அவர்களுக்கு கேடுண்டாக பூஜை செய்துகொண்டிருந்தார்கள். இறை ஆவியால் சிலமுறை  நிறப்பபட்டு காரியங்களை செய்த  நான் அங்கு இருந்ததால், அந்த பூஜை சாத்தானுக்கு மிகவும் விசேஷமாக இருந்தது.  
 
சுருக்கமாக சொன்னால் சாத்தான் என்பவன் மனுஷர்களுக்குள்  வந்து அமர்ந்து கொண்டு அவர்களுக்கு விரோதமான காரியங்களை அவர்களையே செய்யவைத்து கொண்டு இருந்தான்! ஒருவரையும் இந்த பூமியை விட்டு தப்பவிடாமல் தடுப்பதற் கான காரியங்களை நிறைவேற்றிக்கொண்டு இருந்தான். இந்த மனுஷர்களுக்கோ அது முற்றிலும் புரியவில்லை! அனால் என் கண்களுக்கு கடலை நோக்கி கடந்து போகும் வழி முற்றிலும் அடைகபட்டிருப்பது தெரிந்தது.     
 
அவர்கள் செய்வதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்று எண்ணிய நான், எனக்கு சிறிது தூரத்தில்நின்ற என் உடன்பிறந்த அண்ணனை கூப்பிட்டு "அண்ணா இவர்களை பூஜை செய்ய விடாதே எல்லா மனிதனும் பாதாளத்தில் இறங்க வழி செய்கிறார்கள் இவர்கள் பூஜை இறைவனிடம் போகும் வழியை அடைக்கிறது" என்று கதறி கண்ணீர் விட்டு கெஞ்சினேன். என் அண்ணன் மிகவும் தைரியசாலி ஏதாவது செய்வான் என்று நினைத்தேன்! ஆனால் அவனோ என்னுடய துடிப்பை கேட்டதுபோலவே தெரியவில்லை! அவனுக்கு கடவுளை பற்றி எதுவும் தெரியாத தால் என்னிடம்  "ஒண்ணும் ஆகாதுடா  கொஞ்சம் பொருமையாக இரு  பூஜை முடிந்ததும் எல்லாம் சரியாகி விடும்" என்று சொல்லிக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான்  .
 
மனுஷர்கள் இந்த உலகில்  இருந்து கடந்துபோக மொத்தம்  4 வழிகள் இருந்தது எனக்கு ஒரு தரிசனமாக  தெரிந்தது. அவற்றில் மூன்று வழிகளை ஒவ்வொரு பொருட்களை வைத்து சாத்தான் ஏற்கெனவே அடைத்து விட்டிருந்தான். கடைசியாக இருந்த நான்காவது வழியும் என் கண் முன்னே அடைக்கப்பட்டது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  அதாவது இந்த உலகம் முழுவதும் ஒரு பெரிய காம்பவுண்ட் சுவர்போல ஒன்றால் அடைக்கபட்டுள்ளது போலவும், எந்த பக்கம் போனாலும் அந்த சுவரைகடந்து யாருமே வெளியில் போகமுடியாத ஒரு நிலை இருப்பது போலவும் எனக்கு உணர்த்தபட்டது!    
 
(நீண்ட நாட்களுக்கு முப்பு  நடந்த ஒரு காரியங்கள் இங்கு  எனக்கு ஆவியில உணர்த்தபட்டிருக்கலாம்  என்றே நான் கருதுகிறேன். இந்த உலகைவிட்டு இறைவனிடம் போய் சேருவதற்கு நான்கு வழிகள் இருந்ததாகவும் ஆனால் அந்த எல்லா வழிகளும் சாத்தானால்  அடைக்கபட்டு  ஒருவரும் சாத்தானின் பிடியில் இருந்து கடந்து  வெளியில் வரமுடியாத  ஒருநிலை ஏற்ப்பட்டது.  அதாவது, யார் மரித்தாலும் சாத்தானின் இடமாகிய பாதாளத்தில் ரங்கவேண்டிய  ஒரு நிலை உண்டானதால், தேவனே பூமிக்கு ஆண்டவராகிய இயேசுவாக வந்து தன் ஜீவனை கொடுத்து ஒரு புது வழியை உண்டாக்கியிருக்ககூடும்  என்பதுவே எனக்கு தெரிவிக்கபட்ட காட்சிகள் சொல்லும்  உண்மை என்று நான் கருதுகிறேன்)


-- Edited by SUNDAR on Monday 3rd of October 2011 11:00:32 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

(இந்த திரியில் நான் எழுதும் காரியங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க என் வாழ்வில் உண்மையில் நடந்ததும், நான் அனுபவித்து அறிந்தது மான காரியங்கள் காரியங்களை அடிப்படையாக கொண்டு எழுதப் படுகிறது . இவைகளுக்கு வசன ஆதாரம். இருக்கலாம் இல்லாமலும்  இருக்கலாம். நான் அனுபவித்த வேதனைகளையும் துன்பங்களையும் இங்கு எழுதுவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். இதை ஒரு போதனைக்காக இங்கு நான் எழுதவில்லை.  வெறும் கதையாகவே எழுதுகிறேன். நம்புகிற வர்கள் நம்பலாம் நம்ப விருப்பம் இல்லாதவர்கள் விட்டுவிடலாம்)       
 
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன்:
 
அன்று இரவு பேய்விரட்டும் வேலை முடிந்து அங்கிருந்து எல்லோரும் மீண்டும் எங்கள் வீட்டுக்குவந்தோம். மிகுந்த பெலகீனமாக இருந்தநான் வீட்டுக்கு உள்ளே போகும் முன்னரே வாசலிலேயே மயக்கம்போட்டு விழுந்து விட்டேன். இப்பொழுது நான் கண் விழித்து பார்த்த போது தூத்துக்குடியில் உள்ள ஒரு RC கிறிஸ்த்தவ  ஆஸ்பத்திரியில் பெட்டில் வைக்கப்பட்டு இருந்தேன். ஒரு புறம் குளுகோஸ் ஏறிக்கொண்டு இருந்தது. நான் கண்விளிக்கும் போது நடு இரவு நேரம். சிறிது பெலன் இருந்ததால்,  நான் எங்கு இருக்கிறேன் என்பதை அறிவதற்கு எழுந்து அமர்ந்தேன். அப்பொழுது எதிர் வரிசை பெட்டின் கீழ்  நான் கண்ட காட்சியை என்னால் விவரிக்கவே முடியாது. வரிசையாக இருக்கும் ஒவ்வொரு நோயாளிகளின்  பெட்டின்கீழும் கருப்பாக கூட்டம் கூட்டமாக பேய்போன்ற  ஆவிகள் பம்மிக்கொண்டு கிடந்தன. அவைகள் உண்மையில் பேய்களா அல்லது மனுஷர்களா என்பது எனக்கு இன்று வரை தெரியாது. ஆனால அந்த நடு இரவு நேரத்தில் எல்லோரும் தூங்கி கொண்டு இருக்க, அவைகள் எல்லாம் கீழிருந்து ஒளிந்துகொண்டு என்னை பார்த்து கேலியாக சிரித்தன! "பார் உன்னை என்ன நிலைக்கு ஆளாக்கிவிட்டோம் என்று எக்காளமாக சிரித்தன" என்னால் இன்று வரை அவைகளை மறக்கவே முடியவில்லை.  
 
நடு இரவு நேரமாகையால் எல்லோருமே நல்ல தூக்கத்தில் இருந்தார்கள். எனது அண்ணன் எனதுபெட்டுக்கும் எதிர் வரிசை பெட்டுக்கும் இடையில் தரையில் படுத்து நல்ல தூக்கத்தில் இருந்தார். எனது பெட்டுக்கும் எதிர் வரிசை பெட்டுக்கும் இடையே ஒருசக்தி  பிரித்து நிற்ப்பதுபோன்ற வேறுபாடு என் கண்ணனுக்கு தெரிந்தது. அந்த பேய்களால் என் பக்கம் வரமுடியாதபடி ஒரு தடுப்பு இருப்பது போல் தெரிந்தது. ஆனால் அவைகள் எக்காளமாக சிரித்து கொண்டு கேலியாக என்னை பார்த்தன. அவைகள் கூட்டமாக இருந்ததால் பயந்துபோன நான் மேலும் எழும்பாமல் கண்ணைமூடி படுத்து விட்டேன்.
 
அடுத்த  நாள் காலையில் எழுந்தபோது மருத்துவ மனையில் நான் ஓரளவுக்கு சரியான நிலைக்கு வந்து விட்டேன். மீண்டும் எல்லா  மனிதர்களாக நன்றாக தெரிய ஆரம்பித்தனர் ஒரே நாளில் எல்லாம் சரியாகிவிட்டது. என்னை என்னாலேயே நம்பமுடியவில்லை, நடந்தது எல்லாமே ஒரு கனவுபோல் ஆனது. நான் சரியானது கண்டு என்னை மும்பையில் இருந்து அழைத்து வந்தவர்கள் அன்றே திருப்பி போய் விட்டனர். நானும் என் மனைவியும் ஓரிரு நாட்கள் அங்கு இருந்து விட்டு மீண்டும் மும்பை போக புறப்பட்டோம். எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல நிலையில் என் மனைவியை அழைத்துக்கொண்டு மும்பை போய் சேர்ந்தேன்.
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்..........

 



-- Edited by SUNDAR on Tuesday 8th of November 2011 10:18:33 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard