இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மத்தேயு : 7.21 ன் விளக்கம்


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
மத்தேயு : 7.21 ன் விளக்கம்
Permalink  
 


21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

தேவன் தன்னை விசுவாசிக்கும் மக்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்.
ஒன்று - சாதாரண விசுவாசிகள், இரண்டு - ஊழியக்காரர்கள்
இருவருக்கும் தேவன் கட்டளைகளையும், எச்சரிப்புகளையும் கொடுத்திருக்கிறார்.
சாதாரண விசுவாசிகள் தேவனைச் சேர முடியும் அல்லது அவரை விட்டு விலக முடியும் ஆனால்
ஊழியக்காரர்களோ மேலும் தேவனின் பெயரால் பொய் சொல்ல முடியும் அல்லது தேவனின் பெயரில் சொந்த சக்தியால் பிசாசுகளை துரத்தவோ, அற்புதங்களை செய்யவோ முடியும்.
மத்தேயு : 7.15 முதல் 27 வரை ஊழியக்காரர்களுக்கு தேவன் கொடுத்த எச்சரிப்பு
பழைய ஏற்பாட்டிலும் பல இடங்களில் ஊழியக்காரர்களை தேவன் எச்சரித்துள்ளார். ஆனால் இந்த வசனத்தை இயேசு வணங்கத்தக்கவர் அல்ல என்பதை காட்ட ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை

-- Edited by SANDOSH on Sunday 28th of February 2010 09:04:25 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சந்தோஷ் wrote .. .

 ///     21 பரலோகத்திலிருக்கிறஎன்பிதாவின்சித்தத்தின்படிசெய்கிறவனேபரலோகராஜ்யத்தில்பிரவேசிப்பானேயல்லாமல், என்னைநோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்றுசொல்லுகிறவன்அதில்பிரவேசிப்பதில்லை./// ....

 

பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,

பொறாமைகள், கொலைகள், வெறிகள்பெருமை

 

இப்படி அனைத்தையும் வைத்துகொண்டு இயேசுவின்  ஊலியம்செய்கிறவர்கள் அதிகம்

  

ஒரு சிறிய உதாரணம் :

 

நாம்  நம் நண்பர் கல்யாணத்திற்கு அவருக்கு கொடுக்க gift  வாங்கிகொண்டுபோவும்

குடுப்போம்  எப்பொழுதாவது  இருவர்க்கும் சண்டைவ ந்தால்  gift  கொடுத்தவனிடம்
நான் உன் ல்யாணத்திற்கு கொடுத்த   gift திரும்பவும் எனக்கு கொடு என்று கூறமாட்டும்

 

ஆம்! தேவனிடம் இருந்து அவருடைய வழியில் நடந்து அவரிடம் வரங்களை
பெற்றுகொண்டுஒருவன் திரும்பவும் பின்வாங்கிபோவான் என்றால் அவனிடம் இருந்த அந்தவரம் அப்படியே  இருக்கும் அவன் அதைப யன்படுத்தி பொருளாசையில் உள்ளத்தை நிரப்பி பெருமையை  இருதயத்திலே சேர்த்து உள்ளத்திலும் சிந்தனையிலும்  ஊறிபோனது தெரியாமல்  இயேசுவின் உளியத்தை செய்துகொண்டு இருப்பான்

 


பிலேயாம்
தேவனோடு இருந்தபொழுதுதிர்கதரிசி

 

பொருளாசை வந்து உள்ளத்தை நிரப்பியபிறகுகுறிசொல்கிறவன்

 

ஆம்! தேவனுடைய கிருபைவரங்கள் ஒருபோதுமாறாதவைகளே

 
அப்படி
பட்டவர்கள் மரிக்கும்போது தேவனிடம் ஆண்டவரேஉங்கள் நாமத்தில் திர்கதரிசனம் சொன்னேம் அற்புதங்களை செய்தும் என்பார்கள்

அப்பொழுது ஆண்டவர் நீங்கள்யார் என்று நான்அறியேன் என்று கூறுவார்

 

ஏனென்றால்   அவர்கள் பிதாவின் சித்தத்தை செய்யாமல்

தங்கள் இஷ்டபடி செய்தார்கள் ஆதனால் தான் இயேசு

 

பரலோகத்திலிருக்கிற என்பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என்றார் என்பது என் கருத்து ........................



-- Edited by இறைநேசன் on Tuesday 2nd of March 2010 01:29:26 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
 ஒரு சிறிய உதாரணம் :

 

நாம்  நம் நண்பர் கல்யாணத்திற்கு அவருக்கு கொடுக்க gift  வாங்கிகொண்டுபோவும்

குடுப்போம்  எப்பொழுதாவது  இருவர்க்கும் சண்டைவ ந்தால்  gift  கொடுத்தவனிடம்
நான் உன் ல்யாணத்திற்கு கொடுத்த   gift திரும்பவும் எனக்கு கொடு என்று கூறமாட்டும்

 

ஆம்! தேவனிடம் இருந்து அவருடைய வழியில் நடந்து அவரிடம் வரங்களை
பெற்றுகொண்டுஒருவன் திரும்பவும் பின்வாங்கிபோவான் என்றால் அவனிடம் இருந்த அந்தவரம் அப்படியே  இருக்கும் அவன் அதைப யன்படுத்தி பொருளாசையில் உள்ளத்தை நிரப்பி பெருமையை  இருதயத்திலே சேர்த்து உள்ளத்திலும் சிந்தனையிலும்  ஊறிபோனது தெரியாமல்  இயேசுவின் உளியத்தை செய்துகொண்டு இருப்பான்

 

 


நல்ல அருமையான உதாரணம் ஒன்றை தந்துள்ளீர்கள் சகோ. எட்வின்.
 
மத்தேயு 10:8 ; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்
 
என்றே ஆண்டவர் கூறியுள்ளார்!  பெற்ற வரங்களை  பணத்துக்காக வியாபாரம்  செய்பவர்களை பார்த்து ஆண்டவர்  
"உங்களை அறியேன்"  என்று சொல்ல நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. 
 
மேலும் பூர்வ காலத்திலிருந்தே பிசாசுகளும் அநேக அற்புதங்கள் செய்வதால், அற்ப்புதம் அதிசயம் மூலம் ஆண்டவரின்  சபைக்கு ஆட்கள் சேருவதை  ஆண்டவர்
விருபவில்லை என்றே நான் கருதுகிறேன்.
 
ஆண்டவர்மேல் உண்மையான அன்புடன் வராமல், அற்ப்புதங்களை பார்த்து வருபவர்கள்  விரைவில்  பின்மாற்றத்தில் போய்விடுவார்கள் என்பதை இஸ்ரவேல்
ஜனங்களின் நடபடிகளில் இருந்து அறிந்துகொள்ளமுடியும்.
 
மோசேயை தேவன் தேர்ந்தெடுத்த நாளில் இருந்து அவன் மூலம் அனேக அற்ப்புத அதிசயங்களை செய்தும் இறுதிவரை
இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயை பார்த்து
அடிக்கடி
முருமுறுத்ததுட்ன்  எகிப்த்துக்கு திரும்பி போவதிலேயே நோக்கமாக
இருந்தனர்.
 
எனவே அற்புதம் அதிசயம் செய்வதென்பது  ஆதுமாகளை 
ஆண்டவரிடம் சேர்க்கும் ஒரு 
சரியான வழியல்ல என்றே நான் கருதுகிறேன்.
 
இறுதியாக ஒருவர் அற்ப்புதம் அதிசயம் செய்தாலும் ஆண்டவரின் வார்த்தைகள்படி (அதாவது பிதாவின் சித்தப்படி)
செய்தால் மட்டுமே தப்பிக்க முடியும்.
 
சுவிசேஷத்திற்காக தன்னையே தியாகம் செய்த பவுலுக்கே தான் ஆகாதவனாகி  போய்விடுவோமோ  என்ற பயம் இருந்திருக்கிறது.
 
I கொரிந்தியர் 9:27 மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

இவ்வாறு இருக்கையில், இக்கால ஊழியர்களும் நாமும் எம்மாத்திரம். அனுதினமும் தன்னை தானே வேத வசனங்களின் வெளிச்சத்தில் சோதித்தறிவது மிக மிக அவசியம்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard