இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்தவர்கள் உலகத்துக்கு "மரித்தவர்கள்"?!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
கிறிஸ்த்தவர்கள் உலகத்துக்கு "மரித்தவர்கள்"?!
Permalink  
 


ரோமர் 6:8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
 
கிறிஸ்தவர்கள் "கிறிஸ்த்துவோடேகூட மரித்தவர்கள்" என்று பவுல் சொல்கிறார்!  
  

"மரித்தவன்" என்றால் பொருள் என்ன? 

 
ஒருவன் மரித்தவன் என்றால் அதற்க்கான அடையாளங்கள் என்னென்ன? 
 
மரித்தவன் மரணமடைந்தள்ளான் என்று எதனால் தீர்மானிக்கப்படுவான்?  
 
மரித்தவனை என்னதான் அடித்தாலும் அவன் திருப்பி அடிக்க மாட்டான்! 
 
உலகத்துக்கு மரித்தவன் என்று சொல்லும் இன்றைய கிறிஸ்த்தவர்கள் அப்படி இருப்பார்களா?
 
மரித்தவனின் ஒரு கன்னத்தில் ஓங்கி அடித்தால் அவன் தானாக இரண்டாவது கன்னத்தை திருப்ப வாய்ப்புண்டு 
 
லூக்கா 6:29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; 
 
மரித்தவனிடம் போய் அவன் வஸ்திரத்தை பிடுங்கினால் அவன் மற்ற துணிகளை எடுக்க தடை செய் மாட்டான்/ சண்டைக்கு வரமாட்டான்!
 
இன்றைய கிறிஸ்த்தவர்கள்  அப்படி இருப்பார்களா?
 
லூக்கா 6:29 உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
 
மரித்தவனை என்னதான் திட்டினாலும் மோசமான வார்த்தை பேசினாலும்  திரும்ப பேச மாட்டான் 
 
இன்றைய கிறிஸ்த்தவர்கள் அப்படி இருப்பார்களா?
 
மத்தேயு 5:11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச்சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
 
மரித்தவன் எதற்கும் கவலைப்பட மாட்டான், நாளைக்கென்று எந்த ஒரு  திட்டமும்  போடமாடான், பணத்தை சேர்த்து வைக்க மாட்டான், காசு காசு என்று அலையமாட்டான், காணிக்கை வேண்டும் என்று கேட்டு பிரசங்கம் செய்ய மாட்டான்   
 
இது எல்லாமே இயேசுவின் கட்டளைகளில் அடங்கியுள்ளதுதான். 
 
இயேசு உலகத்துக்கு மரித்தல் என்றால் என்னவென்பதை விளக்கமாக சொல்லியிருக்கிறார், அதை பவுல் சுருக்கி சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான். 
 
இயேசு சொன்னதில் கொஞ்சமாவது செய்து உலகத்துக்கு மரிக்க நாம் முயற்ச்சியாவது செய்ய வேண்டாமா? ஆனால இதில் எல்லாமே செய்துகொண்டு "உலகத்துக்கு மரித்தேன்" என்று  சொன்னால் அதன் பொருள்தான் என்ன?  
 
நீங்கள் மரித்துவிட்டீர்கள் என்பதற்கு ஏதாவது ஒரே ஒரு அடையாளம் சொல்ல முடியுமா?
 
எனவே இன்று அனேக கிறிஸ்த்தவர்களை  "மரித்தவர்கள்" என்று சொல்வதைவிட "மரித்தவர்போல் பாசாங்கு செய்பவர்கள்" என்று சொன்னால் சரியாக பொருந்தும்.
 
காரணம்: 
இயேசு போதித்தபடி நீங்கள் வாழ்கிறீர்களா? என்று யாராவது கேட்டால் "நாங்கள் உலகத்துக்கு மரித்தவர்கள்" என்று சொல்லி தாங்கள் மரித்தவர்கள்போல் பாசாங்கு செய்துகொள்வார்கள். 
 
"பணம்/ உலகப்பொருள்/ மாம்ச இச்சை" என்று வந்துவிட்டால் உடனே உயிருள்ளவராகிவிடுவர்கள்!
 
மனுஷனின் இருதயத்தை குருடாக்கி பிசாசு செய்யும் தந்திரங்களைதான் என்னென்று சொல்வது? 
 
எனவே நீங்கள் கிறிஸ்த்துவோடு மரித்தவர்கள் என்றால் அதை நிரூபிக்க ஆவியானவரின் பெலத்துடன் கிரிஸ்த்துசொன்னத போல்நடந்து நீங்கள் உலகத்துக்கு மரித்துவிட்டீர்கள் என்பதை நிரூபிக்க முயற்ச்சிக்க வேண்டும்.  
 
மனுஷனிடம் பாசாங்கு செய்துவிடலாம் ஆனால் தேவனிடம் ஒருவரும் பாசாங்கு செய்து தப்பிக்க முடியாது? 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard