இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: செம்மையானவர்களின் ஜெபமே தேவனுக்கு பிரியம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
செம்மையானவர்களின் ஜெபமே தேவனுக்கு பிரியம்!
Permalink  
 


எனக்கு மிகவும் பழக்கமான ஒருகம்பனியின் முதலாளி ஒருவர் உண்டு அவர்கள் தன்னிடம் வேலை பார்க்கும் சாதாரண ஊழியர்களை மிகவும் கடினமாக நடத்தி அழ அழ வைத்துவிடுவார்கள்.வெளியிடங்களில்  கிடைப்பதுபோல் சரியான சம்பளம் கொடுப்பது கிடையாது. பிறருக்கு கொடுப்பது சம்பந்தமான எந்த ஒரு காரியத்திலும் மிகுந்த கஞ்சத்தனம் பிடித்து எல்லோருடைய வயிற்றேரிச்ச்சலை கட்டிகொள்வார்கள்.
 
நான் இதுசம்பந்தமாக அவர்களிடம் எடுத்துசொல்லியும் எந்த மாறுதலும் இல்லை! ஆனால் அவர்கள்  என்னை பார்க்கும்போதெல்லாம் "சுந்தர் உங்களை போல நல்லவரை நான் பார்த்ததே  இல்லை. உங்களிடம் ஏதோ அபூர்வசக்தி இருக்கிறது  அப்படி இப்படி என்று என்னை புகழ்ந்து வார்த்தைகளால் உயர தூக்கிவிடுவார்.
 
இவர்களின் உண்மை குணத்தை அறிந்த எனக்கோ இவர்கள் என்னைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டாலே அதிகமான கோபமும் எரிச்சலுமே உண்டாகுமேயன்றி அவைகள் வார்த்தையை கொஞ்சமும் கேட்கவோ ஏற்க்கவோ  மனது வராது.  "நானும் உங்களைபோல மனிதன்தான் இவ்வளவுக்கும் உங்கள் அளவு எனக்கு வசதியில்லை அப்படியிருந்தும் நான் நேர்மையாக வாழ்வதாக சொல்லும் நீங்கள் அதை என் முயர்ச்சிக்ககூடாது? என்று கேட்டால்    நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒருபடி மேல், நாங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் உங்கள் போல எங்களால் இருக்கமுடியாது என்று சொல்லி நழுவி விடுவார்கள்.  
 
செய்யவேண்டிய காரியங்களை ஒழுங்காக செய்யாமல் என்னை பெரியவனாக தூக்கி  வைத்து பேசிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுவதோ அல்லது அவர்கள் என்னை உயர்த்திவிட்டார்கள் என்று எண்ணி அவர்கள்மேல் எனக்கு மதிப்போ உயர்வது இல்லை மாறாக  வெறுப்புதான் மேலோங்கும்.  
  
இதை ஏன் சொல்கிறேன் என்றால்!
 
நமதாண்டவர் மனிதனை பார்த்து சொல்கிறார் "ஆவியில் எழிமையாய் இரு, இரக்கம் உள்ளவனாக இரு, நீதி நேர்மை அன்பு  உள்ளவனாக  சாந்த குணம் உள்ளவனாக இரு" என்று. ஆனால் இதையெல்லாம்  அநேகர்  ஒரு பொருட்டாக எடுத்துகோள்வதே இல்லை!  இதற்க்கு மாறாக நமது இஸ்டப்படி அவரது வார்த்தையை  கண்டுகொள்ளாமல் வாழ்ந்துவிட்டு, வாரத்தில் ஒரு நாள்  சபைக்கு சென்று "நல்லவரே, வல்லவரே, அன்புள்ளவரே, கருணையுள்ளவரே, எனக்காக மரித்தவரே என்று அவரை புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறோம்".  இந்த வார்த்தைகளை கேட்டு உண்மையில் தேவன் எரிச்சல்தான் அடைவாரே தவிர நீங்கள் அவரை உயர்த்தி புகழ்ந்துவிட்டீர்கள் என்று எண்ணி உங்கள் மேல் அவருக்கு மதிப்பு உயர்ந்துவிடாது.
 
தேவன் ஒரு புகழ் விரும்பியல்ல! உங்கள் புகழ் வார்த்தைகள் மற்றும் புகழ்ச்சிகள் அவருக்கு தேவையில்லை. நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் நல்லவர்தான்!  உங்களையும் அவரைப்போல நல்லவராகவும் பரிசுத்தராகவும் இருக்கத்தான் அழைத்திருக்கிறாரேயன்றி அவரை உயர்த்தி புகழ்ந்துவிட்டு அவர் 
வார்த்தைக்கு செவிகொடுக்கவில்லை எனில்  உங்களால் தேவனுக்கு  எவ்விதத்திலும் பயனில்லை.     
 
வேத வனத்துக்கு கீழ்படியாமல் துன்மார்க்கமாய்  வாழும் ஒருவருடைய எவ்வித பலியும் ஜெபமும் அவருக்கு அருவருப்பனதுதான்.
 
நீதிமொழிகள் 15:8 துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது
நீதிமொழிகள் 28:9 வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிற வனுடைய ஜெபமும் அருவருப்பானது
 
அவரது வார்த்தைக்கும் கீழ்படிந்து செம்மையாக வாழ விரும்பும் ஒருவருடைய ஆராதனையும் ஜெபமுமே கர்த்தருக்கு பிரியமானது!
 
சங்கீதம் 11:7 கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

நீதிமொழிகள் 15:8
  செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Amen.. Super msg...........

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard