இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிமுகம் - சகோ. abreham1975


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
அறிமுகம் - சகோ. abreham1975
Permalink  
 


கர்த்தருடைய இரகசியம் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. சங்கீதம் 25:14

நான் ''யெகோவாவின் சாட்சியே'' சேர்ந்தவன். அதாவது விசுவாசியாக கடந்த மூன்று மாதமே. ஜெர்மனி வேதாகம
கல்லூரியில் வேதம் முறையாக படித்து கொண்டு இருக்கிறேன். நண்பர்களே தங்களின் உதவி தேவை. நன்றி

இப்படியாக எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின்ஊழியக்காரரென்றும்,தேவனுடைய இரகசியங்களின் உக்கிரானக்காரரென்றும் எண்ணிக் கொள்ளக்கடவன். 1கொரிந்தியர்.4:1

இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்படுவதற்காக, பிதாவாகிய தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அன்புக்குரிய சகோதரிகளே,

யேகோவா தேவனின் பரிசுத்த நாமத்தில் இயேசுகிறிஸ்துவின் வழியாக உங்களுக்கு வாழ்த்துதலும் கிருபையும் சமாதனமும் உண்டாவதாக.

ஆதிகால முதல் தேவன் தமக்குள்ளாக வைத்திருக்க இரகசியங்களை பங்குபங்காகவும் வகைவகையாகவும் வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்

 

 

மனித இரட்சிப்புக்காக தேவன் வெளிப்படுத்திய இந்த இரகசியங்களை, மனிதன் அறியக்கூடாதபடிக்கு இந்த பிரபஞ்சத்தின் தேவனான பிசாசானவன் அநேக உபாய தந்திரங்களினால் மறைத்து அநேகருடைய மனக்கண்களை குருடாக்கியிருக்கிறான்.

 

 

பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தும் சாத்தானால் மறைக்கப்பட்டதுமான தேவனுடைய இந்த மேன்மையான இரகசியங்களை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும்.


வேதத்தை அறிய வாஞ்சையுள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாய் இருக்கும். தேவ சமாதானம் உண்டாவதாக ஆமென்.



-- Edited by abreham1975 on Friday 14th of January 2011 03:19:40 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: கர்த்தருடைய இரகசியம் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. சங்கீதம் 25:14
Permalink  
 


கர்த்தருக்கு பயந்தவராக நமது  தளத்துக்கு புதியதாக  வருகை தந்து பல பதிவுகளை தந்திருக்கும்  abreham1975 அவர்களை  ஆண்டவராகிய  இயேசுவின் இனிய  நாமத்தில்  வாழ்த்ததி  வரவேற்கிறோம். 
 
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி!  
 
இந்த தளத்தில் தாங்கள் பதிவிட்டுள்ள எல்லா கருத்துக்களும் தங்கள் சொந்த கருத்துக்களா? ஆம் என்றால் நல்லது.  இல்லைஎனில் எந்த தளத்தில் இருந்து எடுத்து பதிவிடப்பட்டுள்ளது என்பதற்கான தொட்டுப்பை தந்து பதிவிடும்படி  அன்புடன்  வேண்டுகிறேன்.
 
தொடர்ந்து வாருங்கள் நல்ல கருத்துக்களை தாருங்கள்! 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதரர்  ஆப்ரஹாம்  தங்கள்  வருகைக்கு  நன்றி. ஆனால்  தாங்கள்  
 
 
என்ற  தளத்தில்  இருந்து  பதிவுகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறீர்களே. சம்பந்தப்பட்ட தளத்தின் தொடுப்பை கொடுத்தால் தேவைப்பட்டவர் போய் படித்துகொள்வார்களே.  
 
இவை அனைத்தும் தாங்களே எழுதியவைகளாக இருந்தாலும் ஓன்று இரண்டாக பதிவிட்டால் அவற்றின் சரியான நிலையை சற்றேனும்  ஆறாய முடியும்.  தாங்கள் எழுதியிருப்பவைகளில் அனேகமானவற்றை நாங்கள் ஏற்கெனவே வாசித்து விட்டோம்.
 
கிரிஸ்த்தவத்துக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் பிரிவுகள் 
உள்ளது. தாங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என்று கருதுகிறேன். தாங்கள் ஏற்கெனெவே எழுதியுள்ள கருத்துக்களை குறித்து நண்பர்கள் கூறும் கருத்துக்களை ஆராய்ந்து பின்னர் அடுத்த பதிவை தொடருங்கள் 
 
நன்றி 
இறைநேசன்   
 


__________________


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink  
 

நான் ''யெகோவாவின் சாட்சியே'' சேர்ந்தவன். அதாவது விசுவாசியாக கடந்த மூன்று மாதமே. ஜெர்மனி வேதாகம
கல்லூரியில் வேதம் முறையாக படித்து கொண்டு இருக்கிறேன். நண்பர்களே தங்களின் உதவி தேவை. நன்றி

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
கர்த்தருடைய இரகசியம் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. சங்கீதம் 25:14
Permalink  
 


abreham1975 wrote:

நான் ''யெகோவாவின் சாட்சியே'' சேர்ந்தவன். அதாவது விசுவாசியாக கடந்த மூன்று மாதமே. ஜெர்மனி வேதாகம
கல்லூரியில் வேதம் முறையாக படித்து கொண்டு இருக்கிறேன். நண்பர்களே தங்களின் உதவி தேவை. நன்றி




சகோதரர் அவர்களே! தங்களைப்பற்றி எழுதியமைக்கு நன்றி.

விசுவாசியாகி  மூன்று மாதம் என்றால் அதற்க்கு முன் தாங்கள் எந்த  மதத்தை
சார்ந்தவராக  இருந்தீர்கள் என்று தெரிவித்தால் நலம்!
 
வேதாகமத்தை முறையாக கறப்பது என்பது மிக மிக சிறந்தது.தொடருங்கள்.
 
ஆகினும் என்னுடைய ஒரு சிறிய  வேண்டுகோள்.  நீங்கள் உடனடியாக  பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெறவேண்டும் இல்லையேல் நீங்கள் சுலபமாக திசைதிருப்பபடுவீர்கள். அதற்க்கான வழிமுறைகளை கீழ்கண்ட தொடுப்பில் வசன ஆதாரந்த்துடன் தந்துள்ளேன் படித்து பயன்பெறவும்!
 
 
தாங்கள் ஜெர்மனியில்  இருப்பதால் என்னால் தங்களை ஆவியானவர் அபிஷேகத்துக்குள் வழிநடத்த முடியாது.  மன்றாடி ஒப்புகொடுத்து ஆண்டவரிடம் ஜெபியுங்கள் அதற்கான வழியை அவர் நிச்சயம் திறப்பார்  
 
நமது தளத்தில் எழுதப்பட்டுள்ள கருத்துக்களை படித்து தங்கள் மனதில் எழும் எந்த சந்தேகமானாலும் கேள்வியை எழுபலாம். தேவன்தாமே தங்களை  சரியான  வழியில் கரம்பிடித்து அழைத்து செல்ல தங்களுக்காக  ஜெபிக்கிறோம்
 
புதிதாக ஆண்டவரை ஏற்றுக் கொண்டுள்ள இந்த் சகோதரர் சாத்தானால்  திசை திருப்பபட்டாமல் இருக்க தளசகோதர சகோதரிகள் தங்கள் ஜெபங்களில் இந்த சகோதரரை நினைத்துகொள்ளும்படி  அன்புடன் வேண்டுகிறேன்.
 
அன்புடன்
சுந்தர்


-- Edited by SUNDAR on Friday 14th of January 2011 03:47:21 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard