இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விடுகதை...!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: விடுகதை...!
Permalink  
 


மிக சரி சகோதரரே..  சரியாய் சொன்னீர்கள்... .. அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை..
 

அவர் சர்வ ஞானி!!!



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர்களே,

எதனை நியாயபிரமாணமாகவும், தீர்க்கதரிசனங்களாகவும் இயேசு குறிப்பிட்டார்??



தெரிந்தவர்கள் கூறுங்கள்!!



-- Edited by JOHN12 on Tuesday 20th of March 2012 02:02:36 PM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

மத் 7 : 12. ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சரியான பதில் சகோதரரே!!



__________________


இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

தேவனுக்கு மகிமை உண்டாவதாக!



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

போட்டி பொறாமை என்பது நாம் வாழும் இந்த  பூமியில் அதிகமாக எல்லோருடதிலும் எல்லா மனிதர்களிடதிலேயும் உண்டு 
இது இல்லாத இடமே கிடையாது என்று சொல்லலாம்
 
 
மனிதர்களுடைய எல்லா செயல்களிலும் இந்த இரண்டு காரியனகள் நிச்சயம் இருக்கும் உதாரணமாக நம்முடன்  இருக்கும் மனிதர்  ஏதாவது ஒரு விஷயத்தில் உயர்ந்து இருந்தால் சரி உடனே நமக்கு இந்த பொறாமை போட்டி என்கின்ற எண்ணம் வந்துவிடும் அது யாராய்இருந்தாலும் சரி. எந்த காரியமாய் இருந்தாலும் சரி
 
 
பதவி
படிப்பு
வேலை
ஊழியங்கள்
சபைகள் எல்ல காரியத்திலும் இது உண்டு
 
 
ஆனால் என் ஆராட்சியின் படி பார்த்தால்  ஒரே ஒரு காரியத்தில் மட்டும் இந்த போட்டி பொறாமை என்பது  வரவே இல்லை
அது எந்த காரியம் என்பதை தளத்தின் சகோதர்கள் யோசித்து சொல்லவும்.....


-- Edited by EDWIN SUDHAKAR on Monday 4th of June 2012 01:44:54 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

 


நண்பரே!!!! 
பாதாளத்தில் மாத்திரமே இவ்வாறாக போட்டி பொறாமை இல்லாதிருக்கும் என நினைத்தேன்...
ஆனால் அங்கேயும் பற்கடிப்பு உண்டு என வேதம் கூறுகிறதை நினைத்தால் தலை சுற்றுகிறது...

மத்தேயு 13:42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

லூக்கா 13:28 நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். 

மத்தேயு 22:13 அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். 

மரணத்தில் தான் பொறாமை இல்லாதிருந்து ஓய்வோம் என எண்ணுகிறேன்.....confuse 


-- Edited by JOHN12 on Tuesday 5th of June 2012 05:48:53 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதர்  ஜான அவர்கள் விளக்கத்தின்படி மரணத்துக்கு பின்னர் பாதாளத்தில் பொறாமை ஒழிந்துபோகும் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட வசனம் இருக்கிறது. ் 

பிரசங்கி 9:6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று;  
.
ஆனால் சகோதரர் எட்வின் அவர்களின் கேள்விப்படி "இந்த பூமியில் வாழும் மனுஷர்களிடம் எல்லா காரியத்திலும் பொறாமை இருக்கிறது ஆனால் ஒரே ஒரு காரியத்தில் மட்டும் போட்டி பொறாமை வருவதில்லை, அது எந்த காரியம் என்று கேட்டுள்ளார்"  

சுருக்கமாக கேட்டால்  "இந்த பூமியில் வாழ்பவர்கள் எந்த காரியத்தில் போட்டி பொறாமை கொள்வதில்லை?"  என்று எடுத்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன் 


__________________


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

அன்புக்குப் பொறாமையில்லை ( I கொரி 13:4)



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

I am Follower of Jesus wrote:

அன்புக்குப் பொறாமையில்லை ( I கொரி 13:4)


 

"ஆம்! உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் பொறாமைக்கு இடமே இல்லை

இதுவரை எங்களால் நிதானிக்க முடியாத சரியான பதிலை கூறியிருக்கிறீர்கள் சகோதரரே மிக்க நன்றி

தேவ நாமம் மகிமைப்படட்டும்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

அன்பு சகோதரர்களே,


தனக்கு சம்பந்தம் இல்லாத வேலையில் தலையிட்டு கொள்ளும் வழிபோக்கனை வேதம் யாரோடு ஒப்பிடுகிறது?
-----------------------

வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்( நீதி 26:17)



-- Edited by I am Follower of Jesus on Wednesday 11th of July 2012 05:08:51 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 


அன்பு சகோதரர்களே,

தனக்கு சம்பந்தம் இல்லாத வேலையில் தலையிட்டு கொள்ளும் வழிபோக்கனை வேதம் யாரோடு ஒப்பிடுகிறது?


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சரியான விடையை சொல்லியிருக்கிறீர்கள்!!  கர்த்தர் தங்கள் வேத அறிவை  பலுக  செய்வாராக!!



__________________


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

JOHN12 wrote:
கர்த்தராகிய இயேசு தம் சிறுபிராயத்தில் சில உணவுவகைகளை மாத்திரம் உட்கொண்டாராம். இவைகள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன!!
என்ன உணவு உட்கொண்டார் என அறிந்தவர்கள் வசனத்தை குறிப்பிடவும்.. 

 வருடைய சீஷர்கள் சாப்பிட்டார்கள் என்றுதான் உள்ளது
கதிர்
அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள் (மத் 12:1)
மீன்
 அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.(மத் 14:19)

ஆனால் இது உயிர்தெழுந்த பிறகு
மீன், தேன்
லூக்கா 24:42 அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்

ஆனால் இது சிறுபிரயாத்தில் இல்லை
அப்பம்
மத்தேயு 26:17 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள் (மத் 26:17 )

திரட்சப்பழ ரசம்
பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (மத் 26:27)

அத்திப்பழம்
 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.(மத் 21:21

 

 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது (யோவான்4:34.)

 

இவ்வளவு தான் என் புத்திக்கு எட்டியது தெரிந்த சகோதரகள் சொல்லவும்



-- Edited by I am Follower of Jesus on Thursday 2nd of August 2012 11:39:08 AM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

கர்த்தராகிய இயேசு தம் சிறுபிராயத்தில் சில உணவுவகைகளை மாத்திரம் உட்கொண்டாராம். இவைகள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன!!
என்ன உணவு உட்கொண்டார் என அறிந்தவர்கள் வசனத்தை குறிப்பிடவும்.. 


__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard