இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாபம் ஏன் இன்னும் நீங்கவில்லை ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
சாபம் ஏன் இன்னும் நீங்கவில்லை ?
Permalink  
 


இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மறித்து நம்முடைய சாபங்களை நீக்கினார்
என்று வேதம் சொல்கின்றது.

கலாத்தியர் 1:4 அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய

சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

 

I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச்

சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

 

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி,

நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.


ஆனால் ஆதாம் காலத்தில் கொடுக்கப்பட்ட   அதே சாபம் இன்றும் இருக்கின்றது

ஆதியாகமம் : 3
16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

 

இயேசு கிறிஸ்து பாவத்துக்கும் சாபத்துக்கும் மறித்து உயிர்த்தும் கூட இந்த சாபம் இன்னும் நீங்கவில்லை ஏன் ?

 

இந்த சாபமானது இயேசுவை எற்றுகொண்டவர்களை கூட விட வில்லையே ஏன் ?

 

இயேசு கிறிஸ்து சிலுவையில் எந்த பாவத்திற்காக சாபதிர்க்காக  மரித்தார் ?



-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 9th of April 2013 12:19:35 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மறித்து நம்முடைய சாபங்களை நீக்கினார்
என்று வேதம் சொல்கின்றது.

கலாத்தியர் 1:4 அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய

சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச்

சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி,

நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

ஆனால் ஆதாம் காலத்தில் கொடுக்கப்பட்ட   அதே சாபம் இன்றும் இருக்கின்றது

 

ஆதியாகமம் : 3

16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

 

இயேசு கிறிஸ்து பாவத்துக்கும் சாபத்துக்கும் மறித்து உயிர்த்தும் கூட இந்த சாபம் இன்னும் நீங்கவில்லை ஏன் ?
 

இந்த சாபமானது இயேசுவை எற்றுகொண்டவர்களை கூட விட வில்லையே ஏன் ?

இயேசு கிறிஸ்து சிலுவையில் எந்த பாவத்திற்காக சாபதிர்க்காக  மரித்தார் ?



-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 9th of April 2013 12:19:35 PM

====================================================================================================================

 

 சூப்பர் கேள்வி அண்ணா.  
இதற்க்கான பதிலை அறிய எனக்கும் ஆவல் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் பதில் தரவில்லையே 
நிச்சயம் பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். 

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

JOHNJOSH Wrote

___________________________________________________________

சூப்பர் கேள்வி அண்ணா.  

இதற்க்கான பதிலை அறிய எனக்கும் ஆவல் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் பதில் தரவில்லையே 

நிச்சயம் பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

______________________________________________________________________

உங்களை போலவே நானும் காத்துகொண்டு எதிர்பார்த்துக்கொண்டு  இருக்கின்றேன்
இந்த தலைப்பை பற்றிய செய்தி அறிந்துகொள்ள மிகுந்த ஆவாலாய் இருக்கின்றேன்

யாராவது எழுதுங்க  Please............

 



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

இயேசு கிறிஸ்து பாவத்துக்கும் சாபத்துக்கும் மறித்து உயிர்த்தும் கூட இந்த சாபம் இன்னும் நீங்கவில்லை ஏன் ?

இந்த சாபமானது இயேசுவை எற்றுகொண்டவர்களை கூட விட வில்லையே ஏன் ?

இயேசு கிறிஸ்து சிலுவையில் எந்த பாவத்திற்காக சாபதிர்க்காக  மரித்தார் ?

 


 

அன்பான சகோதர்களே,

 
பாவம் செய்த ஆதாம்/ஏவாளை தேவன் சபித்தார் என்பதும் அந்த சாபத்திநிமித்தம் துன்பமும் துயரமும் வேதனையும் இந்த உலகினுள்  வந்தது என்பது உண்மை!
 
ஆதி 1: 16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

அதுபோல் தேவ குமாரனாம்   இயேசுவானவர் எலும்பும் சதையும் உள்ள, நம்மை போன்ற மாம்சமாக தோன்றி நம்முடைய பாடுகள் துக்கங்கள் சாபங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டார் என்பதும் உண்மை!
 
 ஏசாயா 53:11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
 
 
எபிரெயர் 9:28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
 
 
எனினும் இன்னும் பாவமும் சாபமும் தொடர காரணம் என்னவெனில் தேவனின் திட்டங்கள் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை! 
 
யோபு 14:22 அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.
 
அதாவது இந்த பாவ மாம்சம் நமக்கு இருக்கும்வரை நமக்கு நோவும் துன்பமும் துக்கமும் இல்லாமல் போகாது.
 
 
ஓர் நாளில் நாமெல்லாம் மறுரூபம் ஆகி தேவனால் எடுத்துகொள்ள படுவோம் 
 
 
I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
 
அதன்பின்னர் தேவன் நம்மோடு வாசம் பண்ணுவார் அப்பொழுது 
 
வெளி 7:17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

வெளி 21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
 
ஆம்! அதன்பின்னர்தான் மரணமில்லை என்று வேதம் சொல்கிறது!  அதுவே தேவ திட்டத்தின் முடிவு! அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டியது அவசியம். 
 

 



-- Edited by SUNDAR on Tuesday 7th of May 2013 09:05:57 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

சுந்தர் அண்ணா சொல்வதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

ஆதாம் ஏவாளை தேவன் நித்திய காலமாக வாழும் படிக்கே படைத்தார்.

பாவமும் அதனால் வந்த சாபமுமே அவர்களுக்கு மரணத்தை கொடுத்தது.

பூமியை நித்தியமாக இருக்கும் படிக்கே தேவன் படைத்திருப்பார்.

பாவத்தால் பூமி அசுத்தமானதால் இப் பூமியை மனிதனின் நித்திய வாழ்வுக்கான இடமாக பயன் படுத்த முடியாது.


மனித சரீரம் கறைப்பட்டுள்ளதால் அதையும் நித்தியமாக வாழ வைக்க முடியாது.

அதாவது நித்தியத்துக்கான தகுதியை இழந்த மானிட சரீரமும் பூமியும் கட்டாயம் அழிந்தே போகும்.

அதனால் தான் தேவன் கடைசி எக்காளம் தொனிக்கும் போது நம்மை மறு ரூபமாக்குகிறார்.

நமது மண்ணும் கறையுமான சரீரம் அழிக்கப்பட்டு நித்தியத்துக்கு தகுதியான சரீரம் கொடுக்கப் படுகின்றது.

அதே போல கறைப்பட்ட பூமியும் அழிக்கப்பட்டு புதிய பூமி உண்டாக்கப் படுகின்றது.

எனவே சுந்தர் அண்ணா சொன்னது போல இந்த சரீரம் இருக்கும் வரையில் நோவும் துக்கமும் உண்டு

தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் புதிய வானம் புதிய பூமி புதிய சரீரத்தில் தான் நிறைவேறும் என நினைக்கிறேன்

இயேச சிலுவையில் நமது பாவத்தை சுமந்து தீர்த்ததால்தான் நித்தியமாகவே மரணத்தில் அழிந்து கொண்டிருக்க வேண்டிய சரீரத்துக்கு

முடிவுண்டாக்கி புதிய சரீரத்தை நமக்கு கொடுத்து நித்திய ஜீவனுக்குள் நம்மை நடத்துகிறார். 

அங்கே பாவமும் இல்லை, சாபமும் இல்லை, நோயும் இல்லை.



-- Edited by t dinesh on Thursday 9th of May 2013 01:26:24 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

t dinesh wrote:

_______________________________________________________________________________________

சுந்தர் அண்ணா சொல்வதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

ஆதாம் ஏவாளை தேவன் நித்திய காலமாக வாழும் படிக்கே படைத்தார்.

பாவமும் அதனால் வந்த சாபமுமே அவர்களுக்கு மரணத்தை கொடுத்தது.

பூமியை நித்தியமாக இருக்கும் படிக்கே தேவன் படைத்திருப்பார்.

பாவத்தால் பூமி அசுத்தமானதால் இப் பூமியை மனிதனின் நித்திய வாழ்வுக்கான இடமாக பயன் படுத்த முடியாது.


மனித சரீரம் கறைப்பட்டுள்ளதால் அதையும் நித்தியமாக வாழ வைக்க முடியாது.

அதாவது நித்தியத்துக்கான தகுதியை இழந்த மானிட சரீரமும் பூமியும் கட்டாயம் அழிந்தே போகும்.

அதனால் தான் தேவன் கடைசி எக்காளம் தொனிக்கும் போது நம்மை மறு ரூபமாக்குகிறார்.

நமது மண்ணும் கறையுமான சரீரம் அழிக்கப்பட்டு நித்தியத்துக்கு தகுதியான சரீரம் கொடுக்கப் படுகின்றது.

அதே போல கறைப்பட்ட பூமியும் அழிக்கப்பட்டு புதிய பூமி உண்டாக்கப் படுகின்றது.

எனவே சுந்தர் அண்ணா சொன்னது போல இந்த சரீரம் இருக்கும் வரையில் நோவும் துக்கமும் உண்டு

தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் புதிய வானம் புதிய பூமி புதிய சரீரத்தில் தான் நிறைவேறும் என நினைக்கிறேன்

இயேச சிலுவையில் நமது பாவத்தை சுமந்து தீர்த்ததால்தான் நித்தியமாகவே மரணத்தில் அழிந்து கொண்டிருக்க வேண்டிய சரீரத்துக்கு

முடிவுண்டாக்கி புதிய சரீரத்தை நமக்கு கொடுத்து நித்திய ஜீவனுக்குள் நம்மை நடத்துகிறார். 

அங்கே பாவமும் இல்லை, சாபமும் இல்லை, நோயும் இல்லை.

____________________________________________________________________________________________

தினேஷ் அவர்களே சுருங்க சொன்னாலும் சூப்பரா சொன்னீங்க..



-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 9th of May 2013 11:11:06 AM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

நன்றி. edwin anna



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

மிக அருமையான கேள்வி.

//கலாத்தியர் 3:10. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.//

 

இன்றும் நாம் நியாயப்பிரமாணத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பதாலும், முற்றிலும் ஆவியானவருக்குக் கீழ்ப்பட்டிருகாத்தும் காரணமாக இருக்குமோ?

 

//கலாத்தியர் 5:18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

 

19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,

 

20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,

 

21. பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.//

 

மாம்சத்தின் கிரியை முற்றிலுமாக அழிந்து, ஆவிக்குறியவர்களாக மாறும் பொழுது சாபங்கள் நீங்குமோ?

 

இன்னும் சரியான விளக்கத்தை மூத்தவர்கள் பகிருமாக வேண்டுகிறேன்.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

இயேசுவின் பொன்னான 'ஆயிரம் கால அரசாட்சியில்' கூட சாபம் இராமல் போகும் என வேதம் சொல்லவில்லை. பின்வருமாறு  அவரது அரசாட்சியை சித்தரித்தாலும் சாபம் அட்ட்ருபோனதாக  கூறவில்லை!!!

 
தானியேல் 9:24 மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
 

புதிய பூமி சிருஸ்டிக்கபட்டிருக்கும் போது  மாத்திரமே ஒரு சாபமும் இருக்காது!! என வேதம் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது !!!

இதனை வேதத்தின் கடைசி அதிகாரமாகிய வெளி 22 இல் காணலாம்.
 
வெளி 22:3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
Glory to GOD THE LORD


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard